ப்ரியதர்ஷினி ரதீஸ்.
Well-Known Member
எனக்கு ஆரம்பத்துல இருந்தே ஈஸ்வர் மேல ஒரு சந்தேகம் இருந்தது..
கோமதியின் அப்பாவோடு ஈஸ்வர் பேசினது சொத்துமேல ஆசை இல்லைனு காட்டிக்கிட்டது நடிப்புனு நினைத்தேன்.. அது சரியாகிவிட்டது..
இப்படி ஒரு பொண்ணுக்கு கொடுமை பண்ணுவான்னு நினைக்கலை..
அதுதான் அவனோட கேடுகெட்ட குணம் யாருக்கும் தெரியலையே அப்புறம் ஏன் ரேணுகாவை கொலை பண்ணனும்..
அவ உண்மையை சொல்லிடுவேன்னு மிரட்டினாலா?.
யாழினி சஞ்சீவ் ஈஸ்வர் பிள்ளைகள் என்றாள் கட்டாயம் யதுநாத் ஈஸ்வர் பிள்ளையா இருக்கமுடியாது..
அதுதான் ஈஸ்வருக்கு அவனை கண்டாலே பிடிக்குது இல்லை போல..
ஆனா யாழினி கல்பனாவோட மகள் இல்லைனும் கெஸ் பண்ணிட்டேன்..
எப்படின்னா என்னதான் கணவன் மேல கோபம் இருந்தாலும் பெத்த மகளை எந்த தாயும் கவனிக்காம பாசமா பார்த்துக்காம இருக்க மாட்டாங்க..
அப்ப இருந்து எனக்கு அந்த சந்தேகம் இருந்தது.. யாழினியை சஞ்சீவ் கடத்தினது கூட தெரியாம கவலை படாம கல்பனா இருந்தது எனக்கு . சந்தேகம் உறுதி ஆகிடுச்சி..
அப்போ கல்பனா குழந்தை இறந்துடுச்சா?.
ஏன் அவரோட குழந்தை களை தள்ளியும் யதுநாத்தை அவங்க வீட்டுலையும் ஈஸ்வர் வச்சிருக்கார்...
யதுநாத் ஈஸ்வர் மகன் இல்லை என்று தோணியது ஏன் என்றால் ரைட்டருக்கு தெரியும் ஈஸ்வர் மகள் யாழினி என்று ஈஸ்வர் மகன் யதுவாக இருந்திருந்தால் அண்ணன் தங்கை இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து காதல் கொள்வது முடியாத ஒன்று.. அதுதான்
இந்த யாழானி சும்மாவே சொந்த அண்ணன் சஞ்சீவை ஒரு முறை காதலிப்பதாக பொய் சொல்லி இருக்கிறாள்.. இதை ரைட்டர் தவிர்த்து இருக்கலாம் பொய் என்றாலும் உறவு முறை மாறாதே..
இதோ நாடகம் என்றாலும் சொந்த அண்ணனை திருமணம் செய்திருப்பதாக காட்டியிருப்பதும் தவறுதான்.. அண்ணன் உறவு தங்கை உறவும் புனிதமானது....
உண்மையை வெளிக்கொண்டு வர வேறு ஏதேனும் செய்திருக்களாம்.. இந்த பொய்க்கு ஈஸ்வரை கடத்துவதும் கொலை பண்ணுவதும் எவ்வளவோ மேல்.. இது என் தனிப்பட்ட கருத்து..
யதுநாத் யார் மகன்?..
இன்னும் பல கேள்விகள் மண்டையை குடைகிறது..
இப்படி எங்களை சுத்தலில் விட எத்தனை நாள் ரூம் போட்டு தீவிரமாக சிந்தித்திர் மிலா டியர்..
Last edited: