அத்தியாயம் 13
"யுவா" என்ற சாரதாவின் அழைப்பில் யுவரத்னா தயங்கி நின்றது ஒரு நொடி தான் சட்டென்று தலையைக் குலுக்கிக் கொண்டு "என்ன அத்தை" என்று கேட்டவாறே தட தடவென இறங்கி சென்று அவர் அருகில் நின்றாள். அவளை மேலும் கீழுமாக நோக்கிய சாரதா
"எதுக்கு இப்படி ஓடி வர்ற?"
"நீங்க தானே கூப்பிட்டீங்க?"
"கூப்பிட்டேன் தான். ஆனா இப்படி பதட்டமா ஓடி வர்ற அளவுக்கு தலை போற அவசரம் இங்க யாருக்கும் இல்லை. ஸோ இனி படியில இறங்குறப்போ பார்த்து வா யுவா" என்றவர் அவள் தனது அறையை நோக்கியவாறே மண்டையை ஆட்டவும் மண்டையிலேயே ஓங்கிக் குட்டினார்.
"ஸ்ஸ்..ஆஆ..அத்தை" என்று பாவமாகக் கேட்டவாறே மண்டையைத் தேய்த்தவள் "எதுக்கு அடிச்சீங்க?" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
"பின்ன என்ன டி. இப்போ தான் அந்த ரூம் ல இருந்து வந்த. இப்போ என்னவோ தாஜ்மஹாலைப் பார்க்கிற மாதிரி இப்படி வாயைப் பிளந்து கொண்டு பார்க்கிற?" என்று கேட்கவும்
"அது..அது." என்று கையைப் பிசைந்தவள் "அது கதவை லாக் பண்ணேனா என்று பார்த்தேன் அத்தை ஹி..ஹி" என்று சிரிக்கவும் மேலும் சந்தேகமாகப் பார்த்தவர்
"என்னமோ ஒரு மார்க்கமாத் தான்டி இருக்க" என்றுவிட்டு "சரி போ..குளிச்சுட்டு வந்து தோட்டத்தில கொஞ்சம் பூப்பறிச்சுட்டு சாமிப்படத்துக்கு வைச்சு விளக்கேத்திடு யுவா" என்றபடி அவர் சமையல் கட்டினுள் புகவும் விரலில் நகம் கடித்தபடி சோபாவில் அமர்ந்தாள்.
'எப்படி உள்ள அபி மாமா இருக்கிறப்போ போறது? இந்த அபி மாமாவும் இப்படி செய்யாட்டி தான் என்ன. இப்போ யாரு முழிச்சுட்டு இருக்கிறது. பொறுப்பே இல்ல மாமா உனக்கு" என்று அவன் முன்னாலே இருப்பது போல சலித்துக் கொண்டவள் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ முதுகில் ஓங்கி ஒரு அடி விழவும் திடுக்கிட்டவள் அங்கிருந்த அத்தையைக் கண்டு "ஹீ..ஹீ" என்று மீண்டும் இளித்து வைத்தாள்.
"ஒரு மணிநேரமா இப்படித்தான் இருக்கியா? கழுதை. என்ன யோசனை அப்படி உனக்கு?"
"அது இல்லை அத்தை. இன்றைக்கு ரிஷி சார் வர்ற என்றார். அது தான் யோசிச்சுட்டு இருக்கேன்"
"அவன் எதுக்கு திடீரென்று வர்றானாம்?" தோளைக் குலுக்கியவளின் காதில் இனிமையாக "அம்மா காபி ப்ளீஸ்" என்ற அபியின் குரல் விழுந்தது.
ஹப்பா என்றபடி சோபாவில் சாய்ந்தவளை விநோதமாகப் பார்த்தபடியே "இரு போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் சாரதா.
அவர் சென்றதும் பெருமூச்சை வெளியேற்றியவள் தன் முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த அபியை முறைத்தாள். அவள் முறைக்கவும் புருவம் உயர்த்தியவன்
"என்ன யுவா?" என்று எதுவுமே தெரியாதது போல கேட்கவும் தன்னருகில் இருந்த குஷனை எடுத்து அவன் மேலே வீசினாள். அதை இலாவகமாகப் பற்றி தன்னருகே போட்டவன்
"என்ன யுவா? எதுக்கு கோவம்?" என்று புருவ்ம் உயர்த்தி வினவவும்
"ஏன் உங்களுக்குத் தெரியாதா?" என்று புசுபுசு என்று மூச்சு விட்டவாறே வினவினாள்.
"தெரியல என்று தானே கேட்கிறேன். அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?" என்றவன் "அம்மா! அம்மா" என்று கூவத் தொடங்கவும் 'எதே அத்தையா!' என்று ஜெர்க் ஆனவள் பாய்ந்து வந்து அவனது வாயைத் தன் கையால் மூடி "சத்தம் போடாதீங்க மாமா! ஏற்கனவே அத்தை எனக்கு பேயோட்டனுமா என்று பார்த்துட்டு இருக்காங்க" என்று மெல்லிய குரலில் முணகியவள் தொப்பென அவனருகில் அமர்ந்தாள். அபிக்கு இப்படி காலையில் யுவாவைச் சீண்டி விளையாடுவது அவ்வளவு பிடித்தது. சிரிப்புடன் அவளை பார்த்தவன் மெல்லிய குரலில்
"என்னாச்சு?" என்று கேட்கவும்
"நீங்க பாட்டுக்கு என் ரூம் ல வந்து படுத்துட்டீங்க. யாரும் பார்த்துடுவாங்களோ.. ரூமுக்குள்ள போய்டுவாங்களோ. எப்படி நான் நீங்க இருக்கிற ரூம்குள்ள வந்து குளிக்கிற? என்று எவ்வளவு யோசிச்சிட்டு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?" என்று படபடத்தாள்.
அவள் பேசிய தினுசில் தலையில் அடித்துக் கொண்டவன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே
"ஹேய்! கத்தாத! கத்தாத டி. நீ சொல்றத யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க? தெரியாம அசதியில அங்க தூங்கிட்டேன். நான் ஒரு ஓரமாத் தூங்கிட்டு இருந்தேன் பாத்ரூம்ல போய் நீ குளிக்கிறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்கவும்
"எதே! என்ன பிரச்சனையா? நான் குளிச்சுட்டு இருக்கிறப்போ ரூம்க்குள்ள யாரும் வந்தா அந்த சிட்யூவேஷன் எப்படி இருக்கும்? அத விடுங்க நான் குளிச்சுட்டு வெளியில வர்றப்போ நீங்க முழிச்சு இருந்தீங்க என்றா" என்று ஏதோ கூற வந்தவள் தான் கூற வந்ததை உணர்ந்து பே என்று விழித்தாள்.
"ஹா!ஹா" அவளின் பாவனையில் சிரித்த அபி எட்டி அவளது தலையைத் தட்டிவிட்டு
"இப்போ உன் ரூம் ல யாரும் இல்ல. போய் குளி" என்று கிண்டலாகக் கூறவும் தலையைத் தேய்த்தபடி
"காலையில் இருந்தே அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என் மண்டையில தான் கண்ணா இருக்கு போல. தட்டிட்டே இருக்காங்க..க்ர்ர்ர்' என்றவள்
"என்ன முணுமுணுப்பு" என்ற அபியின் அதட்டலில் அறையை நோக்கி ஓடினாள்.
"யுவா" என்ற சாரதாவின் அழைப்பில் யுவரத்னா தயங்கி நின்றது ஒரு நொடி தான் சட்டென்று தலையைக் குலுக்கிக் கொண்டு "என்ன அத்தை" என்று கேட்டவாறே தட தடவென இறங்கி சென்று அவர் அருகில் நின்றாள். அவளை மேலும் கீழுமாக நோக்கிய சாரதா
"எதுக்கு இப்படி ஓடி வர்ற?"
"நீங்க தானே கூப்பிட்டீங்க?"
"கூப்பிட்டேன் தான். ஆனா இப்படி பதட்டமா ஓடி வர்ற அளவுக்கு தலை போற அவசரம் இங்க யாருக்கும் இல்லை. ஸோ இனி படியில இறங்குறப்போ பார்த்து வா யுவா" என்றவர் அவள் தனது அறையை நோக்கியவாறே மண்டையை ஆட்டவும் மண்டையிலேயே ஓங்கிக் குட்டினார்.
"ஸ்ஸ்..ஆஆ..அத்தை" என்று பாவமாகக் கேட்டவாறே மண்டையைத் தேய்த்தவள் "எதுக்கு அடிச்சீங்க?" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
"பின்ன என்ன டி. இப்போ தான் அந்த ரூம் ல இருந்து வந்த. இப்போ என்னவோ தாஜ்மஹாலைப் பார்க்கிற மாதிரி இப்படி வாயைப் பிளந்து கொண்டு பார்க்கிற?" என்று கேட்கவும்
"அது..அது." என்று கையைப் பிசைந்தவள் "அது கதவை லாக் பண்ணேனா என்று பார்த்தேன் அத்தை ஹி..ஹி" என்று சிரிக்கவும் மேலும் சந்தேகமாகப் பார்த்தவர்
"என்னமோ ஒரு மார்க்கமாத் தான்டி இருக்க" என்றுவிட்டு "சரி போ..குளிச்சுட்டு வந்து தோட்டத்தில கொஞ்சம் பூப்பறிச்சுட்டு சாமிப்படத்துக்கு வைச்சு விளக்கேத்திடு யுவா" என்றபடி அவர் சமையல் கட்டினுள் புகவும் விரலில் நகம் கடித்தபடி சோபாவில் அமர்ந்தாள்.
'எப்படி உள்ள அபி மாமா இருக்கிறப்போ போறது? இந்த அபி மாமாவும் இப்படி செய்யாட்டி தான் என்ன. இப்போ யாரு முழிச்சுட்டு இருக்கிறது. பொறுப்பே இல்ல மாமா உனக்கு" என்று அவன் முன்னாலே இருப்பது போல சலித்துக் கொண்டவள் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ முதுகில் ஓங்கி ஒரு அடி விழவும் திடுக்கிட்டவள் அங்கிருந்த அத்தையைக் கண்டு "ஹீ..ஹீ" என்று மீண்டும் இளித்து வைத்தாள்.
"ஒரு மணிநேரமா இப்படித்தான் இருக்கியா? கழுதை. என்ன யோசனை அப்படி உனக்கு?"
"அது இல்லை அத்தை. இன்றைக்கு ரிஷி சார் வர்ற என்றார். அது தான் யோசிச்சுட்டு இருக்கேன்"
"அவன் எதுக்கு திடீரென்று வர்றானாம்?" தோளைக் குலுக்கியவளின் காதில் இனிமையாக "அம்மா காபி ப்ளீஸ்" என்ற அபியின் குரல் விழுந்தது.
ஹப்பா என்றபடி சோபாவில் சாய்ந்தவளை விநோதமாகப் பார்த்தபடியே "இரு போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் சாரதா.
அவர் சென்றதும் பெருமூச்சை வெளியேற்றியவள் தன் முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த அபியை முறைத்தாள். அவள் முறைக்கவும் புருவம் உயர்த்தியவன்
"என்ன யுவா?" என்று எதுவுமே தெரியாதது போல கேட்கவும் தன்னருகில் இருந்த குஷனை எடுத்து அவன் மேலே வீசினாள். அதை இலாவகமாகப் பற்றி தன்னருகே போட்டவன்
"என்ன யுவா? எதுக்கு கோவம்?" என்று புருவ்ம் உயர்த்தி வினவவும்
"ஏன் உங்களுக்குத் தெரியாதா?" என்று புசுபுசு என்று மூச்சு விட்டவாறே வினவினாள்.
"தெரியல என்று தானே கேட்கிறேன். அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா?" என்றவன் "அம்மா! அம்மா" என்று கூவத் தொடங்கவும் 'எதே அத்தையா!' என்று ஜெர்க் ஆனவள் பாய்ந்து வந்து அவனது வாயைத் தன் கையால் மூடி "சத்தம் போடாதீங்க மாமா! ஏற்கனவே அத்தை எனக்கு பேயோட்டனுமா என்று பார்த்துட்டு இருக்காங்க" என்று மெல்லிய குரலில் முணகியவள் தொப்பென அவனருகில் அமர்ந்தாள். அபிக்கு இப்படி காலையில் யுவாவைச் சீண்டி விளையாடுவது அவ்வளவு பிடித்தது. சிரிப்புடன் அவளை பார்த்தவன் மெல்லிய குரலில்
"என்னாச்சு?" என்று கேட்கவும்
"நீங்க பாட்டுக்கு என் ரூம் ல வந்து படுத்துட்டீங்க. யாரும் பார்த்துடுவாங்களோ.. ரூமுக்குள்ள போய்டுவாங்களோ. எப்படி நான் நீங்க இருக்கிற ரூம்குள்ள வந்து குளிக்கிற? என்று எவ்வளவு யோசிச்சிட்டு டென்ஷனா இருந்தேன் தெரியுமா?" என்று படபடத்தாள்.
அவள் பேசிய தினுசில் தலையில் அடித்துக் கொண்டவன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே
"ஹேய்! கத்தாத! கத்தாத டி. நீ சொல்றத யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க? தெரியாம அசதியில அங்க தூங்கிட்டேன். நான் ஒரு ஓரமாத் தூங்கிட்டு இருந்தேன் பாத்ரூம்ல போய் நீ குளிக்கிறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்கவும்
"எதே! என்ன பிரச்சனையா? நான் குளிச்சுட்டு இருக்கிறப்போ ரூம்க்குள்ள யாரும் வந்தா அந்த சிட்யூவேஷன் எப்படி இருக்கும்? அத விடுங்க நான் குளிச்சுட்டு வெளியில வர்றப்போ நீங்க முழிச்சு இருந்தீங்க என்றா" என்று ஏதோ கூற வந்தவள் தான் கூற வந்ததை உணர்ந்து பே என்று விழித்தாள்.
"ஹா!ஹா" அவளின் பாவனையில் சிரித்த அபி எட்டி அவளது தலையைத் தட்டிவிட்டு
"இப்போ உன் ரூம் ல யாரும் இல்ல. போய் குளி" என்று கிண்டலாகக் கூறவும் தலையைத் தேய்த்தபடி
"காலையில் இருந்தே அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என் மண்டையில தான் கண்ணா இருக்கு போல. தட்டிட்டே இருக்காங்க..க்ர்ர்ர்' என்றவள்
"என்ன முணுமுணுப்பு" என்ற அபியின் அதட்டலில் அறையை நோக்கி ஓடினாள்.