சும்மா மலர் என்னவோ உலகத்தையே திருத்த வந்த ஒரு தேவதை மாதிரியும் பிரவாகன் என்னவோ வில்லன் மாதிரியும் சொல்லக்கூடாது. அவன் ப்ராக்டிகலா ஒரு பிசினெஸ்மேன் யார், யாரை எப்படி சமாளிக்க முடியுமோ அப்படி சமாளிக்கிறான். அதனால்தான் இவளோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆள முடிகிறது. அவனிடம் உள்ள குடும்ப பாசம் , அக்கறை, குறுக்கு வழியில் சென்றாலும் ஒத்துக்கொள்ளும் நேர்மை, மலரின் மீதான காதல் இது எல்லாம் யாரும் ஏன் யோசிக்க மாட்றாங்க . பூசி மெழுகாமல் தப்பிக்க நினைக்காமல் , கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை காதலித்தேனா தெரியவில்லை என்று மறைக்காமல் பேசுகிறானே. சொல்லப்போனா மலர்தான் அவன் பிரியத்தை, காதலை , குழந்தைகளை, குடும்பத்தை வைத்து அவனை பிளாக் மெயில் பண்ணுகிறாள்.