குறள் :- அகர முதல எழுத்தெல்லாம் : ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள் :- எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
பிரிவு : அறத்துப்பால்
இயல் : பாயிரவியல்
அதிகாரம்: 1.கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1