ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மாண்டாரே...விட்டு செல்பவர்களுக்கு நிமிட வலி... அவர்கள் விட்டு சென்றவர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் வலி.. அந்த ஊமை வலியுடன் தான் நாட்கள் செல்லும்... இதுவும் கடந்து போக வேண்டும்சென்ற வருடம் இந்த வாரம் , நம்மை பெரும் சோகத்தில் வைத்தது இவர்களின் இருவரின் இழப்பு
இன்று இதோ ஒரு வருடமாகிவிட்டது என்பது நம்ப முடியவில்லை.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் பிரியா பிரகாஷின் எபிசொட் களுக்கு நாம் அடிக்ட் என்றே சொல்லலாம்....
யாருடைய கதையிலாவது நான் ஒரு கமென்ட் கூட பார்க்கவில்லை என்றால் அடுத்த நிமிடம் என் நினைவிற்கு தானாக பானு ம்மா வந்து விடுவார்.
இழப்புகள் அதை நாம் கடந்து தான் வருகிறோம்
ஆனால் நினைவுகள்.......
இவர்கள் இருவருமே நமக்கு நல்ல நல்ல நினைவுகளை கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களின் உறவு நம் தளத்தோடு மிகவும் அளப்பரியது. என்றும் நம்மோடு நம் தளத்தோடு இவர்கள் இருப்பார்கள்.
என்றும் நம் நினைவில்... பிரியா பிரகாஷ் அண்ட் பானு ம்மா ( பானுமதி ஜெயராமன் )