நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-30
அன்று காலையே அந்த தயாரிப்பாளர் வினோத்திடம் பேசியிருந்தார்..... சூட்டிங் முடிந்து விட்டதால் தான் நாளை ஊருக்கு கிளம்புவதால் இன்றே எப்படியாவது சுதாவை அழைத்து வரச் சொல்ல......அவனுக்கு ஒரு தொகை தருவதோடு தன்னுடனே சென்னைக்கு அழைத்து செல்வதாகவும் சொல்லியிருந்தார்..... வினோத்தும் எப்புடியாவது சுதாவை அழைத்து வந்து விட்டுவிட்டு தெரியாதமாதிரி ஊருக்கு சென்றுவிட்டு நாளை அந்த தயாரிப்பாளரோடு ஊருக்கு சென்று விடலாம் என முடிவு செய்தான்..... காலையில் இருந்து இரண்டு முறை வாசுவின் தோப்பு வழியாக சென்று பார்க்க.... வீட்டில் வாசு இருந்ததால் அவன் வந்த சுவடே தெரியாமல் மீண்டும் வீட்டுக்கே சென்று விட்டான்......
வாசுவுக்கு இப்போது உழைப்பின் மதிப்பு தெரிந்ததில் இருந்து ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை... சூட்டிங் முடிந்து கண்ணனின் நண்பன் வந்து வாசுவிடம் நன்றாக பேசி நன்றி சொல்லி சென்றிருந்தான்.... கண்ணனை பத்தி பெருமையாக சொல்ல வாசுவுக்கு ஏற்கனவே கண்ணனை பத்தி தெரிந்திருந்ததால்.... இவர்களின் நல்ல நட்பை பற்றியும் தெரிந்து கொண்டான்..... தனக்கு இவ்வளவு நாளில் ஒரு உண்மையான நட்பு கிடைக்காததால் தன்னை பற்றிய ஒரு சுய அலசலில் ஈடுபட்டவன்..... அப்போது தான் தானும் இதுவரை அப்படி யாருடனும் உண்மையான நட்பு கொள்ளவில்லை.... சும்மா ஊர் சுற்றுவதும்... எந்த பெண்களையாவது கேலிசெய்வதும்..... தண்ணியடிப்பதும் என தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு உருப்படியான காரியமும் செய்ததாகவே அவனுக்கு ஞாபகம் இல்லை.... இப்போதாவது தனக்கு உழைப்பின் அருமை தெரிந்ததே என நினைத்துக் கொண்டான்.....
அன்று தோப்பிற்கு உரம் வைத்ததால் அவன் வெளியே எங்கும் செல்லாமல் தோப்பிலேயே இருந்தான்..... வேலை முடியவே மாலை நான்கு மணியானதால் அவன் அதற்கு மேலாக கிளம்பி... அடுத்த வாரம் விதைக்க இருப்பதால் விதை நெல்லைவாங்கி வரலாம் என்று எண்ணி கிளம்பியிருந்தான்...வீட்டில் சுதாவிடம் சொல்லிவிட்டு அவளை அவள் தாய் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.......
வாசு அந்த பக்கம் போகவுமே தோப்பிற்கு வந்த வினோத்... அவளை தயாரிப்பாளர் போட்டோ எடுக்க வரச்சொன்னதாக சொல்ல சுதாவும் சந்தோசமாகவே கிளம்பியிருந்தாள்..... காலையில் இருந்து அவளுக்கு தலைசுற்றலாகவே இருந்தது..... அதையும் பொருட்படுத்தாமல் அவள் கிளம்ப...
“ நீங்க பஸ்ஸுல போயிருங்க நான் வண்டியில வந்துருரேன்,,,, அண்ணகிட்ட ஒன்னும் சொல்லவேணாம்.... இன்னைக்கு அட்வான்ஸா கொஞ்சம் பணம் கேப்போம்.... பணத்தை குடுத்துட்டு அண்ணகிட்ட சொல்லிக்கலாம்.....”
இப்போதெல்லாம் சுதாவும் வாசுவை விரும்ப ஆரம்பித்திருந்தாள்..... இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு செயலும் தன் முகம் பார்த்து நடப்பது கண்டு அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.... இந்த ஒரு படம் மட்டும் நடிச்சாலே நானும் அவரும் ரொம்ப சந்தோசமா இருக்கலாம் என மனக்கோட்டை கட்டினாள்.... சிறு வயதில் இருந்தே ஒரு கட்டுப்பாட்டோடு வளர்ந்தவள்.... ஒழுக்கம்தான் முக்கியம் என மாணிக்கம் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லுவார்...... அப்படி ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள்... பணத்தின் மீது தனக்கு ஏற்பட்ட ஆசையால் இன்று எந்த செயலையும் செய்யலாம் தானாகவே ஒரு முடிவெடுத்தாள்....
மேலும் வினோத் இதில் ஈடுபட்டிருப்பதால் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது என முடிவு செய்தாள்...... ஏன் தன் கணவர் தன் தம்பியிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள கூடாது என சொன்னார் என்பதை யோசிக்க மறந்திருந்தாள்....வினோத் இப்புடி ஒரு வக்கிர புத்தி உடையவன் என்பதை அறியாமல் இருந்தாள்.... வாசுவும் தன் தம்பியே தன்மனைவியை தவறாக பேசினான் என்பதையும் கயல்...மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்தான் என்பதை எப்படி சொல்வது.... சொன்னால் தன் குடும்பத்தைபத்தியே தப்பாக நினைப்பாலோ என எண்ணி சுதாவிடம் தன் தம்பியை பற்றி சொல்லவேயில்லை.... சுதா தன்னுடைய பார்வையிலும் அவள் குடும்பத்தோடும் இருப்பதால் வினோத்தை பற்றி கொஞ்சம் யோசிக்காமல் இருந்துவிட்டான்....தான் வினோத்திடம் பேசக்கூடாது என்று சொன்னதால் தன் மனைவி தன் தம்பியிடம் பேசியிருக்க மாட்டாள் என நம்பிக்கையில் இருந்தான்........
சுதா வாசுவிடம் சொல்லாமலேயே பஸ்ஸில் ஏறியிருந்தாள்..... பஸ்ஸைவிட்டு இறங்கியவள் அங்கு நின்று கொண்டிருந்த வினோத்திடம் செல்ல..... வினோத் வண்டியை பஸ்ஸ்டான்டில் விட்டுவிட்டு ஆட்டோவையே பிடித்திருந்தான் ..... யாராவது ஊர்காரர்கள் பார்த்தால் நாளை பிரச்சனையாகும் என எண்ணினான்...... சுதாவை ஊருக்கு வெளியே இருந்த அந்த கெஸ்ட் அவுஸுக்கு கூட்டிச்சென்றான்........
கயல் கண்ணன் அன்பில் மூழ்கி கிடந்தாள்... வீட்டில் இருந்த நேரத்தில் எல்லாம் கண்ணன் கயலைவிட்டு பிரியாமல் அவளை தன் கைவளையத்திலேயே வைத்திருந்தான். சாவித்திரி மேலும் இரண்டுநாட்கள் கழித்துதான் வருவதாக சொல்ல....கயல்தான் சாவித்திரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்...... “அத்தே...ரெண்டுநாளெல்லாம் வேணாத்தே.... எனக்கு நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரமே வாங்க....”. என கெஞ்ச....
சாவித்திரியோ…..” இல்லத்தா..... நான் என்னோட பொறந்த ஊருக்கு வந்தே ரொம்ப நாளாச்சுத்தா..... சொந்தகாரங்களயெல்லாம் பாத்துட்டு சீக்கிரமா வரப்பாக்குறேன்தா.... போனை கண்ணகிட்ட குடு.....” இவ்வளவு நேரம் தன் தாயிடம் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த கண்ணன்...... கயலை இழுத்து தன் மடியில் உட்காரவைத்து அவள் இடுப்பில் கை போட்டவாறு... போனை வாங்கி தன் தாயிடம் பேச ஆரம்பிக்க.....
“கண்ணா வேலை வேலைன்னு கடையிலயே இருக்காதப்பா... பாவம் புள்ள சும்மாவே பயப்படும்.... இப்ப ஒரு ஆளா இருக்கரதால நீதான்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கனும்.. காலையில மெதுவாவே கடைக்கு போயிட்டு சாயங்காலம் சீக்கிரமே வரப்பாருப்பா .... நான் வார வரைக்கும் மருமகள பத்திரமா பாத்துக்க.....”
“ம்ம்ம் சரிம்மா....”.என்றவன் சற்று நேரம் பேசிவிட்டு போனை வைக்க....
“ஏண்டி ஒரு மனுசன் வீட்ல இருக்குறது உனக்கு கண்ணுக்கு தெரியலயா...... அம்மாவ வாங்க வாங்கன்னு தொல்லை பண்ணுற.......” என்றவாறு அவள் கழுத்தில் முகத்தை பதிக்க....
“இல்லங்க நீங்க கடைக்கு போனதுக்கு அப்புறம் அத்தே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குங்க.......”
“அப்புடிங்குற.... சரி அதுக்கு ஒரு வழிய கண்டுப்பிடிச்சிட்டேன்..... உங்க அத்த ஊருக்கு போனா உனக்கு துணைக்கு ஒரு ஆள ரெடி பண்ணிரலாம்.......”
“ஏங்க சம்பளம் கொடுத்து ஒரு ஆள வைக்க போறிங்களா.... வேணாங்க வேணும்னா போன் பண்ணி எங்க அப்பத்தாவ வரச்சொல்லிக்கலாம்......”
“ஆமாண்டி எங்க உங்க அப்பத்தாவ பத்தி பேசலைன்னு நினைச்சேன்.... நான் ஒன்னு நினைச்சா நீ அதுக்கு ஆப்போசிட்டாவே யோசி......நான் சொன்னது நமக்கு பொறக்கப்போற பொண்ணுடி.... இனிமே அதுதான் உனக்கு துணை...”.
“ச்சு... போங்க... இப்புடியெல்லாம் பேசக்கூடாது....”.
“ஹப்பா.... உன்னோட வெக்கமே ஒரு அழகுடி....அப்புடியே பாத்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு......அப்புடியே கன்னமெல்லாம் ரோஸ் கலருல மாறிருது.... அப்புடியே உன் உதட்டுகிட்ட இருக்குற மச்சம் என்னைய வாவான்னு சொல்லுது.....”
“போங்க..போங்க இப்புடியெல்லாம் பேசக்கூடாது.” என்றபடி அவன் மார்பில் முகத்தை பதிக்க....
“ இப்பத்தான் உன்னோட முகத்தை பாக்கனும்னு சொன்னேன்.... இப்புடி மொகத்தை மூடுனா நான் எப்புடி பாக்குறது....” அவள் முகத்தை நிமிர்த்தியவன் முத்தத்தை ஆரம்பிக்க கயல் கண்ணனுக்குள்ளேயே கரைய துவங்கினாள்..... இரண்டு நாட்கள் கழித்து சாவித்திரி வீட்டிற்கு வந்திருக்க அன்று மாலையே ராமனும் வந்திருந்தான்... கண்ணனுக்கும் இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.... பகலில் கயல் ஒரு ஆளாக இருப்பதால் கொஞ்சம் கவலையாக இருந்தவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது....
கயல் உடல் அளவில் குமரியாக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தையாகவே இருந்தாள்.... அவள் தன்மேல் காட்டும் அன்பில் கண்ணன் அப்புடியே மயங்கி போயிருந்தான்.... ஒரு குழந்தை எப்புடி தன்தாய் தகப்பனிடம் ஒரு நிமிடம்கூட பிரியாமல் இருக்க விரும்புமோ அது போல கண்ணனை தேடினாள்.... வாய் திறந்து வெளியில் சொல்லாவிட்டாலும் அவள் கண்ணே காட்டிக் கொடுத்தது.....தன் குடும்பத்தினர் மீதும் அதே அன்பை செலுத்தினாள்.... தன் தம்பிகளோடு பேசிக்கொண்டிருக்கும் போது கண்ணன் கயலை ரதித்தபடியே இருப்பான்....எப்புடிதான் பேச்சாலயே எல்லாரையும் கவுப்போளோ என்று யோசிப்பான்.... கடையில் வேலை பார்க்கும் பெண்களும் அக்காவை கூட்டிட்டு வாங்கண்ணே என்று ஓயாமல் சொல்வார்கள்.... ஆனால் கண்ணன்தான் இவளை பார்த்தால் அவர்கள் வேலையை மறந்து இவள் பின்னாடியே சுற்றவும் வேலை கெட்டுவிடும் என்பதால் கயலை அழைத்து வரமாட்டான்....
அத்தியாயம்-30
அன்று காலையே அந்த தயாரிப்பாளர் வினோத்திடம் பேசியிருந்தார்..... சூட்டிங் முடிந்து விட்டதால் தான் நாளை ஊருக்கு கிளம்புவதால் இன்றே எப்படியாவது சுதாவை அழைத்து வரச் சொல்ல......அவனுக்கு ஒரு தொகை தருவதோடு தன்னுடனே சென்னைக்கு அழைத்து செல்வதாகவும் சொல்லியிருந்தார்..... வினோத்தும் எப்புடியாவது சுதாவை அழைத்து வந்து விட்டுவிட்டு தெரியாதமாதிரி ஊருக்கு சென்றுவிட்டு நாளை அந்த தயாரிப்பாளரோடு ஊருக்கு சென்று விடலாம் என முடிவு செய்தான்..... காலையில் இருந்து இரண்டு முறை வாசுவின் தோப்பு வழியாக சென்று பார்க்க.... வீட்டில் வாசு இருந்ததால் அவன் வந்த சுவடே தெரியாமல் மீண்டும் வீட்டுக்கே சென்று விட்டான்......
வாசுவுக்கு இப்போது உழைப்பின் மதிப்பு தெரிந்ததில் இருந்து ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை... சூட்டிங் முடிந்து கண்ணனின் நண்பன் வந்து வாசுவிடம் நன்றாக பேசி நன்றி சொல்லி சென்றிருந்தான்.... கண்ணனை பத்தி பெருமையாக சொல்ல வாசுவுக்கு ஏற்கனவே கண்ணனை பத்தி தெரிந்திருந்ததால்.... இவர்களின் நல்ல நட்பை பற்றியும் தெரிந்து கொண்டான்..... தனக்கு இவ்வளவு நாளில் ஒரு உண்மையான நட்பு கிடைக்காததால் தன்னை பற்றிய ஒரு சுய அலசலில் ஈடுபட்டவன்..... அப்போது தான் தானும் இதுவரை அப்படி யாருடனும் உண்மையான நட்பு கொள்ளவில்லை.... சும்மா ஊர் சுற்றுவதும்... எந்த பெண்களையாவது கேலிசெய்வதும்..... தண்ணியடிப்பதும் என தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு உருப்படியான காரியமும் செய்ததாகவே அவனுக்கு ஞாபகம் இல்லை.... இப்போதாவது தனக்கு உழைப்பின் அருமை தெரிந்ததே என நினைத்துக் கொண்டான்.....
அன்று தோப்பிற்கு உரம் வைத்ததால் அவன் வெளியே எங்கும் செல்லாமல் தோப்பிலேயே இருந்தான்..... வேலை முடியவே மாலை நான்கு மணியானதால் அவன் அதற்கு மேலாக கிளம்பி... அடுத்த வாரம் விதைக்க இருப்பதால் விதை நெல்லைவாங்கி வரலாம் என்று எண்ணி கிளம்பியிருந்தான்...வீட்டில் சுதாவிடம் சொல்லிவிட்டு அவளை அவள் தாய் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.......
வாசு அந்த பக்கம் போகவுமே தோப்பிற்கு வந்த வினோத்... அவளை தயாரிப்பாளர் போட்டோ எடுக்க வரச்சொன்னதாக சொல்ல சுதாவும் சந்தோசமாகவே கிளம்பியிருந்தாள்..... காலையில் இருந்து அவளுக்கு தலைசுற்றலாகவே இருந்தது..... அதையும் பொருட்படுத்தாமல் அவள் கிளம்ப...
“ நீங்க பஸ்ஸுல போயிருங்க நான் வண்டியில வந்துருரேன்,,,, அண்ணகிட்ட ஒன்னும் சொல்லவேணாம்.... இன்னைக்கு அட்வான்ஸா கொஞ்சம் பணம் கேப்போம்.... பணத்தை குடுத்துட்டு அண்ணகிட்ட சொல்லிக்கலாம்.....”
இப்போதெல்லாம் சுதாவும் வாசுவை விரும்ப ஆரம்பித்திருந்தாள்..... இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு செயலும் தன் முகம் பார்த்து நடப்பது கண்டு அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.... இந்த ஒரு படம் மட்டும் நடிச்சாலே நானும் அவரும் ரொம்ப சந்தோசமா இருக்கலாம் என மனக்கோட்டை கட்டினாள்.... சிறு வயதில் இருந்தே ஒரு கட்டுப்பாட்டோடு வளர்ந்தவள்.... ஒழுக்கம்தான் முக்கியம் என மாணிக்கம் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லுவார்...... அப்படி ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள்... பணத்தின் மீது தனக்கு ஏற்பட்ட ஆசையால் இன்று எந்த செயலையும் செய்யலாம் தானாகவே ஒரு முடிவெடுத்தாள்....
மேலும் வினோத் இதில் ஈடுபட்டிருப்பதால் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது என முடிவு செய்தாள்...... ஏன் தன் கணவர் தன் தம்பியிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள கூடாது என சொன்னார் என்பதை யோசிக்க மறந்திருந்தாள்....வினோத் இப்புடி ஒரு வக்கிர புத்தி உடையவன் என்பதை அறியாமல் இருந்தாள்.... வாசுவும் தன் தம்பியே தன்மனைவியை தவறாக பேசினான் என்பதையும் கயல்...மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்தான் என்பதை எப்படி சொல்வது.... சொன்னால் தன் குடும்பத்தைபத்தியே தப்பாக நினைப்பாலோ என எண்ணி சுதாவிடம் தன் தம்பியை பற்றி சொல்லவேயில்லை.... சுதா தன்னுடைய பார்வையிலும் அவள் குடும்பத்தோடும் இருப்பதால் வினோத்தை பற்றி கொஞ்சம் யோசிக்காமல் இருந்துவிட்டான்....தான் வினோத்திடம் பேசக்கூடாது என்று சொன்னதால் தன் மனைவி தன் தம்பியிடம் பேசியிருக்க மாட்டாள் என நம்பிக்கையில் இருந்தான்........
சுதா வாசுவிடம் சொல்லாமலேயே பஸ்ஸில் ஏறியிருந்தாள்..... பஸ்ஸைவிட்டு இறங்கியவள் அங்கு நின்று கொண்டிருந்த வினோத்திடம் செல்ல..... வினோத் வண்டியை பஸ்ஸ்டான்டில் விட்டுவிட்டு ஆட்டோவையே பிடித்திருந்தான் ..... யாராவது ஊர்காரர்கள் பார்த்தால் நாளை பிரச்சனையாகும் என எண்ணினான்...... சுதாவை ஊருக்கு வெளியே இருந்த அந்த கெஸ்ட் அவுஸுக்கு கூட்டிச்சென்றான்........
கயல் கண்ணன் அன்பில் மூழ்கி கிடந்தாள்... வீட்டில் இருந்த நேரத்தில் எல்லாம் கண்ணன் கயலைவிட்டு பிரியாமல் அவளை தன் கைவளையத்திலேயே வைத்திருந்தான். சாவித்திரி மேலும் இரண்டுநாட்கள் கழித்துதான் வருவதாக சொல்ல....கயல்தான் சாவித்திரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்...... “அத்தே...ரெண்டுநாளெல்லாம் வேணாத்தே.... எனக்கு நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரமே வாங்க....”. என கெஞ்ச....
சாவித்திரியோ…..” இல்லத்தா..... நான் என்னோட பொறந்த ஊருக்கு வந்தே ரொம்ப நாளாச்சுத்தா..... சொந்தகாரங்களயெல்லாம் பாத்துட்டு சீக்கிரமா வரப்பாக்குறேன்தா.... போனை கண்ணகிட்ட குடு.....” இவ்வளவு நேரம் தன் தாயிடம் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த கண்ணன்...... கயலை இழுத்து தன் மடியில் உட்காரவைத்து அவள் இடுப்பில் கை போட்டவாறு... போனை வாங்கி தன் தாயிடம் பேச ஆரம்பிக்க.....
“கண்ணா வேலை வேலைன்னு கடையிலயே இருக்காதப்பா... பாவம் புள்ள சும்மாவே பயப்படும்.... இப்ப ஒரு ஆளா இருக்கரதால நீதான்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கனும்.. காலையில மெதுவாவே கடைக்கு போயிட்டு சாயங்காலம் சீக்கிரமே வரப்பாருப்பா .... நான் வார வரைக்கும் மருமகள பத்திரமா பாத்துக்க.....”
“ம்ம்ம் சரிம்மா....”.என்றவன் சற்று நேரம் பேசிவிட்டு போனை வைக்க....
“ஏண்டி ஒரு மனுசன் வீட்ல இருக்குறது உனக்கு கண்ணுக்கு தெரியலயா...... அம்மாவ வாங்க வாங்கன்னு தொல்லை பண்ணுற.......” என்றவாறு அவள் கழுத்தில் முகத்தை பதிக்க....
“இல்லங்க நீங்க கடைக்கு போனதுக்கு அப்புறம் அத்தே இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குங்க.......”
“அப்புடிங்குற.... சரி அதுக்கு ஒரு வழிய கண்டுப்பிடிச்சிட்டேன்..... உங்க அத்த ஊருக்கு போனா உனக்கு துணைக்கு ஒரு ஆள ரெடி பண்ணிரலாம்.......”
“ஏங்க சம்பளம் கொடுத்து ஒரு ஆள வைக்க போறிங்களா.... வேணாங்க வேணும்னா போன் பண்ணி எங்க அப்பத்தாவ வரச்சொல்லிக்கலாம்......”
“ஆமாண்டி எங்க உங்க அப்பத்தாவ பத்தி பேசலைன்னு நினைச்சேன்.... நான் ஒன்னு நினைச்சா நீ அதுக்கு ஆப்போசிட்டாவே யோசி......நான் சொன்னது நமக்கு பொறக்கப்போற பொண்ணுடி.... இனிமே அதுதான் உனக்கு துணை...”.
“ச்சு... போங்க... இப்புடியெல்லாம் பேசக்கூடாது....”.
“ஹப்பா.... உன்னோட வெக்கமே ஒரு அழகுடி....அப்புடியே பாத்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு......அப்புடியே கன்னமெல்லாம் ரோஸ் கலருல மாறிருது.... அப்புடியே உன் உதட்டுகிட்ட இருக்குற மச்சம் என்னைய வாவான்னு சொல்லுது.....”
“போங்க..போங்க இப்புடியெல்லாம் பேசக்கூடாது.” என்றபடி அவன் மார்பில் முகத்தை பதிக்க....
“ இப்பத்தான் உன்னோட முகத்தை பாக்கனும்னு சொன்னேன்.... இப்புடி மொகத்தை மூடுனா நான் எப்புடி பாக்குறது....” அவள் முகத்தை நிமிர்த்தியவன் முத்தத்தை ஆரம்பிக்க கயல் கண்ணனுக்குள்ளேயே கரைய துவங்கினாள்..... இரண்டு நாட்கள் கழித்து சாவித்திரி வீட்டிற்கு வந்திருக்க அன்று மாலையே ராமனும் வந்திருந்தான்... கண்ணனுக்கும் இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.... பகலில் கயல் ஒரு ஆளாக இருப்பதால் கொஞ்சம் கவலையாக இருந்தவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது....
கயல் உடல் அளவில் குமரியாக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தையாகவே இருந்தாள்.... அவள் தன்மேல் காட்டும் அன்பில் கண்ணன் அப்புடியே மயங்கி போயிருந்தான்.... ஒரு குழந்தை எப்புடி தன்தாய் தகப்பனிடம் ஒரு நிமிடம்கூட பிரியாமல் இருக்க விரும்புமோ அது போல கண்ணனை தேடினாள்.... வாய் திறந்து வெளியில் சொல்லாவிட்டாலும் அவள் கண்ணே காட்டிக் கொடுத்தது.....தன் குடும்பத்தினர் மீதும் அதே அன்பை செலுத்தினாள்.... தன் தம்பிகளோடு பேசிக்கொண்டிருக்கும் போது கண்ணன் கயலை ரதித்தபடியே இருப்பான்....எப்புடிதான் பேச்சாலயே எல்லாரையும் கவுப்போளோ என்று யோசிப்பான்.... கடையில் வேலை பார்க்கும் பெண்களும் அக்காவை கூட்டிட்டு வாங்கண்ணே என்று ஓயாமல் சொல்வார்கள்.... ஆனால் கண்ணன்தான் இவளை பார்த்தால் அவர்கள் வேலையை மறந்து இவள் பின்னாடியே சுற்றவும் வேலை கெட்டுவிடும் என்பதால் கயலை அழைத்து வரமாட்டான்....
Last edited: