நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம் -29
கயல் கை உதறவும் கண்ணனுக்கு கடுமையான கோபம் வந்தது....”.ஏய்... என்னடி லூசா புடுச்சிருக்கு.... பேசாம இரு “என்றபடி அவள் கையை இறுக்கினான்.....
“இல்லங்க.... என்னைய விடுங்க....நிச்சயமா என்னால நடந்தோ இல்ல நீச்சல் அடிச்சோ வரமுடியாது...... ப்ளிஸ்.... என்னைய விடுங்க.....நீங்க எப்புடியாச்சும் நீச்சல் அடிச்சு போயிருங்க...... ப்ளிஸ்ங்க.....”
“மூச்..... வாய மூடு.... இப்ப விட்டா உனக்கு என்ன ஆகும்னு தெரியும்ல......”
“தெரியும்ங்க..... காலையில எங்கயாச்சும் கம்மாயில மிதப்பேன்....... அது பரவால்லங்க..... உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாதுங்க...”என்றபடி மறுகையால் அவனை அணைத்தவள் “எனக்கு என்னையவிட உங்க உயிர்தாங்க முக்கியம்…. நீங்க எப்புடியாச்சும் போயிருங்க.....”
“அப்புடி மட்டும் நடக்குமுன்னு கனவுல கூட நினைக்காத..... சாவு வருதுன்னா... அது எனக்கப்பறம் தான் அது உன்னைய நெருங்கவே செய்யும்..... நீ மட்டும் தண்ணில போனா நான் வீட்டுக்கு போவேன்னு நினைச்சியா..... கண்டிப்பா இல்ல....உன்பின்னாடியே நானும் வந்துருவேன்......அதுனால கிறுக்குத்தனமா யோசிக்காம....எப்புடி வீட்டுக்கு போறதுன்னு யோசி......”
அப்போது அங்கே வேகமாக வந்த ஒரு பெரிய மரக்கம்பு ஒன்று அவள் காலில் சடாரென்று அடித்து அதன் கிளைகள்...கயலின் காலை கிழித்தப்படி சென்றது...... கயல் தடுமாறி கீழே விழ இருந்தாள்......எட்டி... அவள் மறுகையை பிடித்தவன்.....அவள் சேலையின் முந்தானையை கழட்டியவன்..... அவளை மெதுவாக தன் பின்புறம் வரச்செய்து தன் இடுப்போடு சேர்த்து அவளை கட்டினான்....... என்ன... செய்வது... என்ன செய்வது..... யாராவது வருகிறார்களா எனப்பார்க்க ஒருவரையும் காணவில்லை..... கயலின் இரு கையையும் தன் முன்னால் இழுத்து தன் சட்டையை பிடிக்கச் செய்தவன்....
“இந்த பாரு கயலு.... என்ன நடந்தாலும் இந்த கையை மட்டும் எடுக்கவே கூடாது....... வாழ்ந்தா.... ரெண்டுபேரும் ஒன்னா வாழ்வோம்..... செத்தாலும் ரெண்டுபேரும் ஒன்னாவே சாவோம்.......”
கயலுக்கு கண்ணீர் அந்த தண்ணீரோடு சென்று கொண்டே இருந்தது.....கடவுளே இவர காப்பாத்து.......காப்பாத்து என எல்லா தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே இருந்தாள்.... தண்ணீரின் அளவும் கூடி கயலின் மூக்குக்கு அருகே வந்தது.... அவளும் தன் கால் விரல்களை ஊண்டி எக்கியபடிதான் நின்று கொண்டிருந்தாள்......
கண்ணனுக்கு அப்போதுதான் தன் செல்போனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பையில் வைத்த ஞாபகம் வர........... கஷ்டப்பட்டு அதை எடுத்து அதில் டார்ச்சை உயிர்பித்தான்......தங்களை சுற்றி பார்க்க எங்கும் ஒரே வெள்ளக்காடாக தெரிந்தது.....ஒரு அடிகூட முன்னால் போக முடியாது......பின்புறம் பார்த்தவனுக்கு தண்ணிர் தாழ்வான பகுதிக்கு செல்வதை பார்த்ததும் டக்கென ஒரு யோசனை தோன்றியது.......
“கயலு .... இப்ப என்ன ஆனாலும் சரி... பயப்படாம என்னைய நறுக்குன்னு புடுச்சுக்கனும்....சரியா.....”
கயலுக்கு பேச முடியவில்லை தண்ணீரின் அளவுகூடி அவள் மூச்சுக்குழாயிலும் தண்ணீர் ஏறத்துவங்கியது..... கயல் சுயநினைவை இழந்து கொண்டிருந்தாள்....கயலிடம் இருந்து எந்த சத்தம் வராமல் இருக்கவும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன்..... மெதுவாக தண்ணீர் தாழ்வான பகுதிக்கு போகும் பக்கம் திரும்பியவன்...தன் காலை தூக்க அவனும் நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்பட்டான்...... ஒரு பத்தடி தூரம் அதன் வேகத்தோடு சென்றவன்........தன் கணக்கிட்ட தூரம் வரவும்.... மெதுவாக சற்று தள்ளி நீச்சல் அடித்துச் சென்றான்.....நீரின் வேகத்தில் அவனால் கயலோடு நீச்சல்கூட அடிக்க முடியவில்லை......அங்கே இருந்த அந்த பெரிய ஆலமரத்தின் பெரிய விழுதுகள் ஆங்காங்கே வேர்விட்டு நின்றிருந்தது. அந்த ஆலமரத்தின் விழுதைப் எட்டிப் பிடித்திருந்தான்..... அதை பிடித்தவாறு மெதுவாக காலை ஊண்டியவன்...... மறுகையால் கயலை தடவிபார்க்க கயல் அவன்மேல் மயங்கி சரிந்திருந்தாள்.......
அந்த விழுதில் இருந்து மெதுவாக தடவிபார்த்து மற்ற விழுதை பிடித்து காலை நறுக்கென ஊண்டியபடி காலை தூக்கி வைக்க முடியாமல் மெதுவாக தன் கால்விரலை வைத்தே... மெதுவாக ஊர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விழுதை பிடித்தபடி அந்த பாலத்தின் மறு பகுதியை அடைந்தான்......அந்த மரத்தின் பெரிய வேர் பகுதியை அடைந்தவன் கயலை அந்த மரத்தின் அடியில்படுக்க வைத்தான்.......
“கயல்...... கயல்....”என்றபடி அவள் கன்னத்தை தட்ட........ முந்தானையை எடுத்து அவன் கட்டியிருந்ததால் சேலை கலைந்து பாதி சேலை தரையில் கிடந்தது.... அவள் மார்பில் தலை வைத்து இதயத்தின் ஓசை கேட்கிறதா... என்பதை காது கொடுத்து கேட்டவன் அதன் ஓசை கேட்கவும்தான் அவனுக்கு பாதி உயிர் வந்தது... அவள் வயிற்றில் தன் கையை வைத்து அமுக்கி நீரை எடுக்க முயற்சி செய்தவன்....அதில் பலன் இல்லாமல் போகவும் தன் வாய் வழியாக அவளுக்கு மூச்சுக்காற்றை செலுத்தினான்.... நீண்ட நேரம் முயற்சிக்கு பின் கயலிடம் லேசாக அசைவு தெரியவும் கண்ணன் அவள் மேலேயே படுத்து விட்டான்....கண்ணனின் கண்ணீர் கயலின் மார்பை நனைத்தது...... கயல் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தவள்......தன் மார்பில் படுத்திருந்த கண்ணனை பார்த்தவள் தன் மேல் சூடான கண்ணீர்துளி விழுவதை உணர்ந்து.....
“என்னங்க......... ஏங்க.... இங்க பாருங்க....”
கண்ணனால் முடியவில்லை.... இவ்வளவுநேரம் கயலை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறியில் இருந்தவனுக்கு இப்போது தன் மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.... இருவரும் உயிரோடு பிழைத்து விட்டோம் என்பதையே நம்ப முடியாமல் அப்புடியே படுத்து விட்டான்......
கயல் கண்ணனின் மனநிலையை உணர்ந்து மெதுவாக அவன் தலையை தடவி கொடுத்தவள்.......இது எப்புடி நடந்துச்சு.... நாம எப்புடி பிழைச்சோம் என்பதே அவளுக்கு தெரியவில்லை.... அவளுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான் கண்ணனுக்கு ஒன்னும் ஆகலை.....அவரு நல்லாயிருக்காரு.......இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை.....ஒரு மாதிரி மயக்க நிலையில் இருந்தார்கள்.... இது இருவருக்குமே மறுபிறப்பு மாதிரிதான் .....
சிறிது நேரம் கழித்து கயல் லேசாக அசையவும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்னடா..... என்ன பண்ணுது.....”
“இல்ல.... கால்ல என்னமோ வலிக்குற மாதிரி தெரியுது.....”
அவன் கால் பக்கம் வந்து அவளின சேலையை மேலே ஏற்றி கயலின் காலை பார்க்க அந்த பெரிய மரக்கம்பு கிழித்ததில் அவள் முழங்காலுக்கு கீழே பெரிய காயம் ஏற்பட்டிருந்தது....ரத்தமும் கசியவும் பதறி போன கண்ணன் தன் வேட்டியின் ஒரு ஓரத்தை கிழித்து அவளின் காயத்துக்கு கட்டுப் போட்டு விட்டான்.....
“உன்னால நடக்க முடியுமா....மெதுவா காலை ஊண்டி பாக்குறியா....”தூரத்தில் யாரோ இருவரின் பேச்சுக் குரல் கேட்டது.....மெதுவாக எழுந்த கயல்…..காலை ஊன்ற முடியாமல்
“ஏங்க என்னைய கொஞ்சம் புடிச்சுக்கிறிங்களா....யாரோ வார மாதிரி இருக்கு நான் சேலைய ஒழுங்கா கட்டிக்குறேன்......”
கண்ணன் அவளின் தோளில் கைவைத்து பிடித்துக் கொள்ள….”என்னங்க சேலை இப்புடி கிழிஞ்சு போச்சு....”அவள் சேலையின் முந்தானை பெரிதாக கிழிந்து தொங்கியது.....” இது எங்க தாமரை அக்கா எடுத்து குடுத்த சேலை இப்புடி போச்சேங்க.....”
“ஆமாண்டி... ஊயிரே போக இருந்துச்சு...சேலை ரொம்ப முக்கியம் பாரு....வா நான் உனக்கு நூறு சேலை எடுத்து தாரேன்….”என்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க...
“என்னங்க இப்புடி பாக்குறிங்க......”
“இல்ல.. தண்ணிக்குள்ள நிக்கையில ஏன் கிறுக்குமாதிரி பண்ணுன..... அப்புடி என்னடி என்னோட உசிரு மட்டும் பெருசா போச்சு......”
“ம்ம்ம்......ஆமா நீங்கதானே எனக்கு உசிரு... எனக்கு என்னையவிட உங்களதானே ரொம்ப புடிச்சிருக்கு.......”அவள் எலும்பே நொறுங்கும் அளவுக்கு அவளை அணைத்தவன்...... பேச்சுக்குரல் மிக அருகில் கேட்கவும் கண்ணன் கயலை தூக்கி அந்த மரத்தின் தூருக்கு அருகில் உட்காரவைத்தான்.....
அத்தியாயம் -29
கயல் கை உதறவும் கண்ணனுக்கு கடுமையான கோபம் வந்தது....”.ஏய்... என்னடி லூசா புடுச்சிருக்கு.... பேசாம இரு “என்றபடி அவள் கையை இறுக்கினான்.....
“இல்லங்க.... என்னைய விடுங்க....நிச்சயமா என்னால நடந்தோ இல்ல நீச்சல் அடிச்சோ வரமுடியாது...... ப்ளிஸ்.... என்னைய விடுங்க.....நீங்க எப்புடியாச்சும் நீச்சல் அடிச்சு போயிருங்க...... ப்ளிஸ்ங்க.....”
“மூச்..... வாய மூடு.... இப்ப விட்டா உனக்கு என்ன ஆகும்னு தெரியும்ல......”
“தெரியும்ங்க..... காலையில எங்கயாச்சும் கம்மாயில மிதப்பேன்....... அது பரவால்லங்க..... உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாதுங்க...”என்றபடி மறுகையால் அவனை அணைத்தவள் “எனக்கு என்னையவிட உங்க உயிர்தாங்க முக்கியம்…. நீங்க எப்புடியாச்சும் போயிருங்க.....”
“அப்புடி மட்டும் நடக்குமுன்னு கனவுல கூட நினைக்காத..... சாவு வருதுன்னா... அது எனக்கப்பறம் தான் அது உன்னைய நெருங்கவே செய்யும்..... நீ மட்டும் தண்ணில போனா நான் வீட்டுக்கு போவேன்னு நினைச்சியா..... கண்டிப்பா இல்ல....உன்பின்னாடியே நானும் வந்துருவேன்......அதுனால கிறுக்குத்தனமா யோசிக்காம....எப்புடி வீட்டுக்கு போறதுன்னு யோசி......”
அப்போது அங்கே வேகமாக வந்த ஒரு பெரிய மரக்கம்பு ஒன்று அவள் காலில் சடாரென்று அடித்து அதன் கிளைகள்...கயலின் காலை கிழித்தப்படி சென்றது...... கயல் தடுமாறி கீழே விழ இருந்தாள்......எட்டி... அவள் மறுகையை பிடித்தவன்.....அவள் சேலையின் முந்தானையை கழட்டியவன்..... அவளை மெதுவாக தன் பின்புறம் வரச்செய்து தன் இடுப்போடு சேர்த்து அவளை கட்டினான்....... என்ன... செய்வது... என்ன செய்வது..... யாராவது வருகிறார்களா எனப்பார்க்க ஒருவரையும் காணவில்லை..... கயலின் இரு கையையும் தன் முன்னால் இழுத்து தன் சட்டையை பிடிக்கச் செய்தவன்....
“இந்த பாரு கயலு.... என்ன நடந்தாலும் இந்த கையை மட்டும் எடுக்கவே கூடாது....... வாழ்ந்தா.... ரெண்டுபேரும் ஒன்னா வாழ்வோம்..... செத்தாலும் ரெண்டுபேரும் ஒன்னாவே சாவோம்.......”
கயலுக்கு கண்ணீர் அந்த தண்ணீரோடு சென்று கொண்டே இருந்தது.....கடவுளே இவர காப்பாத்து.......காப்பாத்து என எல்லா தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே இருந்தாள்.... தண்ணீரின் அளவும் கூடி கயலின் மூக்குக்கு அருகே வந்தது.... அவளும் தன் கால் விரல்களை ஊண்டி எக்கியபடிதான் நின்று கொண்டிருந்தாள்......
கண்ணனுக்கு அப்போதுதான் தன் செல்போனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பையில் வைத்த ஞாபகம் வர........... கஷ்டப்பட்டு அதை எடுத்து அதில் டார்ச்சை உயிர்பித்தான்......தங்களை சுற்றி பார்க்க எங்கும் ஒரே வெள்ளக்காடாக தெரிந்தது.....ஒரு அடிகூட முன்னால் போக முடியாது......பின்புறம் பார்த்தவனுக்கு தண்ணிர் தாழ்வான பகுதிக்கு செல்வதை பார்த்ததும் டக்கென ஒரு யோசனை தோன்றியது.......
“கயலு .... இப்ப என்ன ஆனாலும் சரி... பயப்படாம என்னைய நறுக்குன்னு புடுச்சுக்கனும்....சரியா.....”
கயலுக்கு பேச முடியவில்லை தண்ணீரின் அளவுகூடி அவள் மூச்சுக்குழாயிலும் தண்ணீர் ஏறத்துவங்கியது..... கயல் சுயநினைவை இழந்து கொண்டிருந்தாள்....கயலிடம் இருந்து எந்த சத்தம் வராமல் இருக்கவும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன்..... மெதுவாக தண்ணீர் தாழ்வான பகுதிக்கு போகும் பக்கம் திரும்பியவன்...தன் காலை தூக்க அவனும் நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்பட்டான்...... ஒரு பத்தடி தூரம் அதன் வேகத்தோடு சென்றவன்........தன் கணக்கிட்ட தூரம் வரவும்.... மெதுவாக சற்று தள்ளி நீச்சல் அடித்துச் சென்றான்.....நீரின் வேகத்தில் அவனால் கயலோடு நீச்சல்கூட அடிக்க முடியவில்லை......அங்கே இருந்த அந்த பெரிய ஆலமரத்தின் பெரிய விழுதுகள் ஆங்காங்கே வேர்விட்டு நின்றிருந்தது. அந்த ஆலமரத்தின் விழுதைப் எட்டிப் பிடித்திருந்தான்..... அதை பிடித்தவாறு மெதுவாக காலை ஊண்டியவன்...... மறுகையால் கயலை தடவிபார்க்க கயல் அவன்மேல் மயங்கி சரிந்திருந்தாள்.......
அந்த விழுதில் இருந்து மெதுவாக தடவிபார்த்து மற்ற விழுதை பிடித்து காலை நறுக்கென ஊண்டியபடி காலை தூக்கி வைக்க முடியாமல் மெதுவாக தன் கால்விரலை வைத்தே... மெதுவாக ஊர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விழுதை பிடித்தபடி அந்த பாலத்தின் மறு பகுதியை அடைந்தான்......அந்த மரத்தின் பெரிய வேர் பகுதியை அடைந்தவன் கயலை அந்த மரத்தின் அடியில்படுக்க வைத்தான்.......
“கயல்...... கயல்....”என்றபடி அவள் கன்னத்தை தட்ட........ முந்தானையை எடுத்து அவன் கட்டியிருந்ததால் சேலை கலைந்து பாதி சேலை தரையில் கிடந்தது.... அவள் மார்பில் தலை வைத்து இதயத்தின் ஓசை கேட்கிறதா... என்பதை காது கொடுத்து கேட்டவன் அதன் ஓசை கேட்கவும்தான் அவனுக்கு பாதி உயிர் வந்தது... அவள் வயிற்றில் தன் கையை வைத்து அமுக்கி நீரை எடுக்க முயற்சி செய்தவன்....அதில் பலன் இல்லாமல் போகவும் தன் வாய் வழியாக அவளுக்கு மூச்சுக்காற்றை செலுத்தினான்.... நீண்ட நேரம் முயற்சிக்கு பின் கயலிடம் லேசாக அசைவு தெரியவும் கண்ணன் அவள் மேலேயே படுத்து விட்டான்....கண்ணனின் கண்ணீர் கயலின் மார்பை நனைத்தது...... கயல் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தவள்......தன் மார்பில் படுத்திருந்த கண்ணனை பார்த்தவள் தன் மேல் சூடான கண்ணீர்துளி விழுவதை உணர்ந்து.....
“என்னங்க......... ஏங்க.... இங்க பாருங்க....”
கண்ணனால் முடியவில்லை.... இவ்வளவுநேரம் கயலை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறியில் இருந்தவனுக்கு இப்போது தன் மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.... இருவரும் உயிரோடு பிழைத்து விட்டோம் என்பதையே நம்ப முடியாமல் அப்புடியே படுத்து விட்டான்......
கயல் கண்ணனின் மனநிலையை உணர்ந்து மெதுவாக அவன் தலையை தடவி கொடுத்தவள்.......இது எப்புடி நடந்துச்சு.... நாம எப்புடி பிழைச்சோம் என்பதே அவளுக்கு தெரியவில்லை.... அவளுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான் கண்ணனுக்கு ஒன்னும் ஆகலை.....அவரு நல்லாயிருக்காரு.......இருவரும் இந்த உலகத்திலேயே இல்லை.....ஒரு மாதிரி மயக்க நிலையில் இருந்தார்கள்.... இது இருவருக்குமே மறுபிறப்பு மாதிரிதான் .....
சிறிது நேரம் கழித்து கயல் லேசாக அசையவும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்னடா..... என்ன பண்ணுது.....”
“இல்ல.... கால்ல என்னமோ வலிக்குற மாதிரி தெரியுது.....”
அவன் கால் பக்கம் வந்து அவளின சேலையை மேலே ஏற்றி கயலின் காலை பார்க்க அந்த பெரிய மரக்கம்பு கிழித்ததில் அவள் முழங்காலுக்கு கீழே பெரிய காயம் ஏற்பட்டிருந்தது....ரத்தமும் கசியவும் பதறி போன கண்ணன் தன் வேட்டியின் ஒரு ஓரத்தை கிழித்து அவளின் காயத்துக்கு கட்டுப் போட்டு விட்டான்.....
“உன்னால நடக்க முடியுமா....மெதுவா காலை ஊண்டி பாக்குறியா....”தூரத்தில் யாரோ இருவரின் பேச்சுக் குரல் கேட்டது.....மெதுவாக எழுந்த கயல்…..காலை ஊன்ற முடியாமல்
“ஏங்க என்னைய கொஞ்சம் புடிச்சுக்கிறிங்களா....யாரோ வார மாதிரி இருக்கு நான் சேலைய ஒழுங்கா கட்டிக்குறேன்......”
கண்ணன் அவளின் தோளில் கைவைத்து பிடித்துக் கொள்ள….”என்னங்க சேலை இப்புடி கிழிஞ்சு போச்சு....”அவள் சேலையின் முந்தானை பெரிதாக கிழிந்து தொங்கியது.....” இது எங்க தாமரை அக்கா எடுத்து குடுத்த சேலை இப்புடி போச்சேங்க.....”
“ஆமாண்டி... ஊயிரே போக இருந்துச்சு...சேலை ரொம்ப முக்கியம் பாரு....வா நான் உனக்கு நூறு சேலை எடுத்து தாரேன்….”என்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க...
“என்னங்க இப்புடி பாக்குறிங்க......”
“இல்ல.. தண்ணிக்குள்ள நிக்கையில ஏன் கிறுக்குமாதிரி பண்ணுன..... அப்புடி என்னடி என்னோட உசிரு மட்டும் பெருசா போச்சு......”
“ம்ம்ம்......ஆமா நீங்கதானே எனக்கு உசிரு... எனக்கு என்னையவிட உங்களதானே ரொம்ப புடிச்சிருக்கு.......”அவள் எலும்பே நொறுங்கும் அளவுக்கு அவளை அணைத்தவன்...... பேச்சுக்குரல் மிக அருகில் கேட்கவும் கண்ணன் கயலை தூக்கி அந்த மரத்தின் தூருக்கு அருகில் உட்காரவைத்தான்.....
Last edited: