நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்- 26
வாசுவும் சுதாவும் அந்த இரவு நேரத்தில் தோப்பிற்கு போக.... அங்கு தெருவிளக்குகூட இல்லாமல்..... இருட்டு கரும்கும்மென்று இருந்தது.... சுதாவிற்கு மனதிற்குள் பயம் எழுந்தது.....” என்னங்க இது ஆள் நடமாட்டமே இல்லாம ஊருக்கு கடைசியில இருக்கு....”
“அப்புறம்... ஊருக்கு நடுவுலயா தோப்பு... இருக்கும்.... கொஞ்சநேரம் நைநைன்னு பேசாம வாயமூடிக்கிட்டு வா....”
சுதாவுக்கு கடுப்பு தாங்கமுடியவில்லை.... இவரு தேவையில்லாம பேசாம இருந்திருந்தா நல்ல ஏசி ரூம்ல படுத்து தூங்கியிருக்கலாம்.... இப்ப என்னனா பேய் இருக்குற எடத்துக்கு போறமாதிரி இருக்கு.......
தோப்புக்குள் வந்தவன் வண்டியை நிப்பாட்ட வீட்டை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.... வாழ்க்கையின் முதல் முறையாக......எதிலோ தவறிய உணர்வு தோன்றியது.....
வாசு கதவை திறந்து லைட்டை போட....ஒரு அடுப்படி... ஒரு ஹால் மட்டுமே இருந்தது..சுதாவுக்கு மயக்கம் மட்டும்தான் வரவில்லை.... பிரம்மை பிடித்தபடி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்......... நம்ம அம்மா வீட்ல அடுப்படி கூட இதைவிட பெருசா இருக்குமே...... அந்த வீடு தோப்பில் வேலை பார்ப்பவர்களுக்காக கட்டப் பட்டது...... இப்போது யாரும் இல்லை...
“பாத்ரூம்லாம் இருக்கா.... இல்லையா....”
“அந்தா....” என்று சற்று தொலைவில் காட்டினான்....
“என்னால.... இந்த வீட்ல ஒரு நிமிசம்கூட இருக்கமுடியாது.... ஒழுங்கா வேற வீட்டை பாருங்க.....”
“என்கிட்ட அந்த அளவுக்கு வருமானம் இல்ல... இங்க இருக்கறதாயிருந்தா இரு... இல்லையா உங்க அம்மா வீட்டுக்கு போ....”
“நான் வேணா.... காலையில உங்க தம்பிக்கிட்ட பேசவா...அவரு எங்கிட்ட நல்லாதானே பேசுறாரு.....”
“ச்சீ...தம்பியாம் தம்பி... இனிமேல் அவன் எனக்கு தம்பியே இல்லை.... இனிமேல் எக்காரணம் கொண்டும் அவன்கிட்ட பேசுறத பாத்தேன்.... அப்புறம் நீ புது வாசுவ பாக்கவேண்டியது இருக்கும்.... அத எப்பவும் ஞாபகத்துல வச்சுக்க..... போ போய் வீட்டை கூட்டு... நாளைக்கு போய் உன்னோட சாமான்கள ஆளுவிட்டு எடுத்துவரச் சொல்லுவோம்... .நாளையில இருந்து தோப்புல வேலையிருக்கு நீயும் கூடமாட வேலை பாக்குறது மாதிரி இருக்கும்.....”
அந்த வீட்டை கூட்டிவிட்டு ஒரு கிழிந்த பாயை விரித்து படுத்த சுதாவுக்கு அழுகை நிற்கவே இல்லை.... அவள் தாய் வீட்டில் அவள் மட்டும் தனிஅறையில்தான் படுப்பாள்...... மற்ற மூவரும்தான் ஒன்றாக படுப்பார்கள்..... இங்கு இந்த பேன் ஏதோ பேருக்கு ஓடுது...... கொசுவேற கடிக்குது..... அவள் எழுந்து உட்கார்ந்திருக்க... வாசு தூங்கிகொண்டிருந்தான்... இனிமே என்னோட வாழ்க்கையும் இப்புடி வெறுமையாதான் போக போகுதா.....
அங்கு கண்ணன் வீட்டில் கண்ணனும் கயலும் மாடியில் இருந்து இறங்கிவர.... காந்திமதி...மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தவர்... இவர்களை பார்க்கவும் “கயலு நீயும் எங்களோட கிளம்புறியாத்தா.... அங்க நம்ம மாரியாத்தா கோவிலுக்கு காப்பு கட்டுறாங்க...... பாரி போட போறோம்....மொளக்கொட்டு (கும்மியடித்தல்... )வேற இருக்குல…..”
கண்ணனோ... கயலை பார்த்தவன் இவ நம்மள கண்டிப்பா ஊருக்கு போகவான்னு கேப்பா... நாம வேணாமுன்னு சொல்லிருவோம்....கயலு என்னைய பாரு..... பாரு என மனதிற்குள் உருப்போட.... அவள் கண்ணனை நிமிர்ந்துகூட பார்க்காமல்…………….. “ஐய்...... காப்பு கட்டப்போறாங்களா... .. சரி அப்பத்தா..... நானும் கண்டிப்பா வாரேன்..... காலேஜ் வேணா அங்கிட்டு இருந்து போயிக்கலாம்ல..... சூப்பர்...... இன்னைக்கு...மத்தியானமாவா இல்ல..... இப்பவே கிளம்ப வா...” மல்லிகாவிடம் அந்த எட்டு நாளும் என்ன டிரஸ் போடுவது என்று ஆலோசனையில் இறங்கினாள்......
“ஏத்தா...... உங்க வீட்டுக்காரர்கிட்டயும் ...மாமியாகிட்டயும் கேக்கவேணாம்....”
சாவித்திரியோ....” ஆத்தாடி சாமி காரியம் நாங்க ஏன் வேணாமுன்னு சொல்லப் போறோம்.... எத்தன நாளுத்தா....”.
“எட்டு நாளுத்தே...... எட்டாம் நாளு நல்லா சிறப்பா இருக்கும்த்தே..... நீங்க எல்லாரும் கண்டிப்பா வந்திருங்க....”
“அக்கா அதுக்கு மறுநாளு தானே உனக்கு பிறந்தநாளு வேற வருது.....”
“ஹேய்........ ஆமாடி.... “என்றபடி அவள் தங்கைகளோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.....
கண்ணனோ...... நான் ஒரு மனுசன் இங்கன குத்துக்கல்லு மாதிரி நிக்குறேன்..... இவளுக்கு தாலி வேற கட்டியிருக்கேன்....நாமள ஒரு மனுசனா மதிக்குறாளா....... இவ கேக்க வந்தாகூட நம்ம அம்மா...... வரவர அம்மாவும் இவ மாதிரியே மாறிட்டாங்க.... முன்னாடியெல்லாம் எல்லா விசயத்தையும் நம்மகிட்ட கேக்காம முடிவெடுக்க மாட்டாங்க.... இப்ப என்னான்னா.......ம்ம்ம் கண்ணா இப்புடியே போன உன்னோட நிலைமை...... இவள எப்புடி ஊருக்கு போக விடாம பண்ணுறது..... என்று யோசித்தபடி இருக்க .......
கயலோ...”..நான் போய் டிரஸ்ஸ எடுத்து வைக்கிறேன்......” என்றபடி மாடிக்கு ஓடினாள்.....
பின்னாடியே போவோம் என்று எழுந்தவனை..... அந்த தாத்தாக்கள் ஒன்னு மாத்தி ஒன்னு கேட்டு பேச்சை வளர்க்க..... கண்ணனோ....தாத்தா... ப்ளிஸ் அஞ்சு நிமிசம் விடுங்களேன் என மனசுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தான்......
அப்போது சாவித்திரி வந்து காப்பி கொடுக்க...... கண்ணன் மெதுவாக நழுவி மாடிக்குச் சென்றான்......
கயல் ஒரு வாரத்துக்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க... .மாடிக்கு வந்த கண்ணன்.... அந்த துணிகளை கீழே தள்ளிவிட்டவன் அவளை நெருங்கி அணைத்திருந்தான்.........
“ஏங்க துணியெல்லாம் கீழ தள்ளிவிட்டீங்க.... இது நல்லாயில்லயா...... அப்ப நீங்க சொல்லுங்க.... எத எடுத்து வைக்க.......????”
“நீ என்னதான்டி மனசுல நினைச்சிருக்க..... நீ ஊருக்கு போ நான் மாலை ஒன்ன வாங்கி போட்டுகிட்டு கோயில் கோயிலா..... போறேன்....”
“சூப்பர்ங்க....... கோயிலுக்கு மாலை போட போறிங்களா..... எந்த கோவிலுக்கு முருகனுக்கா.... இல்ல ஐயப்பனுக்கா.......”
கண்ணன் முறைத்தபடி நிற்க......
“எத்தனை நாள்னு சொல்லுங்க..... ஏன்னா ஐயப்பனுக்கு மாலை போட்டா விரதம் கடுமையா இருக்கனுமாம்........ எங்க தாமரை அக்கா சொல்லும்....”
“ம்ம்ம..... வருசம் பூராவும்....”
“என்னது வருசம் பூராவுமா..... உங்க பக்கட்டு அப்புடி ஒரு கோயில் இருக்கா... அத்தை சொல்லவேயில்லை..... இருங்க நான் போயி அத்தகிட்ட எப்புடி விரதம் இருக்கனும்னு கேட்டுட்டு வாரேன்.......”.என்றபடி திரும்பி போக பார்க்க.......
“ஆமாடி நீ ஊருக்கு போயிட்டு வா... நான் சாமியாரா போறேன்...” கோபத்துடன் போய் கட்டிலில் உட்கார....
“ஏங்க நீங்க எம்மேல கோபமாவா இருக்கிங்க....” என்று ஆச்சர்யத்துடன் கேட்க....
“ஏன் அது உனக்கு தெரியலயா....?”
“இல்ல... முன்னாடியெல்லாம் கோபப்பட்டா கண்ணெல்லாம் செவந்து பாக்கவே பயமாயிருக்கும்..... ஆனா இன்னைக்கு கோபமாயிருக்கிங்கன்னு நீங்க சொல்லித்தாங்க தெரியுது....”
கயலை பிடித்து தன்மேல் சாய்த்தவன்.....” உனக்கு என்னைய பாத்தா... காமெடிபீசா இருக்கா......பயம் விட்டுப் போச்சு” என்றபடி ஒரு முறை முறைக்க...
கயலுக்கு கண்ணில் நீர்கோர்த்தது....” இனிமே இப்புடியெல்லாம் பேசமாட்டேன்......”
கயலை கட்டிலில் சாய்த்தவன்..... அவள் மேல் படர்ந்தான்..... அவள் கன்னத்தை கடித்து... “ஏய் பயந்துட்டியா.... சும்மாதான் மிரட்டுனேன்.....”.
“போங்க கன்னமெல்லாம் எச்சி....”.
“அப்புடிங்கிற……” என்றபடி மறுகன்னத்தையும் கடித்தவன்...”.இப்ப என்ன பண்ணுவ......”
“ஐய ரெண்டு பக்கமும் எச்சி....” தன் கன்னத்தை துடைக்க...
.”நீ. இப்ப என்ன பண்ணுற கீழ போயி ஊருக்கு வரலைன்னு சொல்லிட்டு வார...... போ.....”.
“இல்ல அந்த சாமி ரொம்ப சக்தியான சாமி ப்ளிஸ்ங்க இந்த ஒருவாரம் மட்டும் போய் விரதம் இருந்துட்டு வந்திருரேனே..... ப்ளிஸ்ங்க........ப்ளிஸ்....” என்றபடி கண்களை சுருக்க....
“ம்ம்ம் இப்புடி பாவமா பாத்தே மனுசன கொல்லுடி..... நீ வேணா இங்கயே விரதமா இரு கடைசி நாள்ல நான் உன்னைய ஊருக்கு கூட்டிட்டு போறேன்...... சரியா....”
“இல்லங்க... அது சரிவராது.....நான் இங்கயிருந்தா...நீங்க கைய வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டிங்க.......”
கண்ணனின் ஒரு கை அவள் வெற்றிடையை வருடியபடி இருக்க...மற்றொரு கையோ அவள் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தது.....” நான் என்னடி பண்றேன்.....”
“இப்புடியெல்லாம் பண்ணா விரதம் தப்பாயிரும் அப்புறம் சாமி கண்ணை குத்தும்.. நான் ஊருக்கே போறேன்.....”
“ம்ம்ம் அப்புடிங்குற சரி..... போ...நான் கேக்குறத குடுத்திட்டு போ.....”
“என்கிட்ட என்னயிருக்கு......”
அவள் ஏதோ சொல்லிக்கொண்டேயிருக்க...”.எல்லாம் உன்கிட்டதான்டி இருக்கு உன்னைய பேசவே விடக்கூடாதுடி……..” என்றபடி அவள் இதழில் தன் இதழை புதைத்தான்........கயல் அவன் முத்தத்தில் ஆழ்ந்து அவன் முதுகில் கை கொடுத்து இறுக்க.....கதவு தட்டும் சத்தம் கேட்டது........
சுயநினைவுக்கு வந்த கயல்” யாரோ கதவை தட்டுறாங்க........”. அவனை விலக்க பார்க்க....” ஏய்... கொஞ்சம் பேசாம இருடி.....”என்றபடி கயலின் கழுத்தில் முகத்தை பதித்தான்.....
கயவு ஓங்கி தட்டப் படவும்...”.ச்சை.... அம்புட்டும் இம்சைங்க... “என்று சலித்தபடி வந்து கதவை திறந்தவன்........” முத்து .... அண்ணே... அண்ணிய கீழவரச் சொல்றாங்க.....”
“ம்ம்ம்.... “சற்று நேரத்தில் கயலும் கிளம்பிவர அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.......
அத்தியாயம்- 26
வாசுவும் சுதாவும் அந்த இரவு நேரத்தில் தோப்பிற்கு போக.... அங்கு தெருவிளக்குகூட இல்லாமல்..... இருட்டு கரும்கும்மென்று இருந்தது.... சுதாவிற்கு மனதிற்குள் பயம் எழுந்தது.....” என்னங்க இது ஆள் நடமாட்டமே இல்லாம ஊருக்கு கடைசியில இருக்கு....”
“அப்புறம்... ஊருக்கு நடுவுலயா தோப்பு... இருக்கும்.... கொஞ்சநேரம் நைநைன்னு பேசாம வாயமூடிக்கிட்டு வா....”
சுதாவுக்கு கடுப்பு தாங்கமுடியவில்லை.... இவரு தேவையில்லாம பேசாம இருந்திருந்தா நல்ல ஏசி ரூம்ல படுத்து தூங்கியிருக்கலாம்.... இப்ப என்னனா பேய் இருக்குற எடத்துக்கு போறமாதிரி இருக்கு.......
தோப்புக்குள் வந்தவன் வண்டியை நிப்பாட்ட வீட்டை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.... வாழ்க்கையின் முதல் முறையாக......எதிலோ தவறிய உணர்வு தோன்றியது.....
வாசு கதவை திறந்து லைட்டை போட....ஒரு அடுப்படி... ஒரு ஹால் மட்டுமே இருந்தது..சுதாவுக்கு மயக்கம் மட்டும்தான் வரவில்லை.... பிரம்மை பிடித்தபடி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்......... நம்ம அம்மா வீட்ல அடுப்படி கூட இதைவிட பெருசா இருக்குமே...... அந்த வீடு தோப்பில் வேலை பார்ப்பவர்களுக்காக கட்டப் பட்டது...... இப்போது யாரும் இல்லை...
“பாத்ரூம்லாம் இருக்கா.... இல்லையா....”
“அந்தா....” என்று சற்று தொலைவில் காட்டினான்....
“என்னால.... இந்த வீட்ல ஒரு நிமிசம்கூட இருக்கமுடியாது.... ஒழுங்கா வேற வீட்டை பாருங்க.....”
“என்கிட்ட அந்த அளவுக்கு வருமானம் இல்ல... இங்க இருக்கறதாயிருந்தா இரு... இல்லையா உங்க அம்மா வீட்டுக்கு போ....”
“நான் வேணா.... காலையில உங்க தம்பிக்கிட்ட பேசவா...அவரு எங்கிட்ட நல்லாதானே பேசுறாரு.....”
“ச்சீ...தம்பியாம் தம்பி... இனிமேல் அவன் எனக்கு தம்பியே இல்லை.... இனிமேல் எக்காரணம் கொண்டும் அவன்கிட்ட பேசுறத பாத்தேன்.... அப்புறம் நீ புது வாசுவ பாக்கவேண்டியது இருக்கும்.... அத எப்பவும் ஞாபகத்துல வச்சுக்க..... போ போய் வீட்டை கூட்டு... நாளைக்கு போய் உன்னோட சாமான்கள ஆளுவிட்டு எடுத்துவரச் சொல்லுவோம்... .நாளையில இருந்து தோப்புல வேலையிருக்கு நீயும் கூடமாட வேலை பாக்குறது மாதிரி இருக்கும்.....”
அந்த வீட்டை கூட்டிவிட்டு ஒரு கிழிந்த பாயை விரித்து படுத்த சுதாவுக்கு அழுகை நிற்கவே இல்லை.... அவள் தாய் வீட்டில் அவள் மட்டும் தனிஅறையில்தான் படுப்பாள்...... மற்ற மூவரும்தான் ஒன்றாக படுப்பார்கள்..... இங்கு இந்த பேன் ஏதோ பேருக்கு ஓடுது...... கொசுவேற கடிக்குது..... அவள் எழுந்து உட்கார்ந்திருக்க... வாசு தூங்கிகொண்டிருந்தான்... இனிமே என்னோட வாழ்க்கையும் இப்புடி வெறுமையாதான் போக போகுதா.....
அங்கு கண்ணன் வீட்டில் கண்ணனும் கயலும் மாடியில் இருந்து இறங்கிவர.... காந்திமதி...மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தவர்... இவர்களை பார்க்கவும் “கயலு நீயும் எங்களோட கிளம்புறியாத்தா.... அங்க நம்ம மாரியாத்தா கோவிலுக்கு காப்பு கட்டுறாங்க...... பாரி போட போறோம்....மொளக்கொட்டு (கும்மியடித்தல்... )வேற இருக்குல…..”
கண்ணனோ... கயலை பார்த்தவன் இவ நம்மள கண்டிப்பா ஊருக்கு போகவான்னு கேப்பா... நாம வேணாமுன்னு சொல்லிருவோம்....கயலு என்னைய பாரு..... பாரு என மனதிற்குள் உருப்போட.... அவள் கண்ணனை நிமிர்ந்துகூட பார்க்காமல்…………….. “ஐய்...... காப்பு கட்டப்போறாங்களா... .. சரி அப்பத்தா..... நானும் கண்டிப்பா வாரேன்..... காலேஜ் வேணா அங்கிட்டு இருந்து போயிக்கலாம்ல..... சூப்பர்...... இன்னைக்கு...மத்தியானமாவா இல்ல..... இப்பவே கிளம்ப வா...” மல்லிகாவிடம் அந்த எட்டு நாளும் என்ன டிரஸ் போடுவது என்று ஆலோசனையில் இறங்கினாள்......
“ஏத்தா...... உங்க வீட்டுக்காரர்கிட்டயும் ...மாமியாகிட்டயும் கேக்கவேணாம்....”
சாவித்திரியோ....” ஆத்தாடி சாமி காரியம் நாங்க ஏன் வேணாமுன்னு சொல்லப் போறோம்.... எத்தன நாளுத்தா....”.
“எட்டு நாளுத்தே...... எட்டாம் நாளு நல்லா சிறப்பா இருக்கும்த்தே..... நீங்க எல்லாரும் கண்டிப்பா வந்திருங்க....”
“அக்கா அதுக்கு மறுநாளு தானே உனக்கு பிறந்தநாளு வேற வருது.....”
“ஹேய்........ ஆமாடி.... “என்றபடி அவள் தங்கைகளோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.....
கண்ணனோ...... நான் ஒரு மனுசன் இங்கன குத்துக்கல்லு மாதிரி நிக்குறேன்..... இவளுக்கு தாலி வேற கட்டியிருக்கேன்....நாமள ஒரு மனுசனா மதிக்குறாளா....... இவ கேக்க வந்தாகூட நம்ம அம்மா...... வரவர அம்மாவும் இவ மாதிரியே மாறிட்டாங்க.... முன்னாடியெல்லாம் எல்லா விசயத்தையும் நம்மகிட்ட கேக்காம முடிவெடுக்க மாட்டாங்க.... இப்ப என்னான்னா.......ம்ம்ம் கண்ணா இப்புடியே போன உன்னோட நிலைமை...... இவள எப்புடி ஊருக்கு போக விடாம பண்ணுறது..... என்று யோசித்தபடி இருக்க .......
கயலோ...”..நான் போய் டிரஸ்ஸ எடுத்து வைக்கிறேன்......” என்றபடி மாடிக்கு ஓடினாள்.....
பின்னாடியே போவோம் என்று எழுந்தவனை..... அந்த தாத்தாக்கள் ஒன்னு மாத்தி ஒன்னு கேட்டு பேச்சை வளர்க்க..... கண்ணனோ....தாத்தா... ப்ளிஸ் அஞ்சு நிமிசம் விடுங்களேன் என மனசுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தான்......
அப்போது சாவித்திரி வந்து காப்பி கொடுக்க...... கண்ணன் மெதுவாக நழுவி மாடிக்குச் சென்றான்......
கயல் ஒரு வாரத்துக்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க... .மாடிக்கு வந்த கண்ணன்.... அந்த துணிகளை கீழே தள்ளிவிட்டவன் அவளை நெருங்கி அணைத்திருந்தான்.........
“ஏங்க துணியெல்லாம் கீழ தள்ளிவிட்டீங்க.... இது நல்லாயில்லயா...... அப்ப நீங்க சொல்லுங்க.... எத எடுத்து வைக்க.......????”
“நீ என்னதான்டி மனசுல நினைச்சிருக்க..... நீ ஊருக்கு போ நான் மாலை ஒன்ன வாங்கி போட்டுகிட்டு கோயில் கோயிலா..... போறேன்....”
“சூப்பர்ங்க....... கோயிலுக்கு மாலை போட போறிங்களா..... எந்த கோவிலுக்கு முருகனுக்கா.... இல்ல ஐயப்பனுக்கா.......”
கண்ணன் முறைத்தபடி நிற்க......
“எத்தனை நாள்னு சொல்லுங்க..... ஏன்னா ஐயப்பனுக்கு மாலை போட்டா விரதம் கடுமையா இருக்கனுமாம்........ எங்க தாமரை அக்கா சொல்லும்....”
“ம்ம்ம..... வருசம் பூராவும்....”
“என்னது வருசம் பூராவுமா..... உங்க பக்கட்டு அப்புடி ஒரு கோயில் இருக்கா... அத்தை சொல்லவேயில்லை..... இருங்க நான் போயி அத்தகிட்ட எப்புடி விரதம் இருக்கனும்னு கேட்டுட்டு வாரேன்.......”.என்றபடி திரும்பி போக பார்க்க.......
“ஆமாடி நீ ஊருக்கு போயிட்டு வா... நான் சாமியாரா போறேன்...” கோபத்துடன் போய் கட்டிலில் உட்கார....
“ஏங்க நீங்க எம்மேல கோபமாவா இருக்கிங்க....” என்று ஆச்சர்யத்துடன் கேட்க....
“ஏன் அது உனக்கு தெரியலயா....?”
“இல்ல... முன்னாடியெல்லாம் கோபப்பட்டா கண்ணெல்லாம் செவந்து பாக்கவே பயமாயிருக்கும்..... ஆனா இன்னைக்கு கோபமாயிருக்கிங்கன்னு நீங்க சொல்லித்தாங்க தெரியுது....”
கயலை பிடித்து தன்மேல் சாய்த்தவன்.....” உனக்கு என்னைய பாத்தா... காமெடிபீசா இருக்கா......பயம் விட்டுப் போச்சு” என்றபடி ஒரு முறை முறைக்க...
கயலுக்கு கண்ணில் நீர்கோர்த்தது....” இனிமே இப்புடியெல்லாம் பேசமாட்டேன்......”
கயலை கட்டிலில் சாய்த்தவன்..... அவள் மேல் படர்ந்தான்..... அவள் கன்னத்தை கடித்து... “ஏய் பயந்துட்டியா.... சும்மாதான் மிரட்டுனேன்.....”.
“போங்க கன்னமெல்லாம் எச்சி....”.
“அப்புடிங்கிற……” என்றபடி மறுகன்னத்தையும் கடித்தவன்...”.இப்ப என்ன பண்ணுவ......”
“ஐய ரெண்டு பக்கமும் எச்சி....” தன் கன்னத்தை துடைக்க...
.”நீ. இப்ப என்ன பண்ணுற கீழ போயி ஊருக்கு வரலைன்னு சொல்லிட்டு வார...... போ.....”.
“இல்ல அந்த சாமி ரொம்ப சக்தியான சாமி ப்ளிஸ்ங்க இந்த ஒருவாரம் மட்டும் போய் விரதம் இருந்துட்டு வந்திருரேனே..... ப்ளிஸ்ங்க........ப்ளிஸ்....” என்றபடி கண்களை சுருக்க....
“ம்ம்ம் இப்புடி பாவமா பாத்தே மனுசன கொல்லுடி..... நீ வேணா இங்கயே விரதமா இரு கடைசி நாள்ல நான் உன்னைய ஊருக்கு கூட்டிட்டு போறேன்...... சரியா....”
“இல்லங்க... அது சரிவராது.....நான் இங்கயிருந்தா...நீங்க கைய வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டிங்க.......”
கண்ணனின் ஒரு கை அவள் வெற்றிடையை வருடியபடி இருக்க...மற்றொரு கையோ அவள் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தது.....” நான் என்னடி பண்றேன்.....”
“இப்புடியெல்லாம் பண்ணா விரதம் தப்பாயிரும் அப்புறம் சாமி கண்ணை குத்தும்.. நான் ஊருக்கே போறேன்.....”
“ம்ம்ம் அப்புடிங்குற சரி..... போ...நான் கேக்குறத குடுத்திட்டு போ.....”
“என்கிட்ட என்னயிருக்கு......”
அவள் ஏதோ சொல்லிக்கொண்டேயிருக்க...”.எல்லாம் உன்கிட்டதான்டி இருக்கு உன்னைய பேசவே விடக்கூடாதுடி……..” என்றபடி அவள் இதழில் தன் இதழை புதைத்தான்........கயல் அவன் முத்தத்தில் ஆழ்ந்து அவன் முதுகில் கை கொடுத்து இறுக்க.....கதவு தட்டும் சத்தம் கேட்டது........
சுயநினைவுக்கு வந்த கயல்” யாரோ கதவை தட்டுறாங்க........”. அவனை விலக்க பார்க்க....” ஏய்... கொஞ்சம் பேசாம இருடி.....”என்றபடி கயலின் கழுத்தில் முகத்தை பதித்தான்.....
கயவு ஓங்கி தட்டப் படவும்...”.ச்சை.... அம்புட்டும் இம்சைங்க... “என்று சலித்தபடி வந்து கதவை திறந்தவன்........” முத்து .... அண்ணே... அண்ணிய கீழவரச் சொல்றாங்க.....”
“ம்ம்ம்.... “சற்று நேரத்தில் கயலும் கிளம்பிவர அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.......
Last edited: