காதல் பாடம்
நடத்த தயாராக நான்
அதை கற்று
பின்பற்ற
நீ தயாரா
நங்கையே???
ரம்யா வீட்டிற்கு சென்றுவிட்டு இல்லம் திரும்பினாள் ஶ்ரீ ....
அவள் வீட்டிற்கு வரும் போது ஹாலில் அமர்ந்திருந்தார் ராஜேஷ்குமார்...
ஶ்ரீயை கண்டதும்
“ஶ்ரீமா ஏன்மா லேட்டு...??” என்று கேட்க அவர் அருகில் வந்தமர்ந்த ஶ்ரீ
“ரம்யா அம்மாவ பார்க்க அவ வீட்டுக்கு போயிருந்தேன் பா.. உங்களுக்கு கால் பண்ணி சொன்னேன் தானேபா..”
“ஆமா மா...ஆனா...” என்றுவிட்டு கண்ஜாடையால் கிச்சனை காட்டி உதட்டை பிதுக்கினார் ராஜேஷ்குமார்.
“ஓ... அதுவா மேட்டர்... என்னவாம் அவங்களுக்கு... சொல்லிட்டு தானே போனேன்... ரம்யா அம்மாவை பார்க்கத்தானே போனேன்.. அதுவும் ஹேமா கூட தானே போனேன்...”என்று ஶ்ரீ கிச்சனை நோக்கி வேண்டுமென்றே சத்தமிட கிச்சனில் இருந்து தோசைக்கரண்டியுடன் வெளியே வந்த ராதா
“போனவ சீக்கிரம் வரணும்னு ஒரு எண்ணம் இருக்கா?? மணி என்னாச்சுனு பாரு.. கொஞ்சமாவது பயம்ங்குறது மனசுல இருக்கா?? இந்த ராத்திரியில ஆடி அசைந்து வர்றா... நீ வந்து சேர வரைக்கும் எனக்கு பக்கு பக்குனு இருக்கு... கல்யாணம் நிச்சயமாகியிருக்க நேரத்துல ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துருச்சினா என்ன பண்ணுறது... நீ வேலை பார்த்து கிழிச்சதெல்லாம் போதும்.... வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இரு...”
“என்னப்பா மம்மி இப்படி சொல்லுறாங்க... நீங்க என்ன சொல்லுறீங்க???” என்று ஶ்ரீ தன் தந்தையிடம் விளக்கம் கேட்க அவருக்கு பதிலாய் பதிலளித்தார் ராதா..
“அவரு என்ன சொல்லுறது??? ஆபிஸ் முடிஞ்சதும் டாங்னு ஆறு மணிக்கு வீட்டுக்கு வரமுடியும்னா வேலைக்கு போ...இல்லைனா வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இரு.. இது ரெண்டு ஆப்ஷன் தான் உனக்கு....” என்று முதலும் இறுதியுமாய் ராதா முடித்துவிட ஶ்ரீ தன் தந்தையை பார்த்தாள்...
அவரோ “அம்மா சொல்லுறதும் சரிதானேமா.. காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கு... உனக்கு மேரேஜ் பிக்கச் ஆகிருக்கு... இந்த டைமில் ஏதும் தப்பா நடந்துட்டா எல்லார் மனசுக்கும் கஷ்டம்.. வீட்டுக்கு டைமிற்கு வந்துருமா... லேட்டாகும்னா கால் பண்ணு அப்பா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்று அவரும் கெஞ்ச மறுக்க தோன்றவில்லை ஶ்ரீயிற்கு..
என்னதான் பெண்பிள்ளைகளை வேலைக்கு செல்ல பெற்றோர் அனுமதித்தாலும் அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவர்களுக்கு நிலை கொள்ளாது... இது பெண்குழந்தைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களுக்கும் பொருந்தும்...
ராதா அனைவரையும் சாப்பிட அழைக்க ஶ்ரீயோ தான் ரம்யா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாத கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்...
சிறிது நேரம் கழித்து ஶ்ரீயின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ராஜேஷ்குமார்
“என்னமா ரம்யா அம்மா எப்படி இருக்காங்க?? டாக்டர் என்ன சொன்னாங்களாம்??”
“அவங்களுக்கு வைரஸ் ப்ளூ தானாம்... அவங்க ரொம்ப வீக்க இருந்ததால லோ ப்ரஸர் ஆகி மயங்கி விழுந்துட்டாங்களாம்... வேற எதுவும் இல்லாம் பா...இப்போ ஆண்டி நல்லா இருக்காங்க...”
“சரிமா.... அப்பா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்மா..”
“சொல்லுங்க பா...”
“உனக்கு ரிஷியை புடிச்சிருக்கு தானேமா.. இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டம் தானேமா...??” என்ற ராஜேஷ்குமாரின் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கி தலையை குனிந்து கொண்ட ஶ்ரீயை தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்..
அவளது நடவடிக்கையிலேயே அவளுக்கு முழு சம்மதம் என்று புரிந்து கொண்ட ராஜோஷ்குமார் ஶ்ரீயை வம்பிழுக்கும் முகமாக
“என்னமா தலையை மட்டும் ஆட்டுற?? இதுக்கு என்ன அர்த்தம் புடிச்சிருக்குனா?? இல்லை புடிக்கலைனா?? உனக்கு பிடிக்காட்டி நான் மூர்த்திகிட்ட சொல்லிருர்றேன்...”
ஶ்ரீயோ மனதில் “ஐயோ இந்த அப்பா வேற நேரம் பார்த்து என்னை இப்படி வச்சி செய்றாரே... வேணும்னே என்னை ஓட்டுறாரு... இந்த நேரம் பார்த்து என்ன பேசுறதுனு கூட புரியமாட்டேன்குது...... இதுக்கு பெயர் தான் வெட்கமோ... ?? ஐயோ ஶ்ரீ உனக்கு வெட்கம்லா வருதா...??” என்று மனதினுள் பேசியபடி இருந்தவளை கலைத்தது ராஜேஷின் குரல்
“என்னமா எதுவும் பேச மாட்டேன்குற??? ஹா...”
“எனக்கு ரிஷி அத்தானை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் பா..”
“ஹாஹா இதை சொல்ல என் செல்ல மகளுக்கு இவ்வளவு நேரம்??? மாப்பிள்ளை வெளிநாடு போறார்னு மூர்த்தி சொன்னானே... மாப்பிள்ளை கிளம்பிட்டாராமா..??”
“ஆமா அப்பா.. இன்னைக்கு ஏர்லி மார்னிங் கிளம்பிட்டாரு... ரீச் ஆகிட்டேனு ஈவ்னிங் மெசேஜ் பண்ணியிருந்தாருபா..”
“சரிமா... நீ தூங்கி நல்லா ரெஸ்ட் எடு.... கல்யாணப்பொண்ணு எப்பவும் சந்தோஷமா இருக்கனும்... எதுனாலும் அப்பாகிட்ட சொல்லு சரியா?? அப்புறம் அம்மா திட்டுனத பெரிசா எடுத்துக்காத... அவ ஏதோ நீ லேட்டா வந்துட்டங்கிற கடுப்புல அப்படி பேசிட்டா சரியா??”
“அவங்க கோபமும் நியாயமானது தானேபா..”
“பார்டா என் பொண்ணு அவங்க அம்மாவுக்கு சப்போர்ட்டா பேசுறத??”
“அப்பா..” என்று சிணுங்கியவளின் தலையை வருடிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார் ராஜேஷ்குமார்...
அவர் சென்ற மறுநொடி ஶ்ரீயின் மொபைல் ஒலித்தது....
மொபைல் ஸ்க்ரீனில் அய்த்தான் வீடியோ கோல் என்று விழுந்தது...
அதை அட்டன்ட் செய்வதற்கு முன் கண்ணாடியின் முன்சென்று தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டவள் விரைந்து வந்து கோலை அட்டென்ட் செய்தாள்.
“ஹலோ என்ன அம்லு தூங்கிட்டியா???”
“இல்லை அய்த்தான் அதெல்லாம் இல்லை... நீங்க பகலே கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன்...” என்று சற்று சோகமான குரலில் ஶ்ரீ கூற ரிஷியோ
“நான் உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேனே பார்க்கலையா நீ...?? ப்ளூ டிக் விழுந்துச்சே... நீ கூட ஓகேனு ரிப்ளை பண்ணியிருந்த???”
“நான் என்ன சொன்னேன்??? கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேனு தான் சொன்னேன்....”
“ஹாஹா... அம்லுக்கு கால் பண்ணலனு கோபமா?? ரொம்ப டயர்டா இருந்துச்சுமா.. அதான் மெசேஜை மட்டும் ரொம்ப கஷ்டப்பட்டு டைப் பண்ணிட்டு தூங்கிட்டேன்... இப்போ எழுந்தோன உனக்கு தான் முதல்ல கால் பண்ணுறேன்??”
“அப்போ அத்தைக்கு ரீச் ஆகிட்டேனு சொல்லலையா???”
“அப்பாவுக்கு உனக்கு டெக்ஸ்ட் பண்ணும் போதே ஒரு டெக்டை போட்டுட்டேன்... அவரு அம்மாவுக்கு சொல்லிருவாரு.... சரி எதுக்கு இப்போ இந்த ஆராய்ச்சி...???”
“சும்மா தான்... நாளைக்கு பின்ன உங்களால எனக்கும் அத்தைக்கும் பிரச்சினை வந்திடக்கூடாதுல்ல அதான்... அதான் ஒரு கிளாரிபிகேஷன்...”
“நல்ல கிளாரிபிகேஷன் தான் போ.. சரி சாப்டாச்சா??”
“ஆச்சு அத்தான்.... இன்னைக்கு என் ப்ரெண்டு ரம்யா அம்மாவை பார்க்க அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்... அங்க வயித்தை நிரப்பிட்டு வந்துட்டேன்.... அதுக்கு மம்மி காச்சு மூச்சுனு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.... அந்த ரேடியாவை ட்யூன் பண்ணிட்டு இப்போ தான் ரூமிற்கு வந்தேன்...”
“ஹாஹா பாவம் எங்க அத்தை இன்னைக்கு மிச்சமீதி நிறைய இருந்திருக்கும் போல... நீ சாப்பிட்டு வந்துட்டேனு சொன்னதும் காண்டாகியிருப்பாங்க... அதான் சத்தம் போட்டிருப்பாங்க..”
“என்ன நக்கலா??”
“இல்லை அம்லு... உன்னை போய் நான் கிண்டல் பண்ணுவேனா??”
“அப்போ வேற என்ன பண்ணுவீங்க??”
“அதெல்லாம் சொன்னா கிக்கா இருக்காது அம்லு... ஆக்ஷன்ல காட்டும் போது தான் நல்லா இருக்கும்....”
“சீ... என்ன டபுள் மீனிங்கில் பேசுறீங்க???”
“ஹேய் நான் என்ன டபுள் மீனிங்கில் பேசுனேன்... ஓ... புரிஞ்சிருச்சி.... மேடம் டபுள் மீனிங்கில் புரிஞ்சிக்கிட்டீங்களா???? அப்போ..”
“நான் ஒன்னும் புரிஞ்சிக்கலை.... நீங்க தான் ஏதோ உளர்றீங்க....”
“நான் என்ன உளர்றேன்.... நான் சரியா தான் பேசுறேன்... நீ வேற மீனிங்கில் புரிஞ்சிக்கிட்டா நான் என்ன பண்ணுறதாம்??”
“சரி அந்த பேச்சை விடுங்க... இப்போ என்ன செய்றீங்க???”
“டெஸ்ட் எடுத்துகிட்டே என்னோட வுட்பீ கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கேன்...”
“பார்டா... சரி போரடிக்குது அத்தான்.... ஏதாவது கதை சொல்லுங்களேன்....”
“ஹேய் நீ என்ன சின்ன பாப்பாவா??? கதை சொல்ல சொல்லிட்டு இருக்க???”
“ஏன் சின்ன பாப்பா தான் கதை கேட்கனுமா?? நாங்கெல்லாம் கேட்க கூடாதா???”
“நம்ம கேளு மா... உன் கிட்ட ரொமோன்சை எதிர்பார்த்தேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கனும்...”
“வாசல்ல கழட்டி வச்சிருப்பீங்க அத்தான் எடுத்து அடிச்சிக்கோங்க...” என்று கூறி சிரித்தாள் ஶ்ரீ..
நடத்த தயாராக நான்
அதை கற்று
பின்பற்ற
நீ தயாரா
நங்கையே???
ரம்யா வீட்டிற்கு சென்றுவிட்டு இல்லம் திரும்பினாள் ஶ்ரீ ....
அவள் வீட்டிற்கு வரும் போது ஹாலில் அமர்ந்திருந்தார் ராஜேஷ்குமார்...
ஶ்ரீயை கண்டதும்
“ஶ்ரீமா ஏன்மா லேட்டு...??” என்று கேட்க அவர் அருகில் வந்தமர்ந்த ஶ்ரீ
“ரம்யா அம்மாவ பார்க்க அவ வீட்டுக்கு போயிருந்தேன் பா.. உங்களுக்கு கால் பண்ணி சொன்னேன் தானேபா..”
“ஆமா மா...ஆனா...” என்றுவிட்டு கண்ஜாடையால் கிச்சனை காட்டி உதட்டை பிதுக்கினார் ராஜேஷ்குமார்.
“ஓ... அதுவா மேட்டர்... என்னவாம் அவங்களுக்கு... சொல்லிட்டு தானே போனேன்... ரம்யா அம்மாவை பார்க்கத்தானே போனேன்.. அதுவும் ஹேமா கூட தானே போனேன்...”என்று ஶ்ரீ கிச்சனை நோக்கி வேண்டுமென்றே சத்தமிட கிச்சனில் இருந்து தோசைக்கரண்டியுடன் வெளியே வந்த ராதா
“போனவ சீக்கிரம் வரணும்னு ஒரு எண்ணம் இருக்கா?? மணி என்னாச்சுனு பாரு.. கொஞ்சமாவது பயம்ங்குறது மனசுல இருக்கா?? இந்த ராத்திரியில ஆடி அசைந்து வர்றா... நீ வந்து சேர வரைக்கும் எனக்கு பக்கு பக்குனு இருக்கு... கல்யாணம் நிச்சயமாகியிருக்க நேரத்துல ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துருச்சினா என்ன பண்ணுறது... நீ வேலை பார்த்து கிழிச்சதெல்லாம் போதும்.... வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இரு...”
“என்னப்பா மம்மி இப்படி சொல்லுறாங்க... நீங்க என்ன சொல்லுறீங்க???” என்று ஶ்ரீ தன் தந்தையிடம் விளக்கம் கேட்க அவருக்கு பதிலாய் பதிலளித்தார் ராதா..
“அவரு என்ன சொல்லுறது??? ஆபிஸ் முடிஞ்சதும் டாங்னு ஆறு மணிக்கு வீட்டுக்கு வரமுடியும்னா வேலைக்கு போ...இல்லைனா வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இரு.. இது ரெண்டு ஆப்ஷன் தான் உனக்கு....” என்று முதலும் இறுதியுமாய் ராதா முடித்துவிட ஶ்ரீ தன் தந்தையை பார்த்தாள்...
அவரோ “அம்மா சொல்லுறதும் சரிதானேமா.. காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கு... உனக்கு மேரேஜ் பிக்கச் ஆகிருக்கு... இந்த டைமில் ஏதும் தப்பா நடந்துட்டா எல்லார் மனசுக்கும் கஷ்டம்.. வீட்டுக்கு டைமிற்கு வந்துருமா... லேட்டாகும்னா கால் பண்ணு அப்பா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்று அவரும் கெஞ்ச மறுக்க தோன்றவில்லை ஶ்ரீயிற்கு..
என்னதான் பெண்பிள்ளைகளை வேலைக்கு செல்ல பெற்றோர் அனுமதித்தாலும் அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவர்களுக்கு நிலை கொள்ளாது... இது பெண்குழந்தைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களுக்கும் பொருந்தும்...
ராதா அனைவரையும் சாப்பிட அழைக்க ஶ்ரீயோ தான் ரம்யா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாத கூறிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்...
சிறிது நேரம் கழித்து ஶ்ரீயின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த ராஜேஷ்குமார்
“என்னமா ரம்யா அம்மா எப்படி இருக்காங்க?? டாக்டர் என்ன சொன்னாங்களாம்??”
“அவங்களுக்கு வைரஸ் ப்ளூ தானாம்... அவங்க ரொம்ப வீக்க இருந்ததால லோ ப்ரஸர் ஆகி மயங்கி விழுந்துட்டாங்களாம்... வேற எதுவும் இல்லாம் பா...இப்போ ஆண்டி நல்லா இருக்காங்க...”
“சரிமா.... அப்பா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்மா..”
“சொல்லுங்க பா...”
“உனக்கு ரிஷியை புடிச்சிருக்கு தானேமா.. இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டம் தானேமா...??” என்ற ராஜேஷ்குமாரின் கேள்விக்கு பதில் சொல்ல வெட்கி தலையை குனிந்து கொண்ட ஶ்ரீயை தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்..
அவளது நடவடிக்கையிலேயே அவளுக்கு முழு சம்மதம் என்று புரிந்து கொண்ட ராஜோஷ்குமார் ஶ்ரீயை வம்பிழுக்கும் முகமாக
“என்னமா தலையை மட்டும் ஆட்டுற?? இதுக்கு என்ன அர்த்தம் புடிச்சிருக்குனா?? இல்லை புடிக்கலைனா?? உனக்கு பிடிக்காட்டி நான் மூர்த்திகிட்ட சொல்லிருர்றேன்...”
ஶ்ரீயோ மனதில் “ஐயோ இந்த அப்பா வேற நேரம் பார்த்து என்னை இப்படி வச்சி செய்றாரே... வேணும்னே என்னை ஓட்டுறாரு... இந்த நேரம் பார்த்து என்ன பேசுறதுனு கூட புரியமாட்டேன்குது...... இதுக்கு பெயர் தான் வெட்கமோ... ?? ஐயோ ஶ்ரீ உனக்கு வெட்கம்லா வருதா...??” என்று மனதினுள் பேசியபடி இருந்தவளை கலைத்தது ராஜேஷின் குரல்
“என்னமா எதுவும் பேச மாட்டேன்குற??? ஹா...”
“எனக்கு ரிஷி அத்தானை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் பா..”
“ஹாஹா இதை சொல்ல என் செல்ல மகளுக்கு இவ்வளவு நேரம்??? மாப்பிள்ளை வெளிநாடு போறார்னு மூர்த்தி சொன்னானே... மாப்பிள்ளை கிளம்பிட்டாராமா..??”
“ஆமா அப்பா.. இன்னைக்கு ஏர்லி மார்னிங் கிளம்பிட்டாரு... ரீச் ஆகிட்டேனு ஈவ்னிங் மெசேஜ் பண்ணியிருந்தாருபா..”
“சரிமா... நீ தூங்கி நல்லா ரெஸ்ட் எடு.... கல்யாணப்பொண்ணு எப்பவும் சந்தோஷமா இருக்கனும்... எதுனாலும் அப்பாகிட்ட சொல்லு சரியா?? அப்புறம் அம்மா திட்டுனத பெரிசா எடுத்துக்காத... அவ ஏதோ நீ லேட்டா வந்துட்டங்கிற கடுப்புல அப்படி பேசிட்டா சரியா??”
“அவங்க கோபமும் நியாயமானது தானேபா..”
“பார்டா என் பொண்ணு அவங்க அம்மாவுக்கு சப்போர்ட்டா பேசுறத??”
“அப்பா..” என்று சிணுங்கியவளின் தலையை வருடிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார் ராஜேஷ்குமார்...
அவர் சென்ற மறுநொடி ஶ்ரீயின் மொபைல் ஒலித்தது....
மொபைல் ஸ்க்ரீனில் அய்த்தான் வீடியோ கோல் என்று விழுந்தது...
அதை அட்டன்ட் செய்வதற்கு முன் கண்ணாடியின் முன்சென்று தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டவள் விரைந்து வந்து கோலை அட்டென்ட் செய்தாள்.
“ஹலோ என்ன அம்லு தூங்கிட்டியா???”
“இல்லை அய்த்தான் அதெல்லாம் இல்லை... நீங்க பகலே கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன்...” என்று சற்று சோகமான குரலில் ஶ்ரீ கூற ரிஷியோ
“நான் உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேனே பார்க்கலையா நீ...?? ப்ளூ டிக் விழுந்துச்சே... நீ கூட ஓகேனு ரிப்ளை பண்ணியிருந்த???”
“நான் என்ன சொன்னேன்??? கால் பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேனு தான் சொன்னேன்....”
“ஹாஹா... அம்லுக்கு கால் பண்ணலனு கோபமா?? ரொம்ப டயர்டா இருந்துச்சுமா.. அதான் மெசேஜை மட்டும் ரொம்ப கஷ்டப்பட்டு டைப் பண்ணிட்டு தூங்கிட்டேன்... இப்போ எழுந்தோன உனக்கு தான் முதல்ல கால் பண்ணுறேன்??”
“அப்போ அத்தைக்கு ரீச் ஆகிட்டேனு சொல்லலையா???”
“அப்பாவுக்கு உனக்கு டெக்ஸ்ட் பண்ணும் போதே ஒரு டெக்டை போட்டுட்டேன்... அவரு அம்மாவுக்கு சொல்லிருவாரு.... சரி எதுக்கு இப்போ இந்த ஆராய்ச்சி...???”
“சும்மா தான்... நாளைக்கு பின்ன உங்களால எனக்கும் அத்தைக்கும் பிரச்சினை வந்திடக்கூடாதுல்ல அதான்... அதான் ஒரு கிளாரிபிகேஷன்...”
“நல்ல கிளாரிபிகேஷன் தான் போ.. சரி சாப்டாச்சா??”
“ஆச்சு அத்தான்.... இன்னைக்கு என் ப்ரெண்டு ரம்யா அம்மாவை பார்க்க அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்... அங்க வயித்தை நிரப்பிட்டு வந்துட்டேன்.... அதுக்கு மம்மி காச்சு மூச்சுனு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.... அந்த ரேடியாவை ட்யூன் பண்ணிட்டு இப்போ தான் ரூமிற்கு வந்தேன்...”
“ஹாஹா பாவம் எங்க அத்தை இன்னைக்கு மிச்சமீதி நிறைய இருந்திருக்கும் போல... நீ சாப்பிட்டு வந்துட்டேனு சொன்னதும் காண்டாகியிருப்பாங்க... அதான் சத்தம் போட்டிருப்பாங்க..”
“என்ன நக்கலா??”
“இல்லை அம்லு... உன்னை போய் நான் கிண்டல் பண்ணுவேனா??”
“அப்போ வேற என்ன பண்ணுவீங்க??”
“அதெல்லாம் சொன்னா கிக்கா இருக்காது அம்லு... ஆக்ஷன்ல காட்டும் போது தான் நல்லா இருக்கும்....”
“சீ... என்ன டபுள் மீனிங்கில் பேசுறீங்க???”
“ஹேய் நான் என்ன டபுள் மீனிங்கில் பேசுனேன்... ஓ... புரிஞ்சிருச்சி.... மேடம் டபுள் மீனிங்கில் புரிஞ்சிக்கிட்டீங்களா???? அப்போ..”
“நான் ஒன்னும் புரிஞ்சிக்கலை.... நீங்க தான் ஏதோ உளர்றீங்க....”
“நான் என்ன உளர்றேன்.... நான் சரியா தான் பேசுறேன்... நீ வேற மீனிங்கில் புரிஞ்சிக்கிட்டா நான் என்ன பண்ணுறதாம்??”
“சரி அந்த பேச்சை விடுங்க... இப்போ என்ன செய்றீங்க???”
“டெஸ்ட் எடுத்துகிட்டே என்னோட வுட்பீ கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கேன்...”
“பார்டா... சரி போரடிக்குது அத்தான்.... ஏதாவது கதை சொல்லுங்களேன்....”
“ஹேய் நீ என்ன சின்ன பாப்பாவா??? கதை சொல்ல சொல்லிட்டு இருக்க???”
“ஏன் சின்ன பாப்பா தான் கதை கேட்கனுமா?? நாங்கெல்லாம் கேட்க கூடாதா???”
“நம்ம கேளு மா... உன் கிட்ட ரொமோன்சை எதிர்பார்த்தேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கனும்...”
“வாசல்ல கழட்டி வச்சிருப்பீங்க அத்தான் எடுத்து அடிச்சிக்கோங்க...” என்று கூறி சிரித்தாள் ஶ்ரீ..