shanthi
Well-Known Member
மருத்துவத்தின் அபரிதமான வளர்ச்சி மற்றும் குடும்பத்தினரின் பாசத்தால் மிதுன் வெகு விரைவில் குணமடைந்து விட்டான் .அவனின் குற்ற உணர்வை அன்பால் pokki விட்டனர் .எல்லோரும் .மிதுனை தன் அரசியல் வாரிசாக சக்ரவர்த்தி நினைக்க அதை மறுத்து நான் படி படியாக அரசியலில் ஈடுபட நினைக்கிறன் மேலும் குடும்பமாக அம்மாவுடன் நேரம் செலவிட நினைக்கிறன் .அபபடியே நாட்கள் செல்ல , மகனிடம் டேய் நல்லவன் மூத்த மருமக போஸ்ட் காலி அதை எப்போ நிரப்ப போறே என கேட்க, ஒரு வாரத்தில் பதில் சொல்றேன்னு அவன் நின்ற இடம் ஆர்த்தி வீடு .அவளை சரிக்கட்டி தன் சரி பாதி ஆக்கி கொண்டான் .தீபன் தம்பதிக்கு தீபாலி என்ற 4வயது மகளும் ,மிதுனுக்கு 3அபிலாஷ் என்ற மகனும் வாரிசுகள் .இன்று வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது .தீபா ராகாவின் 5வருட மணநாள் ஆனந்தமாக வந்து பெற்றோரிடம் ஆசி வாங்கும் போது அபியின் அழுகையும் பட்டென அறையும் சத்தமும் கேட்க அனைவரும் தோட்டத்திற்கு ஓட ,அங்கே ஆக்ரோஷமாய் நின்றிருந்தாள் தீபாலி !என்னமான்னு தீபன் கேட்க தம்பியை தள்ளிட்டு சிரிச்சான் அடிசேன்னு சொல்லிட்டு நிமிர்த்து நின்றது சின்ன சிட்டு .யார் வாரிசு ஜூனியர் ராகாவே தான் .மணநாள் கொண்டாட்டம் முடிந்தவுடன் தீபன் அடுத்த தேனிலவுக்கு கிளம்ப, டேய் உன்னை விட கல்யாணத்தில் நான் தான் ஜூனியர் இது உனக்கே நியாயமான்னு மிதுன் கேட்க அதை வாரா வாரம் ஆர்த்தியுடன் ஜூட் அகுரா நீ கேட்க கூடாது டா தம்பி என கேலி செய்து கிளம்பி விட்டான் .