மனோகருக்கு குடுக்கப்போற தண்டனையை விட பூபதிக்கு கூடுதலா இருக்கணும். துரோகி.
இது பூமிநாதன் வேலைன்னு எப்ப எப்படி கண்டுபிடிக்கப் போறாங்களோ?
ஏன்பா பாலன், உடம்பு சரியில்லாத புருஷனை ஒரு (Dentist வேற) மனைவி
patient - ஆ பாவிச்சு கவனிக்கறது ஒரு குத்தமா? உன் மூளை எக்குத்தப்பா யோசிச்சா அதுக்கு அவ என்ன செய்வா? பிரியா அந்தந்த வேளைக்கு தகுந்த mood - ல தான் இருக்கா, பேசறா. நீ தான் அவ படிப்பு முடியனும்னு தவம் இருந்துட்டு இருக்க. அவ நீ மனசு வெச்சா படிப்பையையும், குடும்ப வாழ்க்கையையும் Parallel processing - ல அழகா ஜாலியா handle பண்ணுவா.
பிரகதீஸ்வரியம்மாவின் ஏக்கம் படிக்க ரொம்ப வருத்தமா இருக்கு. உடல் வேதனையை விட மிகுந்த மன வேதனை. மூணு குழந்தைகள் பிறந்த பின் Betrayal என்றால் கல்யாணத்துல நம்பிக்கையே போய்டும். நல்ல வேளை அவங்க அப்படியெல்லாம் யோசிக்கலை. தன் குழந்தைகளோட குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியோடத் தான் எதிர் பார்க்கறாங்க.
இந்த வருண் இன்னும் கொஞ்சம் பக்குவத்தோட இருக்கலாம். பிரியாகூட இப்படியா சண்டை போடுவ. உன் சங்காத்தம் குடுத்த training -ல தான் உத்ராக்கு ஆதவனை கல்யாணம் பண்ணிக்க பயம் இல்லாமல் இருந்துருக்கா.
சௌம்யா இவன் கோவத்தை பார்ப்பாளா இல்லை அவளுக்கு எதிர மட்டும் இவனுக்கு கோவம் வராமல் இருக்கான்னு பார்ப்போம்.
நல்லகாலம் பிரியா கெளதம் பத்தி சொல்லிட்டா பாலன் கிட்ட. இனி ஹீரோ பார்த்துப்பாரு.