Jeevitha Ram prabhu
Active Member
மலர் 32
அகிலன் வீட்டு விருந்துக்கு ரவியின் அம்மா அப்பாவையும் அழைத்திருந்தான். ஆனால் அவர்கள் வர மறுத்தனர் ஏன் என்றால் நாங்கள் வந்தால் பைரவியும் வருவாள் அங்கு வந்து ஏதாவது பிரச்சனையாகி விட்டது என்றால் அது உனக்கு தான்பா கஷ்டம். மறுபடியும் அவளால் ஒரு பிரச்சினை வேண்டாம் என்று கூறினர்.
அவனுக்கும் அது சரி என்றே பட்டது அதனால் அன்று விருந்துக்கு ரவியும் திவ்யாவும் மட்டுமே வந்திருந்தனர். அவர்களை தவிர, அகிலன் வீட்டினர் மற்றும் குமார் பவி மட்டுமே....
இவர்களைத் தவிர அகிலன் அழைத்திருந்ததால் தமிழும் வந்தாள்.
அன்று மதியம் விருந்து நல்லபடியாக முடிந்தது. நல்ல வேலை பைரவி வரவில்லை . வந்திருந்தால் கண்டிப்பாக பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தான் அகிலன்.
விருந்து முடிந்து மாலை நேரம் அனைவரும் ராசாத்தி அக்காவின் வீட்டில் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அகிலன் மட்டும் அவன் வீட்டு மாடிக்கு சென்றான். மாடிக்கு சென்றவன் சற்று நேரம் கழித்து போனில் தமிழையும் அழைத்தான்.
தமிழுக்கு கால் வரவும் திவ்யா என்ன அண்ணி.... அண்ணாவிடம் இருந்தா போன்....எங்கள் முன்னால் கூப்பிட்டால் நாங்கள் எல்லாம் கேலி செய்வோம் என்று மேலே போய் போனில் உங்களை கூப்பிடுகிறாரா....? என்று கூறினாள்.
சரி சரி..... சீக்கிரம் போங்கள் இல்லையென்றால் அண்ணா கீழே வந்து விடுவார் என்று கிண்டலடித்தாள்.
அவர்களின் கேலியை சிரித்தவாறே சமாளித்துக் கொண்டு தமிழ் அகிலன் அறைக்கு சென்றாள். அங்கே சென்று அவனைத் தேடியவள் அவன் ஜன்னல் ஓரமாக நிற்பதைக் கண்டு அங்கே சென்றாள்.
வர வர உங்கள் தங்கையின் கேலிக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது கேலி செய்து கொண்டே இருக்கிறாள் என்று சிரித்தவாறு கூறினாள்.
ஆனால் அவன் அமைதியாக நிற்பதை கண்டு அவனை திருப்பினாள். அவனின் முகத்தில் மகிழ்ச்சி சுத்தமாக இல்லை.
அவன் வாட்டமாக இருப்பதைக் கண்டு ஏன் என்னாச்சு...... என்றாள்....
அவன் ஏதோ சொல்ல வந்தான்...
அதற்குள், அவள் அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் முதலில் இங்கு வாருங்கள் என்று அவனை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தால் அவளும் அமர்ந்தாள்.
பிறகு, என்ன.... என்று அவன் கேட்டான்.
தங்கையை விருந்துக்கு அழைத்தீர்களே, அவளுக்கு கிப்ட் கொடுக்கணும் என்று ஏதாவது வாங்கினீர்களா.....? என்று கேட்டாள்.
என்னது கிப்ட் கொடுக்கணுமா ?அதெல்லாம் தெரியாது யாரும் சொல்லவில்லையே என்றான்.
சரி பரவாயில்லை என்று அவள் தன் கைப்பையை திறந்து அழகான இரண்டு மோதிரங்களை எடுத்து காண்பித்தாள். அவை இரண்டும் அழகிய தங்க மோதிரங்கள்.
அதைப் பார்த்து அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை எதிர்பாராத போது அவள் கொண்டு வந்து நீட்டிய கிப்ட் அவனுக்கு நெஞ்சில் இனித்தது.
அதற்குள் அவளுக்கு போன் வந்தது .. ஆபிஸ் போன் என்பதால், இருங்கள் பேசி விட்டு வருகிறேன் என்று ஜன்னலோரம் சென்றாள்.
பேசி விட்டு திரும்பிய போது எதிரே அகிலன் நின்றிருந்தான்.
என்ன.... என்பது போல் பார்த்தாள்...
அதை புரிந்தவன் என் தங்கைக்கு நீ கிப்ட் கொடுத்தாய்....சோ.... உனக்கு நான் கிப்ட் கொடுக்க வேண்டாமா....?
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று விலகி போனவளை சட்டென்று அவளின் சேலை முந்தானையை பிடித்து லாவகமாய் இழுக்க, அவளோ அவன் மீது சாய்ந்தாள்.....
நெஞ்சின் மேல் சாய்ந்தவளை அன்பாய் அணைத்தான்... அவனின் கரங்கள் அவளது இடையில் இருந்தது....
வெட்கத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவளின் கழுத்தில் முத்தமிட்டான்.
அந்த நேரம் அங்கு பைரவி வந்தாள்..!
ச்சீ... உங்கள் இருவருக்கும் வெட்கமாக இல்லை.
பைரவியின் பேச்சை கேட்டு இருவரும் விலகினர்....
ஏய்....நீ எதற்கு இங்கு வந்தாய் என்றான் அகிலன்..
நான் வந்ததால் தானே உங்களோடு கூத்தடிக்கும் இவளை பார்க்க முடிந்தது என்று தமிழை கை காட்டினாள்.
தமிழுக்கு எதுவும் புரியவில்லை... இவள் யார்...? ஏன் இப்படி பேசுகிறாள் என்று புரியவில்லை...
அதற்குள் அகிலன் தமிழை இழுத்து கொண்டு கீழே வந்தான்... அவன் கைபிடித்து இழுத்து கொண்டு வருவதை பார்த்ததும் பைரவிக்கு பற்றி கொண்டு வந்தது....
அவளும் கீழே வந்தாள்...
கீழே அனைவரும் செய்வதறியாது நின்றிருந்தனர். அந்த நேரம் அங்கு அகிலனும் தமிழும் வந்தனர். பின்னாடியே பைரவையும் வந்தாள்.
வந்தவள் நேரடியாக தமிழை பார்த்து ஒரு ஆணிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாயா உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டாள். கேட்டதோடு மட்டுமல்லாமல் மாடியில் அறையில் நடந்தவற்றை அப்படியே விவரித்தாள்.
அதைக் கேட்ட ரவி, மிகவும் அதிர்ச்சியாக நீயும் ஒரு பெண் தானே! எப்படி ஒரு பெண்ணை பற்றி உன்னால் இவ்வளவு அவதூறாக பேச முடிகிறது என்று கேட்டான்.
தமிழுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இவள்....... இவள்
ஏன் இப்படி பேசுகிறாள் என்று அகிலனிடம் கேட்டாள்.
மலரும்.......
அகிலன் வீட்டு விருந்துக்கு ரவியின் அம்மா அப்பாவையும் அழைத்திருந்தான். ஆனால் அவர்கள் வர மறுத்தனர் ஏன் என்றால் நாங்கள் வந்தால் பைரவியும் வருவாள் அங்கு வந்து ஏதாவது பிரச்சனையாகி விட்டது என்றால் அது உனக்கு தான்பா கஷ்டம். மறுபடியும் அவளால் ஒரு பிரச்சினை வேண்டாம் என்று கூறினர்.
அவனுக்கும் அது சரி என்றே பட்டது அதனால் அன்று விருந்துக்கு ரவியும் திவ்யாவும் மட்டுமே வந்திருந்தனர். அவர்களை தவிர, அகிலன் வீட்டினர் மற்றும் குமார் பவி மட்டுமே....
இவர்களைத் தவிர அகிலன் அழைத்திருந்ததால் தமிழும் வந்தாள்.
அன்று மதியம் விருந்து நல்லபடியாக முடிந்தது. நல்ல வேலை பைரவி வரவில்லை . வந்திருந்தால் கண்டிப்பாக பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தான் அகிலன்.
விருந்து முடிந்து மாலை நேரம் அனைவரும் ராசாத்தி அக்காவின் வீட்டில் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அகிலன் மட்டும் அவன் வீட்டு மாடிக்கு சென்றான். மாடிக்கு சென்றவன் சற்று நேரம் கழித்து போனில் தமிழையும் அழைத்தான்.
தமிழுக்கு கால் வரவும் திவ்யா என்ன அண்ணி.... அண்ணாவிடம் இருந்தா போன்....எங்கள் முன்னால் கூப்பிட்டால் நாங்கள் எல்லாம் கேலி செய்வோம் என்று மேலே போய் போனில் உங்களை கூப்பிடுகிறாரா....? என்று கூறினாள்.
சரி சரி..... சீக்கிரம் போங்கள் இல்லையென்றால் அண்ணா கீழே வந்து விடுவார் என்று கிண்டலடித்தாள்.
அவர்களின் கேலியை சிரித்தவாறே சமாளித்துக் கொண்டு தமிழ் அகிலன் அறைக்கு சென்றாள். அங்கே சென்று அவனைத் தேடியவள் அவன் ஜன்னல் ஓரமாக நிற்பதைக் கண்டு அங்கே சென்றாள்.
வர வர உங்கள் தங்கையின் கேலிக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது கேலி செய்து கொண்டே இருக்கிறாள் என்று சிரித்தவாறு கூறினாள்.
ஆனால் அவன் அமைதியாக நிற்பதை கண்டு அவனை திருப்பினாள். அவனின் முகத்தில் மகிழ்ச்சி சுத்தமாக இல்லை.
அவன் வாட்டமாக இருப்பதைக் கண்டு ஏன் என்னாச்சு...... என்றாள்....
அவன் ஏதோ சொல்ல வந்தான்...
அதற்குள், அவள் அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் முதலில் இங்கு வாருங்கள் என்று அவனை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தால் அவளும் அமர்ந்தாள்.
பிறகு, என்ன.... என்று அவன் கேட்டான்.
தங்கையை விருந்துக்கு அழைத்தீர்களே, அவளுக்கு கிப்ட் கொடுக்கணும் என்று ஏதாவது வாங்கினீர்களா.....? என்று கேட்டாள்.
என்னது கிப்ட் கொடுக்கணுமா ?அதெல்லாம் தெரியாது யாரும் சொல்லவில்லையே என்றான்.
சரி பரவாயில்லை என்று அவள் தன் கைப்பையை திறந்து அழகான இரண்டு மோதிரங்களை எடுத்து காண்பித்தாள். அவை இரண்டும் அழகிய தங்க மோதிரங்கள்.
அதைப் பார்த்து அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை எதிர்பாராத போது அவள் கொண்டு வந்து நீட்டிய கிப்ட் அவனுக்கு நெஞ்சில் இனித்தது.
அதற்குள் அவளுக்கு போன் வந்தது .. ஆபிஸ் போன் என்பதால், இருங்கள் பேசி விட்டு வருகிறேன் என்று ஜன்னலோரம் சென்றாள்.
பேசி விட்டு திரும்பிய போது எதிரே அகிலன் நின்றிருந்தான்.
என்ன.... என்பது போல் பார்த்தாள்...
அதை புரிந்தவன் என் தங்கைக்கு நீ கிப்ட் கொடுத்தாய்....சோ.... உனக்கு நான் கிப்ட் கொடுக்க வேண்டாமா....?
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று விலகி போனவளை சட்டென்று அவளின் சேலை முந்தானையை பிடித்து லாவகமாய் இழுக்க, அவளோ அவன் மீது சாய்ந்தாள்.....
நெஞ்சின் மேல் சாய்ந்தவளை அன்பாய் அணைத்தான்... அவனின் கரங்கள் அவளது இடையில் இருந்தது....
வெட்கத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவளின் கழுத்தில் முத்தமிட்டான்.
அந்த நேரம் அங்கு பைரவி வந்தாள்..!
ச்சீ... உங்கள் இருவருக்கும் வெட்கமாக இல்லை.
பைரவியின் பேச்சை கேட்டு இருவரும் விலகினர்....
ஏய்....நீ எதற்கு இங்கு வந்தாய் என்றான் அகிலன்..
நான் வந்ததால் தானே உங்களோடு கூத்தடிக்கும் இவளை பார்க்க முடிந்தது என்று தமிழை கை காட்டினாள்.
தமிழுக்கு எதுவும் புரியவில்லை... இவள் யார்...? ஏன் இப்படி பேசுகிறாள் என்று புரியவில்லை...
அதற்குள் அகிலன் தமிழை இழுத்து கொண்டு கீழே வந்தான்... அவன் கைபிடித்து இழுத்து கொண்டு வருவதை பார்த்ததும் பைரவிக்கு பற்றி கொண்டு வந்தது....
அவளும் கீழே வந்தாள்...
கீழே அனைவரும் செய்வதறியாது நின்றிருந்தனர். அந்த நேரம் அங்கு அகிலனும் தமிழும் வந்தனர். பின்னாடியே பைரவையும் வந்தாள்.
வந்தவள் நேரடியாக தமிழை பார்த்து ஒரு ஆணிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாயா உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டாள். கேட்டதோடு மட்டுமல்லாமல் மாடியில் அறையில் நடந்தவற்றை அப்படியே விவரித்தாள்.
அதைக் கேட்ட ரவி, மிகவும் அதிர்ச்சியாக நீயும் ஒரு பெண் தானே! எப்படி ஒரு பெண்ணை பற்றி உன்னால் இவ்வளவு அவதூறாக பேச முடிகிறது என்று கேட்டான்.
தமிழுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இவள்....... இவள்
ஏன் இப்படி பேசுகிறாள் என்று அகிலனிடம் கேட்டாள்.
மலரும்.......