Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-18
வால்பாறை வரும் போது
இயற்கையை ரசித்த மதுவிற்கு
இப்போது அதை எதையும் கண்டு
ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன்
வந்தோம் என்று இருந்தது.
தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய
கணவன் அறியாமல் முகத்தைத்
திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.
அழுதழுது வயிற்றில் இருக்கும்
குழந்தையையும் இப்படிக்
கஷ்டப்படுத்துகிறோமே என்று
வேதனையாக இருந்தது மதுவிற்கு.
அதற்காகக் குழந்தையிடம்
மன்னிப்பையும் யாசித்தாள்.
இவனிடம் இப்போது
சொல்லிவிடலாமா என்று
நினைத்தவள் கழுத்தை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவனோ அவள் தன்னைப் பார்ப்பது
தெரிந்தும் அவளிடம் முகத்தைத்
திருப்பாமல் முகத்தை மேலும்
கடினமாக்கி காரை ஓட்டினான். இப்படி
முகத்தைக் கூடப் பார்க்க
மறுப்பவனிடம் எப்படிச் சொல்ல
என்று நினைத்தாள் மதுமிதா.
ஏன் கார்த்திக் இப்படிப் பண்றீங்க?
எந்த அளவு காதலைக் காண்பித்து
உணர வைத்தீர்களோ அந்த அளவுக்கு வெறுப்பையும் காட்டுகிறீர்கள்.
என்னோட சந்தோஷம் எல்லாம் நீங்க
தான். என்னதான் நீங்க என்னிடம்
கோபம் காட்டினாலும் என்னால்
உங்களைப் போல இருக்க
முடியவில்லை. நீங்கள் நேற்று இரவு
அணைத்ததும் நெற்றியில் தந்த
முத்தமும் கூட கனவு என்று
நினைத்துத் தான் நெருங்கினேன்.
ஆனால் என் மனதின் ஏக்கத்தில்
கனவு எது நிஜம் என்பது கூட மறந்து
உங்களிடம் இருந்திருக்கிறேன்
என்பதைக் காலையில் தான்
உணர்ந்தேன். அப்போது என்னை
உணராமல் தான் நேற்று
அணைத்தீர்களா? என்றுத் தன்
மனதிற்குள்ளே கேட்டபடி நொந்து
கொண்டு இருந்தாள்.
என்னை விட உங்களுக்கு உங்க
பிரண்ட் தான் முக்கியமா கார்த்திக்?
உங்கள் வாழ்க்கையில் நான்
இருக்கும் இடம் அவ்வளவு தானா?
என்னை நீங்கள் நம்ப மறுப்பது நம்
தாம்பத்தியத்தையும் கேவலப்
படுத்துவது ஆகாதா? என்று
பல கேள்விகள் மனதில் எழுந்தது.
ஆனால் எதையும் வாயைத் திறந்து
கேட்காமல் தனக்குள்ளேயே போட்டபடி வந்தாள்.
ஆனால் அவன் மனதில் உள்ள
காதலையும் உணர்வுகளையும்
அப்போது அவள் அறியவில்லை.
"முருகா இப்படி என்னைத்
தவிக்கவிடத்தான் கல்யாணம் என்ற
ஒன்றை என் வாழ்க்கையில் கொண்டு வந்தாயா... இதற்கு வாழ்நாள் முழுதும்
தனியாகவே வாழ்ந்திருப்பேனே"
என்று கடவுளின் முன் தன்
மனக்குமுறல் அனைத்தையும்
வைத்தபடி வந்தாள் மது.
பொள்ளாச்சி வந்து வீட்டை அடைய
மணி பண்ணிரெண்டு ஆகிவட்டது..
இந்நேரத்தில் யார் என்று வெளியே
வந்த ஜானகி அப்படியே
நின்றுவிட்டார். காரணம் இரவு
உணவிற்குத் தான் வருவோம் என்று
சொல்லிவிட்டுக் கிளம்பிய இருவரும்
போனவுடன் புயல் வேகத்தில் திரும்பி
வந்தது ஜானகியை யோசனையில்
ஆழ்த்தியது. முக்கியமாக இருவரின்
முகமும் சரியில்லை. கார்த்திக்கின்
முகம் முழுதும் கோபத்தில் எரிந்து
கொண்டு இருந்தது என்றால் மதுவின்
முகத்தில் போகும் போது இருந்த
கொஞ்சநஞ்ச நிம்மதியையும்
துடைத்து எறிந்திருப்பதைக் கண்டார்.
மனைவியின் பின்னால் வந்த
வேலுமணியும் இருவரையும் கண்டு
திகைத்தார்.
கார்த்திக்கும் மதுவும் அங்கு இருவர்
நின்றிருப்பதைப் பார்க்காதது போல
மேலே தங்கள் அறைக்குள் சென்று
புகுந்து கொண்டனர்.
ஜானகிக்கு இதற்கு அவர்களை அங்கு
அனுப்பாமலே இருந்திருக்கலாம்
என்று நினைத்தார். தன் ஆதங்கத்தை
கணவரிடம் காட்டவும் செய்தார்.
"நீங்களும் உங்கள் ஐடியாவும். பெரிய
ப்ளான் போட்ட மாதிரி என்னிடம்
காலரை உயர்த்திக் காட்டி ஜம்பம்
அடித்தீர்கள்.. இப்போது என்ன ஆச்சு
பாருங்கள்" என்று புகைந்தார்.
"நான் என்ன இந்த மாதிரி ஆகும்
என்று நினைத்தா அவர்களை அங்கு
அனுப்பினேன்.. அங்கு சென்றால்
அந்தச் சூழலில் கொஞ்சம் மனம்
விட்டுப் பேசுவார்கள் என்று
நினைத்தேன்" என்றவர் "இந்த அளவு
இருவருக்கும் பிடிவாதம் இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை" என்று மனைவியிடம் தலையைச் சொறிந்த
படிச் சொன்னார்.
அவர் பிடிவாதம் என்று சொன்ன
வார்த்தையில் ஜானகிக்கு கோபம்
பொங்கியது.. "பிடிவாதம் என்று
சொல்லுகிறீர்களே.. அது யாரிடம்
இருந்து வந்தது என்று
நினைக்கிறீர்கள்?.. உங்களிடம்
இருந்து தான் வந்து இருக்கிறது..
ஆனால் உங்கள் மகனிற்கு
உங்களைவிட இரண்டு மடங்கு
பிடிவாதம் அதிகம். அவன் காட்டக்
காட்ட மதுவிற்கும் ஏறிவிட்டது" என்று
சத்தம் போட்டவர் "எல்லாம் தலை
விதி.. உங்கள் அம்மாவும் உங்கள்
அப்பாவின் பிடிவாதத்தைப் பற்றி
சொல்லி இருக்கிறார்கள்.. எல்லாம்
வழிவழியாக வருகிறது போல இந்தப்
பரம்பரையில்" என்று தன் கூந்தலைக்
கொண்டைப் போட்டபடி கணவனிடம்
பொரிந்து தள்ளிவிட்டார். அவரும்
மனைவியிடம் பதில் சொல்ல
முடியாமல் உட்கார்ந்திருந்தார்.
மேலே வந்த கார்த்திக்கும் மதுவிற்கும்
என்ன செய்வது என்று தெரியாமல்
ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து
இருந்தனர். மதுவும் கார்த்திக்கும்
நேற்று சென்ற பிறகு ஜானகி தன்
கணவர் வேலமணியை அழைத்து,
அவர்கள் கல்யாண போட்டோ ஒன்று
ப்ரேம் போட்டு வந்ததை எடுத்து
அவர்கள் கட்டிலிற்கு எதிரில் மாட்டி
இருந்தார். அது வேறு இருவரையும் வாட்டி எடுத்தது.
கார்த்திக்கிற்கும் மனதை ஏதோ
சுமை அழுத்துவது போல
உணர்ந்தான். பிறகு மது ஒரு புக்கை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்து
விட்டாள் . பின்பு பிடிக்காமல் புக்கை
படிக்கவும் முடியாமல் மூடி வைத்துப்
படுத்து விட்டாள்.
கார்த்திக்கும் தன் லேப்டாப்பை
உயிர்ப்பித்தான். ஆனால்
அவனாலும் சரியாக வேலையில்
மூழ்க முடியவில்லை. கார்த்திக்கிற்கும் தலை வலிப்பது போல இருந்தது.
அப்போது தான் மதியம் இருவரும்
சாப்பிடவில்லை என்ற நினைவே
அவனிற்கு வந்தது. மதுவும்
படுத்திருந்தாளே தவிர தூங்கவில்லை. அவனிற்கு முதுகுக் காட்டிப் படுத்து சுவரை வெறித்த படி இருந்தாள். ஜானகியும் கோபத்தில் இருவரையும் அழைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து தொண்டையைச்
செறுமினான் "க்ஹும்" என்று.
ஆனால் மதுவிடம் சிறு அசைவு கூட
இல்லை. அவளை அப்படியே
சாப்பிடாமல் விடவும் அவனிற்கு மனம்
இல்லை. அவளின் தோளைத்
தொட்டுத் திருப்பியவன் "லன்ஞ் டைம்
ஆச்சு.. கீழே போலாம் வா" என்று
அவளை அழைத்துப் பார்த்தான்.
"இல்லை பசியில்லை" என்று
பழையபடி மீண்டும் திரும்பிவிட்டாள்.
அவளின் முகத்தில் புதியாய் இருந்த
கருவலையமும் உடம்பின் இளைப்பும்
அவனைத் தாக்க ஒரு முடிவு
எடுத்தவனாய்க் கீழே சென்றான்.
கீழே சென்று அன்னையை
அழைத்தவன் "அவள் சாப்பிட
வரமாட்டேன் என்கிறாள்.. நீங்கள்
போய்க் கூப்பிடுங்கள்" என்று சொல்ல
ஜானகிக்குக் கோபம் வந்தது.
இந்த மாதிரிச் சமயத்தை அவர்
விடுவாரா என்ன? மகனின் மேலும்
அனைத்தையும் காட்டினார்.
"அவள் சாப்பிடாமல் இருப்பதற்கு
நானா காரணம்?" என்று கேட்டு
மகனைப் பார்த்தவர் "பின் நான் எப்படி
அழைத்து வர முடியும்பா... நீயாச்சு
உன் பொண்டாட்டியாச்சு" என்று
மகனைக் குத்திய திருப்தியில் அவர்
சென்று சோபாவில் அமர்ந்து
டி.வியைப் போட்டார்.
தன் அன்னையின் மேல் கோபம்
வந்தாலும் மது சாப்பிடாமல் இருப்பதே அவனின் மூளையில் முன் நின்றது.
மதுவைக் கீழே வரவைக்க
எண்ணியவன் ஒரு ஐடியா தோன்ற
"இப்போது நீங்கள் அவளைக் கூட்டி
வரப்போறீங்களா இல்லையா?"
குரலை உயர்த்திக் கேட்டான் கார்த்திக்.
"என்னடா ரொம்பத்தான்
மிரட்டுகிறாய்.. உன் பொண்டாட்டி
வேண்டுமானால் உன் மிரட்டலுக்கு
அடங்கலாம்.. நான் இல்லை" என்று
பதிலுக்குக் குரலை உயர்த்திவிட்டு
மறுபடியும் டி.வி சேனலை மாற்றியபடி
உட்கார்ந்து விட்டார்.
கார்த்திக்கின் சத்தத்தைக் கேட்ட மது
"இப்போது எதற்கு அவர்களை
அதட்டுகிறான்" என்று எழுந்தவள்
தனது மாமியாரின் குரலையும் அவர்
சொன்னதையும் கேட்டாள். "ஆமாம்
இவர் மகன் அடங்கவில்லை
என்றாலும் அடக்கி விடுவான் என்று
இவருக்குத் தெரியாதா?" என்று
மனதிற்குள் மாமியாரைப் புகைந்தபடி
பெட்டில் உட்கார்ந்திருந்தாள்.
இருவரின் சத்தத்தில் வேலுமணியும்
அறையில் இருந்து வெளியே வந்தார்.
தனது மாமியார் சொன்னதைக்
கேட்டவள் மேல் இருந்து எட்டிப்
பார்த்தாள்.
அதைக் கவனித்தக் கார்த்திக்
மதுவைப் பார்க்காததைப் போல
பாவனை செய்து விட்டு "இப்போ
சாப்பாடு எடுத்து வைக்கப்
போறீங்களா இல்லையா?" என்று
மறுபடியும் இரைந்தான்.
மேலே மருமகள் நிற்பதைப் பார்த்த
ஜானகிக்கு மகனின் முயற்சி
புரிந்துவிட்டது. "நானும் காலையில்
இருந்து சமையல் வேலைகளை
முடித்து விட்டு இப்போது தான்
உட்கார்ந்து இருக்கிறேன்.. வேண்டும்
என்றால் நீயே போட்டுக்கொள்" என்று
ஜானகி சொன்னது தான் தாமதம் மது
வேக நடையுடன் தலைக்கு ஒரு
ரப்பர்பான்ட் போட்ட படியே கீழே
வந்தாள்.
என்னதான் கணவனிடம் சண்டையாக
இருந்தாலும் மாமியாரின் பேச்சை
அவளால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. அவனின் அம்மா
என்றாலும் அவனிடம் அப்படிப்
பேசியதும் அவளை சுரண்டிவிட்டது.
"நான் இருக்கும் போது இவன் ஏன்
அவரைக் கேட்கிறான். அதான்
அவனின் கைகுள் முடித்து என்னை
வைத்திருக்கிறானே.. கூப்பிடுவதற்கு
என்ன?" என்று கணவனையும்
மாமியாரையும் திட்டியபடியே கீழே
வந்தாள்.
கீழே வந்தவள் ஒரு தட்டை
எடுத்து அவனிற்கு உணவை எடுத்து
வைக்க கையை கழுவி விட்டு வந்த
கார்த்திக் அவளிற்கும் ஒரு தட்டை
எடுத்து வந்து வைத்தான். "எனக்கு
வேண்டாம்.. பசியில்லை" என்றவளை
ஜானிகியின் கரம் வந்து தோளைத்
தொட்டு "நாங்களும் இன்னும்
சாப்பிடவில்லை.. நீயும் உட்காரு மது
எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்"
என்று அவளின் தோளைப் பற்றி
கார்த்திக் அருகில் உட்கார வைத்தார்
ஜானகி.. மதுவிற்கு அப்போது தான்
அவன் அவளைக் கீழே வரவழைத்தது
புரிந்தது. என்ன ஒரு ஒற்றுமை
அம்மாவும் மகனும் என்று
நினைத்தபடியே அமர்ந்தாள்.
சீக்கிரமாகச் சாப்பிட்டு முடித்தவள்
மேலே சென்று அறைக்குள் புகுந்து
கொண்டாள்.. "ஒரு நிமிடம் கோபமாக
இருக்கிறான்.. மற்றொரு நிமிடம்
அப்படியே தணிந்து விடுகிறான்.
இவனை புரிந்து கொள்வது கஷ்டம்"
என்று நினைத்தவள் "ஒரு வேளை
நம்மால் தான் இவனைப் புரிந்து
கொள்ள முடியவில்லையோ" என்று
நினைத்துக் கலக்க முற்றாள்.
காலையில் அவன் சொன்ன
வார்த்தைகள் வேறு அவளைப் போட்டு வாட்டி வதைத்துக் கொண்டே
இருந்தது. நாம் அவன் பின்னால்
சென்றது தான் தப்பு.. அப்படியே
உள்ளே வைத்திருந்தால் கூட இப்படி
அசிங்கப்பட்டு வேதனை கொண்டு
இருக்க மாட்டோம் என்று
எண்ணினாள். இப்போது மட்டும்
என்ன கடமைக்காகச் சாப்பிட
அழைத்து இருக்கிறான் என்று அவளே முடிவு செய்தாள் . எப்படி.... எல்லாம்
இப்படி ஆனது என்று யோசித்த போது
மிதுனா என்று வந்து நின்றது..
போனை எடுத்தவள் மிதுனாவிற்கு
சும்மா முயற்சி செய்யலாமே என்று
அவளிற்கு ஒரு போன் போட்டாள்..
அதிசயமான ரிங் போனது.. ஆனால்
கட் செய்து விட்டாள். கோபத்தை
அடக்கிய மது போனை பெட்டில்
பட்டென்று வைத்துவிட்டு புக்கை
எடுத்து உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு
விட்டுத் தந்தையுடன் பேசிவிட்டு
வந்தக் கார்த்திக் லாப்டாப்பை
உயிர்ப்பித்து உட்கார்ந்தான்.
கரெக்டாக அவர்கள் இருவருக்கும்
நடுவில் இருந்த போன் அடிக்க
கார்த்திக் போனை பார்க்க அதில்
மிதுனா என்ற பெயர் தெரிந்ததைக்
கண்டான். மதுவும் அதே சமயம்
போனைத் தான் பார்த்திருந்தாள்.
போனை மது எடுக்கும் முன் கார்த்திக்
எடுத்து "ஹலோ" என்றான் இறுகிய
குரலில். போனை வைத்துவிட்டாள்.
ஒரு நிமிடம் போனை உடைத்து எறிய
கையைத் தூக்கியவன் அதற்குள்
சென்று கால்லாக்ஸைப் பார்த்தான்.
பின்னர் ஏளனமாக உதட்டை
வளைத்தவன் "இந்தா... புதுமணத்
தம்பதியரிடம் பேச அழைத்திருப்பாய்..
இப்போது போன் செய்திருக்கிறாள்..
போ போ போய் உன்
உயிர்த்தோழியிடம் பேசு.. அவள்
ரொம்ப முக்கியம் அல்லவா.." என்று
அவளின் கையில் போனைத்
திணித்தான்.
வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது
என்று நினைத்த மது, எதுவும்
பேசாமல் அப்படியே உட்கார்ந்து
இருந்தாள். போனை மறுபடியும் அதே
இடத்தில் வைத்துவிட்டு புத்தகத்தில்
ஆழ்ந்தாள் மது.
'திமிர் பிடித்தவள்.. திட்டுகிறேன்..
சாதரணமாக உட்கார்ந்து புக்
படிக்கிறாள் பார்' என்று
எரிச்சலுற்றான். 'நாம் என்ன
சொன்னாலும் அவன் நம்பப்போவது
இல்லை' என்ற நினைப்பே மதுவை
அப்படி உட்காரச் செய்தது.
சிறிது நேரம் கழித்து "எதற்கு
மிதுனாவிற்கு கூப்பிட்டாய்?" என்று
வினவினான். "சொன்னால் நம்பி
விடுவீர்களாக்கும்? என்று முகத்தைப்
புத்தகத்தில் வைத்தபடியேக் கேட்டாள்.
"சொல்லேன்.. எனக்கும் போர்
அடிக்கிறது.. என்னதான்
சொல்லுகிறாய் என்று பார்க்கிறேன்"
என்று ஏளனமாக சொல்ல மதுவிற்கு
கோபம் வந்துவிட்டது.. "அது
ஒன்றுமில்லை கோயம்பத்தூர்
வருகிறேன் என்றாள் அவள் மாமியார்
வீட்டிற்கு.. அதான் மீட் பண்ணலாம்
என்று அவளைக் கேட்பதற்காகக்
போன் செய்தேன்" என்று சீரியசாக
புக்கைப் படித்தபடிச் சொன்னாள்.
அவன் கோபமாக மதுவை நோக்க
"என்ன நீங்களும் கூட வருகிறீர்களா?"
பார்த்துவிட்டு வருவோம்" என்று
இப்போது கார்த்திக்கை பார்த்துப்
புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
"இனி மிதுனாவிடம் நீ பேசுவதை
என்னால் அனுமதிக்க முடியாது"
என்றான் லாப்டாப்பில் கண்களை
வைத்துக் கண்டிப்பானக் குரலில்.
அவன் சொன்னவுடன் அவனைப்
பார்த்த மது "ஏன் பேசக்கூடாது?"
என்று கையில் இருந்த புக்கை
மூடியபடிக் கேட்டாள்.
"ஏன் என்று உனக்குத் தெரியாதா?"
என்று லாப்டாப்பில் டைப் செய்து
கொண்டே கேட்டவன் "எனக்குப்
பிடிக்கவில்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.
"அதான் ஏன்?" என்று மறுபடியும்
பார்வை மாறாமல் கேட்டாள் மது..
ஆனால் இம்முறை கார்த்திக்கிற்கு
கோபம் வந்துவிட்டது.. "எனக்கு
பிடிக்காததைச் செய்ய வேண்டும்
என்று ஆசை இருந்தால் செய்து
கொள்" என்றவன் "அப்போது உன்
ப்ரண்ட தான் உனக்கு முக்கியம்
இல்லை?" என்று கேள்வியாகப்
பார்த்தான்.
"எனக்கு எல்லாரும் முக்கியம் தான்...
ஆனால் அவள் காதலித்து கல்யாணம்
செய்ததிற்காக அவளை ஒதுக்க
வேண்டுமா? எந்தக் காலத்தில்
இருக்கிறீர்கள் நீங்கள்?" என்று
அவனிடம் பாயந்தாள்.
"இப்போது யார் அவளை ஒதுக்கியது..
கல்யாணம் செய்தது தெரிந்தும் சிவா
அவளையும் அந்தப் பையனையும்
கூப்பிட்டது உனக்குத் தெரியுமா.
அவள் வரவில்லை என்றால் அவளே
பதில் சொல்லி இருக்க வேண்டும்..
போன் கூட பேச மறுத்து
போலீஸ்காரனை விட்டுப் பேசி
இருக்கிறாள்" என்று கடுகடுத்தான்.
மேலும் "சரியான சுயநலவாதி" என்று
பல்லைக் கடித்தான்.
"அவள் எந்தச் சூழ்நிலையில் என்ன
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
நமக்கு என்ன தெரியும்?" என்று மது
மிதுனாவின் பக்கம் பேச
கார்த்திக்கிற்கு கைமுஷ்டி எல்லாம்
இறுகியது.
"நமக்கு என்று சொல்லாதே.. அவளை
அனுப்பி வைத்த உனக்கு தான் அவள்
என்ன சூழ்நிலை.. மண்ணாங்கட்டி
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
தெரியும் தான்" என்று எரிச்சலுடன்
சொன்னான்.
"நான் ஒன்றும் அவளை அனுப்பி
வைக்கவில்லை" என்று மது பல்லைக்
கடிக்க "இப்போது தான் நான் பார்க்கப்
போகிறேன் என்று சொன்னாய்?"
என்று சாதரணாமாக அவளைப்
பார்த்துக் கேட்டான்.
மது தான் ஏன் அப்படிச் சொன்னேன்
என்று விளக்க.. "ஆங்.. நம்பிட்டேன்"
என்று கார்த்திக் சொல்ல மது
படுக்கையில் இருந்து எழுந்து பெட்டை சுற்றி வெளியே செல்லப் பார்த்தாள்..
ஆனால் மது கார்த்திக்கை கடக்கும்
போது கார்த்திக்கின் கரம் அவள்
கரத்தை பலமாகப் பற்றியது.
வால்பாறை வரும் போது
இயற்கையை ரசித்த மதுவிற்கு
இப்போது அதை எதையும் கண்டு
ரசிக்கும் மனநிலை இல்லை. ஏன்
வந்தோம் என்று இருந்தது.
தன்னிரக்கத்தில் கண்ணீர் சொரிய
கணவன் அறியாமல் முகத்தைத்
திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.
அழுதழுது வயிற்றில் இருக்கும்
குழந்தையையும் இப்படிக்
கஷ்டப்படுத்துகிறோமே என்று
வேதனையாக இருந்தது மதுவிற்கு.
அதற்காகக் குழந்தையிடம்
மன்னிப்பையும் யாசித்தாள்.
இவனிடம் இப்போது
சொல்லிவிடலாமா என்று
நினைத்தவள் கழுத்தை மட்டும்
திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவனோ அவள் தன்னைப் பார்ப்பது
தெரிந்தும் அவளிடம் முகத்தைத்
திருப்பாமல் முகத்தை மேலும்
கடினமாக்கி காரை ஓட்டினான். இப்படி
முகத்தைக் கூடப் பார்க்க
மறுப்பவனிடம் எப்படிச் சொல்ல
என்று நினைத்தாள் மதுமிதா.
ஏன் கார்த்திக் இப்படிப் பண்றீங்க?
எந்த அளவு காதலைக் காண்பித்து
உணர வைத்தீர்களோ அந்த அளவுக்கு வெறுப்பையும் காட்டுகிறீர்கள்.
என்னோட சந்தோஷம் எல்லாம் நீங்க
தான். என்னதான் நீங்க என்னிடம்
கோபம் காட்டினாலும் என்னால்
உங்களைப் போல இருக்க
முடியவில்லை. நீங்கள் நேற்று இரவு
அணைத்ததும் நெற்றியில் தந்த
முத்தமும் கூட கனவு என்று
நினைத்துத் தான் நெருங்கினேன்.
ஆனால் என் மனதின் ஏக்கத்தில்
கனவு எது நிஜம் என்பது கூட மறந்து
உங்களிடம் இருந்திருக்கிறேன்
என்பதைக் காலையில் தான்
உணர்ந்தேன். அப்போது என்னை
உணராமல் தான் நேற்று
அணைத்தீர்களா? என்றுத் தன்
மனதிற்குள்ளே கேட்டபடி நொந்து
கொண்டு இருந்தாள்.
என்னை விட உங்களுக்கு உங்க
பிரண்ட் தான் முக்கியமா கார்த்திக்?
உங்கள் வாழ்க்கையில் நான்
இருக்கும் இடம் அவ்வளவு தானா?
என்னை நீங்கள் நம்ப மறுப்பது நம்
தாம்பத்தியத்தையும் கேவலப்
படுத்துவது ஆகாதா? என்று
பல கேள்விகள் மனதில் எழுந்தது.
ஆனால் எதையும் வாயைத் திறந்து
கேட்காமல் தனக்குள்ளேயே போட்டபடி வந்தாள்.
ஆனால் அவன் மனதில் உள்ள
காதலையும் உணர்வுகளையும்
அப்போது அவள் அறியவில்லை.
"முருகா இப்படி என்னைத்
தவிக்கவிடத்தான் கல்யாணம் என்ற
ஒன்றை என் வாழ்க்கையில் கொண்டு வந்தாயா... இதற்கு வாழ்நாள் முழுதும்
தனியாகவே வாழ்ந்திருப்பேனே"
என்று கடவுளின் முன் தன்
மனக்குமுறல் அனைத்தையும்
வைத்தபடி வந்தாள் மது.
பொள்ளாச்சி வந்து வீட்டை அடைய
மணி பண்ணிரெண்டு ஆகிவட்டது..
இந்நேரத்தில் யார் என்று வெளியே
வந்த ஜானகி அப்படியே
நின்றுவிட்டார். காரணம் இரவு
உணவிற்குத் தான் வருவோம் என்று
சொல்லிவிட்டுக் கிளம்பிய இருவரும்
போனவுடன் புயல் வேகத்தில் திரும்பி
வந்தது ஜானகியை யோசனையில்
ஆழ்த்தியது. முக்கியமாக இருவரின்
முகமும் சரியில்லை. கார்த்திக்கின்
முகம் முழுதும் கோபத்தில் எரிந்து
கொண்டு இருந்தது என்றால் மதுவின்
முகத்தில் போகும் போது இருந்த
கொஞ்சநஞ்ச நிம்மதியையும்
துடைத்து எறிந்திருப்பதைக் கண்டார்.
மனைவியின் பின்னால் வந்த
வேலுமணியும் இருவரையும் கண்டு
திகைத்தார்.
கார்த்திக்கும் மதுவும் அங்கு இருவர்
நின்றிருப்பதைப் பார்க்காதது போல
மேலே தங்கள் அறைக்குள் சென்று
புகுந்து கொண்டனர்.
ஜானகிக்கு இதற்கு அவர்களை அங்கு
அனுப்பாமலே இருந்திருக்கலாம்
என்று நினைத்தார். தன் ஆதங்கத்தை
கணவரிடம் காட்டவும் செய்தார்.
"நீங்களும் உங்கள் ஐடியாவும். பெரிய
ப்ளான் போட்ட மாதிரி என்னிடம்
காலரை உயர்த்திக் காட்டி ஜம்பம்
அடித்தீர்கள்.. இப்போது என்ன ஆச்சு
பாருங்கள்" என்று புகைந்தார்.
"நான் என்ன இந்த மாதிரி ஆகும்
என்று நினைத்தா அவர்களை அங்கு
அனுப்பினேன்.. அங்கு சென்றால்
அந்தச் சூழலில் கொஞ்சம் மனம்
விட்டுப் பேசுவார்கள் என்று
நினைத்தேன்" என்றவர் "இந்த அளவு
இருவருக்கும் பிடிவாதம் இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை" என்று மனைவியிடம் தலையைச் சொறிந்த
படிச் சொன்னார்.
அவர் பிடிவாதம் என்று சொன்ன
வார்த்தையில் ஜானகிக்கு கோபம்
பொங்கியது.. "பிடிவாதம் என்று
சொல்லுகிறீர்களே.. அது யாரிடம்
இருந்து வந்தது என்று
நினைக்கிறீர்கள்?.. உங்களிடம்
இருந்து தான் வந்து இருக்கிறது..
ஆனால் உங்கள் மகனிற்கு
உங்களைவிட இரண்டு மடங்கு
பிடிவாதம் அதிகம். அவன் காட்டக்
காட்ட மதுவிற்கும் ஏறிவிட்டது" என்று
சத்தம் போட்டவர் "எல்லாம் தலை
விதி.. உங்கள் அம்மாவும் உங்கள்
அப்பாவின் பிடிவாதத்தைப் பற்றி
சொல்லி இருக்கிறார்கள்.. எல்லாம்
வழிவழியாக வருகிறது போல இந்தப்
பரம்பரையில்" என்று தன் கூந்தலைக்
கொண்டைப் போட்டபடி கணவனிடம்
பொரிந்து தள்ளிவிட்டார். அவரும்
மனைவியிடம் பதில் சொல்ல
முடியாமல் உட்கார்ந்திருந்தார்.
மேலே வந்த கார்த்திக்கும் மதுவிற்கும்
என்ன செய்வது என்று தெரியாமல்
ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து
இருந்தனர். மதுவும் கார்த்திக்கும்
நேற்று சென்ற பிறகு ஜானகி தன்
கணவர் வேலமணியை அழைத்து,
அவர்கள் கல்யாண போட்டோ ஒன்று
ப்ரேம் போட்டு வந்ததை எடுத்து
அவர்கள் கட்டிலிற்கு எதிரில் மாட்டி
இருந்தார். அது வேறு இருவரையும் வாட்டி எடுத்தது.
கார்த்திக்கிற்கும் மனதை ஏதோ
சுமை அழுத்துவது போல
உணர்ந்தான். பிறகு மது ஒரு புக்கை
எடுத்துக் கொண்டு உட்கார்ந்து
விட்டாள் . பின்பு பிடிக்காமல் புக்கை
படிக்கவும் முடியாமல் மூடி வைத்துப்
படுத்து விட்டாள்.
கார்த்திக்கும் தன் லேப்டாப்பை
உயிர்ப்பித்தான். ஆனால்
அவனாலும் சரியாக வேலையில்
மூழ்க முடியவில்லை. கார்த்திக்கிற்கும் தலை வலிப்பது போல இருந்தது.
அப்போது தான் மதியம் இருவரும்
சாப்பிடவில்லை என்ற நினைவே
அவனிற்கு வந்தது. மதுவும்
படுத்திருந்தாளே தவிர தூங்கவில்லை. அவனிற்கு முதுகுக் காட்டிப் படுத்து சுவரை வெறித்த படி இருந்தாள். ஜானகியும் கோபத்தில் இருவரையும் அழைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து தொண்டையைச்
செறுமினான் "க்ஹும்" என்று.
ஆனால் மதுவிடம் சிறு அசைவு கூட
இல்லை. அவளை அப்படியே
சாப்பிடாமல் விடவும் அவனிற்கு மனம்
இல்லை. அவளின் தோளைத்
தொட்டுத் திருப்பியவன் "லன்ஞ் டைம்
ஆச்சு.. கீழே போலாம் வா" என்று
அவளை அழைத்துப் பார்த்தான்.
"இல்லை பசியில்லை" என்று
பழையபடி மீண்டும் திரும்பிவிட்டாள்.
அவளின் முகத்தில் புதியாய் இருந்த
கருவலையமும் உடம்பின் இளைப்பும்
அவனைத் தாக்க ஒரு முடிவு
எடுத்தவனாய்க் கீழே சென்றான்.
கீழே சென்று அன்னையை
அழைத்தவன் "அவள் சாப்பிட
வரமாட்டேன் என்கிறாள்.. நீங்கள்
போய்க் கூப்பிடுங்கள்" என்று சொல்ல
ஜானகிக்குக் கோபம் வந்தது.
இந்த மாதிரிச் சமயத்தை அவர்
விடுவாரா என்ன? மகனின் மேலும்
அனைத்தையும் காட்டினார்.
"அவள் சாப்பிடாமல் இருப்பதற்கு
நானா காரணம்?" என்று கேட்டு
மகனைப் பார்த்தவர் "பின் நான் எப்படி
அழைத்து வர முடியும்பா... நீயாச்சு
உன் பொண்டாட்டியாச்சு" என்று
மகனைக் குத்திய திருப்தியில் அவர்
சென்று சோபாவில் அமர்ந்து
டி.வியைப் போட்டார்.
தன் அன்னையின் மேல் கோபம்
வந்தாலும் மது சாப்பிடாமல் இருப்பதே அவனின் மூளையில் முன் நின்றது.
மதுவைக் கீழே வரவைக்க
எண்ணியவன் ஒரு ஐடியா தோன்ற
"இப்போது நீங்கள் அவளைக் கூட்டி
வரப்போறீங்களா இல்லையா?"
குரலை உயர்த்திக் கேட்டான் கார்த்திக்.
"என்னடா ரொம்பத்தான்
மிரட்டுகிறாய்.. உன் பொண்டாட்டி
வேண்டுமானால் உன் மிரட்டலுக்கு
அடங்கலாம்.. நான் இல்லை" என்று
பதிலுக்குக் குரலை உயர்த்திவிட்டு
மறுபடியும் டி.வி சேனலை மாற்றியபடி
உட்கார்ந்து விட்டார்.
கார்த்திக்கின் சத்தத்தைக் கேட்ட மது
"இப்போது எதற்கு அவர்களை
அதட்டுகிறான்" என்று எழுந்தவள்
தனது மாமியாரின் குரலையும் அவர்
சொன்னதையும் கேட்டாள். "ஆமாம்
இவர் மகன் அடங்கவில்லை
என்றாலும் அடக்கி விடுவான் என்று
இவருக்குத் தெரியாதா?" என்று
மனதிற்குள் மாமியாரைப் புகைந்தபடி
பெட்டில் உட்கார்ந்திருந்தாள்.
இருவரின் சத்தத்தில் வேலுமணியும்
அறையில் இருந்து வெளியே வந்தார்.
தனது மாமியார் சொன்னதைக்
கேட்டவள் மேல் இருந்து எட்டிப்
பார்த்தாள்.
அதைக் கவனித்தக் கார்த்திக்
மதுவைப் பார்க்காததைப் போல
பாவனை செய்து விட்டு "இப்போ
சாப்பாடு எடுத்து வைக்கப்
போறீங்களா இல்லையா?" என்று
மறுபடியும் இரைந்தான்.
மேலே மருமகள் நிற்பதைப் பார்த்த
ஜானகிக்கு மகனின் முயற்சி
புரிந்துவிட்டது. "நானும் காலையில்
இருந்து சமையல் வேலைகளை
முடித்து விட்டு இப்போது தான்
உட்கார்ந்து இருக்கிறேன்.. வேண்டும்
என்றால் நீயே போட்டுக்கொள்" என்று
ஜானகி சொன்னது தான் தாமதம் மது
வேக நடையுடன் தலைக்கு ஒரு
ரப்பர்பான்ட் போட்ட படியே கீழே
வந்தாள்.
என்னதான் கணவனிடம் சண்டையாக
இருந்தாலும் மாமியாரின் பேச்சை
அவளால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. அவனின் அம்மா
என்றாலும் அவனிடம் அப்படிப்
பேசியதும் அவளை சுரண்டிவிட்டது.
"நான் இருக்கும் போது இவன் ஏன்
அவரைக் கேட்கிறான். அதான்
அவனின் கைகுள் முடித்து என்னை
வைத்திருக்கிறானே.. கூப்பிடுவதற்கு
என்ன?" என்று கணவனையும்
மாமியாரையும் திட்டியபடியே கீழே
வந்தாள்.
கீழே வந்தவள் ஒரு தட்டை
எடுத்து அவனிற்கு உணவை எடுத்து
வைக்க கையை கழுவி விட்டு வந்த
கார்த்திக் அவளிற்கும் ஒரு தட்டை
எடுத்து வந்து வைத்தான். "எனக்கு
வேண்டாம்.. பசியில்லை" என்றவளை
ஜானிகியின் கரம் வந்து தோளைத்
தொட்டு "நாங்களும் இன்னும்
சாப்பிடவில்லை.. நீயும் உட்காரு மது
எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்"
என்று அவளின் தோளைப் பற்றி
கார்த்திக் அருகில் உட்கார வைத்தார்
ஜானகி.. மதுவிற்கு அப்போது தான்
அவன் அவளைக் கீழே வரவழைத்தது
புரிந்தது. என்ன ஒரு ஒற்றுமை
அம்மாவும் மகனும் என்று
நினைத்தபடியே அமர்ந்தாள்.
சீக்கிரமாகச் சாப்பிட்டு முடித்தவள்
மேலே சென்று அறைக்குள் புகுந்து
கொண்டாள்.. "ஒரு நிமிடம் கோபமாக
இருக்கிறான்.. மற்றொரு நிமிடம்
அப்படியே தணிந்து விடுகிறான்.
இவனை புரிந்து கொள்வது கஷ்டம்"
என்று நினைத்தவள் "ஒரு வேளை
நம்மால் தான் இவனைப் புரிந்து
கொள்ள முடியவில்லையோ" என்று
நினைத்துக் கலக்க முற்றாள்.
காலையில் அவன் சொன்ன
வார்த்தைகள் வேறு அவளைப் போட்டு வாட்டி வதைத்துக் கொண்டே
இருந்தது. நாம் அவன் பின்னால்
சென்றது தான் தப்பு.. அப்படியே
உள்ளே வைத்திருந்தால் கூட இப்படி
அசிங்கப்பட்டு வேதனை கொண்டு
இருக்க மாட்டோம் என்று
எண்ணினாள். இப்போது மட்டும்
என்ன கடமைக்காகச் சாப்பிட
அழைத்து இருக்கிறான் என்று அவளே முடிவு செய்தாள் . எப்படி.... எல்லாம்
இப்படி ஆனது என்று யோசித்த போது
மிதுனா என்று வந்து நின்றது..
போனை எடுத்தவள் மிதுனாவிற்கு
சும்மா முயற்சி செய்யலாமே என்று
அவளிற்கு ஒரு போன் போட்டாள்..
அதிசயமான ரிங் போனது.. ஆனால்
கட் செய்து விட்டாள். கோபத்தை
அடக்கிய மது போனை பெட்டில்
பட்டென்று வைத்துவிட்டு புக்கை
எடுத்து உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு
விட்டுத் தந்தையுடன் பேசிவிட்டு
வந்தக் கார்த்திக் லாப்டாப்பை
உயிர்ப்பித்து உட்கார்ந்தான்.
கரெக்டாக அவர்கள் இருவருக்கும்
நடுவில் இருந்த போன் அடிக்க
கார்த்திக் போனை பார்க்க அதில்
மிதுனா என்ற பெயர் தெரிந்ததைக்
கண்டான். மதுவும் அதே சமயம்
போனைத் தான் பார்த்திருந்தாள்.
போனை மது எடுக்கும் முன் கார்த்திக்
எடுத்து "ஹலோ" என்றான் இறுகிய
குரலில். போனை வைத்துவிட்டாள்.
ஒரு நிமிடம் போனை உடைத்து எறிய
கையைத் தூக்கியவன் அதற்குள்
சென்று கால்லாக்ஸைப் பார்த்தான்.
பின்னர் ஏளனமாக உதட்டை
வளைத்தவன் "இந்தா... புதுமணத்
தம்பதியரிடம் பேச அழைத்திருப்பாய்..
இப்போது போன் செய்திருக்கிறாள்..
போ போ போய் உன்
உயிர்த்தோழியிடம் பேசு.. அவள்
ரொம்ப முக்கியம் அல்லவா.." என்று
அவளின் கையில் போனைத்
திணித்தான்.
வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது
என்று நினைத்த மது, எதுவும்
பேசாமல் அப்படியே உட்கார்ந்து
இருந்தாள். போனை மறுபடியும் அதே
இடத்தில் வைத்துவிட்டு புத்தகத்தில்
ஆழ்ந்தாள் மது.
'திமிர் பிடித்தவள்.. திட்டுகிறேன்..
சாதரணமாக உட்கார்ந்து புக்
படிக்கிறாள் பார்' என்று
எரிச்சலுற்றான். 'நாம் என்ன
சொன்னாலும் அவன் நம்பப்போவது
இல்லை' என்ற நினைப்பே மதுவை
அப்படி உட்காரச் செய்தது.
சிறிது நேரம் கழித்து "எதற்கு
மிதுனாவிற்கு கூப்பிட்டாய்?" என்று
வினவினான். "சொன்னால் நம்பி
விடுவீர்களாக்கும்? என்று முகத்தைப்
புத்தகத்தில் வைத்தபடியேக் கேட்டாள்.
"சொல்லேன்.. எனக்கும் போர்
அடிக்கிறது.. என்னதான்
சொல்லுகிறாய் என்று பார்க்கிறேன்"
என்று ஏளனமாக சொல்ல மதுவிற்கு
கோபம் வந்துவிட்டது.. "அது
ஒன்றுமில்லை கோயம்பத்தூர்
வருகிறேன் என்றாள் அவள் மாமியார்
வீட்டிற்கு.. அதான் மீட் பண்ணலாம்
என்று அவளைக் கேட்பதற்காகக்
போன் செய்தேன்" என்று சீரியசாக
புக்கைப் படித்தபடிச் சொன்னாள்.
அவன் கோபமாக மதுவை நோக்க
"என்ன நீங்களும் கூட வருகிறீர்களா?"
பார்த்துவிட்டு வருவோம்" என்று
இப்போது கார்த்திக்கை பார்த்துப்
புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
"இனி மிதுனாவிடம் நீ பேசுவதை
என்னால் அனுமதிக்க முடியாது"
என்றான் லாப்டாப்பில் கண்களை
வைத்துக் கண்டிப்பானக் குரலில்.
அவன் சொன்னவுடன் அவனைப்
பார்த்த மது "ஏன் பேசக்கூடாது?"
என்று கையில் இருந்த புக்கை
மூடியபடிக் கேட்டாள்.
"ஏன் என்று உனக்குத் தெரியாதா?"
என்று லாப்டாப்பில் டைப் செய்து
கொண்டே கேட்டவன் "எனக்குப்
பிடிக்கவில்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.
"அதான் ஏன்?" என்று மறுபடியும்
பார்வை மாறாமல் கேட்டாள் மது..
ஆனால் இம்முறை கார்த்திக்கிற்கு
கோபம் வந்துவிட்டது.. "எனக்கு
பிடிக்காததைச் செய்ய வேண்டும்
என்று ஆசை இருந்தால் செய்து
கொள்" என்றவன் "அப்போது உன்
ப்ரண்ட தான் உனக்கு முக்கியம்
இல்லை?" என்று கேள்வியாகப்
பார்த்தான்.
"எனக்கு எல்லாரும் முக்கியம் தான்...
ஆனால் அவள் காதலித்து கல்யாணம்
செய்ததிற்காக அவளை ஒதுக்க
வேண்டுமா? எந்தக் காலத்தில்
இருக்கிறீர்கள் நீங்கள்?" என்று
அவனிடம் பாயந்தாள்.
"இப்போது யார் அவளை ஒதுக்கியது..
கல்யாணம் செய்தது தெரிந்தும் சிவா
அவளையும் அந்தப் பையனையும்
கூப்பிட்டது உனக்குத் தெரியுமா.
அவள் வரவில்லை என்றால் அவளே
பதில் சொல்லி இருக்க வேண்டும்..
போன் கூட பேச மறுத்து
போலீஸ்காரனை விட்டுப் பேசி
இருக்கிறாள்" என்று கடுகடுத்தான்.
மேலும் "சரியான சுயநலவாதி" என்று
பல்லைக் கடித்தான்.
"அவள் எந்தச் சூழ்நிலையில் என்ன
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
நமக்கு என்ன தெரியும்?" என்று மது
மிதுனாவின் பக்கம் பேச
கார்த்திக்கிற்கு கைமுஷ்டி எல்லாம்
இறுகியது.
"நமக்கு என்று சொல்லாதே.. அவளை
அனுப்பி வைத்த உனக்கு தான் அவள்
என்ன சூழ்நிலை.. மண்ணாங்கட்டி
மனநிலையில் இருந்திருப்பாள் என்று
தெரியும் தான்" என்று எரிச்சலுடன்
சொன்னான்.
"நான் ஒன்றும் அவளை அனுப்பி
வைக்கவில்லை" என்று மது பல்லைக்
கடிக்க "இப்போது தான் நான் பார்க்கப்
போகிறேன் என்று சொன்னாய்?"
என்று சாதரணாமாக அவளைப்
பார்த்துக் கேட்டான்.
மது தான் ஏன் அப்படிச் சொன்னேன்
என்று விளக்க.. "ஆங்.. நம்பிட்டேன்"
என்று கார்த்திக் சொல்ல மது
படுக்கையில் இருந்து எழுந்து பெட்டை சுற்றி வெளியே செல்லப் பார்த்தாள்..
ஆனால் மது கார்த்திக்கை கடக்கும்
போது கார்த்திக்கின் கரம் அவள்
கரத்தை பலமாகப் பற்றியது.