(இறுதி)அத்தியாயம் 14:
சூர்யா யார் என்றே தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்தவன் சொல்லிய 'டாமினி' என்ற பெயரே மருத்துவ குறிப்பில் பதிவானது .
அப்பெண்ணின் நிலையறிந்த பின் செல்வோம் என மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றவனின், மனம் மீண்டும் தன்னவளை தேட," அவளிற்கு எதுவும் ஆகியிருக்க கூடாது பரமேஸ்வரரே "என வேண்டியபடி இருந்தவனின் முன் முகம் முழுக்க கலக்கத்தை சுமந்தபடி நின்றாள் சந்திரிகா.
அவளை அவ்விடத்தில் எதிர்பார்க்காதவன் முதலில் திகைத்து , மனதின் தேடலுக்கு விடையாய் அனகாவும் உடன் வந்திருப்பாளோ என தேடியவனின் கண்களில் தங்கையின் கலங்கிய முகம் தாமதமாகவே விழுந்தது .
பதட்டத்துடன் சந்திரிகாவின் தோள்களை பற்றியவன் , " அன..அனகாவிற்கு என்ன நேர்ந்தது ??" எனக் குரல் காற்றாய் வெளிவர கேட்டவனின் மனம் , அவளிற்கு ஒன்றுமில்லை என்ற பதிலை எதிர்பார்த்தது.
அவனின் கேள்வியில் அவனை விட அதிக பதட்டத்துடன், " அண்ணா...! அப்போ நீ தூக்கிட்டு வந்தது அவங்களை இல்லையா ??" எனக் கேட்டாள்.
அவள் சொல்லியதில் அவன் இதயம் தாளம் தப்ப," என்ன உளறுகிறாய் சந்திரிகா..!! நான் எதற்கு அவளை இங்கு தூக்கிக்கொண்டு வரவேண்டும் ?? முதல் நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் ??" என உறுமினான் .
அவனின் கோபத்தை அறிந்திருந்தவளாய் நடுக்கத்துடன் , தாங்கள் அவனை தேடி இங்கு நடந்தே வந்தது , நடுவில் அவள் கீரிக்கு பயந்து அனகாவை விட்டு தள்ளி நின்றவேளையில் , ஓர் மாருதி வந்து அனகாவை கடத்தி சென்றது என அனைத்தும் சொல்லியவள் ,
"நான் விரைந்து அவர்களை தொடர்ந்து இவ்வளவு தொலைவு வந்தபின் ..எதிரில் நீ கைகளில் ஓர் பெண்ணை ஏந்தியபடி இதனுள் நுழைந்ததை கண்டு , நீ அனகாவை தான் தூக்கிவருகிறாய் என்று எண்ணிவிட்டேன் அண்ணா...!" என தவறிழைத்ததை உணர்ந்து அழுதபடி கூறினாள்.
"மனிதர்களை போல் உனது சித்தமும் கலங்கியதா என்ன? உன் கண் முன்னாள் கடத்தப்பட்டவளை தொடர்ந்து இத்தனை தூரம் வந்திருப்பவள் ,எதிரில் வரும் நான் எவ்வாறு அவளை ஏந்தியிருப்பேன் என நொடி நேரம் யோசித்திருந்தால் அந்த வண்டியை தவற விட்டிருக்க மாட்டாய் சந்திரிகா "
அவர்கள் இருவரின் செயலால் ஏற்பட்ட விபரீதத்தில் கோபமாய் ஆரம்பித்த சந்திராதித்யன் குரல் தன்னவளுக்கு என்ன நேர்ந்ததோ என்னும் தவிப்பில் உடைந்துபோனது.
அப்பொழுது அவனை தேடிவந்த செவிலியர் "டாமினியின்(சூர்யாவின்) உயிர்க்கு ஆபத்தில்லை " என சொல்லி செல்ல ,அந்நிலையிலும் அப்பெண்ணிக்காய் கடவுளிடம் நன்றி உரைத்தவன் தன்னவளை தேடிச் சென்றான்.
அண்ணனுடன் சேர்ந்து சந்திரிகாவும் தேட... நேரம் தான் கடந்ததே தவிர அனகாவை அவர்களால் கண்டுப் பிடிக்கமுடியவில்லை .
நீண்ட நேர தேடலுக்கு பின் இருவரும் அருகிலிருந்த சிறு கிராமத்தை அடைய சந்திராதித்யனின் மனம் தன் இணை அருகிலிருப்பதை உணர்ந்து கொண்டது .
"சந்திரிகா...! என் மனம் உண்மையை உரைக்குமானால் அனகா இவ்வூரில் தான் இருக்க வேண்டும்" என சொல்லியவனின் கண்கள் வேகவேகமாய் நாலாபுறமும் சுழன்றது.
தனது நுகரும் சக்தியால் அனகாவின் வாசனையை அறியமுற்பட்ட சந்திரிகா , "அண்ணா...! அனகா இந்த வீட்டினுள் இருப்பதாய் எண்ணுகிறேன் . இறுதியாய் அவர்களுடன் இருந்ததில் அவரின் வாசம் இன்னும் எனதுணர்வுகளில் கலந்திருப்பதால் என்னால் அவர்களின் வாசத்தை இங்கு நுகர முடிகிறது " என சந்தோஷித்தாள்.
இருவரும் விரைந்து அவ்வாயிலுக்கு வர , உள்ளிருந்து தெறித்த நெருப்பு கங்கங்கள் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தது .
இருவரும் அதை தாண்டிச் செல்ல முற்பட நெருப்பு கங்கங்கள் இன்னும் அதிகமாய் உள்ளிருந்து தெறித்தது .
தன் சக்திகளை கொண்டு நெருப்பு கங்கங்கள் தங்களை தீண்டாமல் சந்திராதித்யன் தடுத்து கொண்டிருக்க , அதன் சூட்டை நீண்ட நேரம் தாங்க முடியாத சந்திரிகாவின் உடல் வலுவிழந்து பாம்பின் உருவிற்கு வந்தது .
அவளின் நிலை கண்ட சந்திராதித்யனுக்கு , தன்னவளை தேடி உள் செல்வதா ?? அல்ல தங்கையின் நலம் பேணுவதா ?? என தடுமாற்றம் தோன்ற ,
வழக்கம்போல் அண்ணனின் மனம் அறிந்துகொண்ட சந்திரிகா, " உள்செல் அண்ணா ...! நான் வேறு ஏதும் வழிகள் உள்ளதா என பார்க்கிறேன் " என தங்களின் மொழியில் சொல்லியவள் அவன் தடுப்பதற்கு முன் அவ்வீட்டை சுற்றி ஊர்ந்து செல்லத் தொடங்கினாள் .
தங்கையை பார்த்திருந்தவனின் காதில் விழுந்தது ,"குழியா.....!! " என்ற தன்னவளின் வலியுடன் கூடிய கதறல் ஒலி.
அவ்வீட்டினுள் இருந்தே அவளின் குரல் கேட்க இத்தனை நேரம் அவள் இங்கு இருக்கிறாளா ?? இல்லையா ? என்பது தெரியாமல், ஒன்றும்புரியா புதிருக்குள் நுழைந்ததை போல் தவித்திருந்தவனுக்கு ... சிறு குறிப்பாய் அவளின் குரல் கேட்க, அடுத்தநொடி நெருப்பு கங்கங்கள் உடலை சுட்டு பொசுக்குவதை கூட உணரமறுத்தவன் அவ்வீட்டினுள் பாய்ந்திருந்தான் .
எங்கிருந்து தீ பற்றியது என்பதை அறியமுடியாதபடி அவ்வீடு முழுவதும் தீயில் குளித்திருக்க , அதன் சூட்டில் தன் பலம் சிறிது சிறிதாய் குறைவதை உணர்ந்த சந்திராதித்யன், ஈசனை தன் மனதினுள் நிறுத்தி தனது சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டினான் .
நாகங்களின் மிகப்பெரிய பலவீனம் நெருப்பு. சீறிக்கொண்டு படமெடுத்தாடும் நாகத்தையும் ஒரு சிறு தீ கங்கம் அடங்கச்செய்யும். மனித தோற்றத்தை எடுக்கக்கூடிய அற்புதமான சக்தி கொண்ட இச்சாதாரிகளை நாகமணியின் காவலாய் ஒட்டுமொத்த நாகங்களின் அரசர் ஆதிஷேஷர் நியமித்திருக்க, அதை அபகரிக்க முயலும் கயவர்கள் நெருப்பையே தங்களின் ஆயுதம் ஆக்குவார் . தன் வாழ்நாள் முழுக்க சேமித்த சக்திகளை கொண்டே இச்சாதாரியால் அவர்களை வெல்ல முடியும். வெற்றிபெற்று நாகமணியை காப்பாற்றிய போதும் அந்த இச்சாதாரியின் முழு சக்தி ப்ரோகித்தலால் ஆன்ம பலம் முழுதும் குலைந்து தன் வாழ்நாளையும் முடித்துக்கொள்ள நேரும்.
அதனாலே தங்களிடம் ஏகப்பட்ட சக்திகள் இருந்தபோதும் மனிதர்களை எதிரியாய் பாவித்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் சந்திரமதியினர் .
நெருப்பின் நிழலை கூட தீண்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தவன் இன்று அந்நெருப்பிற்கு நடுவில் உடல் தகிக்க தன் சக்திகளை ஒன்று திரட்டி, நெருப்பு உடலை அதிகமாய் தீண்டாதபடி நகர்ந்து அவ்வீடு முழுவதும் தன்னவளை தேடினான்.
அப்பொழுது பின்புறமாய் கார் ஒன்று செல்லும் ஓசை கேட்க, விரைந்து பின்புறமாய் ஓடியவன் ,
அங்கு எவரும் இல்லாமல் போக என்ன செய்வது என விரைவாய் யோசிக்கத் தொடங்கியவனின் செவியை மீண்டுமாய் தீண்டியது தன்னவளின் குரல்.
இம்முறை அலறலாய் அல்லாமல் முனங்களாய் பக்கத்திலிருந்த அறையிலிருந்து கேட்க , வேகமாய் சென்று அக்கதவை தள்ள கதவு சற்றும் அசைந்து கொடுக்காததில் அதை உடைத்தெறிய முற்பட அக்கதவிலும் பரவியிருந்த நெருப்பு அவனை தீண்டியது.
அதில் அவனது இடதுபுற உடல் ஆங்காங்கே பொசுங்கி , உடல் சிறுது சிறிதாய் பாம்பின் உருவிற்கு மாற , பற்களை கடித்து "பரமேஸ்வரரே...! எனக்கு தங்களின் துணை தேவை ...தயை கூர்ந்து உதவி செய்யுங்கள். இன்னும் சில நிமிடங்கள் எனக்கு அருளுங்கள் ஈசனே ...! மனையாளை காப்பது ஆண்மகனின் கடமை அல்லவா ...நான் அறிவேன் எனது இறுதி நொடிகள் நெருங்கிவிட்டது ஆயினும் என் காதல் உள்ளம் என்னவளுக்காய் பதறுகிறது பிரபு ...! "
-என ஈசனிடம் வேண்டியவனின் உடல் பெருமளவிற்கு நாகத்தின் உருவாய் மாறியிருக்க , சில இடங்களில் நெருப்பின் நாக்குகள் தீண்டியதில் தோல் பொசுங்கி வெறும் எழும்பு மட்டும் தெரிந்தபடி , நெருப்பில் மாட்டாமல் விலக எங்கெங்கோ முட்டிக்கொண்டதில் உடலின் சில இடங்கள் ரத்தத்தில் குளித்திருக்க , அதற்குமேல் முன்னேற முடியாமல் சக்திகள் அற்று கதவின் அருகிலே விழுந்திருந்தவன் முனங்களாய் தன் காதலை காப்பதற்க்காய் பரமேஸ்வரரிடம் மன்றாடினான் .
அவனின் மன்றாடல் ஈசனை சேர்ந்ததோ , பாம்பின் உருவிற்கு மாறிக்கொண்டிருந்தவனின் தோற்றம் பாதியில் நின்றது மட்டுமில்லாமல் அவனின் நீண்ட வால் திடீரென துள்ளி அக்கதவில் பட்ட நொடி அது திறந்துகொண்டது .
இடுப்பிற்கு கீழ் பாம்பின் உருவம் வந்திருக்க , பலம் இழந்து கண் மூடி கரைந்துக் கொண்டிருந்தவன் , கதவு திறந்த நொடி அவ்வறையினுள் நுழைந்து தன்னவள் எங்கே என தேடினான் .
அவ்வறையின் மற்றோரு கோடியில் ஓர் உருவம் கவிழ்ந்திருக்க அவ்வுருவத்தை சுற்றி ரத்தம் சூழ்ந்திருந்தது .
அந்த உருவம் அனகா என உணர்ந்த சந்திராதித்யன் , பாதி மனித உடலும் பாதி பாம்பின் உடலும் கொண்டு மெதுவாய் அவளை நோக்கி ஊர்ந்தான் .
சிறிதுசிறிதாய் நெருப்பு அவ்வறையிலும் நுழைந்திருக்க , அனைத்தையும் சுவைத்துவிட தன் நாக்கை நீட்டிக்கொண்டு வந்த பெரும் தீங்கங்கிடம் இருந்து ஒதுங்கியவனின் கழுத்தில் கீறியது அங்கு நெருப்பில் கண்ணாடி வெடித்து துண்டாக்கி வீசப்பட்டிருந்த அங்கு வீசப்பட்டிருந்த கண்ணாடித் துண்டு .
தன் இறுதி நொடிக்கு இன்னும் நீண்ட நேரம் இல்லை என்பதை உணர்ந்தவன் நெருப்பையும் பொருட்படுத்தாமல் தன்னவளின் அருகில் சென்று சுவற்றில் சாய்ந்தவன் , அடிபட்டிருந்த அனகாவின் தலையை எடுத்து தன் நெஞ்சினில் சாய்த்துக்கொண்டான் .
முன்நெற்றி பிளந்து ரத்தம் வர அதை தன் பொசுங்கிய வலதுகையால் துடைத்தவனின் இடதுகை அவளின் பின்மண்டையின் காயத்தை உணர்ந்தது .
அவனை முதல்முறை பார்த்தபோது விளையாட்டாய் தன்னுடன் வம்பிழுத்து பேசியது, சிறுபிள்ளையாய் இருட்டுக்கு பயந்து தன்னிடம் அடைக்கலமானது , தன் காதலை வெட்கத்துடன் சொல்லி இவனின் பதிலுக்காக காத்திருந்தது என அவளின் அனைத்து பரிமாணமும் நினைவு வர அவளின் இந்நிலையை தாங்கமுடியாதவன் அழகூடமுடியாமல் , தங்களை சூழ்ந்திருக்கும் நெருப்பிடமிருந்து தப்பித்து எவ்வாறு அவளை அங்கிருந்து கூட்டி செல்வது என சிந்திக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது அவனின் கண்களுக்கு எதிரிலிருந்த குட்டி சுவரும் அதன் பின்புறம் உள்ள வரிசையாய் அடுக்கிவைத்த கண்ணாடிகள் பட்டது.
அந்த சுவற்றின் பின் இதுவரை நெருப்பு பரவாததை உணர்ந்து அனகாவை தன்னுடலுக்குள் பாதுகாப்பாய் புதைத்தபடி சிறுது சிறிதாய் அவ்விடம் நோக்கி நகர்ந்தான்.
அவனுக்குள் புதைந்ததை போல் ஒன்றிருந்தவளுக்கு அவனின் இதயத்தின் ஓசை தெளிவாய் கேட்க , அவளின் வாழ்நாள் முழுதும் கேட்க விரும்பிய அவ்வோசையை மயங்கிருந்தபோதும் அவளின் மனம் உணர்ந்துகொண்டது .
அதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் , "குழியா...!" என மெல்லியதாய் அழைக்க...அவளின் காதல் அழைப்பு அவனின் செவி தீண்டி கண்ணீர் வரவழைத்தது .
அவளை கவனித்து நொடிகளை வீணாக்க விரும்பாதவன் அவளை இறுக்கிகொண்டு வேகமாய் நகர்ந்தான் .
அதை எல்லாம் உணராத அனகா மயக்கம் சிறிதாய் இருக்கும்பொழுதும் அனைத்தையும் சொல்லிமுடித்துவிட வேண்டுமென தன் மனத்துக்குள்ளே சிறிது நேரத்திற்கு மயங்கிவிடக்கூடாது என நினைத்தபடியே மீண்டுமாய் அவனை அழைத்தவள் ,
"குழியா..! நான் உன்னை ...உன்னை பார்த்தேன்...ஓ...ஒரு...பொ...பொண்ண...நீ தூ...தூ...தூக்..தூக்கிட்டு போன..அந்த பொண்ணு...க்கும் ...நீ...நீ தான் ...நியாயம்...செய்யணும் ...டா...டாமினி .....அத...தான் ..விரும்புவா...நா...நானும் ..சந்...சந்தோஷ... படுவேன் "
என கண்களை திறக்காமலே திக்கி திக்கி பேசியவளின் பேச்சை கேட்டவனிற்க்கு , "இவள் தங்களை தாண்டி தான் இங்கு வந்தாளா ?? பரமேஸ்வரரே ..! நான் என்ன தீங்கிழைத்தேன் ?? என் அருகிலே என்னவளிற்கு அநியாயம் நடந்திருக்க நான் அதை அறியாமல், என்னவளை காக்கமுடியாமல் இருந்திருக்கிறேனே..தங்களை சாட்சியாய் கொண்டே இவளை மணந்தவன் நான்.. எங்களுக்கு இவ் அநீதி இளைப்பது ஏன் ஈஸ்வரா??" என உயிர்போகும் வேதனையுடன் அவர்களின் குலம் காப்பவரிடம் நியாயம் வேண்டினான் .
அவனின் நியாயதிற்கு பதில் கிடைக்காத போதிலும் , அந்த கண்ணாடிகளின் இறுதியில் இருந்த சன்னல் கம்பிகளின் சட்டத்தை உடைத்து வந்த சந்திரிகா அவர்கள் தப்புவிக்க வழியை கிடைக்கச் செய்தாள்.
அவளின் கண்களில் முதலில் தன் அண்ணனின் உருவே தென்பட அவன் தன் இறுதிநொடிகளில் பயணிப்பதை அறிந்தவள் அவனிற்காய் வாய்விட்டு கதறினாள் .
அவளின் கதறலில் வேகமாய் பரவிக்கொண்டிருந்த கொடுந்தீயும் ஓர் நொடி நின்று மீண்டும் பரவ தொடங்கியது .
அவளின் அழுகையை கட்டுபடுத்த சொல்லிய சந்திராதித்யன், அவளிடம் அனகாவை இங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்லசொல்லி சொல்ல அவள் இவனை விட்டு செல்ல மறுத்தாள் .
நீண்ட நேரம் சமாதானம் சொல்லியும் செல்ல மறுத்த சந்திரிகாவை கண்டவன் , தன்னவளையும் ...உடன் பிறந்தவளையும் காக்க தன் வசிய படுத்தும் சக்தியை தங்கையிடமே பிரகோயித்தவன் , அவர்களை வெற்றிகரமாய் வெளியேற செய்து அச் சந்தோஷத்துடனே தன்னுடன் கைகோர்க்க துடித்துக்கொண்டிருந்த மரண தேவனிடம் தன்னை ஒப்புவித்தான் .
அனகாவை தோளில் சுமந்தபடி அவ்வீட்டை விட்டு வெளிவந்து சிறிதுதூரம் கடந்து அங்கு சாலையின் ஓரம் இருந்த மரத்தினருகில் அவளை சாய்த்தபின்பே சந்திராதித்யனின் வசியம் முறிந்து தன் உணர்வுக்கு வந்தாள் சந்திரிகா.
மரத்தின் மறுபுறம் வந்தவள் அங்கிருந்தபடியே தன் அண்ணன் மரணத்திற்க்கு காரணமான அவ்வீடை கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை துடைத்த படியே பார்க்கமுற்பட்டாள்.
பின்புறம் ஏதோ சத்தம் கேட்க , அனகாவை ஒருவன் கைகளில் ஏந்தியபடி அங்கு நின்றிருக்கும் காரில் ஏற்றுவதை கண்டவள் , சற்று முன்புவரை நடந்ததில் பதறி பாம்பின் உருவிற்கு வந்தவள் அவர்களை தொடர்ந்து காரில் ஏறியிருந்தாள்.
தாங்கள் அவசரப்பட்டு காட்டை விட்டு வந்ததே தன் அண்ணனின் இறப்பிற்கு காரணம் எனக் குற்றவுணர்வு பெருக்கெடுக்க, அவன் உயிர் கொடுத்து காப்பாற்றிய அவனின் காதலை தான் மீண்டும் தொலைத்துவிடுவோமோ?? என தவித்தபடி காரில் ஏறியவளை சிறிதாய் நிம்மதியுற செய்தது அக்காரில் இருந்தவனின் அனகாவிற்க்கான துடிப்பு .
யஷியை கைகளில் ஏந்தியபடி காற்றில் கலந்திருந்த சந்திராதித்யனின் உருவம் இவை அனைத்தையும் நினைத்து பார்க்க ,
விஸ்வநாத்திடம் பேசிக்கொண்டிருந்த மித்ரனும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான் .
"அன்று சாலையின் ஓரம் எவரோ அடிபட்டிருப்பதை பார்த்து உதவலாம்னு போனா... அங்க நம்ப யஷி அங்கிள். யாரோ மாதிரி ரோட்டோரம் அடிபட்டு ....அவளோட அந்த நிலைமையை என்னால தாங்கவே முடியலை அங்கிள்.அதற்க்கு பிறகு அவளை ஹோச்பிடல்ல சேர்த்தது , தலைல அடிபட்டத்துல கோமாக்கு போனவ சிலமாசம் கழிச்சி பாதி நினைவுகளை மட்டுமே நியாபகத்துல வச்சி முழிச்சதுனு அடுத்து நடந்த எல்லாம் உங்களுக்கு தெரியுமே அங்கிள் ..."
ஆம் அன்று மரத்தடியில் இருந்த யஷியை காரில்
ஏற்றிவந்தது மித்ரன் தான் .இவர்களை தொடர்ந்த சந்திரிகா, அனகாவின் உறவுகளே அவர்கள் தான் என்பதை உணர்ந்து அவள் அவளுக்கு உரிய இடத்தில் சேர்ந்ததில் மகிழ்ந்து தன் அண்ணனிடம் மனத்தால் பேசிய படி தங்கிளடத்திற்கு திரும்பிவிட்டாள்.
ஆயினும் அண்ணனின் நினைவு தோன்றும் பொழுதெல்லாம் அனகாவை சென்று பார்ப்பவள் , குகை வீட்டில் கிடைத்த நாட்குறிப்பையும் திறந்தே பார்க்காமல்..எவரும் அறியாமல் அனகாவிடம் சேர்ப்பித்திருந்தாள்.
சிறுவயது முதல் மனிதர்களின் மேல் அவளே அறியாமல் பிடித்தம் ஏற்பட்டிருக்க , சந்திராதித்யனின் மரணத்தால் அது முழுதும் அவளின் மனதில் இருந்து அழிக்கப்பட்டது . அனகாவை தவிர மனிதர்கள் எவரையும் அவள் பார்க்கவும் விரும்புவதில்லை .
இந்த காலம் தான் எத்தனை விசித்திரம் வாய்ந்தது .நாம் ஆசையாய் ரசித்து பார்ப்பதையே ஒருநாள் வெறுத்து ஒதுக்க செய்துவிடுகிறதே .
இன்று :
ஒருவருடம் முன்பு யஷி தொலைந்து ,பின் மீண்டு வந்ததை பற்றி பேசிகொண்டிருந்த மிதர்னும் , விஸ்வநாத்தும் யஷி வீட்டில் இல்லாததை சிறிது நேரம் கடந்தே அறிந்துக் கொண்டனர் .
அவள் எங்கு சென்றிருப்பாள் என பதறிய மித்ரனுக்கு சிறிது நேரதிற்க்கு முன்பு தன்னை வேகமாய் உலுக்கிய காற்றின் உருவம் தற்பொழுதே தோன்ற, தன்னை தானே திட்டிக்கொண்டவன் , "யஷிக்கு எதுவும் ஆகக்கூடாது " என வேண்டியபடியே வீட்டை விட்டு வெளிவந்து, காரைக் கூட எடுக்காமல் பைத்தியம் பிடித்தவன் போல் அவளை தேடத் துவங்கினான் .
அவனை தொடர்ந்து தானும் சுதாரித்த விஸ்வநாத் , தன் மகளையும் ..மகன்போன்ற மித்ரனையும் எண்ணி கடவுளிடம் அவர்கள் இருவருக்கும் எதுவும் நேரக்கூடாதென வேண்டியபடி தனது தேடுதலை துவங்கினார்.
அவர் வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த்தர் போலும் ,அங்கு அந்த எரிந்த வீட்டினுள் இத்தனை நேரம் மயங்கிக்கிடந்த யஷி கண்களை திறக்க முயற்சித்து வெற்றிபெற்றிருந்தாள்.
காற்றுடன் கலந்திருக்கும் சந்திராதித்யனால் நீண்டநேரம் அவளை ஏந்த முடியாமல் போக அன்று போல் இன்றும் அந்த கண்ணாடிகளுக்கும் , குட்டி சுவருக்கும் நடுவிலிருக்கும் இடத்தில் அவளை கிடத்தியிருந்தான் .
கண்விழித்த யஷிக்கு தன் முன் மின்னிக்கொண்டிருந்த பச்சை நிற கண்கள் மட்டும் தெரிய அதையே விடமால் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ...இ்த்தனை நாளாய் அரைகுறையாய் வந்து சென்ற காட்சிகள் அனைத்தும் தெளிவாய் நினைவு வந்தது .
அவனுடன் சேர்த்து தன் காதலையும் அதன் நினைவுகளையும் ஒருவருடத்திற்கு முன்பு தொலைத்தவள் ...எந்தஇடத்தில் அவை அனைத்தையும் தொலைத்தாலோ அதே இடத்தில் அவை அனைத்தும் தன்னிடம் சேர்ந்ததில் உள்ளுக்குள் மகிழ்ச்சி அலையலையாய் பெறுக ஆசையுடன் அவனை கட்டிக்கொள்ள முயன்றாள்.
ஆனால் காற்றோடு கலந்திருந்தவனின் நிழல் உருவம் அவளின் ஆசைக்கு தடை போட , ஆசைப்பட்ட பொம்மையை தொடமுடியாமல் தவிக்கும் குழந்தையாய் உதடுகளை பிதுக்கியவள் அவனின் முகம் பார்த்தாள்.
அவளின் தவிப்பான முகத்தை பார்த்த சந்திராதித்யனுக்கு அவளின் தவிப்பை உடனே களைய தோன்ற , " உன்னால் முடியாத போதும் என்னால் உன்னை தொடமுடியும் அனகா என்னை உணர முயற்சி செய் "என்றபடி காற்றோடு கலந்திருந்தவன் அவளை சுற்றி படர்ந்தான் .
அவனின் தொடுகையை அவளால் உணரமுடியாத போதும் அவனின் வாசம் தன்னை சுற்றி பரவிஇருப்பதை உணர்ந்தவள் அவன் அணைப்பை கற்பனையில் உருவாக்கி அதில் மகிழ்ந்தாள் .
சிறிதுநேரம் சென்று மீண்டுமாய் அவளின் எதிரில் வந்தவன், "அன்று என்ன நடந்ததென்பதை சொல் அனகா !! அன்று என்னால் டாமினியின் இறப்பிற்கு காரணமான ஆறாவது ஆளை கொள்ளமுடியாமல் போனாலும் , நீ ஆசை பட்டதை போல் சூர்யாவின் மரணத்திற்கு மட்டுமின்றி ...பல பெண்களின் மரணத்திற்கு காரணமானவர்களை கொன்றேன் . ஆனால் உனக்கு அன்று என்ன நேர்ந்ததென்பதை இன்றாவது என்னிடம் சொல் அனகா !!" எனக் கேட்டவனிடம் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் .
அதே நேரம் தனது காரை வேகமாய் ஒட்டிக்கொண்டிருந்த பாசை கண்களில் பயத்துடன் பார்த்த ஜான், "பாஸ்...எதுக்காக இப்போ திரும்ப அந்த ஊருக்கே போறோம் ...வேண்டாம் பாஸ் ..!"
-என மாலை யஷியை பார்த்த பின் இவ்வூரைவிட்டு தாங்கள் வந்த ஊருக்கே செல்லலாம் என சொல்லி பாதி தூரம் வரை சென்ற பின் மீண்டுமாய் அவன் இந்த ஊருக்கே போகவேண்டும் என, வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த அவனையும் விளக்கி தானே அசுரத்தனமான ஒட்டியபடி வந்தவனிடம் கேட்டான் .
அவன் வந்தானா இல்லை சந்திராதித்யன் அவனின் மனதில் புகுந்து மீண்டும் வர செய்தானா அதை அந்த ஈசனே அறிவார் .
"ஜான் ...! அன்னிக்கு நடந்ததெல்லாம் மறந்துட்டியா ?? பத்தொன்பது வயசுலயே பொண்ணோட ருசி என்னனு தெரிஞ்சிக்கிட்டவன்டா நான் அதுல கையும் களவுமா சிக்கியும், என்னிக்கோ ஒருநாள் வேறுதேவைக்காக .. நான் ரெண்டு வயசு குறைச்சி சொன்னதுல தண்டணை இல்லாம தப்பிச்சி வந்தவன்டா. கை எட்டியும் வாய்க்கு எட்டாம போனவ இப்போ கண்ணுமுன்னாடியே வந்து நிக்குறப்போ ருசிப்பாக்கமா எப்படி போறது ஜான்...??" என கேட்டவனின் பெயர் ரியாஸ் .
இத்தனை நாட்களாய் பாஸ் என்ற அடையாளத்தின் பின் மறைந்திருந்தவன்.. போன வருடம் ஒரு பெண்ணை போகப்பொருளாக நினைத்து அவளை உயிரோடு கொன்றிந்தான் . அவனை தான் வயது குறைவு என்று அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியிருக்க , ஜாமீன் என்னும் ஒன்று இருப்பதே இவர்களுக்காக தான் என்பதை போல் அதற்கடுத்த ஒரு வாரத்திலே வெளியே வந்திருந்தான் .
ரியாஸீற்கு ஒருவருடம் முன்பு தாங்கள் கடத்திய அனகாவின் (யஷி) உடல் கண்முன் தோன்றி அவனின் இச்சையை கூட்ட அவனின் வேகம் அதிகரித்தது .
அவன் சொன்னதை கேட்ட ஜானிற்கு ஒருவருடத்திற்கு முன்பாய் தாங்கள் இவ்வூருக்கு வந்த நாள் அன்று நடந்தது நினைவு வந்தது.
அனகா என்னும் யஷி சந்திராதித்யனிடம் தன்னை கடத்தியதிற்கு பின் நடந்ததை சொல்ல தொடங்க , அவளை கடத்தியவர்களில் ஒருவனான ஜானிற்கும் அன்று நடந்தவை படமாய் ஒடியது.
அன்று:
ஜாமினில் வந்த பிறகும் சிறிது நாட்கள் எங்கும் செல்லாமல் இருந்த ரியாஸ் நான்கு மாதங்களுக்கு பிறகு , ஜானுடன் மாருதியை கிளப்பிக்கொண்டு... தங்களின் பெண்களின் ரத்தத்தை குடிக்கும் ராஜ்யமான சின்னம்பாளையத்திற்கு வந்தான்.
நீண்ட நாட்களாய் பெண்களை சுகிக்காமல் இருந்த ரியாஸீற்கு , பாதையின் நடுவில் ...நிலவு வெளிச்சத்தில் ...அழகிய பூவாய் நின்றிருந்தவளை கசக்கி முகர அவனின் அழுக்கான மனம் ஆசை கொள்ள அவளின் அருகில் காரை நிறுத்தியவன் , அவளை வாய் பொத்தி காருக்குள் இழுத்து போட்டான் .
திடீரென தன்னை இழுத்த கைகளின் அழுத்தத்தில் அவனின் நோக்கம் அறிந்துகொண்டிருந்த யஷி(அனகா)க்கு நெஞ்சத்தில் அச்சம் தானாய் தன் இருப்பிடத்தை நிலைநாட்டியது .
தன்னவனுக்கு மனைவியாய் ஆன அன்றே அவனிற்க்கான தன் பெண்மைக்கு ஆபத்து வந்ததில் கலங்கிய பெண்ணவளின் மேனி அந்த கயவனின் தீண்டலில் துடிதுடித்தது .
"சீக்கிரம் ஊர் எல்லையில இருக்க நம்ப வீட்டுக்கு வண்டியை விடு ஜான்....இவளை ரொம்ப நேரம் என்னால சும்மா பாத்துட்டு மட்டும் இருக்க முடியாது " என்றவனின் கைகள் அவளின் மேல் ஊற,
அருவருப்பை உணர்ந்த யஷி(அனகா) , அவன் கைகளில் துள்ளி அவனை தன்னால் முடிந்தவரை அடித்தாள்.
அவளின் அடித்ததில் கோபமானவன் , அவளின் தலைமுடியை கொத்தாய் பிடித்து காரின் கதவில் இடித்தான் .
அதில் அவளின் முன்நெற்றி பிளந்து ரத்தம் வர, வலியில் அலறிய யஷி(அனகா)யின் கண்களில் விழுந்தான் சந்திராதித்யன், கைகளில் ஒரு பெண்ணை ஏந்தியபடி.
அப்பெண்ணை பார்க்கும் பொழுதே அவளிற்கு நேர்ந்ததை புரிந்துக் கொண்ட யஷி(அனகா), தான் இப்பொழுது அனுபவிப்பதை விட அப்பெண் பலமடங்கு சித்திரவதையை அனுபவித்ததை உணர்ந்தவள் ...தான் இருக்கும் நிலை மறந்து அப்பெண்ணின் உயிர்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.
அதற்குள் அவர்கள் வீட்டை அடைந்திருக்க, வரமறுத்த யஷி(அனகா)யின் கன்னத்தில் அறைந்தவன் , அவளின் கைகளை பிடித்து இழுத்தான்.
தன்னால் முடிந்தவரை அவனை அடித்து , பற்களால் கடித்து , நகத்தால் கீறி தடுக்க பார்க்க , அவளின் செயலில் அவளை வெறித்தனமாய் அடித்தவன் ...அவளை தரையில் தேய்த்தவாரே இழுத்துச் சென்றான்.
வீட்டிற்குள் இழுத்துவந்து போட்டவனிடம் இருந்து நழுவியவள் ,கதவின் புறம் ஜான் நின்றிருந்ததை பார்த்து அவ்வீட்டினுள் ஓடத் துவங்கினாள்.
சூர்யா யார் என்றே தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்தவன் சொல்லிய 'டாமினி' என்ற பெயரே மருத்துவ குறிப்பில் பதிவானது .
அப்பெண்ணின் நிலையறிந்த பின் செல்வோம் என மருத்துவமனையின் வாயிலில் வந்து நின்றவனின், மனம் மீண்டும் தன்னவளை தேட," அவளிற்கு எதுவும் ஆகியிருக்க கூடாது பரமேஸ்வரரே "என வேண்டியபடி இருந்தவனின் முன் முகம் முழுக்க கலக்கத்தை சுமந்தபடி நின்றாள் சந்திரிகா.
அவளை அவ்விடத்தில் எதிர்பார்க்காதவன் முதலில் திகைத்து , மனதின் தேடலுக்கு விடையாய் அனகாவும் உடன் வந்திருப்பாளோ என தேடியவனின் கண்களில் தங்கையின் கலங்கிய முகம் தாமதமாகவே விழுந்தது .
பதட்டத்துடன் சந்திரிகாவின் தோள்களை பற்றியவன் , " அன..அனகாவிற்கு என்ன நேர்ந்தது ??" எனக் குரல் காற்றாய் வெளிவர கேட்டவனின் மனம் , அவளிற்கு ஒன்றுமில்லை என்ற பதிலை எதிர்பார்த்தது.
அவனின் கேள்வியில் அவனை விட அதிக பதட்டத்துடன், " அண்ணா...! அப்போ நீ தூக்கிட்டு வந்தது அவங்களை இல்லையா ??" எனக் கேட்டாள்.
அவள் சொல்லியதில் அவன் இதயம் தாளம் தப்ப," என்ன உளறுகிறாய் சந்திரிகா..!! நான் எதற்கு அவளை இங்கு தூக்கிக்கொண்டு வரவேண்டும் ?? முதல் நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் ??" என உறுமினான் .
அவனின் கோபத்தை அறிந்திருந்தவளாய் நடுக்கத்துடன் , தாங்கள் அவனை தேடி இங்கு நடந்தே வந்தது , நடுவில் அவள் கீரிக்கு பயந்து அனகாவை விட்டு தள்ளி நின்றவேளையில் , ஓர் மாருதி வந்து அனகாவை கடத்தி சென்றது என அனைத்தும் சொல்லியவள் ,
"நான் விரைந்து அவர்களை தொடர்ந்து இவ்வளவு தொலைவு வந்தபின் ..எதிரில் நீ கைகளில் ஓர் பெண்ணை ஏந்தியபடி இதனுள் நுழைந்ததை கண்டு , நீ அனகாவை தான் தூக்கிவருகிறாய் என்று எண்ணிவிட்டேன் அண்ணா...!" என தவறிழைத்ததை உணர்ந்து அழுதபடி கூறினாள்.
"மனிதர்களை போல் உனது சித்தமும் கலங்கியதா என்ன? உன் கண் முன்னாள் கடத்தப்பட்டவளை தொடர்ந்து இத்தனை தூரம் வந்திருப்பவள் ,எதிரில் வரும் நான் எவ்வாறு அவளை ஏந்தியிருப்பேன் என நொடி நேரம் யோசித்திருந்தால் அந்த வண்டியை தவற விட்டிருக்க மாட்டாய் சந்திரிகா "
அவர்கள் இருவரின் செயலால் ஏற்பட்ட விபரீதத்தில் கோபமாய் ஆரம்பித்த சந்திராதித்யன் குரல் தன்னவளுக்கு என்ன நேர்ந்ததோ என்னும் தவிப்பில் உடைந்துபோனது.
அப்பொழுது அவனை தேடிவந்த செவிலியர் "டாமினியின்(சூர்யாவின்) உயிர்க்கு ஆபத்தில்லை " என சொல்லி செல்ல ,அந்நிலையிலும் அப்பெண்ணிக்காய் கடவுளிடம் நன்றி உரைத்தவன் தன்னவளை தேடிச் சென்றான்.
அண்ணனுடன் சேர்ந்து சந்திரிகாவும் தேட... நேரம் தான் கடந்ததே தவிர அனகாவை அவர்களால் கண்டுப் பிடிக்கமுடியவில்லை .
நீண்ட நேர தேடலுக்கு பின் இருவரும் அருகிலிருந்த சிறு கிராமத்தை அடைய சந்திராதித்யனின் மனம் தன் இணை அருகிலிருப்பதை உணர்ந்து கொண்டது .
"சந்திரிகா...! என் மனம் உண்மையை உரைக்குமானால் அனகா இவ்வூரில் தான் இருக்க வேண்டும்" என சொல்லியவனின் கண்கள் வேகவேகமாய் நாலாபுறமும் சுழன்றது.
தனது நுகரும் சக்தியால் அனகாவின் வாசனையை அறியமுற்பட்ட சந்திரிகா , "அண்ணா...! அனகா இந்த வீட்டினுள் இருப்பதாய் எண்ணுகிறேன் . இறுதியாய் அவர்களுடன் இருந்ததில் அவரின் வாசம் இன்னும் எனதுணர்வுகளில் கலந்திருப்பதால் என்னால் அவர்களின் வாசத்தை இங்கு நுகர முடிகிறது " என சந்தோஷித்தாள்.
இருவரும் விரைந்து அவ்வாயிலுக்கு வர , உள்ளிருந்து தெறித்த நெருப்பு கங்கங்கள் அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தது .
இருவரும் அதை தாண்டிச் செல்ல முற்பட நெருப்பு கங்கங்கள் இன்னும் அதிகமாய் உள்ளிருந்து தெறித்தது .
தன் சக்திகளை கொண்டு நெருப்பு கங்கங்கள் தங்களை தீண்டாமல் சந்திராதித்யன் தடுத்து கொண்டிருக்க , அதன் சூட்டை நீண்ட நேரம் தாங்க முடியாத சந்திரிகாவின் உடல் வலுவிழந்து பாம்பின் உருவிற்கு வந்தது .
அவளின் நிலை கண்ட சந்திராதித்யனுக்கு , தன்னவளை தேடி உள் செல்வதா ?? அல்ல தங்கையின் நலம் பேணுவதா ?? என தடுமாற்றம் தோன்ற ,
வழக்கம்போல் அண்ணனின் மனம் அறிந்துகொண்ட சந்திரிகா, " உள்செல் அண்ணா ...! நான் வேறு ஏதும் வழிகள் உள்ளதா என பார்க்கிறேன் " என தங்களின் மொழியில் சொல்லியவள் அவன் தடுப்பதற்கு முன் அவ்வீட்டை சுற்றி ஊர்ந்து செல்லத் தொடங்கினாள் .
தங்கையை பார்த்திருந்தவனின் காதில் விழுந்தது ,"குழியா.....!! " என்ற தன்னவளின் வலியுடன் கூடிய கதறல் ஒலி.
அவ்வீட்டினுள் இருந்தே அவளின் குரல் கேட்க இத்தனை நேரம் அவள் இங்கு இருக்கிறாளா ?? இல்லையா ? என்பது தெரியாமல், ஒன்றும்புரியா புதிருக்குள் நுழைந்ததை போல் தவித்திருந்தவனுக்கு ... சிறு குறிப்பாய் அவளின் குரல் கேட்க, அடுத்தநொடி நெருப்பு கங்கங்கள் உடலை சுட்டு பொசுக்குவதை கூட உணரமறுத்தவன் அவ்வீட்டினுள் பாய்ந்திருந்தான் .
எங்கிருந்து தீ பற்றியது என்பதை அறியமுடியாதபடி அவ்வீடு முழுவதும் தீயில் குளித்திருக்க , அதன் சூட்டில் தன் பலம் சிறிது சிறிதாய் குறைவதை உணர்ந்த சந்திராதித்யன், ஈசனை தன் மனதினுள் நிறுத்தி தனது சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டினான் .
நாகங்களின் மிகப்பெரிய பலவீனம் நெருப்பு. சீறிக்கொண்டு படமெடுத்தாடும் நாகத்தையும் ஒரு சிறு தீ கங்கம் அடங்கச்செய்யும். மனித தோற்றத்தை எடுக்கக்கூடிய அற்புதமான சக்தி கொண்ட இச்சாதாரிகளை நாகமணியின் காவலாய் ஒட்டுமொத்த நாகங்களின் அரசர் ஆதிஷேஷர் நியமித்திருக்க, அதை அபகரிக்க முயலும் கயவர்கள் நெருப்பையே தங்களின் ஆயுதம் ஆக்குவார் . தன் வாழ்நாள் முழுக்க சேமித்த சக்திகளை கொண்டே இச்சாதாரியால் அவர்களை வெல்ல முடியும். வெற்றிபெற்று நாகமணியை காப்பாற்றிய போதும் அந்த இச்சாதாரியின் முழு சக்தி ப்ரோகித்தலால் ஆன்ம பலம் முழுதும் குலைந்து தன் வாழ்நாளையும் முடித்துக்கொள்ள நேரும்.
அதனாலே தங்களிடம் ஏகப்பட்ட சக்திகள் இருந்தபோதும் மனிதர்களை எதிரியாய் பாவித்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் சந்திரமதியினர் .
நெருப்பின் நிழலை கூட தீண்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தவன் இன்று அந்நெருப்பிற்கு நடுவில் உடல் தகிக்க தன் சக்திகளை ஒன்று திரட்டி, நெருப்பு உடலை அதிகமாய் தீண்டாதபடி நகர்ந்து அவ்வீடு முழுவதும் தன்னவளை தேடினான்.
அப்பொழுது பின்புறமாய் கார் ஒன்று செல்லும் ஓசை கேட்க, விரைந்து பின்புறமாய் ஓடியவன் ,
அங்கு எவரும் இல்லாமல் போக என்ன செய்வது என விரைவாய் யோசிக்கத் தொடங்கியவனின் செவியை மீண்டுமாய் தீண்டியது தன்னவளின் குரல்.
இம்முறை அலறலாய் அல்லாமல் முனங்களாய் பக்கத்திலிருந்த அறையிலிருந்து கேட்க , வேகமாய் சென்று அக்கதவை தள்ள கதவு சற்றும் அசைந்து கொடுக்காததில் அதை உடைத்தெறிய முற்பட அக்கதவிலும் பரவியிருந்த நெருப்பு அவனை தீண்டியது.
அதில் அவனது இடதுபுற உடல் ஆங்காங்கே பொசுங்கி , உடல் சிறுது சிறிதாய் பாம்பின் உருவிற்கு மாற , பற்களை கடித்து "பரமேஸ்வரரே...! எனக்கு தங்களின் துணை தேவை ...தயை கூர்ந்து உதவி செய்யுங்கள். இன்னும் சில நிமிடங்கள் எனக்கு அருளுங்கள் ஈசனே ...! மனையாளை காப்பது ஆண்மகனின் கடமை அல்லவா ...நான் அறிவேன் எனது இறுதி நொடிகள் நெருங்கிவிட்டது ஆயினும் என் காதல் உள்ளம் என்னவளுக்காய் பதறுகிறது பிரபு ...! "
-என ஈசனிடம் வேண்டியவனின் உடல் பெருமளவிற்கு நாகத்தின் உருவாய் மாறியிருக்க , சில இடங்களில் நெருப்பின் நாக்குகள் தீண்டியதில் தோல் பொசுங்கி வெறும் எழும்பு மட்டும் தெரிந்தபடி , நெருப்பில் மாட்டாமல் விலக எங்கெங்கோ முட்டிக்கொண்டதில் உடலின் சில இடங்கள் ரத்தத்தில் குளித்திருக்க , அதற்குமேல் முன்னேற முடியாமல் சக்திகள் அற்று கதவின் அருகிலே விழுந்திருந்தவன் முனங்களாய் தன் காதலை காப்பதற்க்காய் பரமேஸ்வரரிடம் மன்றாடினான் .
அவனின் மன்றாடல் ஈசனை சேர்ந்ததோ , பாம்பின் உருவிற்கு மாறிக்கொண்டிருந்தவனின் தோற்றம் பாதியில் நின்றது மட்டுமில்லாமல் அவனின் நீண்ட வால் திடீரென துள்ளி அக்கதவில் பட்ட நொடி அது திறந்துகொண்டது .
இடுப்பிற்கு கீழ் பாம்பின் உருவம் வந்திருக்க , பலம் இழந்து கண் மூடி கரைந்துக் கொண்டிருந்தவன் , கதவு திறந்த நொடி அவ்வறையினுள் நுழைந்து தன்னவள் எங்கே என தேடினான் .
அவ்வறையின் மற்றோரு கோடியில் ஓர் உருவம் கவிழ்ந்திருக்க அவ்வுருவத்தை சுற்றி ரத்தம் சூழ்ந்திருந்தது .
அந்த உருவம் அனகா என உணர்ந்த சந்திராதித்யன் , பாதி மனித உடலும் பாதி பாம்பின் உடலும் கொண்டு மெதுவாய் அவளை நோக்கி ஊர்ந்தான் .
சிறிதுசிறிதாய் நெருப்பு அவ்வறையிலும் நுழைந்திருக்க , அனைத்தையும் சுவைத்துவிட தன் நாக்கை நீட்டிக்கொண்டு வந்த பெரும் தீங்கங்கிடம் இருந்து ஒதுங்கியவனின் கழுத்தில் கீறியது அங்கு நெருப்பில் கண்ணாடி வெடித்து துண்டாக்கி வீசப்பட்டிருந்த அங்கு வீசப்பட்டிருந்த கண்ணாடித் துண்டு .
தன் இறுதி நொடிக்கு இன்னும் நீண்ட நேரம் இல்லை என்பதை உணர்ந்தவன் நெருப்பையும் பொருட்படுத்தாமல் தன்னவளின் அருகில் சென்று சுவற்றில் சாய்ந்தவன் , அடிபட்டிருந்த அனகாவின் தலையை எடுத்து தன் நெஞ்சினில் சாய்த்துக்கொண்டான் .
முன்நெற்றி பிளந்து ரத்தம் வர அதை தன் பொசுங்கிய வலதுகையால் துடைத்தவனின் இடதுகை அவளின் பின்மண்டையின் காயத்தை உணர்ந்தது .
அவனை முதல்முறை பார்த்தபோது விளையாட்டாய் தன்னுடன் வம்பிழுத்து பேசியது, சிறுபிள்ளையாய் இருட்டுக்கு பயந்து தன்னிடம் அடைக்கலமானது , தன் காதலை வெட்கத்துடன் சொல்லி இவனின் பதிலுக்காக காத்திருந்தது என அவளின் அனைத்து பரிமாணமும் நினைவு வர அவளின் இந்நிலையை தாங்கமுடியாதவன் அழகூடமுடியாமல் , தங்களை சூழ்ந்திருக்கும் நெருப்பிடமிருந்து தப்பித்து எவ்வாறு அவளை அங்கிருந்து கூட்டி செல்வது என சிந்திக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது அவனின் கண்களுக்கு எதிரிலிருந்த குட்டி சுவரும் அதன் பின்புறம் உள்ள வரிசையாய் அடுக்கிவைத்த கண்ணாடிகள் பட்டது.
அந்த சுவற்றின் பின் இதுவரை நெருப்பு பரவாததை உணர்ந்து அனகாவை தன்னுடலுக்குள் பாதுகாப்பாய் புதைத்தபடி சிறுது சிறிதாய் அவ்விடம் நோக்கி நகர்ந்தான்.
அவனுக்குள் புதைந்ததை போல் ஒன்றிருந்தவளுக்கு அவனின் இதயத்தின் ஓசை தெளிவாய் கேட்க , அவளின் வாழ்நாள் முழுதும் கேட்க விரும்பிய அவ்வோசையை மயங்கிருந்தபோதும் அவளின் மனம் உணர்ந்துகொண்டது .
அதில் மேலும் அவனிடம் ஒன்றியவள் , "குழியா...!" என மெல்லியதாய் அழைக்க...அவளின் காதல் அழைப்பு அவனின் செவி தீண்டி கண்ணீர் வரவழைத்தது .
அவளை கவனித்து நொடிகளை வீணாக்க விரும்பாதவன் அவளை இறுக்கிகொண்டு வேகமாய் நகர்ந்தான் .
அதை எல்லாம் உணராத அனகா மயக்கம் சிறிதாய் இருக்கும்பொழுதும் அனைத்தையும் சொல்லிமுடித்துவிட வேண்டுமென தன் மனத்துக்குள்ளே சிறிது நேரத்திற்கு மயங்கிவிடக்கூடாது என நினைத்தபடியே மீண்டுமாய் அவனை அழைத்தவள் ,
"குழியா..! நான் உன்னை ...உன்னை பார்த்தேன்...ஓ...ஒரு...பொ...பொண்ண...நீ தூ...தூ...தூக்..தூக்கிட்டு போன..அந்த பொண்ணு...க்கும் ...நீ...நீ தான் ...நியாயம்...செய்யணும் ...டா...டாமினி .....அத...தான் ..விரும்புவா...நா...நானும் ..சந்...சந்தோஷ... படுவேன் "
என கண்களை திறக்காமலே திக்கி திக்கி பேசியவளின் பேச்சை கேட்டவனிற்க்கு , "இவள் தங்களை தாண்டி தான் இங்கு வந்தாளா ?? பரமேஸ்வரரே ..! நான் என்ன தீங்கிழைத்தேன் ?? என் அருகிலே என்னவளிற்கு அநியாயம் நடந்திருக்க நான் அதை அறியாமல், என்னவளை காக்கமுடியாமல் இருந்திருக்கிறேனே..தங்களை சாட்சியாய் கொண்டே இவளை மணந்தவன் நான்.. எங்களுக்கு இவ் அநீதி இளைப்பது ஏன் ஈஸ்வரா??" என உயிர்போகும் வேதனையுடன் அவர்களின் குலம் காப்பவரிடம் நியாயம் வேண்டினான் .
அவனின் நியாயதிற்கு பதில் கிடைக்காத போதிலும் , அந்த கண்ணாடிகளின் இறுதியில் இருந்த சன்னல் கம்பிகளின் சட்டத்தை உடைத்து வந்த சந்திரிகா அவர்கள் தப்புவிக்க வழியை கிடைக்கச் செய்தாள்.
அவளின் கண்களில் முதலில் தன் அண்ணனின் உருவே தென்பட அவன் தன் இறுதிநொடிகளில் பயணிப்பதை அறிந்தவள் அவனிற்காய் வாய்விட்டு கதறினாள் .
அவளின் கதறலில் வேகமாய் பரவிக்கொண்டிருந்த கொடுந்தீயும் ஓர் நொடி நின்று மீண்டும் பரவ தொடங்கியது .
அவளின் அழுகையை கட்டுபடுத்த சொல்லிய சந்திராதித்யன், அவளிடம் அனகாவை இங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்லசொல்லி சொல்ல அவள் இவனை விட்டு செல்ல மறுத்தாள் .
நீண்ட நேரம் சமாதானம் சொல்லியும் செல்ல மறுத்த சந்திரிகாவை கண்டவன் , தன்னவளையும் ...உடன் பிறந்தவளையும் காக்க தன் வசிய படுத்தும் சக்தியை தங்கையிடமே பிரகோயித்தவன் , அவர்களை வெற்றிகரமாய் வெளியேற செய்து அச் சந்தோஷத்துடனே தன்னுடன் கைகோர்க்க துடித்துக்கொண்டிருந்த மரண தேவனிடம் தன்னை ஒப்புவித்தான் .
அனகாவை தோளில் சுமந்தபடி அவ்வீட்டை விட்டு வெளிவந்து சிறிதுதூரம் கடந்து அங்கு சாலையின் ஓரம் இருந்த மரத்தினருகில் அவளை சாய்த்தபின்பே சந்திராதித்யனின் வசியம் முறிந்து தன் உணர்வுக்கு வந்தாள் சந்திரிகா.
மரத்தின் மறுபுறம் வந்தவள் அங்கிருந்தபடியே தன் அண்ணன் மரணத்திற்க்கு காரணமான அவ்வீடை கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரை துடைத்த படியே பார்க்கமுற்பட்டாள்.
பின்புறம் ஏதோ சத்தம் கேட்க , அனகாவை ஒருவன் கைகளில் ஏந்தியபடி அங்கு நின்றிருக்கும் காரில் ஏற்றுவதை கண்டவள் , சற்று முன்புவரை நடந்ததில் பதறி பாம்பின் உருவிற்கு வந்தவள் அவர்களை தொடர்ந்து காரில் ஏறியிருந்தாள்.
தாங்கள் அவசரப்பட்டு காட்டை விட்டு வந்ததே தன் அண்ணனின் இறப்பிற்கு காரணம் எனக் குற்றவுணர்வு பெருக்கெடுக்க, அவன் உயிர் கொடுத்து காப்பாற்றிய அவனின் காதலை தான் மீண்டும் தொலைத்துவிடுவோமோ?? என தவித்தபடி காரில் ஏறியவளை சிறிதாய் நிம்மதியுற செய்தது அக்காரில் இருந்தவனின் அனகாவிற்க்கான துடிப்பு .
யஷியை கைகளில் ஏந்தியபடி காற்றில் கலந்திருந்த சந்திராதித்யனின் உருவம் இவை அனைத்தையும் நினைத்து பார்க்க ,
விஸ்வநாத்திடம் பேசிக்கொண்டிருந்த மித்ரனும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான் .
"அன்று சாலையின் ஓரம் எவரோ அடிபட்டிருப்பதை பார்த்து உதவலாம்னு போனா... அங்க நம்ப யஷி அங்கிள். யாரோ மாதிரி ரோட்டோரம் அடிபட்டு ....அவளோட அந்த நிலைமையை என்னால தாங்கவே முடியலை அங்கிள்.அதற்க்கு பிறகு அவளை ஹோச்பிடல்ல சேர்த்தது , தலைல அடிபட்டத்துல கோமாக்கு போனவ சிலமாசம் கழிச்சி பாதி நினைவுகளை மட்டுமே நியாபகத்துல வச்சி முழிச்சதுனு அடுத்து நடந்த எல்லாம் உங்களுக்கு தெரியுமே அங்கிள் ..."
ஆம் அன்று மரத்தடியில் இருந்த யஷியை காரில்
ஏற்றிவந்தது மித்ரன் தான் .இவர்களை தொடர்ந்த சந்திரிகா, அனகாவின் உறவுகளே அவர்கள் தான் என்பதை உணர்ந்து அவள் அவளுக்கு உரிய இடத்தில் சேர்ந்ததில் மகிழ்ந்து தன் அண்ணனிடம் மனத்தால் பேசிய படி தங்கிளடத்திற்கு திரும்பிவிட்டாள்.
ஆயினும் அண்ணனின் நினைவு தோன்றும் பொழுதெல்லாம் அனகாவை சென்று பார்ப்பவள் , குகை வீட்டில் கிடைத்த நாட்குறிப்பையும் திறந்தே பார்க்காமல்..எவரும் அறியாமல் அனகாவிடம் சேர்ப்பித்திருந்தாள்.
சிறுவயது முதல் மனிதர்களின் மேல் அவளே அறியாமல் பிடித்தம் ஏற்பட்டிருக்க , சந்திராதித்யனின் மரணத்தால் அது முழுதும் அவளின் மனதில் இருந்து அழிக்கப்பட்டது . அனகாவை தவிர மனிதர்கள் எவரையும் அவள் பார்க்கவும் விரும்புவதில்லை .
இந்த காலம் தான் எத்தனை விசித்திரம் வாய்ந்தது .நாம் ஆசையாய் ரசித்து பார்ப்பதையே ஒருநாள் வெறுத்து ஒதுக்க செய்துவிடுகிறதே .
இன்று :
ஒருவருடம் முன்பு யஷி தொலைந்து ,பின் மீண்டு வந்ததை பற்றி பேசிகொண்டிருந்த மிதர்னும் , விஸ்வநாத்தும் யஷி வீட்டில் இல்லாததை சிறிது நேரம் கடந்தே அறிந்துக் கொண்டனர் .
அவள் எங்கு சென்றிருப்பாள் என பதறிய மித்ரனுக்கு சிறிது நேரதிற்க்கு முன்பு தன்னை வேகமாய் உலுக்கிய காற்றின் உருவம் தற்பொழுதே தோன்ற, தன்னை தானே திட்டிக்கொண்டவன் , "யஷிக்கு எதுவும் ஆகக்கூடாது " என வேண்டியபடியே வீட்டை விட்டு வெளிவந்து, காரைக் கூட எடுக்காமல் பைத்தியம் பிடித்தவன் போல் அவளை தேடத் துவங்கினான் .
அவனை தொடர்ந்து தானும் சுதாரித்த விஸ்வநாத் , தன் மகளையும் ..மகன்போன்ற மித்ரனையும் எண்ணி கடவுளிடம் அவர்கள் இருவருக்கும் எதுவும் நேரக்கூடாதென வேண்டியபடி தனது தேடுதலை துவங்கினார்.
அவர் வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த்தர் போலும் ,அங்கு அந்த எரிந்த வீட்டினுள் இத்தனை நேரம் மயங்கிக்கிடந்த யஷி கண்களை திறக்க முயற்சித்து வெற்றிபெற்றிருந்தாள்.
காற்றுடன் கலந்திருக்கும் சந்திராதித்யனால் நீண்டநேரம் அவளை ஏந்த முடியாமல் போக அன்று போல் இன்றும் அந்த கண்ணாடிகளுக்கும் , குட்டி சுவருக்கும் நடுவிலிருக்கும் இடத்தில் அவளை கிடத்தியிருந்தான் .
கண்விழித்த யஷிக்கு தன் முன் மின்னிக்கொண்டிருந்த பச்சை நிற கண்கள் மட்டும் தெரிய அதையே விடமால் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ...இ்த்தனை நாளாய் அரைகுறையாய் வந்து சென்ற காட்சிகள் அனைத்தும் தெளிவாய் நினைவு வந்தது .
அவனுடன் சேர்த்து தன் காதலையும் அதன் நினைவுகளையும் ஒருவருடத்திற்கு முன்பு தொலைத்தவள் ...எந்தஇடத்தில் அவை அனைத்தையும் தொலைத்தாலோ அதே இடத்தில் அவை அனைத்தும் தன்னிடம் சேர்ந்ததில் உள்ளுக்குள் மகிழ்ச்சி அலையலையாய் பெறுக ஆசையுடன் அவனை கட்டிக்கொள்ள முயன்றாள்.
ஆனால் காற்றோடு கலந்திருந்தவனின் நிழல் உருவம் அவளின் ஆசைக்கு தடை போட , ஆசைப்பட்ட பொம்மையை தொடமுடியாமல் தவிக்கும் குழந்தையாய் உதடுகளை பிதுக்கியவள் அவனின் முகம் பார்த்தாள்.
அவளின் தவிப்பான முகத்தை பார்த்த சந்திராதித்யனுக்கு அவளின் தவிப்பை உடனே களைய தோன்ற , " உன்னால் முடியாத போதும் என்னால் உன்னை தொடமுடியும் அனகா என்னை உணர முயற்சி செய் "என்றபடி காற்றோடு கலந்திருந்தவன் அவளை சுற்றி படர்ந்தான் .
அவனின் தொடுகையை அவளால் உணரமுடியாத போதும் அவனின் வாசம் தன்னை சுற்றி பரவிஇருப்பதை உணர்ந்தவள் அவன் அணைப்பை கற்பனையில் உருவாக்கி அதில் மகிழ்ந்தாள் .
சிறிதுநேரம் சென்று மீண்டுமாய் அவளின் எதிரில் வந்தவன், "அன்று என்ன நடந்ததென்பதை சொல் அனகா !! அன்று என்னால் டாமினியின் இறப்பிற்கு காரணமான ஆறாவது ஆளை கொள்ளமுடியாமல் போனாலும் , நீ ஆசை பட்டதை போல் சூர்யாவின் மரணத்திற்கு மட்டுமின்றி ...பல பெண்களின் மரணத்திற்கு காரணமானவர்களை கொன்றேன் . ஆனால் உனக்கு அன்று என்ன நேர்ந்ததென்பதை இன்றாவது என்னிடம் சொல் அனகா !!" எனக் கேட்டவனிடம் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் .
அதே நேரம் தனது காரை வேகமாய் ஒட்டிக்கொண்டிருந்த பாசை கண்களில் பயத்துடன் பார்த்த ஜான், "பாஸ்...எதுக்காக இப்போ திரும்ப அந்த ஊருக்கே போறோம் ...வேண்டாம் பாஸ் ..!"
-என மாலை யஷியை பார்த்த பின் இவ்வூரைவிட்டு தாங்கள் வந்த ஊருக்கே செல்லலாம் என சொல்லி பாதி தூரம் வரை சென்ற பின் மீண்டுமாய் அவன் இந்த ஊருக்கே போகவேண்டும் என, வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த அவனையும் விளக்கி தானே அசுரத்தனமான ஒட்டியபடி வந்தவனிடம் கேட்டான் .
அவன் வந்தானா இல்லை சந்திராதித்யன் அவனின் மனதில் புகுந்து மீண்டும் வர செய்தானா அதை அந்த ஈசனே அறிவார் .
"ஜான் ...! அன்னிக்கு நடந்ததெல்லாம் மறந்துட்டியா ?? பத்தொன்பது வயசுலயே பொண்ணோட ருசி என்னனு தெரிஞ்சிக்கிட்டவன்டா நான் அதுல கையும் களவுமா சிக்கியும், என்னிக்கோ ஒருநாள் வேறுதேவைக்காக .. நான் ரெண்டு வயசு குறைச்சி சொன்னதுல தண்டணை இல்லாம தப்பிச்சி வந்தவன்டா. கை எட்டியும் வாய்க்கு எட்டாம போனவ இப்போ கண்ணுமுன்னாடியே வந்து நிக்குறப்போ ருசிப்பாக்கமா எப்படி போறது ஜான்...??" என கேட்டவனின் பெயர் ரியாஸ் .
இத்தனை நாட்களாய் பாஸ் என்ற அடையாளத்தின் பின் மறைந்திருந்தவன்.. போன வருடம் ஒரு பெண்ணை போகப்பொருளாக நினைத்து அவளை உயிரோடு கொன்றிந்தான் . அவனை தான் வயது குறைவு என்று அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியிருக்க , ஜாமீன் என்னும் ஒன்று இருப்பதே இவர்களுக்காக தான் என்பதை போல் அதற்கடுத்த ஒரு வாரத்திலே வெளியே வந்திருந்தான் .
ரியாஸீற்கு ஒருவருடம் முன்பு தாங்கள் கடத்திய அனகாவின் (யஷி) உடல் கண்முன் தோன்றி அவனின் இச்சையை கூட்ட அவனின் வேகம் அதிகரித்தது .
அவன் சொன்னதை கேட்ட ஜானிற்கு ஒருவருடத்திற்கு முன்பாய் தாங்கள் இவ்வூருக்கு வந்த நாள் அன்று நடந்தது நினைவு வந்தது.
அனகா என்னும் யஷி சந்திராதித்யனிடம் தன்னை கடத்தியதிற்கு பின் நடந்ததை சொல்ல தொடங்க , அவளை கடத்தியவர்களில் ஒருவனான ஜானிற்கும் அன்று நடந்தவை படமாய் ஒடியது.
அன்று:
ஜாமினில் வந்த பிறகும் சிறிது நாட்கள் எங்கும் செல்லாமல் இருந்த ரியாஸ் நான்கு மாதங்களுக்கு பிறகு , ஜானுடன் மாருதியை கிளப்பிக்கொண்டு... தங்களின் பெண்களின் ரத்தத்தை குடிக்கும் ராஜ்யமான சின்னம்பாளையத்திற்கு வந்தான்.
நீண்ட நாட்களாய் பெண்களை சுகிக்காமல் இருந்த ரியாஸீற்கு , பாதையின் நடுவில் ...நிலவு வெளிச்சத்தில் ...அழகிய பூவாய் நின்றிருந்தவளை கசக்கி முகர அவனின் அழுக்கான மனம் ஆசை கொள்ள அவளின் அருகில் காரை நிறுத்தியவன் , அவளை வாய் பொத்தி காருக்குள் இழுத்து போட்டான் .
திடீரென தன்னை இழுத்த கைகளின் அழுத்தத்தில் அவனின் நோக்கம் அறிந்துகொண்டிருந்த யஷி(அனகா)க்கு நெஞ்சத்தில் அச்சம் தானாய் தன் இருப்பிடத்தை நிலைநாட்டியது .
தன்னவனுக்கு மனைவியாய் ஆன அன்றே அவனிற்க்கான தன் பெண்மைக்கு ஆபத்து வந்ததில் கலங்கிய பெண்ணவளின் மேனி அந்த கயவனின் தீண்டலில் துடிதுடித்தது .
"சீக்கிரம் ஊர் எல்லையில இருக்க நம்ப வீட்டுக்கு வண்டியை விடு ஜான்....இவளை ரொம்ப நேரம் என்னால சும்மா பாத்துட்டு மட்டும் இருக்க முடியாது " என்றவனின் கைகள் அவளின் மேல் ஊற,
அருவருப்பை உணர்ந்த யஷி(அனகா) , அவன் கைகளில் துள்ளி அவனை தன்னால் முடிந்தவரை அடித்தாள்.
அவளின் அடித்ததில் கோபமானவன் , அவளின் தலைமுடியை கொத்தாய் பிடித்து காரின் கதவில் இடித்தான் .
அதில் அவளின் முன்நெற்றி பிளந்து ரத்தம் வர, வலியில் அலறிய யஷி(அனகா)யின் கண்களில் விழுந்தான் சந்திராதித்யன், கைகளில் ஒரு பெண்ணை ஏந்தியபடி.
அப்பெண்ணை பார்க்கும் பொழுதே அவளிற்கு நேர்ந்ததை புரிந்துக் கொண்ட யஷி(அனகா), தான் இப்பொழுது அனுபவிப்பதை விட அப்பெண் பலமடங்கு சித்திரவதையை அனுபவித்ததை உணர்ந்தவள் ...தான் இருக்கும் நிலை மறந்து அப்பெண்ணின் உயிர்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.
அதற்குள் அவர்கள் வீட்டை அடைந்திருக்க, வரமறுத்த யஷி(அனகா)யின் கன்னத்தில் அறைந்தவன் , அவளின் கைகளை பிடித்து இழுத்தான்.
தன்னால் முடிந்தவரை அவனை அடித்து , பற்களால் கடித்து , நகத்தால் கீறி தடுக்க பார்க்க , அவளின் செயலில் அவளை வெறித்தனமாய் அடித்தவன் ...அவளை தரையில் தேய்த்தவாரே இழுத்துச் சென்றான்.
வீட்டிற்குள் இழுத்துவந்து போட்டவனிடம் இருந்து நழுவியவள் ,கதவின் புறம் ஜான் நின்றிருந்ததை பார்த்து அவ்வீட்டினுள் ஓடத் துவங்கினாள்.
Last edited: