மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நித்யாவை ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழும் பொழுது ஆத்மநாதன் இப்படி சறுக்கியிருக்கக் கூடாது
மூணு குழந்தைகள் அதுவும் இரண்டு பெரிய குழந்தைகள் இருக்கும் பொழுது படுபாவி ஆத்மநாதனுக்கு ஏன் புத்தி இப்படி கெட்டுப் போய் கிடக்கு?
இது கண்ணாடி பாத்திரத்தை கல் மீது வைப்பதைப் போல ரொம்ப கவனமாகத்தான் கையாள வேண்டிய விஷயம்
அம்மா வருத்தப்படுவாள்ன்னு மகளிடம் ஆத்மா சொல்லுவதே ஆறுதல்தான்
அவன் செய்வதை கண்டுக்கக் கூடாது என்ற நித்யாவின் முடிவு சரிதான்
நித்யாவுக்கு விஷயம் தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டால் இன்னும் அவனுக்கு துளிர் விட்டு போய் விடும்
வாசன் இல்லை ராமநாதனே வசதியா இருந்திருந்தாலும் மூன்று குழந்தைகளையும் கூட்டிட்டு நித்யா பிறந்த வீடு வர முடியாது
இரண்டு பெண்களுக்கும் நாளைக்கு திருமணம் என்று வரும் பொழுது அங்கே ஆத்மநாதன் நிச்சயம் தேவை
அதனாலதான் நித்யா அடக்கி வாசிக்கிறாள்
உள்ளே கொந்தளித்தாலும் நித்யாவே அமைதியா இருக்கும் பொழுது வாசன் மட்டும் என்ன செய்து விட முடியும்?
அக்காவின் வாழ்க்கை சரியாக வேண்டும்ன்னு ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர?
வாசனும் அமைதியாகத்தான் இருந்திட வேணும்
எல்லா ஆட்டமும் முடிந்து ரத்தம் சுண்டிய பிறகு ஆத்மாவுக்கு தண்டனை கிடைக்கக் கூடாது
இவனுக்கு வாரி வழிச்சுப் போட்டுன்னு அப்பவும் நித்யாவுக்குத்தான் துன்பம்
முன்னாடியே சரியான தண்டனை கிடைக்கணும், மிலா டியர்