அருமையான பதிவு மிலா.நல்லவேளை கருவாடு லோட் வரும் நாள் இல்லை,இல்லைனா வீட்டுக்குள்ளேயே சேர்த்து இருக்க மாட்டாங்களா.
ஜாதகம் பொருந்தி, திருமண அழைப்பிதலும் கொடுத்திருக்க, வாசனுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் இருக்குன்னு யார் போன் செஞ்சது.சத்யா, ஶ்ரீராம் இவங்க வேலையா.
பத்மா வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காம, கணவனுக்கு டீ போட்டு கொடுத்து, ஆறிடப் போகுது குடிங்கன்னு சொல்லுது என்ன மனுசி இது.
ராமநாதன் இத்தனை வருடம் குடிபோதையில் இல்லாமல் இருந்திருந்தால்,வீட்டையும் இழந்திருக்க மாட்டார்,வாசனும் குடும்பத்தை கவனித்து திருமணம் தள்ளி போகும் நிலை வந்திருக்காது. இப்போதாவது குடியை விட்டதுடன் ,மனிதர்களை படிக்கவும் கற்றுக் கொண்டதே சந்தோஷம்.