அருமையான எபிலாக் மிலா
.ஈகை தன் தாத்தா சத்யநாதனை போல விவசாயத்தில் ஆசையாகவும்,ஆர்வமாகவும்,உழைத்து விவசாயத்தின் மகிமையை உணர்ந்து கொண்டதும்,இன்று விவசாயத்தில் பல வெற்றிகளையும் பெற்று விட்டான்
.
எங்கே சென்றாலும் நானும் வருவேன் தம்பி என்ற தயாளனுடன் ,மாதேஷூம் சேர்ந்தது அருமை.
தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் கிடைத்து விட்டது.என்பது வயதிலும் பணம் தான் முக்கியம் மனைவி இறந்தாலும் கவலையில்லை என்ற கூறிய மருதநாயகம் இறந்த போது ,அவன் மனைவி உடலை வாங்க மறுத்தது சரியான முடிவு.
வேதநாயகி நோயின் காரணமாக தன்நிலை மறந்த போதும், ஈகையையும் அவன் மனைவி, குழந்தைகளை தன் அண்ணனின் குடும்பத்தினராக எண்ணி அழைத்தது,காலங்கள் மாறினாலும் அண்ணன் மேல் மாறாத அன்பு கொண்டிருந்ததை காட்டுகிறது
.
ஈகை, பட்டுரோஜா ,தன் இரண்டு குழந்தைகளுடன் அன்பு,காதல்,சீண்டலுடன் மகிழ்ச்சியான குடும்பத்துடன்
.
அருமையான கதை.இனிய, நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் மிலா
.