தஞ்சை மாவட்டத்தின் அழகான கிராமங்களில் நந்திபுரமும் ஒன்று.பழமை மாறாத வீடுகளும் பசுமை மிகுந்த சோலைகளும் தாமரையும் அல்லியும் பூத்துக் குலுங்கும் குளங்களையும் கொண்டது.நீண்ட வீதியின் இருபுறமும் அளவில் பெரிதான ஒட்டு வீடுகள் இருந்தன.அதில் வீதியின் மத்தியில் இருந்த பெரிய வீட்டிலிருந்து,
"கமலி... கமலி...அடியே கமலி...இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?விடிஞ்சு ஒரு ஜாம ஆச்சு.இன்னுமு மஹாராணிக்கு எந்திரிக்க மனசு வர்லயா? எந்திரிக்க மேள கச்சேரி வரனுமா?ஒங்க அண்ணனும் அப்பாவும் வயலுக்கு போய்ட்டாங்க.சீக்கிர எந்திரிச்சு இந்த டிபன்ன அவங்களுக்கு கொண்டு போயி கொடு"
தூக்கம் நீங்காத கண்களோடு எழுந்து வந்த கமலி,"நிம்மதியா தூங்க கூட விடமாட்டே நீ.கனவு எவ்வளவு நல்ல இருந்தது."
"ஆமா கனவு காணு பொம்பள புள்ள ஒரு காபி கூடப் போடத் தெரியாதுன்னு சொன்னா புருஷன் வீட்ல உன்னையும் உன்ன பெத்த என்னையும் மெச்சிக்கவாங்க."
"அடப் போம்மா உன்னப் போல காபி போட்டுக்கிட்டு சமச்சிக்கிட்டு வீடு பெருக்கிக்கிட்டு இருப்பேன்னு நெனச்சியா.என்ன கட்டிக்கப் பெரிய இளவரசர் வருவாரு. அரண்மனையில இருக்கிறவரு.பெரிய ரததுல வந்து என்ன கூட்டிட்டு போவாரு தெரிஞ்சுக்கோ."
"ஆமா இவ பெரிய ராஜகுமாரி இளவரசரு வந்து இவள அரண்மனைக்கு கூட்டிக்கிட்டு போவாரு.போடி போடி இவளே கனவு காணுத விட்டுட்டு இந்த டிபன கொண்டு போயி கொடுத்துட்டு வா...ஆ..... இன்னிக்கி கிழக்க இருக்க வயலுக்கு போயிருக்காங்க.அதுக்கு சித்த மண்டப இருக்கிற வழியில போகாத.இன்னுரு வழியல போகணும் தெரிஞ்சிதா.அந்த சித்த மண்டபத்துல பேயி உலாவுதுன்னு பேசிக்கிறாங்க தெரிஞ்சுதா"
"சரி சரி டிபன கொடு.போயிட்டு வரேன்"என்றவாறு கிளம்பிய கமலி முதலில் போவது அந்த சித்த மண்டபத்திற்கு என்பது தெரிந்திருந்தால் அவள் தாய் அவளை கண்டிப்பாக அனுப்பியிருக்க மாட்டாள்.
கமலியின் குணமே அப்படிப்பட்டது.யாராவது ஒன்றை செய்யாதே என்றால் அதையே அவள் முதலில் செய்வாள்.தாயின் எச்சரிக்கையை எண்ணி தனக்குள் சிரித்த கமலி,'நானே நாலு பேய விரட்ரவ என்ன வந்து எந்த பேயி புடிக்க போவுது.அப்படி என்னதான் இருக்கும் அந்த மண்டபத்துல?இன்னிக்கி எப்படியும் அத பாத்துடணும்'என்ற முடிவோடு சென்றாள்.
"கமலி... கமலி...அடியே கமலி...இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?விடிஞ்சு ஒரு ஜாம ஆச்சு.இன்னுமு மஹாராணிக்கு எந்திரிக்க மனசு வர்லயா? எந்திரிக்க மேள கச்சேரி வரனுமா?ஒங்க அண்ணனும் அப்பாவும் வயலுக்கு போய்ட்டாங்க.சீக்கிர எந்திரிச்சு இந்த டிபன்ன அவங்களுக்கு கொண்டு போயி கொடு"
தூக்கம் நீங்காத கண்களோடு எழுந்து வந்த கமலி,"நிம்மதியா தூங்க கூட விடமாட்டே நீ.கனவு எவ்வளவு நல்ல இருந்தது."
"ஆமா கனவு காணு பொம்பள புள்ள ஒரு காபி கூடப் போடத் தெரியாதுன்னு சொன்னா புருஷன் வீட்ல உன்னையும் உன்ன பெத்த என்னையும் மெச்சிக்கவாங்க."
"அடப் போம்மா உன்னப் போல காபி போட்டுக்கிட்டு சமச்சிக்கிட்டு வீடு பெருக்கிக்கிட்டு இருப்பேன்னு நெனச்சியா.என்ன கட்டிக்கப் பெரிய இளவரசர் வருவாரு. அரண்மனையில இருக்கிறவரு.பெரிய ரததுல வந்து என்ன கூட்டிட்டு போவாரு தெரிஞ்சுக்கோ."
"ஆமா இவ பெரிய ராஜகுமாரி இளவரசரு வந்து இவள அரண்மனைக்கு கூட்டிக்கிட்டு போவாரு.போடி போடி இவளே கனவு காணுத விட்டுட்டு இந்த டிபன கொண்டு போயி கொடுத்துட்டு வா...ஆ..... இன்னிக்கி கிழக்க இருக்க வயலுக்கு போயிருக்காங்க.அதுக்கு சித்த மண்டப இருக்கிற வழியில போகாத.இன்னுரு வழியல போகணும் தெரிஞ்சிதா.அந்த சித்த மண்டபத்துல பேயி உலாவுதுன்னு பேசிக்கிறாங்க தெரிஞ்சுதா"
"சரி சரி டிபன கொடு.போயிட்டு வரேன்"என்றவாறு கிளம்பிய கமலி முதலில் போவது அந்த சித்த மண்டபத்திற்கு என்பது தெரிந்திருந்தால் அவள் தாய் அவளை கண்டிப்பாக அனுப்பியிருக்க மாட்டாள்.
கமலியின் குணமே அப்படிப்பட்டது.யாராவது ஒன்றை செய்யாதே என்றால் அதையே அவள் முதலில் செய்வாள்.தாயின் எச்சரிக்கையை எண்ணி தனக்குள் சிரித்த கமலி,'நானே நாலு பேய விரட்ரவ என்ன வந்து எந்த பேயி புடிக்க போவுது.அப்படி என்னதான் இருக்கும் அந்த மண்டபத்துல?இன்னிக்கி எப்படியும் அத பாத்துடணும்'என்ற முடிவோடு சென்றாள்.