சகோதரி இது மல்லி சகோதரியின் டச் உள்ள நாவல் எப்படி?
அவரின் நாவல் எப்படி இருக்கும் ஹீரோயின் பவர், ஹீரோ பவர், உரையாடல் பவர், சமுதாய கோபம், சமுதாய சீண்டல், மெல்லிய, வல்லிய காதல் இருக்கும். அதேபோல் யாரையும் குற்றம் சொல்லாமல் அவர் அவருக்கு உள்ள நியாயம் , தர்மம் இருக்கும் அது வில்லன், வில்லிக்கு கூட. இதில் ஏதேனும் குறைகிறதா சகோதரி இந்த நாவலில். .....இல்லை..... ப்ரோ
ஆனால் இந்த நாவலில் மல்லி தவறு செய்துள்ளார் என்ன?
இந்த நாவலுக்கான எல்லையை வகுத்தது, அதேபோல் இதை கட்டாயம் குறு நாவலாகதான் கொடுப்பேன் என அவர் நினைத்தது. பல ஜன்னல்கள் திறக்கும் வசதி உள்ள நாவலை சில ஜன்னல்கள் திறக்காமல் போனது. அது அவர் வேலை பிஸியாக இருக்கலாம் அல்லது இந்த நாவல் தீபாவளி ரிலிஸ் என்ற கட்டயமாக இருக்கலாம். ஆனால் இது மல்லி சகோதரியின் முழு டச் என்பது என்னுடைய கருத்து சகோதரி.......முற்றிலும் சரி .....