இரண்டு அம்மாக்களின் மனநிலையில்
கடுஞ்சொற்களின் பிரயோகம்....
மற்றவர்களுக்கா பேசி, ராஜி,செந்தில்
இருவரும் அம்மாக்கள், மேலும் பேச
விடாமல் தடுத்து விடுகின்றனர்....
அண்ணாமலை ,இனி,செந்திலின் மூலமாகத்தான்
தன் மகளை அணுக முடியும் என்பதை புரிந்துக் கொண்டு
அவனுடன் சுமுகமாக நடந்துக் கொள்கிறார்....
தன்னை பற்றி ஊர் பேசினால் கவலை இல்லை...
ஆனால் மகளைப் பற்றி தவறாகஎதுவும் பேசக்கூடாது...
என்ற அவரின் எண்ணம் முரண்பாடாக உள்ளது...
ஆகாஷ்.......செந்திலை விட தான் எந்த விதத்தில் குறைந்தவன்...?
அனிதாவின் தம்பி என்பதே உன்னுடைய மிகப் பெரிய குறை...
இது தெரிந்தும், பெண்கள் மனது புரியவில்லையாம்.....
பெண்களுக்கே பெண்கள் மனது புரிவதில்லை...
இதில் , நீங்கள் எங்க புரிந்துக் கொள்வது....
புரியாத விஷயத்தைப் பற்றி ஆராயக்கூடாது.....