Advertisement

ஓம் நமச்சிவாய

 நினைவின் நிறைவு

 மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அன்பு குழந்தை  பெற பிரசவத்திற்கு அனுமதித்து உள்ளார்கள்.. அங்கு அகிலம் மாறன் செழியன்  மற்றும் கவி ராசாத்தியம்மாள் அனைவரும் முகத்தில் பதட்டத்தோடு காத்திருந்தார்கள்..

 மாறனின் தோளில் தட்டிக்கொடுத்த செழியன் அவனது முகத்திலும் பதட்டத்தை பார்த்து மருமகனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்..

 மாறனும் சிறு குழந்தை போன்று மாமனின் அணைப்பில் கட்டுண்டான்..

 மாறனை அவனிடம் இருந்து விலக்கிய செழியன் ” டேய் மாறா என்னடா இது புதுசா இருக்கு.. என் மாப்பிள்ளை மாறனா இது?… அவன் எவ்வளவு வீரமான தைரியசாலி.. எதுக்குமே இப்படி குழந்தை மாதிரி அவன் கலங்கி நின்று பார்த்ததே இல்லையே நான்… ” என்றான் செழியன்..

 யார் சொன்னது?..  பெண்கள் மட்டும்தான் வெட்கப்படுவார்கள் என்று

 சில ஆண்களின் வெட்கம் மிகவும் அழகானது அபூர்வமானது.. மாமனின் பேச்சைக் கேட்டு மாறன் மீண்டும்  வெட்கப்பட்டு சாய்ந்து கொண்டான்…

” சீ போ மாமா..! சுண்டெலி பார்க்கத்தான் ரொம்ப தைரியமா தெரிவா.. ஆனா மனதளவில் அவளும் சின்ன குழந்தை மாதிரி தான்..  பாசத்துக்கு ஏங்குற குழந்தை… எப்படியோ போக இருந்த என் வாழ்க்கையை அவளோட நேசமும் பாசமும் தான் என்னை இப்படி ஒரு மகிழ்ச்சியான மனுசனா மாத்தி இருக்கு.. அவ என் வாழ்க்கை ல வரலைன்னு சொன்னா அந்த நிர்மலா செய்த துரோகத்தால் என் வாழ்க்கையே சூனியமா போயிருக்கும்.. என்னோட பாட்டி எனக்கு கொடுத்த வரம் தான் அவள்….

என் சுண்டெலி இப்ப உள்ள எவ்வளவு கஷ்டப்படுறாளோ தெரியல. இந்த ஒரு பிள்ளையே போதும்..” என்றான் மாறன்..

 மாப்பிள்ளையின் பேச்சைக் கேட்டு ராசாத்தியம்மாள் மிகவும் நெகிழ்ந்து போனார்.. அவரின் காலத்தின் பின்பும் மகள் மிகவும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் வாழ்வாள் என்பது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை கொடுத்தது மாறனின் பேச்சு..

 நீண்ட போராட்டத்தின் பின் அன்புக்கொடி  அழகிய ஆண் வாரிசை பெற்றெடுத்தாள் ..

 டாக்டர் வந்து நார்மல் பிரசவம் ஒரு பிரச்சினையும் இல்லை அப்படின்னு சொன்னதும் மாறன் இருக்கும் இடம் சுற்றம் அனைத்தையும் மறந்து துள்ளி குதித்தான்..

நர்ஸ் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து அகிலத்தின் கையில் கொடுத்தார்..

 அகிலம் கொள்ளு பேரனையும் மிகவும் மகிழ்ச்சியோடு கையில் வாங்கி பூரித்துப் போனார்.. அதன் பின்னர் அகிலத்தை சுற்றி  செழியன் கவி அனைவரும் குழந்தையை பார்த்து மகிழ்ந்து போனார்கள்.. மாறனோ நர்சிடம் கேட்டு குழந்தையையும் பார்க்காமல் அவனது சுண்டெலியை பார்ப்பதற்காக அறைக்குள்ளே சென்றான்…

அவளோ சோர்வில் கண் மூடி படுத்திருந்தாள்.. அவளை மேலும் தொல்லை செய்யாமல் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியே வந்து விட்டான்..

இந்த முறை மாமன் செழியன் விருந்திற்கு ஏற்பாடு செய்தான் கோயிலில் பூஜை கொடுத்தான்..

 இரண்டு நாட்கள் கழித்து அன்பு வீட்டிற்கு குழந்தையோடு வந்துவிட்டாள்..

பெரிய வீட்டில் வைத்து எழில்  தான் அன்பை ஆரத்தி சுற்றி  உள்ளே அழைத்து சென்றாள்..

அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து மகிழ்ச்சி மட்டுமே  அவர்களது வாழ்வில் நிரந்தரமாக குடி கொண்டது..

 மாமனும் மருமகனும் மீண்டும் அவர்களது இயற்கை விவசாய முறையில் இறங்கிவிட்டார்கள்…

இவரின் நாட்கள் நகர்ந்து ஒரு மாதம் ஆகியது..

அந்த பெரிய வீடே மாறனின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் குதுகளித்தது..

 மாறன் தான் அகிலத்தின் காதில் பெயரைச் சொல்லி மூன்று முறை சொல்லச் சொன்னான்..

அந்த குடும்பத்தின் மூத்த தம்பதியர்கள் ஆகிய அகிலமும் நல்லசிவமும் மாறனின் ஆண் வாரிசின் காதில் அன்புமணி அன்புமணி அன்புமணி என்று மூன்று முறை சொல்லி சர்க்கரை தண்ணீர் வைத்தார்கள்..

 அதன்பின் பெற்றோர்களாகிய அன்புக்கொடியும் மணிமாறனும் அன்புமணி என்ற பெயரை காதில்

 கூறினார்கள்..

 இவ்வாறாக அந்த விழா களை கட்டியது செழியனோ எழில் உடன் சேர்ந்து ஐந்து சவரன் சங்கிலியை பரிசாக போட்டான்..

 விழா நிறைவடைந்து அனைவரும் கலைந்தபின்.. அனைத்தையும் சரி பார்த்து பணம் கொடுத்துவிட்டு இரவு கவிழ்ந்ததும் மாறன் அவனது அறைக்குள் வந்தான்.. அவனின் பெண்மக்கள் கலைச்செல்வி மற்றும் தமிழ்ச்செல்வி இருவரையும் ராசாத்தியம்மாள் அவரின்  பொறுப்பில் அவர் அழைத்துச் சென்று விட்டார்..

நேரம் இரவு 11 மணியைத் தாண்டிவிட்டது.. மாறன் அறைக்குள் செல்லும் போது அவனது சுண்டெலி குழந்தையை தூங்க வைத்து விட்டு அவளும் சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டாள்..

அவள் தூங்கும் அழகை பார்த்து ரசித்துவிட்டு அவனும் குளித்து விட்டு அவளின் அருகில் அவளை அணைத்தவாறு படுத்து உறங்கிவிட்டான்…

 அங்கோ செழியனின் வீட்டில் நான்கு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு எழில் சாந்தி பூமணி முத்தரசி நால்வரும் ஆளுக்கு ஒன்றாய் கவனித்துக் கொள்கிறார்கள்.. செழியன் வெளியே  சென்று அவனது விவசாயத்தையும் தொழிலையும் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தால் குடும்பத்தையும் குழந்தைகளையும் மனைவியையும் பார்த்து  அப்படி ஒரு மகிழ்ச்சியை மனதில் உணர்வான்…

 மூன்று மாதங்கள் கழித்து செழியன் குடும்பமும் மாறன் குடும்பமும் சாந்தி மூர்த்தி முத்தரசி ராசாத்தியம்மாள் குடும்பம்.. அனைவரும் அவர்களது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று செழியனின் பிள்ளைச் செல்வங்கள் மற்றும் மாறனின் மகன் அன்புமணிக்கும் காதுகுத்து சடங்கை ஆரம்பித்து சிறப்பாக முடித்தார்கள்..

 அன்று இரவு மாறன் உண்மையை இனி மறைக்க வேண்டாம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து அவனது..  சுண்டெலியை பார்க்க அறைக்குள் சென்றான்.. அப்போதுதான் குழந்தையை உறங்க வைத்துவிட்டு மாறனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்..

 அவனது சுண்டெலி கண் முழித்து இருப்பதைப் பார்த்து. அறைக்குள் சென்றான்.. ” ஏய் என்னடி இன்னும் தூங்கலையா..?” என்றான் மாறன்..

 அதற்கு கொடியோ ” மாமனை பாக்காம கண்ணு மூட மாட்டுதாம்..” என்றாள் சிரித்துக் கொண்டு..

” அதை எப்படி மூட வைக்கணும்னு எனக்கு தானே அந்த மந்திரம் தெரியும்.. இதோ வந்துட்டேன்.. அந்த மந்திரத்தை  சொல்லவா.?” என்றான் மாறன்..

மாறனோ அவனது கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பித்து அவளது காதில் மந்திரத்தை ஓதினான்..

” சீ எப்போ பாரு இதே நினைப்புதான்.. வேற வேலை இருந்தா பாருங்க பாஸ்..” என்றாள் அன்பு..

 அதற்கு மேல் விளையாட்டை கைவிட்டு விட்டு மாறன் தனது வாழ்க்கையை பற்றி முழுதாக தற்போது மனைவியிடம் மனம் திறந்து பேசலாம் என முடிவெடுத்து பேச ஆரம்பித்தான்..

” ஏய் சுண்டெலி உனக்கு ஞாபகம் இருக்கா?..  நம்மளோட கல்யாணத்துக்கு முன்ன காட்டுல நீ விறகு எடுக்கப் போகும்போது உன்னை ஒரு குடிகாரன் வழிமறித்து உன்னோடு வம்பு பண்ணுனானே அவனை போட்டு அடி அடின்னு அடி வெளுத்து போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டோம் நானும் மாமாவும்..” என்றான் மாறன்..

அதன்பின் நிர்மலா தனது வாழ்க்கையில் வந்த விதம் அவனுக்கு அவளுடன் திருமணம் நடந்தது.. அந்த குழந்தைகள் பற்றி குழந்தைகள் தயாளன் உடையது என அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனது சுண்டெலிக்கு விவரமாக எடுத்துக் கூறினான்..

 நிர்மலாவின்  பெற்றோரும் தயாளனின்   பெற்றோரும் குழந்தையை கேட்டு கோர்ட்டில் கேஸ் போட்டதும் அதில் நிர்மலாவின் கொலை பொய் கேஸ் என்றும்.. குழந்தை அவர்களிடம் கொடுக்க தயாளன் விரும்பாமல் அதை மாறனே வளர்க்க வேண்டும் எனக் கூறியதாகவும் அதனால் தான் மாறனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனது சுண்டெலிக்கு கூறினார்..

மாறன் சொன்னது அனைத்தையும் அவனது தோளில் சாய்ந்த படி கேட்டுக் கொண்டிருந்த அன்பு.. ” இத்தனை வருஷம் கழிச்சு ரொம்ப தாமதமாக சொல்றீங்க.. கோர்ட்டிலிருந்து கேஸ் முடிச்சுட்டு நீங்கள் அகிலம்  பாட்டிகிட்ட சொல்லும்போதே எனக்கு இந்த விஷயம் தெரியும்.. அதை நானும் கேட்டேன்.. ” என்று கூறி மாறனை அதிரவைத்தாள்..

” ஏய் என்னடி சொல்லுற உண்மையா உனக்கு இது தெரியுமா..? ” என்றான்..

” மாமோய் என் மாமா எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று எனக்கு எப்பவோ தெரியும்.. ” என்று கண்ணடித்து கூறி அவனது மனதை குளிர வைத்தாள்..

செல்லச் சீண்டல்களுடன் அந்த நாளையும் கழித்து.. அவர்களது குடும்பத் தொழில் மற்றும் மாமனுடன்  சேர்ந்து செய்யும் இயற்கை விவசாயம் தனது குடும்பம் குழந்தைகள் என்று அவனது நாட்கள் கழிந்தது…

 செழியனோ யாருக்கும் சொல்லாமல் ஒரு காரியம் செய்துவிட்டு வந்தான் அது மூர்த்தியின் மூலம் தெரிய வந்து வீட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது..

ராஜாஜி மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர் ஒருவர் மூர்த்தியின் பிரண்ட் அவர்தான் செழியனை பற்றி மூர்த்திக்கு கூறினார்..

 செழியன் இனி குழந்தை வேண்டாம் என்றும் இனி அவனது சூப்பி ஒருமுறை தவித்த தவிப்பும் அவர்களும் பட்ட பாடும் போதும்.. இனி அவளுக்கு எவ்வித கஷ்டமும் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு வந்தான்..

 அதைக்கேட்டதும் எழில் கோபப்பட்டு செழியனுடன் சண்டை  பிடிக்க தெரியாமல் அதனால் பேசாமல் இருந்தாள்.. செழியனோ இரவும் பகலும் அவளின் முன்னும் பின்னும் சென்று அவளை சமாதானப்படுத்த மிகவும் போராடினான்.. ” என்னோட செல்ல சூப்பிமா தானடி  நீ.. நமக்கு என்ன குறைச்சல் ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும் என நான்கு பிள்ளைகள் இருக்காங்க.. இது போதாதா?.  இனி என்னால நீ கஷ்டப்படுவதை  தாங்க முடியாதுடி அதனால தான் மாமா இப்படி பண்ணினேன் ப்ளீஸ் தங்கம்லடி.. புரிஞ்சுக்கோயேன்.. ” என்று கெஞ்சியபடி திரிந்தான் செழியன்…

 மேலும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்ததும் சாந்தியும் பூமணியும் தான்  எடுத்த சொல்லி அவளை சமாதானப் படுத்தினார்கள்..

 அவளும் சற்று மலை இறங்கி அவளது மாமனுடன் சகஜமாக பேசி சந்தோஷமாக இருந்தாள்..

 செழியன் குடும்ப கட்டுப்பாடு செய்து இருப்பதை கேள்விப்பட்ட அன்புக்கொடி மாறனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக் கூறினாள்..

 அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பிற்கு குழந்தைகளை வளர்ப்பது அவர்களின் பிற்காலத்தில் செலவுகள் பற்றி எந்தவித கவலையும் தேவையில்லை அதனால் இன்னும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அதனால் அவளுக்கு தெரியாமல் மாறன் இவ்வாறு செய்து விட்டு வந்தால் அதன் பின் தான் அடியோடு மொத்தமாக வேறு ஒரு அன்புக்கொடியை பார்க்க நேரிடும் என்று மாறனிடம் மிரட்டலாகவே கூறினாள்..

 அவனும் அவனது சுண்டெலி கோபத்தில் மூக்கு விடைக்க கூறியதை கேட்டு சிரித்தபடி தலையாட்டி விட்டு சென்றான்..

Advertisement