Advertisement
Tamil Novel
அத்தியாயம்—-1
மைலாப்பூரில் அம்மனாக வீற்றிருக்கும் கோயிலின் பாட்டு சத்தம் அந்த தெருவே கேட்கும் படி ஒலிக்க. அதே தெருவில் ஒரு வீட்டில் வசிக்கும் ஒன்றரை வயது குழந்தை ஜெய். அந்த பாட்டு சத்தத்தில் கைய் தட்டி தன் சந்தோஷத்தை வெளியிட்டதை மெளனமாக பார்த்திருந்த ஸ்ரீமதியைய் பார்த்து…
“என்ன முடிவு செய்து இருக்க…..?” என்ற தந்தையின் குரலுக்கு குழந்தையிடம் இருந்து தன் கவனத்தை தந்தையிடம் செலுத்திய மதி…
”அது தான் நேத்தே சொன்னனே அப்பா…..குழந்தைய நாம வளத்துக்கலாம். அத்தான் வேனா வேறு கல்யாணம் செய்துக்க சொல்லுங்க.”
“புரிஞ்சி தான் பேசுறியா… அவங்க வீட்டின் முதல் வாரிசை இப்படி ஓட்டு வீட்டில் வளக்க விட்டுட்டு இருப்பாங்களா…..?” என்று கேட்ட
வர்.
பின் “முடிவா என்ன சொல்ற….சாயங்கலாம் சம்மந்தியம்மா வர்றேன்னு சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு முடிவு சொல்லனும்.” திருவேங்கடம் தன் மகளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே…
இடையில் புகுந்த மதியின் அம்மா மீனாட்சி…..”வேண்டானா விட்டுட்டுங்க. பிடிச்சி கல்யாணம் செய்தா தான் அவள் சந்தோஷமா இருப்பா…முத பொண்ணு தான் அல்ப ஆயிசுலா போயிட்டா… இவளாவது சந்தோஷமா இருக்க வேண்டாமா….? என்று இடைமறித்த மனைவியை முறைத்தவர்.
“உன்னால தான் இவ இப்படி பேசுறா…மாப்பிள்ளைக்கு என்ன குறச்சல் பிடிக்காம போறதுக்கு…..” என்று தன் மனைவியிடம் சத்தம் போட.
“அது தான் நானும் சொல்றேன் நம்ம பொண்ணுக்கு என்ன குறச்சம் இரண்டாம் தாராமாய் வாக்க பட” பேச்சு தன் கணவரிடம் இருந்தாலும் மீனாட்சியின் பார்வை தன் சின்ன மகளை தொட்டு தழுவியது.
தன் பெரிய மகள் ஸ்ரீ வள்ளி பளீரிடும் நிறம் என்றால். சின்ன மகள் ஸ்ரீமதி பாலையும் சந்தனத்தையும் குழைத்த நிறம். ஐந்தடி உயரத்தில் பார்ப்பவர் கண்ணை கவரும் அழகுடன் இருப்பதோடு படிப்பிலும் எந்த குறையும் சொல்ல முடியாத m.sc முடித்து இருக்கிறாள்.
அப்படி இருக்கும் போது இப்படி இரண்டாம் தாராமாய் பிடிக்காத திருமணம் செய்ய வேண்டுமா….? என்று நினைத்து தன் கணவனிடம் வாதிட.
“நம்ம மாப்பிள்ளைக்கு மட்டும் என்ன குறைடி….” என்று திருவேங்கடம் கேட்பதும் நூத்துக்கு நூறு சரியே.
நிறம் மதியைய் போல் இல்லாது இருந்தாலும் ஆறாடி உயரத்தில் தலை கொள்ள முடியோடு பார்ப்பவர் திரும்பி பார்க்கும் ஆண் அழகோடு தான் திருவேங்கடத்தின் மாப்பிள்ளை இருப்பான்.
மீனாட்சியும் விடாது. “இப்போ சொன்னிங்கலே மாப்பிள்ளை அது தான் குறை.” ஏற்கனவே மாப்பிள்ளை ஆனாவரை திரும்பவும் ஆக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் சொன்னார்.
தன்னால் அப்பா அம்மா சண்டை போடுவது பிடிக்காது. “அப்பா அத்தானுக்கு குறைன்னு நான் சொல்லலையே…..” என்றவளிடம்.
“அப்போ அவரை கட்டிக்க என்ன…..?”
“அப்பா அவர் ஸ்ரீயோட கணவர்.” அக்கா கணவரை எப்படி கல்யாணம் செய்துக் கொள்ள முடியும் என்ற அர்த்தத்தில் சொல்ல.
“இப்போ அவ தான் உயிரோட இல்லையே…என் பொண்ணு மட்டும் இருந்தா உன்கிட்ட இப்படி பிச்சை எடுப்பது போல ஏன் கேட்டுட்டு இருக்கேன்.”
திருவேங்கடம் சொல்வது உண்மை தான். அவர் பெரிய மகள் ஸ்ரீவள்ளி மட்டும் உயிரோடு இருந்தால் பிச்சை எடுப்பது போல் பேசுவது என்ன பேசுவதே அறிது தான்.
திருவேங்கடத்துக்கும், மீனாட்சிக்கும் ஏழு வருடம் குழந்தை இல்லாது தவமாய் தவமிருந்து பிறந்தவள் தான் ஸ்ரீவள்ளி.
அதுவும் ஸ்ரீவள்ளியின் இரு புருவத்துக்கும் மத்தியில் இருக்கும் பெரிய மச்சம் திருவேங்கடத்தின் அன்னை வள்ளியம்மாவை ஒட்டி இருப்பதால் தன் அன்னையே தனக்கு மகளாய் பிறந்து விட்டாள் என்று ஸ்ரீவள்ளி பிறந்த போது அனைவருக்கும் சொல்லி சொல்லி பூரித்து போனார்.
அதுவும் அவர்கள் இருக்கும் வீடு பங்காலி சண்டையில் கேஸ் நடந்துக் கொண்டு இருந்தது. ஸ்ரீ வள்ளி பிறந்ததும் அந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர. பிறகு என்ன அந்த வீட்டில் ஸ்ரீவள்ளி அதிர்ஷ்ட்ட தேவதையாகவே கொண்டாட பட்டாள்.
அதற்க்கு அடுத்து ஒன்றரை வயது வித்தியாசத்திலேயே பிறந்தவள் தான் ஸ்ரீ மதி. அது என்னவோ திருவேங்கடத்துக்கு ஸ்ரீவள்ளியைய் கொண்டாடியது போல ஸ்ரீமதியைய் கொண்டாட வில்லை.
அதற்க்காக வெறுத்தார் என்பது எல்லாம் இல்லை. தன் பெரிய மகள் என்ன கேட்டாலும் தட்டாமல் நிறைவேற்றியவருக்கு நடுத்தர வர்க்கத்தில் ஒரு தனியார் கம்பெனியில் கிளார்க்காக இருக்கும் திருவேங்கடத்தால் அடுத்த மகளுக்கும் அது போல் செய்து கொடுக்க முடியவில்லை.
அதனால் பெரிய மகள் பயன் படுத்திய அனைத்தும் சின்ன மகளுக்கு போய் சேரும். மதியும் வீட்டு சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டாலும் அவள் அடிமனதில் எப்போதும் தான் இரண்டாவதாய் இருப்பதாய் பதிந்து போனது.
அதை அவள் வெளிகாட்டிக் கொண்டது இல்லை என்றாலும் தாய் அறியாத சூலா….அதனால் தான் இந்த கல்யாண பேச்சை மகளுடன் சேர்ந்து அன்னையும் எதிர்த்தார்.
தந்தை பிச்சை என்ற பேச்சி மதியின் மனதை தாக்க….. “உங்க விருப்பம் அப்பா.” அடுத்த பேச்சி எழாது அந்த இடத்தை விட்டு போகும் மகளின் முதுகையே பார்த்திருந்த மீனாட்சியிடம்….
“என்ன பார்வை அது தான் சரின்னு சொல்லிட்டாளே…. அது இதுன்னு பேசி அவ மனதை கெடுத்துடாதே …அந்த போனை கொண்டா சம்மந்தியம்மாவுக்கு போடலாம்.” என்ற கணவனின் செயலை தடுக்க முடியாது அவர் சொன்னதை செய்து விட்டு மகளின் அறைக்கு போய் பார்க்க.
அங்கு மதியின் கைய் குழந்தையைய் தட்டி தூங்க வைத்துக் கொண்டு இருந்தாலும், அவள் மனம் வேறு எங்கோ இருக்கிறது என்று அவளின் வெறித்த பார்வை சொல்ல.
“திட்டவட்டமா இந்த கல்யாணம் வேண்டாமுன்னு சொல்ல வேண்டியது தானே…எதுக்கு ஒத்துக்கனும் இப்போ எதுக்கு கவலைபடனும்.” இந்த திருமணத்தால் தன் சின்ன மகள் எவ்வளவு வேதனை அடைவாள் என்று தெரிந்ததால் மகளை கடிய.
“எதுக்குன்னு தெரியாதா அம்மா.” வாய் அம்மாவிடம் பதில் சொல்ல கண் குழந்தையைய் தழுவி நின்றது.
அவள் பார்வையைய் ஓட்டி தன் பார்வையைய் செலுத்திய மீனாட்சி அதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாது அவ்விடத்தை விட்டு அகன்றார்.
—————————————————————
திருவேங்கடத்தின் போனை எடுத்து பேசிய சுந்தரி…..ஒரு வருடத்திற்க்கு பிறகு முகம் மலர்ந்தவராய்…தன் கணவனை நோக்கி கார்டனுக்கு செல்ல.
அங்கு பேப்பர் படித்துக் கொண்டு இருந்த சுகவனம் நீண்டா நாட்களுக்கு பிறகு முகத்தில் புன்னகையுடன் தன்னை நோக்கி வரும் மனைவியைய் பார்த்து படித்துக் கொண்டு இருந்த பேப்பரை கீழே போட்டவராய்…
“என்னம்மா என்ன விஷயம் ரொம்ப சந்தோஷமா இருக்க…..?” என்று கேட்டதுக்கு.
அதே முகமலர்ச்சியுடன்…. “சம்மந்தி இப்போ தான் போன் செய்தாருங்க. மதி கல்யாணத்துக்கு ஒத்துக்கிடாளாம்.” என்று மகிழ்ந்து போய் சொல்ல.
அந்த மகிழ்ச்சி துளியும் இல்லாது யோசனையுடன் தன்னை பார்த்த கணவரை பார்த்து.
“என்னங்க நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்றேன். அந்த சந்தோஷம் துளியும் இல்லாது இருக்கிங்கலே…..?” என்று தன் கணவனிடம் கேட்டு கொண்டு இருக்கும் போது….
அப்போது தான் ஜாக்கிங் முடித்து வந்த தன் மகன் வல்லரசுவை காண்பித்து… “முதலில் உன் மகனிடம் சம்மதம் கேட்ட பிறகு தான் சம்மந்தி வீட்டில் இதை பற்றி பேசியிருக்கனும்.” என்றதற்க்கு…
“இதில் வல்லரசு மறுப்பதற்க்கு என்ன இருக்கு….” என்று சுந்தரி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
வியர்வையைய் துடைத்துக் கொண்டே தன் தந்தையின் எதிரில் அமர்ந்துக் கொண்டு….”நான் எதுக்கு மறுக்க மாட்டேன்னு அம்மா இவ்வளவு கான்பிடன்ஸா சொல்லிட்டு இருக்காங்க.” என்று கேட்டுக் கொண்டே அன்னை கலக்கி கொடுத்த காபியைய் ஒரு சிப் செய்ய.
“மதியை கல்யாணம் செய்துக்க தான்.” என்று எந்தவித மெருகு பூசும் இல்லாது நேரிடையாக சுந்தரி சொல்ல .
குடித்துக் கொண்டு இருந்த காபி புரை ஏற இறும்பிக் கொண்டே….. “இது என்ன பேச்சு.” என்று கோபத்துடன் எழும் மகனின் கைய் பற்றி அமர வைத்த சுந்தரி.
“சரி உனக்கு மதியைய் கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லேன்னா….வெளியில் பெண் பாக்குறேன். ஆனா கல்யாணம் செய்துக்கனும். அது மதியைய் கல்யாணம் செய்துக்குறியா….?இல்ல வெளி பொண்ணா….?என்பது தான் பேச்சு.” என்று திட்டவட்டமாக சொல்லிவிட.
தன் அன்னையின் பேச்சுக்கு எதுவும் பேசாது அமைதியாக இருக்கும் மகனின் கைய் பற்றிய சுகவனம்.
“அரசு உன் வயசு முப்பது தான் ஆகுது. இந்த வயசுல நீ தனியா இருக்குறது பாக்குறதுக்கு எங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா….?’
அதுவும் ஜெய் இந்த வயசில தாய் இல்லாம வளரனுமா…..?” என்று கேட்க.
“வரவ தாயா தான் இருப்பான்னு என்ன நிச்சயம்.”
“அதுக்கு தான் நம்ம மதியே…..” என்று சொல்லும் தாயை ஆழ்ந்தஒரு பார்வை பார்த்தவன்.
பின் “அம்மா கட்டாயத்தில் ஏற்படும் எந்த பந்தமும் நிலச்சு நிக்காது. அதுவும் கல்யாணம். அது உங்களுக்கே தெரியும்.” என்று சொன்னவனை சலிக்காது அவரும் பார்த்தவர்.
“எனக்கு தெரியுமுன்னு சொல்லிட்டலே…மதியைய் கல்யாணம் செய்துக்கோ…உன் வாழ்க்கை நல்லா இருக்கும். நம்ம ஜெய்க்கும் ஒரு தாய் கிடச்ச மாதிரி இருக்கும்.” ஏதோ பேச வந்த மகனை தடுத்து.
“முதல் கல்யாணம் நீ தான் அந்த வீட்டுக்கு போய் பெண் கேட்க சொன்ன.கேட்டோம் கல்யாணமும் முடிஞ்சது. ஆனா அந்த வாழ்க்கை பாதியிலேயே முடிஞ்சிடுச்சு.இப்போ எங்க சந்தோஷத்துக்கு அதே வீட்டில் இருக்கும் இன்னொரு பெண்ணை கட்டிக்க அரசு.
அந்த வீட்டு பெண் வேண்டாம் என்றால் வெளியில் பாக்குறேன். என்ன ஒன்னு உன் மனைவி மதியின் கையில தான் குழந்தைய கொடுத்துட்டு செத்தா…. அந்த புள்ளயும் அந்த குழந்தை மேல உயிரா இருக்கா. இரண்டு பேரையும் பிரிக்க வேண்டாமுன்னு பாக்குறேன்.” என்று சொல்லும் தாயிடம்.
தனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்றால் கட்டாயம் கேட்க போவது இல்லை. அதனால் மதியே பரவாயில்லை என்ற பட்சத்தில்…
“சரிம்மா உங்க விருப்பம்.ஆனா ரொம்ப கூட்டத்த கூட்டாமசிம்பிளா கோயில்ல முடிச்சிக்க பாருங்க.” என்ற தன் மகனின் சம்மதமே போதும் என்று.
“சரி அரசு உன் விருப்பபடியே எல்லாம் செய்துடலாம். நீ ஒரு குடும்பமா இருக்கனும் அது தான் வேண்டும் எனக்கு.” என்று சந்தோஷத்துடன் வீட்டுக்குள் நுழையும் தாயையே பார்த்திருந்த வல்லரசுவின் முதுகை தட்டிய சுகவனம்.
“மனச போட்டு ரொம்ப குழப்பிக்காத அரசு. வாழ்க்கை அது போக்கில் வாழ பழகு.”
“அது தானேப்பா செஞ்சிட்டு இருக்கேன்.” என்றவனை தட்டி கொடுத்தவர்.
“கவலை படாதே அரசு. நாம யாருக்கும் எந்த கெடுத்தலும் செய்யல உன் மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்ற தந்தையின் பேச்சை உள் வாங்கியவனாய் வீட்டுக்குள் நுழைந்தான்.
ட்ரஸ்சிங் டேபிளில் தலை வாரிக் கொண்டு இருந்த அரசுக்கு பழைய நினைவு தடுத்தாலும் அந்த கண்ணாடியைய் பார்க்க பார்க்க நினையாமல் இருக்க முடியவில்லை.
தன் மனைவியைய் கட்ட காரணமாய் இருந்தது இந்த ட்ரஸ்ஸிங் டேபில் தானே…..வல்லரசு s.v.&co பர்னிச்சல் கடை சொந்தமாக வைத்துள்ளான்.
அந்த கடை சிறிய அளவில் மைலாப்பூரில் அவனின் தாத்தா தன் மகன் சுகவனம் பேரின் சுருக்கமாக s.v&co என்ற பெயரில் முதலில் கட்டில் ,பீரோ. மட்டும் விற்றார்.
அதையே சுகவனம் கொஞ்சம் பெரிது படுத்தி சோபா, ட்ரஸ்ஸிங் ,டேபில் என்று மரவகையில் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தையும் விற்றார் என்றால்…
வல்லரசு பொறுப்பேற்ற பிறகு வாஷிங் மிஷின், பிரிஜ், என்று வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் தன் கடையில் கொண்டு வந்தான்.
திருமணம் செய்வோர் எஸ், வி, அன், கோவுக்கு வந்தால் போதும் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் வரிசை அனைத்தையும் ஒரே கடையில் வாங்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அனைத்துயும் கடையில் இறக்கினான்.
அவன் கடைக்கு திருவேங்கடம் குடும்பம் கட்டில் வாங்க வரும் போது தான் அவர் பெண்ணை பிடித்து போய் தன் பெற்றோரை பெண் கேட்க வைத்து முடிந்தது தான் அவனின் முதல் திருமணம்.
தன் துக்கத்தை மறக்க அதிகபடியான கடை வேலை அவனுக்கு எந்த அளவுக்கு உதவி செய்கிறதோ, அதே அளவுக்கு அந்த கடை அவனின் துக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இருந்தும் கடையைய் அவன் விட முடியாது.
கூட பிறந்தவர்கள் யாராவது இருந்தாலாவது கடையைய் அவர்களிடம் விட்டு விடலாம். அதற்க்கும் வழியில்லாது ஒரே மகனாய் ஆன தொட்டு எந்த பொருப்பில் இருந்தும் அவனால் விலக முடியாது.
எதோ எண்ண நினைவலையில் இருக்கும் போது சுந்தரியின் “அரசு…” என்ற அழைப்பில் கீழே போனவனுக்கு உணவு பரிமாரிக் கொண்டே…. “சாயங்காலம் சம்மந்தி வீட்டுக்கு போய் குழந்தைய கூட்டிட்டு வர்றேன் அரசு. அப்படியே உங்க இரண்டு பேருக்கும் எந்த நாள்ல கல்யாணம் பண்ணா நல்லா இருக்குமுன்னு பார்த்துடறோம்.” என்ற அன்னையின் பேச்சை இடை மறைத்த அரசு.
“அம்மா ஜாதகம் பார்க்கனுலே….” என்ற மகனின் கேள்வி எதற்க்கு என்று புரிந்தால் போல்.
“இரண்டாம் கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்கனும் என்ற அவசியம் இல்ல அரசு.” அவன் தான் அந்த பேச்சை எடுத்தான். ஆனால் தாயின் வாய் வழியே இரண்டாம் கல்யாணம் என்ற வார்த்தை அவனை பலமாக தாக்கியது.
மகனின் முகத்தை பார்த்தே அவன் எண்ணம் புரிந்தவராய்…. “எந்த வார்த்தையும் நம்ம தாக்கம பார்த்துக்கனும் அரசு.இனியாவது உன் வாழ்கையில் விடியல் வரட்டும்.” என்று சொன்னவரின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான்.
காரில் சென்றுக் கொண்டு இருந்த அரசுவுக்கு கோடம்பாக்கம் அந்த சிக்னலை பார்த்த போது எப்போது தோன்றும் அவள் ஏன் ட்ரைவரிடம் காரை எடுக்க சொல்லாது டூவீலரில் போனாள். அதுவும் அவ்வளவு அவசரமாய் குழந்தையைய் விட்டு.
யோசித்து யோசித்து இன்றளவும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை. இன்னொன்றிலும் தன் மனைவி புரியாத புதிராகவே சென்றாள்.
சாகும் போது தன் கையில் உள்ள குழந்தையைய் காட்டி அவள் தங்கையிடம்…”நீ தான் பார்த்துக் கொள்ளனும் .” என்று சொல்லி இறந்ததும் தான்.
அவன் மனைவியுடன் வாழ்ந்தது கொஞ்சம் காலம் தான். இருந்தாலும் அந்த காலத்தில் அவன் பார்த்தது அக்கா, தங்கையின் நெருக்கமில்லா தன்மையைய் தான்.
அரசு நினைத்ததையே தான் மதியும் நினைத்துக் கொண்டு இருந்தாள். ஸ்ரீ ஏன் குழந்தையைய் என்னிடம் தந்தாள்.
இருக்கும் போது இல்லாத நெருக்க சாகும் போதா வரவேண்டும். வயது வித்தியாசம் குறைவாக இருக்கும் சகோதரிகள் தோழிகள் போல் பழகுவார்கள் என்று தன் தோழிகள் சொல்ல கேட்டு இருக்கிறாள். ஒரே அறையைய் பகிர்ந்துக் கொண்டாலும் எதிர் எதிர் துருவங்களாய் இருக்கும் தங்களை நினைத்து அவளுக்கே ஆச்சரியம் எழுவதுண்டு.
இத்தனைக்கும் இருவரும் ஒரு நாளும் சண்டை போட்டதில்லை. இப்போது நினைக்க தோன்றுகிறது போட்டு இருக்க வேண்டுமோ….
அவளின் தோழியின் வீட்டில் எல்லாம் அப்படி தானே இருக்கிறார்கள். ஒரு வேளை சண்டை போட்டாலும் அடுத்த வேளை அவர்கள் நெருக்கமாக ஆவாது.
எது எங்களுக்குள் இடைவெளி கொண்டு வந்தது. இப்போது யோசித்து பார்த்தால் அப்பா….அதற்க்கு காரணம் என்று எண்ணுவதா….?இல்லை என்னை அறியாமலேயே அவள் மேல் பொறாமை பட்டு விட்டேனா….?
அப்பா அவள் எது கேட்டாலும் வாங்கி கொடுத்து விட்டு அவள் உபயோகித்த வாட்சில் இருந்து கொலுசு…என்று அனைத்தையும் எனக்கு கொடுப்பாரே….அதனால் ஸ்ரீயின் மீது பொறாமை வந்து விட்டதா…..?
ஸ்ரீயும் மதியும் பகிர்ந்துக் கொண்ட அறை பத்துக்கு பத்து தான். அதில் இரு மூலையில் சிங்கல் காட் கட்டில் போட்டு கொடுத்து. “ இது உங்கள் அறை.” என்று தன்னுடைய பத்து வயதில் பொற்றோர்கள் சொன்ன போது. தங்களுக்கு தனியறையா…? மதி மகிழ்ந்து தான் போனாள்.
பின் இருவரும் அந்த அறையைய் பகிர்ந்துக் கொண்டாலும் ஒரு கட்டில் யானை முகப்பு வைத்து இருக்கும் அதை ஆசையாய் மதி பார்த்துக் கொண்டு இருக்கும் போதே….
“இது எனக்கு….” என்று ஸ்ரீ சொல்லி விட. மற்றொரு கட்டிலை தான் மதி எடுத்துக் கொண்டாள். பத்து வருடம் உழைத்த கட்டில். இதுவே அதிகம் என்பது போல் அதன் கால் உடைந்து விட.
தனக்கு என்று ஒரு கட்டில் வாங்க தான் அத்தான் கடைக்கு போனது. ஆனால் வாங்கிய புது கட்டில் எப்போதும் போல் ஸ்ரீக்கு சென்று விட.
பத்து வருடத்துக்கு முன் ஆசைப்பட்ட கட்டில் அவளுக்கு வந்து சேர்ந்தது. எதுவும் ஸ்ரீ உபயோகித்து தான் தனக்கு கிடைக்கும் எனும் போது என்று நினைத்துக் கொண்டே ஜெய் உறங்கும் கட்டிலை தடவிக் கொண்டு இருக்கும் போதே…
குழந்தை சிணுங்க….தூக்கம் கெடாது இருக்க பக்கத்தில் அமர்ந்து தட்டிக் கொடுத்தும் தூங்காது எழுந்த அந்த மழலை தூக்க கலக்கத்திலேயே மதியின் கன்னத்தை எச்சில் படுத்தி “மதிம்மா பா….” என்ற குரல்.
“நான் உனக்கு பழையதா…..?” என்று கேட்பது போல் இருக்க. குழந்தையைய் வாரி அணைத்த மதி…”இல்லடா செல்லம் நீ புதுசு. எனக்கே எனக்கான புதுசு.” என்று குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட. குழந்தையும் “நானு நானு” என்று தன்னிடம் இருக்கும் இரண்டே பல் கொண்டு மதியின் கன்னத்தை கடித்து வைத்தான்.