Advertisement

ஜெய்சக்திக்கு கொஞ்சம் மூளை சலவை செய்தால் போதும் சந்திரசேகருக்கு  இவளை திருமணத்தை முடித்து விடலாம் என்று கருதினார்.
ராஜசேகர் இந்த திட்டமிடலுக்கு இடையில் அவர் மனசாட்சில் ஒன்று மட்டும்  உறுத்திக் கொண்டு இருந்தது. அது சந்திரசேகர் மகள் கிருஷ்ணவேணி. புனிதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு சந்திரசேகரின்  கம்பத்து பயணம் அதிகம் நடைபெற்றது. 
ஒரு நாள் தன் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு போன ராஜசேகர் அப்படியே குழந்தையையும் பார்த்து விட்டு வரலாம் என்று தன் மனைவி தன் கைக்குழந்தை காயத்ரியோடு   குழந்தையை பார்க்க சென்றார்.
அவரை பார்த்த புனிதா… “என்ன அண்ணா உங்கல பார்க்கவே முடியல.போன இரண்டு தரம் ஊருக்கு வந்தும் மாமாவ பாக்க வரவே இல்ல.”
ஒரு சொம்பு மோரை ராஜசேகர் கையில் திணித்துக் கொண்டே  கேட்ட புனிதா ராஜசேகரின் மனைவியை பார்த்து… “அண்ணி குழந்தைக்கு பால் கொடுக்குறிங்க புதுசா மோர் குடிச்சா உங்களுக்கு சளி பிடிக்கும். அது குழந்தைக்கு ஆகாது.” என்று சொல்லி கரந்த பாலில்  அப்போது தான் இறக்கிய டிக்கெஷனை போட்டு தன் மனைவி கையில் கொடுத்த புனிதா…
அவள் கையில் இருக்கும் குழந்தையை வாங்கி கொண்டு… “நீங்க குடிங்க அண்ணி.” என்று சொல்லி விட்டு தன் குழந்தைக்கு வெது வெதுப்பான பசும்பாலை அவளே குடிக்க  வைத்தவளை பார்த்த அன்றே ராஜசேகருக்கு குற்றவுணர்ச்சியாக தான் இருந்தது.
பின் புனிதா கையில் உள்ள தன் குழந்தையை பார்த்த ராஜசேகர்… “என் மகளின் எதிர்காலத்திற்க்காக  இதை நான் செய்தே ஆகவேண்டும்.”
பின் இடை இடையே வந்த தன் மனசாட்சியை ஓரம் கட்டியவராய், முழுமுனைப்புடன் சந்திரா  ஜெய்சக்தி இணைப்பதில் ஈடுபட்டார்.
அவர்களை இணைக்க ராஜசேகர் மிகவும் எல்லாம் சிரமப்படவில்லை. இருவருக்குமே ஆசை இருந்தது. சந்திரசேகர் தன் மனைவியோடு மகளை நினைத்து தயங்கினார். 
ஜெய்சக்தியின் மனம் போக போக அவருக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டால் என்ன…? அவர் மனதில் நான் தானே முழுமையாக இருக்கிறேன் என்று நினைத்தாலும், மற்றவர்களின்  பார்வைக்கு தான் இரண்டாம் தாரமாய் தானே தெரிவோம்.
அதை ராஜசேகரிடம் சொல்ல… “என்னம்மா…இது எல்லாம் ஒரு பிரச்சனையா…? இங்கு யாருக்கும் அவனுக்கு கல்யாணம் ஆனது தெரியப்போவது இல்ல. சந்திரா அப்பா வயதானவர். அவருக்கு பின் சந்திரா ஊருக்கும் போக மாட்டான்.”
இந்த வகையாக  ராஜசேகர் ஜெய்சக்தியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் நாரயணன் குடும்பம் சந்திரசேகரை பார்க்க அவர் வேலை பார்க்கும் இடத்திற்க்கு வந்தது.
அப்போது தான்  ஜெய்சக்தியும் சந்திரசேகர் குடும்பத்தை நேரில் பார்த்தது. சந்திரசேகர் தங்கை  பார்க்க மிக அழகாக இல்லாவிட்டாலும், அழகாகவே இருப்பார்.
முதலில் இரு இளம்பெண்களை பார்த்த ஜெய்சக்தி இதில் யார்…? சந்திரசேகர் மனைவி என்று குழம்பிய போது சந்திரசேகர் தந்தை அறிமுகம் படுத்தி வைக்கவும்…
புனிதாவை பார்த்த  ஜெய்சக்தி அப்போதே ராஜசேகரிடம்… “என் அழகு சந்திராவுக்கு நான் தான் மனைவியாக இருக்க முடியும்.”  என்று அன்று தான் தன் அலைபாயும் மனதுக்கு முற்றுபுள்ளி வைத்தாள் ஜெய்சக்தி.
பின் ஜெய்சக்தி அடுத்து தன் தந்தையிடம்… “நான் சந்திராவை தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்.” தற்கொலை முயற்ச்சி ஒன்று ராஜசேகரின் திட்டப்படி நடத்தி முடித்ததோடு, தன் திருமணத்தையும் நடத்தி முடித்துக் கொண்டாள்  ஜெய்சக்தி.
இத்திருமணத்திற்க்கு சந்திரசேகர் முதலில் தான் கொஞ்சம் தயங்கினார். பின் ஜெய்சக்தியோடு பேச பேச அந்த தயக்கமும் இருந்த இடம் தெரியாது போனது.
அதன் பின் நாரயணன் விசயம் அறிந்து தன் குடும்பத்தோடு நியாயம் கேட்க வந்த போது பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் சின்ன புத்தி பரமேஸ்வரர் புனிதாவை கேட்க கூடாததை கேட்டு பின் அவர்களை சென்னையையே வெறுத்து ஓடும் படி செய்து விட்டார்.
இதை அனைத்தையும் ராஜசேகர் சொல்ல சொல்ல எந்த இடையூறும் இல்லாது கேட்டு முடித்த உதயேந்திரன், ஏதோ கசப்பு திண்று முழுங்குபவனை போல்  கண் மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பின்…
“எல்லாம் சரி. பின் எப்படி மாமாவுக்கு திரும்பவும் பார்வை அவர் குடும்பத்து பக்கம் போச்சி. அதுவும் குறிப்பா வேணியின் பக்கம்.” என்று கேட்ட உதயேந்திரனின் பேச்சில் கிண்டல் இருந்ததோ…
உதயேந்திரனின் குரலில் கிண்டல் இருந்ததோ இல்லையோ…ராஜசேகர் இன்று தன் மனதில் அடைத்து இருந்ததை அனைத்தையும் வெளியேற்றிட நினைத்தாரோ…இல்லை தன் மனதில் இருப்பதில் பாதி சொன்னதற்க்கே மன அழுத்தம்  குறைந்தது போல் இருக்கிறதே, முழுவதும் சொன்னால் தன் மனது பாரம் குறைந்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ…உதயேந்திரனின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாது, தன் குடும்பத்தை நாட்டாற்றில் விட்ட சந்திரசேகரின் கவனம் திரும்பவும் எப்படி திரும்பியது…? அதுவும் தன் உழைப்பு மொத்ததையும் தன் மகளுக்கு கொடுக்கும் அளவுக்கு… அதையும் ராஜசேகர் சொல்ல ஆராம்பித்தார்.
“சென்னையில் தான் இனி என் வாழ்வுன்னு முடிவு செய்துட்ட பிறகு கம்பத்தில் இருக்கும் சொத்தை முக்கால் வாசி என் அப்பா இறந்த பிறகு வித்துட்டேன். மீதி  கொஞ்சம் தான் இருந்தது.
அதையும் பாக்க போறது இல்ல. அதுக்கு காரணம் ஒன்று  என் வேலை பளு என்றால், மற்றொரு காரணம் புனிதா. என் வாழ்க்கை தரம் உயர உயரவா…இல்ல என் மகள் வளர வளராவான்னு தெரியல.
சின்ன வயசுல செஞ்சது நாம் மத்திய வயசுல வந்தப்ப…நான் செஞ்ச செயலை நினச்சு எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. அதுவும் மூணு வருசத்துக்கு முன் நான் லீகல் பாத்துக் கொண்டு இருந்த கம்பெனி எம்.டி அவர் மகனுக்கு என் பொண்ணை பாக்கலாமான்னு  கேட்டப்ப நான் அவர் கிட்ட இன்னும் என் பொண்ணு படிச்சி முடிக்கலேன்னு சொன்னதற்க்கு…
இப்போ பையனும் பொண்ணும் பார்த்துக்கட்டும் பிடிச்சி இருந்தா நிச்சயம் மட்டும் இப்போ செஞ்சிக்கலாம். கல்யாணம் உங்க பெண் படிப்பு முடிஞ்சே வெச்சிக்கலாம். என் மகனும் மேல் படிப்புக்கு ஒரு வருடம் ஆஸ்திரேலியா  போக போறான். என்று அவர் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சி…
அவர் திட்டப்படி ஒரு ஓட்டலில் பெண்ணும் பையனும் பாக்கறதா இருந்தது. என்  பொண்ணு தனியா போக ஒரு மாதிரி இருக்குன்னு அவ பிரண்ட கூட்டிட்டி போய் இருக்கா…
என் பெண் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே…எதிலும் விளையாட்டு…அங்கு போய்  சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தவளை…
அந்த  பையன் நாம பேசி ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்க தான் நம்ம பெரியவங்க அனுப்பி இருக்காருன்னு சொன்ன பிறகு என் பெண்ணும் பேசி இருக்கா…
கொஞ்ச நேரத்துலேயே என் பெண் பேச்சு கேட்டு அந்த பையன் நீ  வேடிக்கையே பாரும்மான்னு சொல்லிட்டு, அந்த பையன் என் பெண் கூட வந்த பெண் கூட பேசி…அந்த பெண்ணையே நிச்சயமும் செய்துட்டு அவன் வெளி நாட்டுக்கு பறந்துட்டான்.
அன்னிக்கி  முழுசும் என் மனம் அறிச்சுட்டே இருந்தது. அப்போ தான் எனக்கும்  புனிதா நிலமை புரிஞ்சுது. இன்னும் சொல்லனுமுன்னா என் பெண்ணுக்கு இதனால எந்த பாதிப்பும் இல்ல.
ஆனா என் பெண்ணை பார்க்க வந்து…எப்படி வேறு பெண்ணை முடிச்சிப்பான்…? அந்த ஆதாங்கமே எனக்கு. 
ஆனா புனிதா நிலை. கல்யாணம் முடிஞ்சு ஒரு குழந்தையோடு விட்டுட்டு போயிட்டா…அதுவும் அப்போ புனிதாவுக்கு பத்தொன்பது  வயசு தான்.
இந்த நிலையில் தான் என் கொஞ்ச நிலத்தைடும் விக்க கம்பத்துக்கு போனேன். அப்போ ஊரில் திருவிழா நடந்துட்டு இருந்தது. அங்கே தான் நான் நாரயணன் அப்பா குடும்பத்தை பார்த்தேன்.
குடும்பத்தோட  கோயிலுக்கு சாமி கும்பிட வந்து இருந்தாங்க. நானும் என் மனைவியும் அதே கோயிலுக்கு சாமி கும்பிட போய் இருந்தோம்.
அப்போ தான் பவித்ரன் வேணியை பார்த்தேன்.அவங்கல பார்த்ததும் அப்படியே அசந்துட்டேன். அவங்க இரண்டு பேரையும் பாக்க அப்படியே  ராஜா ராணி போல அவ்வளவு தேஜஸா இருந்தாங்க.
ஒருத்தர் கை ஒருத்தர் பிடுச்சிட்டு அப்படியே விடாது தான்  அவங்க அந்த கோயிலை சுத்தி வந்தாங்க.
பவித்ரன் அப்படியே அவன் அம்மா மாதிரி. வேணி  அச்சு அசல் வார்த்தது போல் என் சந்திரா போல. அவங்கல பார்த்த அப்ப தான் நான் என்ன காரியம் செஞ்சி வெச்சி இருக்கேன்னு உரச்சது.
நாரயணன் குடும்பம் என்ன பார்த்தும் கண்டுக்காம போயிட்டாங்க. பவித்ரன் மட்டும் என்னை பார்த்துட்டு முறச்சிட்டு போயிட்டான்.
வேணி என் நன்பனின் மறுவுருவாய் இருந்தவளுக்கு நான் யாருன்னு கூட தெரியல. அவங்க குடும்பத்தையும் என்னையும் மாறி மாறி குழப்பமா பார்த்துட்ட போயிட்டா…
அதுக்கு அப்புறம் தான் பவித்ரன் வேணியை பத்தி விசாரிச்சேன். பவித்ரன் சென்னையில் தான் ஒரு ஐடி கம்பெனியில ஒர்க் பண்றது தெரிஞ்சது.
அதுவும் அந்த கம்பெனி நம்ம கம்பெனி கூட டைய்யப்ல இருக்க கம்பெனி தான். வேணி படிச்சிட்டே ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துட்டு, அரசுவேலைக்கும் தேர்வு எழுதுறதா தெரிஞ்சது.
சென்னையில் இவள் அப்பன் ஆயிரம் பேருக்கு வேலை போட்டு கொடுத்துட்டு இருக்கான். அவன் பொண்ணு ஒரு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பாக்குறத நினச்சி மனசுக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சி.
சென்னை வந்ததும் சந்திரா கிட்ட இதை சொன்னதோடு தன் கைய்பேசியில் நான் பிடிச்ச அவங்க குடும்ப புகைப்படத்தை காட்டினேன்.
அந்த புகைப்படத்தையே கொஞ்சம் நேரம் உற்று  பார்த்துட்டு இருந்த சந்திராவின் கண்ணில் இருந்து தன்னால் கண்ணீர் வந்துட்டே இருந்தது.
பிறகு கண்ணை துடைத்துக் கொண்டவன்.  என் பெண்ணுக்கு நான் இது வரை செய்யாத்தையும் சேர்த்து வைத்து செஞ்சி முடிப்பேன்டா என்று சொன்னவன் முதல் வேலையா…
பவித்ரன் வேலை  செய்யிற கம்பெனிக்கு இரண்டு தடவை  பிசினஸ் பேசுவது போல் பவித்ரனை பார்த்துட்டு வந்தான்.
அந்த இரண்டு தடவையும் அவனை பார்த்துட்டு வந்துட்டு… “ பையன் நல்லா இருக்கான்டா…விவரமானவன் தான். பாக்க நல்ல பையனா தான் தெரியுறான்.” என்று  என் கிட்ட அவனை பத்தி அடிக்கிட்ட சொல்லிட்டு போனவன்…
கொஞ்ச நேரம் கழிச்சி… “சம்பளம் கம்மிடா…நான் என்  ட்ரைவருக்கு கொடுக்கும் சம்பளம் தான்டா அவன் வாங்குறான். ஏதாவது செய்யனும். அதுவும் அவன் என்  மகள கல்யாணம் செய்துக்க போறவன். அவன் இப்படி இருக்க கூடாது.”
இப்படி தான் பேசிட்டே இருந்தான் சந்திரா…அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் நம்ம குழுமத்தின் பங்கை உங்க அப்பாவுக்கு தெரியாம மத்தவங்க கிட்ட இருந்து  வாங்க ஆராம்பிச்சிட்டான்.
நான் கூட அவன் கிட்ட… “என்னடா..இப்படி செய்யிற…? நீயே பிரச்சனைய விலை கொடுத்து வாங்காதடா…” என்று சொன்னதற்க்கு…
“இது ஒன்று தான்  கிருஷ்ணாவை என் மகளாய் காட்ட போற அடையாளம். இது வரை எப்படியோ இனி அனைவருக்கும் அவள் என் மகளாய் தான் தெரியனும். நான் ஏன் என் மகளுக்கு வேறு  சொத்து வாங்காம நம்ம குழுமத்தின் பங்கை வாங்கினேன். நான் இல்லை என்றாலும் அவள் என் மகளாய் அனைவருக்கும் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று தான்.”
ராஜசேகர் அனைத்தையும் சொல்லி முடித்த பின் கண் மூடிக் கொண்டார்.
****************************************************மக்களே அவ்வளவு தான் ப்ளாஷ் பேக் முடிஞ்சது. இனி விறு விறுப்பாய் அடுத்து அடுத்து கதை நகரும். இந்த கதையை நாப்பத்தை ஐந்து அத்தியாயத்தில் முடித்து விடுவேன்.

Advertisement