Advertisement

அத்தியாயம்….38
 தன்னை சரியாக கணித்த உதயேந்திரனை அந்த நிலையிலும் ராஜசேகர் தன்  மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால் தான் பெரியவர் பரமேஸ்வரர் இருவருடமாய்  தன் மருமகன் சந்திரசேகரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு…
“என் சின்ன மகன் இங்கு வந்தால்…இங்கு என்ன…? என்ன…? நடக்குது என்பதை நிமிடத்தில் கண்டு பிடித்து விடுவான்.” என்று  அடிக்கடி தன்னிடம் சொன்னது இப்போது நியாபகத்திற்க்கு வந்தது.
ராஜசேகர் தன் பழைய நியாபகங்களை புரம் தள்ளி விட்டு… “நீ சொன்னது சரி தான். சந்திரா கூட முதலில் வேண்டாம் என்று தான் மறுத்தான்.” என்று சந்திரசேகர் சொன்னதும்…
மீண்டும் உதயேந்திரன் முகத்தில் நக்கல் தன்மையோடு எளக்காரமாய் ஒரு புன்னகை புரிந்தவன்… “ எல்லாம் பாசாங்கு. மனதில் அந்த ஆசை இல்லாமல் இருந்து இருந்தால், முதலில் என் அக்காவை பற்றி உங்களிடம் சொல்லியே இருக்க மாட்டார்.
அவர் மனதின் ஆசைக்கு நீங்க நெய் ஊற்றியிருபிங்க. அவர் ஒன்னும் சின்ன பையனோ…டீன் ஏஜில் இருப்பவரோ கிடையாது. திருமணம் முடிந்து நாளும் தெரிந்த மனிதர் தான்.  மனதின் ஆசை யாரை விட்டது…?” என்று சொன்ன உதயேந்திரன் ராஜசேகரை பார்த்து மேலே சொல்லுங்க என்பது போல் சைகை செய்தான்.
“நான் சொன்னது போல சந்திரா இருமாதத்திலேயே  என்னை அவன் வேலை செய்த குழுமத்தில் இணைத்துக் கொண்டான். அங்கு போன பின் தான்…” என்று சொல்லி விட்டு மென்று முழுங்கி ராஜசேகர் உதயேந்திரனை பார்த்தார்.
 ராஜசேகரின்  பார்வையில் உதயேந்திரனுக்கு இப்போது நெஞ்சில் பாரம் ஏறியது. யாரும் சகோதரியை பற்றி இப்படி விசாரித்து இருக்க மாட்டார்கள். அதுவும் இருபது வருடம் கடந்து… அவளுடைய காதல் கதையை… முதலில் இது காதல் தானா…?  முதலில் அது உதயேந்திரனுக்கே தெரியவில்லை.
மனதில் கசப்பு இருந்தாலும், இப்போது தன் சகோதரியை பற்றி கேட்டால் இப்போது இருக்கும் மரியாதை கூட அவனுக்கு இருக்குமா தெரியாது. இருந்தும் உதயேந்திரன் அனைத்தும் தெரிந்துக் கொள்ள விரும்பினான்.
காரணம் கிருஷ்ணவேணி… அவனின் கிருஷ்ணாவுக்காக அவனுக்கு அனைத்தும் தெரிந்தே  ஆகவேண்டும். தான் அவளை கிருஷ்ணா என்று அழைத்தால் அதை அவள் காதலோடு உணர வேண்டுமே தவிர…
பழைய அழைப்பு அவளுக்கு நியாபகத்தில் வரமால் செய்ய வேண்டும். அதற்க்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் தான் அவனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்காவாவது முடியும்.
அதனால் … “எது இருந்தாலும் சொல்லுங்க அங்கிள். என் அக்காவின் தவறு இல்லாது இது சாத்தியம் இல்லை என்று எனக்கு நல்லா  தெரியும்.
முழுவதும் தெரிய வேண்டியது. இதில் யார்  யாரின் தவறு எவ்வளவு சதவீதம் என்பதே… அதனால எந்த பூசும் இல்லாது எல்லாமே சொல்லுங்க.” என்று உதயேந்திரனின் பேச்சில்..
ராஜசேகர் தைரியம் பெற்றவராய்… “முதல் நாள் உன் அக்காவை  ஆபிசில் பார்த்ததுமே தெரிஞ்சி போயிடுச்சி உங்க அக்காவுக்கு சந்திரா மீது இருக்கும் மயக்கத்தின் அளவு.
ஆம் அதை மயக்கம் என்று தான் சொல்ல வேண்டும். காதலுக்கு கண் இல்லை. ஆனால் அறிவு இருக்கும்.அழகு பார்த்து வருவதில்லை காதல். அது காதலுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மயக்கத்திற்க்கு…?
ராஜசேகர் ஜெய்சக்தியை முதன் முதலில் அவளிடம் கைய்யெப்பம் வாங்கும் போது தான் பார்த்தார். 
ஜெய்சக்தி  முன் பேப்பரை வைத்து… “இங்கு சைன் பண்ணுங்க மேடம்.” என்று ராஜசேகர் சொன்னதை காதில் வாங்கினார்கலா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனால் ஜெய்சக்தியின் பென் பிடித்த கை அந்த பேப்பர் மீது இருக்க, பார்வை மொத்தமும் அங்கு தன் தந்தையோடு பேசிக் கொண்டு இருந்த சந்திரசேகர் மீதே இருந்தது.
அதுவும் அந்த ஜெய்சக்தியின் பார்வையில் ஆசை என்று சொல்வதை விட, வெறி என்று சொல்லலாம். ஆசையாவது யாராவது  ஜெய்சக்தியிடம்…
 “அவனுக்கு திருமணம் முடிந்து விட்டது.  நீ அவனுக்கு இரண்டாம் தாராமாய் போனால், உன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்க வேண்டியது தான்.” என்று திரும்ப திரும்ப சொன்னால் கேட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆனால் வெறி…அது  பொருளோ…மண்ணோ பெண்ணோ…ஆனால் அதை ஆணோ என்று கூட இப்போதைக்கு கணக்கில் சேர்த்துக்  கொள்ளலாம். 
 அதை அடைந்தால் தான் அந்த வெறி ஒரு கட்டுக்குள் அடங்கும். ஜெய்சக்தி சந்திரா மீது செலுத்தும் பார்வையில் ராஜசேகர் அந்த வெறியை தான் பார்த்தார்.
பார்த்ததும் ராஜசேகருக்கு நன்கு தெரிந்து விட்டது. இவர்களை இணைக்க நான் அதிகம் மெனக்கெட வேண்டியது இல்லை என்று.
இதில் தன் நண்பன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிட்டும். ஜெய்சக்தியின் ஆசையை நிறைவேற்றினால்…முதலாளி பெண் ஆனா ஜெய்சக்தியாலேயே நான் நினைத்ததை நடத்திக் கொண்டு விடலாம் என்று…
தன் குறுக்கு மூளை  கொண்டு ஜெய்சக்தியின் தந்தை பரமேஸ்வரர் அந்த இடத்தை விட்டு அகன்றதும், ஜெய்சக்தி முன்  “சந்திரா ஊருக்கு போகும் போது என்னிடம் சொல். நானும் அப்பாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.” என்று சொன்ன நொடி…
அது வரை சந்திராவின் மீது  மட்டுமே வட்டம் அடித்துக் கொண்டு இருந்த ஜெய்சக்தியின் விழிகள்,  ஆச்சிரியத்தோடு ராஜசேகரை பார்த்தது.
பின் அவளே வலிய ராஜசேகரிடம்.. “நீங்க தான் புதுசா சேர்ந்த  லாயரா…?என்று கேட்டவள். ராஜசேகரின் பதிலை எதிர் பாராது தொடர்ந்து..
“அப்பா நேத்து கூட  உங்கல பத்தி வீட்ல சொல்லிட்டு இருந்தார். சின்ன வயசா இருந்தாலும் திறமை நிறைய இருக்குன்னு. உங்கல பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்று சொல்லிக் கொண்டே… ஜெய்சக்தி தன் கையை ராஜசேகர் பக்கம் நீட்டினாள்.
ஆனால் ராஜசேகர் ஜெய்சக்தியின் நீட்டிய கையை பற்றாது… ஒரு வித குறும்பு பார்வையுடன் சந்திரசேகரை பார்த்துக் கொண்டே… 
“இந்த கைய்ய  பிடிச்சா என் நட்பை இழக்க வேண்டியிருக்குமே மேடம்.” என்று சொல்லி விட்டு தன் சிரிப்பை அடக்குவது போல் நடித்தார்  ராஜசேகர்.
ஆம் ராஜசேகர் நடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஆண் ஒரு  பெண் மீது விருப்பம் இருந்தால் தான், அதை தன் நண்பனிடம் பகிர்வான். தன் கை பற்றாது தான் சந்திராவை பார்த்ததில் இருந்தே படித்த பெண்ணான ஜெய்சக்தி புரிந்து கொண்டு இருப்பாள்.
சந்திரசேகர் தன்னை பற்றி என்னிடம்  பேசியிருக்கிறான் என்று. இதில் ராஜசேகருக்கு இரு ஆதாயம். ஒன்று சந்திரசேகரும் ஜெய்சக்தியை விரும்புகிறான் என்று சந்திரா தன் விருப்பத்தை ஜெய்சக்தியிடம் சொல்லாமலேயே அவளுக்கு புரியும் படி செய்து விட்டான்.
இன்னொரு ஆதாயம்.. தங்கள் நெருக்கம். தங்கள் நட்பின் நெருக்கத்தை ஜெய்சக்தி எதிரில் காட்ட விரும்பினார் சந்திரசேகர். அது பல வகையில் அவருக்கு உபயோகமாய் இருக்கும் என்றே அவர் கருதினார்.
ராஜசேகரின் அனுமானம் சரியாகவே  வேலை செய்தது எனலாம். ஜெய்சக்தி கண்கள் பளிச்சிட… “அதெல்லாம் உங்க நட்பை இழக்க நான் விட மாட்டேன் அண்ணா.”  என்று சொல்லி கொண்டே தன் கைய் பற்றாது தன் நீண்டுக் கொண்டு இருந்த ராஜசேகரின் கையை பற்றிக் கொண்டாள் ஜெய்சக்தி.
ஜெய்சக்தியின் “அண்ணா…” என்ற அழைப்பு ராஜசேகருக்கு புனிதாவை நினைவு படுத்தவே செய்தது.இருந்தும் தன் முன் இருந்த தன் வசந்த காலத்தை மனதில் கொண்டவராய்…
சிரித்துக் கொண்டே… “என்னை அண்ணா என்று அழைத்து என் நண்பனின் தீப்பார்வையில் இருந்து என்னை காப்பாற்றிட்டேம்மா…”
இந்த பேச்சின் மூலம் ராஜசேகர் சந்திராவோடு தன் நெருக்கத்தை பறை சாற்றியதோடு, ஆபிசில் இருக்கும் அனைவரும் பார்க்கும் படி  ஜெய்சக்தியோடு நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
பின்  அவர் நினைத்த படி அனைத்தும் சரியாகவே நடந்தது. ஜெய்சக்தி தன் மனதை சந்திராவிடம் சொல்வதற்க்கு முன் ராஜாவிடமே பகிர்ந்தாள்.
“நான் உங்க பிரன்ட  ஓட்டலில் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சி போயிடுச்சி அண்ணா. அதுவும் என் பிரண்டுங்க உங்க ஆபிசுல தான் இத்தனை வருஷம் வேலை பாக்குறார். நீ இப்போ தான் பாக்குறேன்னு சொல்ற…”  என்று தோழிகளோடு நடந்த பேச்சு வார்த்தைகளை ராஜசேகரோடு பகிர்ந்துக் கொண்ட ஜெய்சக்தி…
தொடர்ந்து… “நான் இவரை முதலில் உங்க கூட தான்டி பார்த்தேன்னு சொன்னா கூட என் பிரண்ஸ் நம்பல அண்ணா.” என்ற ஜெய்சக்தி பேச்சின் மூலம் தான் இத்தனை நாள்  அவரை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டனே…என்ற ஆதங்கமே மேலோங்கி காணப்பட்டது.
ஜெய்சக்தியிடன் நன்கு பேசியதிலிருந்து  அவள் சந்திரா மீது எவ்வளவு ஆசை வைத்திருகிறாள் என்பதை முதலில் அறிந்துக் கொண்டார்.
பின் நேரம் பார்த்து ராஜசேகர் ஜெய்சக்தியிடம்… “இதோ இந்த கம்பனி பொறுப்பே உங்க அப்பா சந்திராவை நம்பி விட்டு இருக்கார். அந்த அளவுக்கு அவனிடம் திறமை இருக்கு. அழகு அதை நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை. இவ்வளவு இருந்தும் என்ன பிரயோசனம்… அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லையே…”என்று சந்திராவை நினைத்து மிகவும் கவலை படுவது போல ராஜசேகர் பேசினார்.
“என்ன அண்ணா அவருக்கு என்ன…? ஏதாவது பிரச்சனையா…?” ஜெய்சக்தி பதட்டத்துடன் கேட்டாள்.
 ராஜசேகர் தன் பேச்சுக்கு ஜெய்சக்தியிடம் இருந்து என்ன எதிர் வினை எதிர் பார்த்தாரோ சரியாக அதையே தான்  அவளும் பேசினாள்.
“சந்திராவுக்கு குடும்பத்து மேல ரொம்ப பிரியம்மா…அவன் குடும்பத்துக்கு அவன் மகனோட சந்திராவின் அப்பா தங்கை குடும்பத்து மேல ரொம்ப பிரியம்.”  என்று பேசிக் கொண்டு இருந்த ராஜசேகரை ஜெய்சக்தி அதற்க்கும் சந்திரா அதிர்ஷ்ட்டம் கெட்டவன் ஆவதற்க்கும் என்ன சம்மந்தம் என்பது போல் பார்த்தாள்.
“இவனோட அந்த பிரியம் தான்மா இவனோட ஆசை இவனோட கற்பனை எல்லாம் குழி தோண்டி புதைய காரணம் ஆயிடுச்சி.” என்று சொல்லி விட்டு ஜெய்சக்தி பார்த்தார் ராஜசேகர்.
“அண்ணா நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னே எனக்கு புரியலேண்ணா…”என்று ஜெய்சக்தி சொன்னதும்,
“இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியலேம்மா…” என்று தன் பேச்சை  இழுத்து பிடித்து நிறுத்திய ராஜசேகர்.. பின் நடந்த உண்மையை சொல்லி முடித்தார்.(இதை மட்டும் அப்படியே தான் சொன்னார் ராஜசேகர்.)
தான் சொல்ல சொல்ல ஜெய்சக்தியின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி. ஆச்சரியம், பின் கோபம் என்று ஜெய்சக்தியின் முக மாற்றத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு சொல்லி முடித்த ராஜசேகர்.
பின்.. “இப்போ நீ சொல்லும்மா…?” முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என்பது போல் ராஜசேகர் பேசினார்
“இதில் பேச என்ன இருக்குண்ணா…அவருக்கு திருமணம் ஆயிடுச்சி.” அவ்வளவு தான்  என்பது போல் பேசிய ஜெய்சக்தி..
பின் “என் கிட்ட அதை சொல்லி இருக்கலாம். அவரே சொல்லி இருக்கலாம். இதை சொல்லவாவது அவர் என் கிட்ட பேசியிருக்கலாம்.”
ஜெய்சக்தியின் இந்த பேச்சின் மூலம் ராஜசேகர்  புரிந்துக் கொண்டது இதை தான். ஜெய்சக்திக்கு சந்திரசேகர் மீது அளவு கடந்த ஆசையோடு அவன் தன்னிடம்  சகஜமாக பேசவில்லையே என்ற ஆதாங்கம் இருக்கிறது.
தான் சொன்னதில் ஏற்கனவே சந்திராவுக்கு திருமணம் ஆனதை கேட்டு இனி அவர் தனக்கு கிடைக்க மாட்டார் என்று நினைக்கும் போது கூட இதை தன்னிடம் சொல்லவாவது பேசியிருக்கலாமே என்ற  ஆதாங்கம் ஜெய்சக்தி மனதில் இருப்பதை ராஜசேகர் அறிந்துக் கொண்டார்.
 
 

Advertisement