Advertisement

UD:16 Part 2

 அவள் செய்கைகளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன் சிரிப்பை அடக்க தெரியாமல் சிரமப்பட்டு கொண்டு இருக்க, ‘ஐயோ கொசுக்குட்டி… பிளீஸ் டி என்னால சிரிப்பை கன்டிரோல் பண்ண முடியலை… நீயே சீக்கிரம் என்டு கார்ட்டு போடு இதுக்கு….’மனதில் தன் மனையாளிடம் பேசிக் கொண்டு இருந்தவன். வெளியே முகத்தை வெகு தீவிரமாக வைத்து கொண்டு படிப்பதை போல் பாவனை செய்துகொண்டு இருந்தான்.

 

‘அட…. லூசே…. நான் வந்தது கூட தெரியாமல் நிக்குறான் பாரு. இவன் எல்லாம் என்னதான் பிஸினஸ் மேனோ…. ‘ என்று அவனை கேலி பேசியவள், அப்படி என்னதான் செய்கிறான் என்று அவனை சற்று நெருங்கி எட்டி பார்த்தவளுக்கு புசுபுசுவென கோபம் வர,

 

வேகமாக அவன் அருகில் சென்று அவன் கையில் இருந்த நாவலை வெடுக்கென்று பிடுங்கியவள். அவனை பார்த்து முறைத்துக் கொண்டே , “இது என்னுடைய புக்கு….” என்று அதை கட்டி கொண்டாள்.

 

இருவரும் சில நொடிகள் ஒருவரையோருவர் முறைத்துக் கொண்டு நின்று இருந்தனர்.

 

பின் அவளை முறைத்து கொண்டே நகர போனவன் தண்ணீர் பாட்டிலை கண்டு அதை எடுத்து குடிக்க போக, அதையும்  பிடுங்கிக் கொண்டு , “என்னோட வாட்டர் பாட்டில்…” என்று அதையும் கட்டிக் கொண்டாள்.

 

எதுவும் கூறாது பெருமூச்சொன்றை விட்டு அவளை முறைத்துக் கொண்டே அவளை தாண்டி சென்று படுக்கையில் படுத்துக் கொண்டான் அமைதியாக.

 

அவளின் செய்கைகள்  எல்லாம்  ஒரு குழந்தையின் செயலாகவே தெரிய, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அதை மனதில் அடக்கியப்படி இருந்ததால் , அவன் வாயை திறக்கவில்லை …..

 

அவன் தன் படுக்கையில் படுத்ததும் அதிர்ந்தவள், அவசரமாக தன் கையில் இருந்ததை மேசையின் மீது வைத்துவிட்டு அவன் அருகில் சென்று, “இது என்னோட பெட்…. ஒழுங்கா கிழே இறங்கு…” கோபத்தில் கத்தியவளை நிதானமாக பார்த்தவன் பதில் எதுவும் கூறாமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

 

அதில் மேலும் கோபம் பெருக, “எந்திரிடா தடிமாடு….. ” சண்டைக்கு நின்றவளை நிதானமாக பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டு “முடியாது….” ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க…..

 

கோபத்தில் மேலும் கீழுமாக மூச்சு வாங்க நின்று இருந்தவள் படுக்கையின் மறுபுறம் வந்து அவன் அருகில், சற்று இடைவெளி விட்டு மண்டியிட்டு அமர்ந்து, “ஒழுங்கா எந்திரிடா பன்னி…. இது என்னோட பெட்…. இப்ப எந்திரிக்க போறியா இல்லையா….. ” ஆவேசமாக கேட்டவளுக்கு, அசால்ட்டாக

 

“முடியாது டி…. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…..” என்றுவிட்டு கண்களை மூடிக் கொண்டான்.

 

அவனது பதிலில் ஆத்திரம் தலைக்கேற அவனை பிடித்து தள்ளி விட வந்தவளை, ஓர கண்ணால் அவளை பார்த்து கொண்டு இருந்தவன் அவள் செய்ய போகும் காரியத்தை உணர்ந்து. சட்டென்று ஒரு விரல் நீட்டி  அவளை தடுத்து,

 

“ச்சு… ச்சு….. இந்த தொடுர வேலை எல்லாம் வச்சுக்காத… கண்டிஷன்ஸ் நியாபகம் இருக்கா இல்ல மறந்து போச்சா….” நக்கலாக வந்தது அவனது வார்த்தைகள்.

 

அவனை தள்ளி விட நீட்டிய கைகள் அவனது வார்த்தையில் அந்தரத்தில் தொங்க, அந்த கைகளாலே அருகில் இருந்த தலையனையை ஆவேசமாக எடுத்து, சம்மணம் இட்டு அமர்ந்து தன் மடியில் வைத்து கொண்டு, தன் நகத்தை கடித்தப்படி அவனை எவ்வாறு படுக்கையை விட்டு இறங்க செய்வது என்று யோசிக்க தொடங்கினாள்.

 

தலையணையை தட்டிய வாரே யோசித்துக் கொண்டு இருக்க, மண்டையின் மேல் பல்பு எரிவது அவள் முகத்தில் தெரிந்தது. அவளை ஓர விழியில் சைட் அடித்துக் கொண்டு இருந்தவன் அவள் முகம் பிரகாசமாவதை கண்டு, ‘ஆஹா…. கொசுக்குட்டி ஏதோ பிளான் போட்டுருச்சு….. அலர்ட் ஆகுடா நந்தா….’மனதில் அவன் நினைத்து முடிப்பதற்குள்,மஹா தன் தாக்குதலைத்​ தொடங்கினாள்.

 

தான் வைத்து இருந்த தலையணையை கொண்டு அவனை தள்ள முயற்சித்தாள்.

 

இதை சற்றும் எதிர்பார்க்காதவன், “ஏய்… என்னடி பண்ணிட்டு இருக்க….?” சந்தேகமாக கேட்க,

 

“ஆங்…. நான் தானே உன்னை தொட கூடாது.. இந்த தலைகாணி தொடலாம் இல்ல… அதான் தலைகாணியை ஆயூதமா மாத்தி உன்னை தள்ளுறேன்….” தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி அவள் அவனை தள்ள, இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காததால், தடுமாறி போனான் நந்தன்.

 

அவன் சுதாரிக்க நேரம் அளிக்காமல் அவனை படுக்கையின் விழும்பு வரை தள்ளி கொண்டு போக. இனி விட்டால் நாம் கீழே விழ போவது உறுதி என்ற நிலையில் அவன் கைகள் பிடிமானத்திற்கு அலைந்தது .

 

கடைசியாக ஒரு முறை தன் பலத்தை கூட்டி தள்ள, பிடிமானத்திற்கு அலைந்த அவன் கைகள் அவளது இடையை சுற்றி வளைத்து பற்றியது. அவள் தள்ளவும், இவன் அவளது இடையை பற்ற, இருவரும் ஒருசேர்ந்த வாரே சுருண்டு படுக்கையை விட்டு  கீழே விழுந்தனர்.

 

“ஆஆஆ…..” கட்டாந்தரையில் மஹா தன் தலையை வலது கையால் தேய்த்துக் கொண்டு இருக்க, அவளை கைகளால் சுற்றி அணைத்தவாரு நந்தன் அவள் மேல் படர்ந்து இருந்தான்.

 

இப்படி ஒரு சூழ்நிலையை சற்றும் எதிர்பாராதவன், அவளது மதி முகத்தை அருகில் கண்டதும் தன் நிலையை மறந்தான். தன் தலையில் விழுந்த அடியை தேய்த்துக் கொண்டே அவனை திட்ட முகத்தை அவன் புறம் திருப்பியவள், வெகு அருகில் தெரிந்த அவனது கம்பீரமான முகமும், கண்களில் தெரிந்த உணர்வும் அவளை நிலை தடுமாற செய்தது…

 

படபடக்கும் விழிகளால், வேகமாக மூச்சு வாங்க அவனையே பார்த்து இருக்க, அவன் தன் இடது கையால் அவள் பட்டு கன்னத்தை வருட, அதில்  உடல் சிலிர்த்தவளின் விழிகள் மயங்கி அவனது விழியோடு கவி பேச உணர்ச்சியின் பிடியில் இருவரும் தங்களையும் தங்கள் கண்டிஷன்ஸையும் மறந்தார்கள்.

 

அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தவன் மெல்ல குனிந்து அவள் ரோஜா இதழை சிறை செய்தான் தன்னையே அறியாமல். மென்மையாக என்றாலும் அவனது இச்செயலில் அவனை தடுக்க தோன்றாமல் கண்களில் அதிரிச்சியை மட்டும் காட்டியவள்  மெல்ல அதில் மூழ்கி தன்னை தொலைக்கவும் செய்தாள்.

 

இதற்கு முன்னர் அவனது செயலில் எதிர்ப்பை காட்டாதவள், மறுமுறை அதிர்ந்து அவனுடன் சண்டைக்கு நின்றவள் இப்பொழுது மனதில் தோன்றிய கணவன் என்ற உரிமை உணர்வால், அவளது கைகள் மெல்ல அவனது ஷர்ட் காலரை இறுகி பற்றிக் கொண்டது.

 

தங்களை மறந்து, தங்களை ஒருவருக்கொருவர் உணர்த்திக் கொண்டு இருந்த நொடிகள், பல நிமிடங்களாக தொடர்ந்தது. பின் அவள் மூச்சுக்காற்றுக்கு திணறுவதை உணர்ந்து அவளது இதழை மனமே இன்றி அவன் விடுவித்து அவளது முகம் பார்க்க. கண்களை மூடி வேகமாக மூச்சை வெளி இட்டு கொண்டு இருந்தவளை கண்டு லேசாக புன்னகை புரிந்தவன். அவள் பட்டு கன்னத்தை வருடி அவளை ஆசுவாசப் படுத்தினான். அவனது தொடுகையில் மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள், அவனது புன்னகை முகத்தை கண்டு முதலில் மயங்க…. பின் நொடியும் தாமதிக்காது அவள் அடுத்த செயலை செய்தாள்….

 

மயக்கத்தில் இருந்து வெளி வந்த மஹா, தாங்கள் இருக்கும் நிலையும் சற்று நேரத்திற்கு முன் நடந்த இதழ்களின் சமரசமும் மஹாவின் மயக்க நிலையை கலைய செய்தது. தன் நிலை வந்தவள், அவன் பற்றி இருந்த ஷர்ட் காலரை விடுவித்து அவன் நெஞ்சில் கை வைத்து வெறி கொண்டு தள்ள…. படுக்கைக்கு கீழே மஹாவின் மேலே படர்ந்து இருந்தவன் அவளது இச்செயலை எதிர் பார்க்காததால் படுக்கையின் விளிம்பில் பின் மண்டையில் பலமாக இடித்துக் கொண்டான்.

 

இடித்ததின் பலனாக வலியில் முகம் சுருங்க, வலது கையால் பின்னந்தலையை பற்றி கொண்டவனின் பிடி இலகுவாக அந்த நொடியை பயன் படுத்தி அவனிடம் இருந்து அவசரமாக பிரிந்து விலகி நின்றாள் மஹா.

 

“ஸ்ஸ்…. ஆஆ…..” பின்னந்தலையில் தடவியபடி கண்களை இறுக மூடி அமர்ந்தான் நந்தன்.

 

இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு…அவனையே முறைத்து கொண்டு நின்றாள் மஹா…. சில நொடிகள் தலையை தேய்த்துக் கொண்டு இருந்தவன் இந்த வலிக்கு காரணம் ஆனவளை ஒருவழி செய்து விடும் நோக்கோடு கண்களை திறந்து அவளை பார்க்க, கோபம் இருந்த இடம் தெரியாமல் ஓடியது… மூச்சு விட மறந்து அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் நிலைதடுமாறி.

 

அவள் அவசரமாக எழுந்ததில் அவளது புடவை சற்று நலுங்கி விலகி இருக்க கீழே அமர்ந்து பார்த்தவனின் நிலை தான் மோசமானது…..

 

‘ஆஆஆ…. கொசுக்குட்டி கொல்லுறாளே… நான் பார்க்குறேன் தெரிஞ்சா அடுத்த ரூம் வார்யை (war) ஆரம்பிப்பா… கன்டிரோல் டா நந்தா.. அவளை பார்க்காத… பார்க்காத… ‘ மனதில் எண்ணி கொண்டவனால் அதை செயல் படுத்ததான் முடியவில்லை.

 

மனதின் பேச்சை கேட்காமல் ஹார்மோன்களின் பேச்சை கேட்க நேர்ந்தது நந்தனுக்கு… சில நொடிகள் நீடித்த அந்த பார்வையை கூட உணராமல் அவனை முறைக்கும் செயலை செய்து கொண்டு இருந்தாள் மஹா.

 

இதற்கு மேல் தாங்காது என்று முடிவு செய்து…. தன் பார்வையை கஷ்டப்பட்டு திருப்பிக் கொண்டு எழுந்து நின்றவன்… தலையில் விழுந்த அடியும், அழகிய சூழல் கலைந்ததாலும், கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று கடுப்பிலும், “லூசா டி நீ….” என்று எரிந்து விழுந்தான் அவள்மேல்….

 

“நீ தான் டா லூசு…. கிராக்கு…. அரை மென்டல்…” மேலும் தொடர போனவளை இடையிட்டவன்,

 

“ஏய்… என்ன டி திமிரா…?ஓவரா பேசுற…” ஒரு விரல் நீட்டி அவளை மிரட்ட,

 

“ஆமா டா என்ன பண்ணுவ? பெருசா டைலாக் விட்ட… உன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது… அது…இதுனு… இப்ப இப்படி பண்ணுற…  குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்லுற மாதிரி… பேச்சுலர் பேச்சு கல்யாணம் ஆன போச்சா…” ஆவேசத்தில் மூச்சு வாங்க பேசியவளை கோபமாக பார்த்தவன்…

 

“ஆமா டி சொன்னேன்… இப்ப என்ன அதுக்கு…. நான் என்னமோ உன்னை ரேப் பண்ண ரேஜ்க்கு பேசுற… நான் கிஸ் அடிக்கும் போது நீயும் தானே கம்பெனி கொடுத்த.. என்னமோ… அதுக்கு வேண்டாம்னு நீ உயிரை குடுத்து போராடுன மாதிரி பேசுற…” பதிலுக்கு எகிர,

 

அவனது வார்த்தையில் அதிர்ந்து சில நொடிகள் அமைதியானவள் ,’சை… அவன் சொல்லுறதும் உண்மை தானே… நானும் தானே அதில்… அதில்… சே சே… எல்லாம் இவனால் தான்…’ மனதில் உண்மையை உணர்ந்தவள் வெளியே அவனிடம் அதை ஒப்புக் கொள்ள அவளது ஈகோ தடை செய்ய,

 

“நீ தான் என்னை அப்படி பண்ண வச்ச… நான் குட் கேர்ளா தான் இருந்தேன்….நீ தான் என்னை பேட் கேர்ள் ஆக்க டிரை பண்ணுற…” பழியை  முழுவதும் அவன் மேல் சுமத்த, வெறியானான் நந்தன்.

 

“யாரு நீ குட் கேர்ள்….  நான் தான் உன்னை கெடுக்குறேன் ….?” நக்கலாக கேட்டு பார்வையை அவள் மேல் செலுத்தினான்,

 

“ஆமா டா… எல்லாம் உன்னால் தான் டா காண்டாமிருகம்….”அவன் அருகில் வந்து சண்டை கோழியாக நிற்க,

 

“நீ தான்டி இப்படி எல்லாம் டிரேஸ் பண்ணி என்னை டெம்ட்டு பண்ணி கெட்டவன்  ஆக்குற… ” விரல் நீட்டி அவளது தோற்றத்தை அவன் சுட்டிக் காட்ட,

 

“என்னது நானா…” சந்தேகத்தோடு அவன் சுட்டிக் காட்டிய தன்னை குனிந்து பார்த்தவள்…. அதிர்ந்து அவசரமாக அவனக்கு முதுகு காட்டி நின்று தன்னை சீர் செய்து கொண்டாள்.

 

இருவரும் கீழே விழுந்த வேகத்திற்க்கும், அவள் அவசரமாக எழுந்து நின்றதிலும்… அவளது உடை ஆங்காங்கே கலைந்து இருக்க… அதை கவனிக்க தவறியவளின் விழிகளில் படாமல் அவனது விழிகளுக்கு விருந்தாகியது…

 

அவள் திரும்பி தன்னை சரி படுத்திக் கொள்ள… அவன் தன் பின்னந்தலையை கொதி தன்னை சமன் செய்து கொண்டான்… தன் நிலையை எண்ணி கோபம் தலைக்கேற ஆவேசமாக அவன் புறம் திரும்பியவள், “எல்லாம் உன்னால தான் டா தடியா…. நீ…. நீ…” கோபத்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல் வார்த்தையை தேட,

 

அவளை நோக்கி முன்னேறியவன், “இதுக்கு மேல உன் வாயை தொரந்த… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…. ” வலது கையை அவள் கழுத்தை நெறிப்பது போல் செய்து காட்ட,

 

“காண்டாமிருகம் உன்னை சும்மா விட மாட்டேன் டா… எல்லாத்துக்கும் காரணம் நீ தான்… ” என்று மீண்டும் சொன்னதையே திரும்பிச் சொல்ல…. எரிச்சல் அடைந்த நந்தன்,

 

“யாரு டி காரணம்? நானா… நீயா…? சும்மா இருந்த என்னை வம்புக்கு இழுத்தது நீ… படுக்கையில் இருந்து தள்ளி விட்டது நீ… அப்புறம் என்னை டெம்ட்டு பண்ணதும் நீ… பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு என்னை சொல்லுறீயா…. ” பேச வாய் எடுத்தவளை இடது கையை நீட்டி தடுத்தவன், மேலும் தொடர்ந்தான்,

 

“இதுக்கு மேல எதாச்சும் பேச வாய் தொரந்த உண்மையாவே உன்னை ஏதாச்சும் பண்ணிடுவேன்… ஒழுங்கா இருந்துக்கோ…. ” என்று கோபத்தில் கத்திவிட்டு படுக்கையின் ஒரு ஓரம் படுத்துக் கொண்டவனை கண்டு அதிர்ந்து விழித்தவள் மெல்லிய குரலில்,

 

“இது என்னோட பெட்…” சொல்லி முடிக்கும் முன் வாய் கப்பென்று மூடிக் கொன்றது அவனது தீப் பார்வையை கண்டு…

 

சில நிமிடங்கள் படுக்கையின் அருகில் நின்று லேசாக சிணுங்கியபடி முந்தானையை திருகி கொண்டு இருந்தவளை ஓர விழியால் கவனித்துக் கொண்டு இருந்தவன், “என்னல உனக்கு சம்பளம் எல்லாம் தர முடியாது…. உன்னோடு இந்த செக்யூரிட்டி வேலைக்கு…” என்று நக்கலாக கூறி விட்டு ஒருக்களித்து படுத்தவனை முதலில் புரியாது பார்த்தாள் மஹா…

 

அவன் கூறியது புரிந்ததும் கோபம் தலைக்கேற, ‘நான் இவனுக்கு செக்யூரிட்டியா…? டேய் பன்னி.. உன்னை….’ மனதில் திட்டியவள் அவனை அடிக்க ஓங்கி கொண்டு வர அதை செயலாற்ற  முடியாமல், “சை…. ” என்று உதறி விட்டு ஆவேசமாக படுக்கையின் மறுமுனைக்கு வந்து பொத்து என்று அமர்ந்தாள்…

 

“இவனை நம்பி எப்படி படுக்குறது??? நடுவுல எந்திரிச்சு ஏதாச்சும் பண்ணிட்டா…. காண்டாமிருகம் பண்ணாலும் பண்ணும்….” அதிர்ந்து கைகளால் வாயை இறுக பொத்திக் கொள்ள, மெல்ல அவனை திரும்பி பார்த்து,

 

“ம்ஹூம்…. இவனை நம்ப கூடாது… என்ன பண்ணலாம்….” தீவர யோசனைக்கு பின் வேறு வழியின்றி மனதில் இருந்ததை செயலாற்றினாள்.

 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் மறுபுறம் திரும்பி புரண்டு படுக்க… தூக்க கலக்கத்தில் லேசாக கண்ணை திறந்து பார்த்தவன் அதிர்ந்து, அவசரமாக எழுந்து அமர்ந்து அறையில் இருந்த கடிகாரத்தை பார்க்க…. அது மணி 2 என காட்டியது.. இவளை என்ன செய்வது என்று புரியாமல் தன் நெற்றியில் அறைந்து கொண்டான் கடுப்பில்…..

கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement