Advertisement
எஸ் எஸ் என்று மனது குதுகலித்தது… இதோ படிப்பை முடித்ததும் இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனி யில் உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம்
பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது..
ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்… யுரோ வில் சம்பாதிக்கப் போகிறாள் ..
நாட்கள் எவளவு வேகமாக ஓடி விட்டன.. இப்போது தான் கலூரியில் சேர்ந்தது போல இருக்கிறது முடித்து விட்டால்
ஏன் கமலனே இரண்டாவது வருடத்தில் இருந்து மூன்றாவது வருடம் போகப் போகிறான்
==================================================
சரி போயிட்டு வா என்றவர் சும்மாவா போவ இரு என்று அன்றுஅவர் செய்திருத்த பால் கொழுக்கட்டையை கொடுத்தவர் தம்பி இருந்தா அவருக்கு குடுத்துட்டு சொல்லு என
அவனால் தானே இது உண்மையில்
ஆம் அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற வைராகியம் இருந்ததால் தான் நூறு சதவிகித உழைப்பை கொடுத்திருந்தால்
ஒரு வகையில் அவனால் கிடைத்த வெற்றி… பார் நான் சாதித்து விட்டேன் என்று அவனிடம் சொல்லும் ஆர்வம்
ம்ம் குடுங்க என்று சொல்லி எடுத்து போக
அங்கே மருது ஸ்டோர்ஸில் அவன் இல்லை
========================================================
சிறு பெண் என்பதால் யாரையும் அனுப்பாமல் அவனே அவளின் பத்திரதிர்க்காய் வந்திருந்தான்.. யாரென்று தெரியாத ஒரு பெண் அவளின் பத்திரம் கூட அவனுக்கு முக்கியமாய் இருக்க.. ஜெயந்தியின் பத்திரம் எவ்வளவு நினைப்பான் அவன்..
இவனை பார்த்ததும் சிகரெட்டை முதுகிற்கு பின் மறைத்து பவ்யமாய் நின்றனர்.. ஆனால் மருது கவனித்து விட்டான்.. அவர்கள் சிகரெட் பிடிப்பதையும் பின் இவனை பார்த்ததும் அவசரமாய் மறைத்ததையும்.
ஜெயந்தி இவனை பார்த்து விட்டாலும் யாரோ ஒரு பெண் என்பதால் அருகே போகமால் அவள் வெளியேற காத்திருந்து அங்கேயே இருந்தாள்..
ஆனால் மருது பேசிக் கொண்டே அவளோடு தடுப்பின் வெளியே போக பார்க்க
சார் என்று அவளையும் அறியாமல் வேகமாக கூப்பிட்டு விட்டாள்.
ஜெயந்தியின் குரல் போல இருக்க அப்படியே மருதுவின் நடை நின்றது..
===================================================
ஜெயந்தி இங்க வந்தாளா என்றான் எடுத்த உடனே
ஆமாம் சர் பில்டிங் க்கு உங்களை பார்க்க வந்தா என
அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து விட்டான் பரபரப்பான அந்த சென்னையில் தடுப்பிற்கு உள்ளே ஏகாந்தம் தான் அதுவும் இருட்டி விட்டது இங்கேயானால் இவன்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அவளை தனியா அனுப்பிட்டு நீ என்ன பண்ற என்று மருது கத்திய கத்தல் கைபேசி இல்லாமலேயே விமலனுக்கு கேட்டிருக்கும்
மனம் எங்கே அவள் என்று அடித்துக் கொள்ள பார்வை சுற்று புறம் அலச யாரு என்னை பார்க்க வந்தா என்று மருது கேட்க,
ஒரு பொண்ணு தா அங்கே என்று வாட்ச் மேன் காண்பிக்க சரியாய் அந்த நேரம் ஜெயந்தி வெளிச்சத்திற்கு வர
அவளை பார்த்து விட்ட ஆசுவாசம் இருந்தாலும் மருது வின் கோபம் கட்டுக்கடங்காமல் செல்ல
என்ன பண்ற நீ இங்கே என்று பாய்ந்து வந்தான் அவளின் அருகே