Advertisement

“பையனை கண்டு பிடிக்க முடியுமா தம்பி?” என்றார் எடுத்தவுடனே அவர் மருதுவை பார்த்து.

“கேட்கறேன்னு தப்பா எடுக்காதீங்க, அவர் ஏதாவது பணத்தோட போயிருக்க வாய்பிருக்கா?” என்று கேட்க..

அவ்வளவு தான் எல்லோருக்கும் முன் ஜெயந்தி “அண்ணா அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.. அவன் ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட்.. செத்தாலும் திருட்டுன்ற ஒரு விஷயத்தை பண்ண மாட்டான்” என்றாள் தீர்மானமாக.

சிறிது தயங்கிய மருது “அப்போ பணத்துக்காக உங்கண்ணனை ஏதாவது செஞ்சிருக்க வாய்பிருக்கு” என்றான் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை அறிந்தவனாக.  

அவ்வளவு தான் ஏற்கனவே மனதில் அந்த பயம் கலைச்செல்விக்கு ஓடிக் கொண்டிருக்க,

அதனை கேட்டதும் மயங்கி விட்டார்…    

=====================================================================================

அவளுக்கு நாய் என்றால் அவ்வளவு பயம்…

அவள் கத்திய கத்தலுக்கு குதித்து வந்த ஜானியே ஒரு நொடி நின்று விட..

அதற்குள் மருது அதனை பிடித்துக் கொண்டான். அப்போதும் ஜெயந்தி கத்திக் கொண்டிருக்க…..

“கத்தாத பிடிச்சிட்டேன், வாயை மூடு” என்று மருது அதட்டினான். மருதுவின் அதட்டலில் வாயை மூடிக் கொண்டாள்.

பின்னே அவள் கத்திய கத்தலுக்கு ஜானி மட்டுமா பயந்தான், அவனுமே பயந்து விட்டான்..

==========================================================================================

அங்கே ஜீவா வாயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டிருந்தான்..

மருதுவை பார்த்ததும் “அண்ணா, அண்ணி செமல்ல, செம சத்தம் போ. அதுவும் உன்னோட உயிர் நண்பனை பார்த்து, ஹ, ஹ” என்று ,

“டேய், தண்ணி கொண்டு போடா. இவன் வேற நேரம் காலம் தெரியாம” என்று அதட்டிய போதும் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது..

தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப…

அவர் விழித்ததுமே “மா அண்ணனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது, பயப்படாத” என்று ஜெயந்தி தைரியம் சொல்ல,

“இவங்க வீட்லயே இவ தான் கொஞ்சம் தெளிவு போல” என்று நினைத்துக் கொண்டான்.

=================================================================================================

இவர்களை பார்த்ததுமே விஷால்.. “வாங்க மேம்” என்றழைத்து மருதுவின் கேபின் சென்று அமர வைத்தான்.

“சர் இன்னும் வரலீங்களா?”  

“அவர் எப்போவேனா வருவார், எப்போ வேணா போவார், இருங்க கேட்கறேன்” என்று சொல்லி கைபேசியில் அழைத்தவன், “அண்ணா அன்னைக்கு என்னை திட்டுணீங்களே அந்த மேம் வந்திருக்காங்க”  

அந்த பக்கம் கேட்ட மருதுவிற்கு புன்னகை..

“வர்றேன் இருக்க சொல்லு!” என்றவன் பத்து நிமிடத்தில் வந்தும் விட,

அதற்குள் அவர்கள் மறுக்க மறுக்க காபி வரவழைத்து கொடுத்தான் விஷால்,

“என்னக்கா? நம்மை இப்படி கவனிக்கறாங்க” என்று கமலன் கேட்க..

“தெரியலையேடா?” என்றவளின் மனதிற்குள் சற்று சந்தேகம்…

Advertisement