Advertisement

இதோ திருவிழா ஜோராய் களை கட்டியது. எருதாட்டாட்டமும் மிகுந்த பந்தோபஸ்துடன் நடந்து கொண்டிருந்தது.
நமது பாரம்பர்யத்தை கட்டிக் காக்க ஒரு முயற்சி! அழிந்து வருபவைகளை அழியவிடாமல் காக்கும் ஒரு உத்வேகம்!
சிறப்பாய் தான் நடந்து கொண்டு இருந்தது.
கண்ணன் எப்போதும் அங்கே எல்லாம் போகும் பழக்கம் கிடையாது என்பதால் அவன் வீட்டில் தான் ஆனால் அம்மா வீட்டினில் உடன் சுந்தரியும் அபராஜிதனும்.  அவனின் அப்பாவும் சித்தப்பாவும் திருவிழா நடக்கும் இடத்தினில் இருந்தனர்.
சுந்தரி இவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள் நீங்க போகலையா என்று.
பாரு அப்பாவும் சித்தப்பாவும் முனைப்பா இருக்காங்க அவங்க ஓய்வெடுக்கும் போது நான் போறேன் இதுவே எனக்கு ரொம்ப ரொம்ப அதிகம் நான் நினைச்சு பார்க்காத மாற்றம் என்கிட்டே என்று விட்டான்.
ஒரு வழியாக கார் பஞ்சாயத்தை முடித்திருந்தாள் சுந்தரி, வாயை திறந்து அவ கேட்டிருக்க கூடாது அப்படி கேட்ட பிறகு நாம செய்யாம் இருக்க கூடாது நம்மகிட்ட வசதியில்லைன்னா பரவாயில்லை ஆனா இருக்கு அப்போ என்ன நினைப்பா இந்த அண்ணா நமக்கு செய்யக் கூடாதான்னு தானே
ப்ச் புரிஞ்சிக்கோ சுந்தரி அவ எங்கப்பா கிட்ட இருந்தா ஆசைப் படலாம் ஆனா உன்கிட்ட இருக்குறது க்கு ஆசைப் படறது அதிகம்
ப்ச் நீங்க முதல்ல புரிஞ்சிக்கோங்க என்று அவனை போல பாவனை கான்பித்தவள் அவ பிரிச்சு பார்க்கலை உங்களையும் என்னையும் அவளை பொறுத்தவரை அண்ணன் கிட்ட இருக்கு அவ்வளவு தான்
எனக்கு அந்த எண்ணத்துல மாற்றம் வர்றதுல விருப்பம் இல்லை உங்களுக்கு புரியுதா என்று அவனை விடவும் சுந்தரி கடினமாய் பேச
இருவருக்குள்ளும் மீண்டும் ஒரு கடினமான சூழல்.
இரவின் தனிமையிலும் கூட முறைத்து தான் இருந்தான். மகனை தூகிக் கொண்டு வந்து படுக்க செய்து அவனும் படுத்துக் கொண்டான். எவ்வளவு சொல்லியும் அவளின் பிடிவாதத்தில் தானே நிற்கிறாள் என்ற கோபம்.     
கண்ணனுக்கு மிகுந்த கோபம் வந்த போதும் அவளின் இந்த எண்ணத்தை உடைக்க முற்பட்டால், மீண்டும் அவளும் அவனும் வேறு என்பது போல வரும் என்று புரிந்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாற அமைதியாய் கண் மூடிக் கொண்டான்
சுந்தரி உள்ளே வந்து கதவை தாளிட்டு அருகில் வருவது அவனுக்கு உணர்வாய் உணர்ந்தாலும் கண் திறக்கவில்லை.
என்ன வந்து கோபத்தில் அவள் ஒரு புறம் உறங்க போகிறாள் நடப்பது தானே என்ற சலிப்பும் தோன்ற கண் மூடிய நிலையிலேயே ஒரு புறமாய் திரும்ப படுத்துக் கொண்டான்.
ஆனால் என்னே அதிசயம் சுந்தரியும் சற்று கண்ணனிடம் மாற்றம் காண்பித்தாலோ. அவனின் அருகில் படுத்தவள் அவனை பின்புறமாய் அணைத்துக் கொண்டாள்  
அவள் அந்த துவனியில் பேசும்போது அவன் ஏன் எகிற போகிறான், கண்ணனுமே தணிவாய் பேசினான், நாம இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு, ஒருத்தி இல்லை மூணு பேர், எனக்கு சாரு ஸ்பெஷல் னாலும், மத்த தங்கைங்களும் அப்படி தான். சீர் ன்னு வரும் போது அதுல வித்தியாசம் காட்ட எனக்கு விருப்பமில்லை என்றான் தெளிவாய்
ப்ச் யாரு வித்தியாசம் காண்பிக்க சொன்னா சாரு க்கு செய்யறதை வாணிக்கும் செய்வோம் என்றாள்
ஒய் சுந்தரி எவ்வளவு செய்வோம், இது உங்கப்பா சம்பாத்தியம்
அதனால என்ன எங்கப்பா ரொம்ப சந்தோஷப் படுவார் நான் பெரிய குடும்பமா வாழணும்னு தான் அவருக்கு ரொம்ப ரொம்ப ஆசை.
அதுவுமில்லாம என் மனசு சொல்லுது நாம இன்னும் நல்லா வாழ்வோம் வசதி வாய்ப்புகள் பெருகும்னு அப்போ சாரு க்கு தோணலாம் இல்லையா இவ்வளவு வசதியிந்தும் ஒரு கார் வாங்கிக் கொடுக்க இவங்களுக்கு மனசு வரலைன்னு என்றாள்
நான் என்ன உனக்கு புரிய வைக்க ட்ரை பண்ணினேன்னு கண்டு பிடிக்க முடியலை இதுல வேற எல்லாம் பெருசா கண்டு பிடி என்றான்
அது உங்க விஷயம்னு வரும் போது என் கண்டு பிடிப்பு எல்லாம் வேலை செய்யறது இல்லை என்று கிண்டல் பேச
அடிங்க வாய் இருக்கே என்ற படி அவளின் உதடுகளை இரு விரல்களால் வலிக்கும் படி பற்ற
விடுங்க விடுங்க வலிக்குது என
அப்போதும் கண்ணன் விடாமல் இருக்க
அபியை எழுப்ப சுந்தரி கைகளை நீட்ட
அடியேய் சுந்தரி என்று அவசரமாய் விட
அது அந்த பயம் இருக்கணும் இப்போ என்ன விஷயம்னு சொல்லலைன்னா அவனை எழுப்ப போறேன் என்று போர்க்கொடி பிடித்தாள்.                 

Advertisement