Advertisement

மிகவும் பக்குவப் பட்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் கொஞ்சமும் பக்குவம் காண்பிக்க இஷ்டமில்லை. கண்ணனிடம் அவள் எதிர்பார்ப்பது கொஞ்சல்ஸ் ஆனால் அவனிடம் சுந்தரி காண்பிப்பது மிஞ்சல்ஸ். அவளுக்கு கொஞ்சல்ஸ் எல்லாம் வரவேயில்லை.
அவளுக்கு கொஞ்சல்ஸ் வந்தது அபியிடம் மட்டுமே அதுவும் அவனது அப்பாவை போல வரவில்லை அதுவும் ஒரு குறையாகிப் போனது.
இப்படியாக சுந்தரியை சில முறை சமாளித்தும் பலமுறை சமாளிக்க முடியாமலும் கண்ணன் திணறினான். ஆனாலும் என் மனைவி என்ற எண்ணம் இன்னும் இன்னும் ஸ்திரமாய் அமர்ந்துவிட இன்னொரு வார்த்தையில் சொல்லப் போனால் சுந்தரிக்கு பழகி விட்டான்.
பொட்டி படுக்கை கட்டாமல் போட்டது போட்டபடி போட்டபடி போட்டு சுந்தரியுடன் சேலத்திற்கு வந்துவிட்டான் கோவையை விட்டு, பரீட்சைக்கு மட்டும் சென்று விடலாம் என்று.
நிறைய வேலைகள் ஊருக்கு சென்று விடலாம் என்று தான் வந்தான் என்னே அதிசயம் ஊருக்கு வந்ததில் இருந்து அவ்வளவாக வேலைகள் இல்லை அளவாக தான் இருந்தது.
சுந்தரியும் அவளின் நர்சரியை விட்டு வெளியே வந்திருந்தாள். ஆம் இந்த வருடமாக அவள் நர்சரி வேலைகளை மட்டும் பார்த்ததினால் தான் அவனுக்கு நிறைய வேலைகள்
இப்போது சுந்தரி எல்லாம் பார்க்கவும் அவனுக்கு பெரிதாக வேலைகள் இருப்பது போலவே தெரியவில்லை. இது உழைப்பவர்கள் எளிதாய் செய்ய முடியும் வேலை தான்.
அபியுடன் அம்மா வீடு சென்று வந்தவன், வாணிக்கு இப்போ அஞ்சாவது மாசம் நாள் பார்த்துட்டு வந்திருக்காங்க இந்த வாரம் புதன் கிழமை நாள் நல்லா இருக்கு போகலாம் சொன்னாங்க என்றான்
ம்ம் என்று முடித்து விட்டாள் மனம் சுணங்க தான் செய்தது, ஏன் அவர்கள் என்னிடம் சொல்ல மாட்டார்களா என்று. ஆனாலும் காண்பித்து கொள்ளவில்லை.
சுந்தரியிடம் சொல்லக் கூடாது என்று இல்லை. சுந்தரி அளவாக பேசுவதால் இன்னும் உரிமைகள் அவளின் மாமியார்களுக்கு அவளிடம் வரவில்லை எல்லாம் கண்ணன் மூலமே சொல்லப் படும் ஆனால் அவர்களுக்கு மட்டும் தான் அப்படி மற்றபடி அவளின் மாமனார் ஆகட்டும் சின்ன மாமனார் ஆகட்டும் பெண் பிள்ளைகள் ஆகட்டும் சகஜமாய் தான் இருந்தனர்
இன்னும் பதினஞ்சு நாள்ல பண்டிகை வேற எல்லோருக்கும் துணி எடுத்துக் கொடுக்கலாமா இல்லை பணம் குடுத்துடலாமா என்றான்
உங்க விருப்பம் என்றாள்
ஒய் சுந்தரி ஏதாவது உருப்படியா சொல்லுடி நான் மட்டும் லொட லொட ன்னு பேசற மாதிரி இருக்கு என
அடுப்படியில் உருட்டிக் கொண்டிருந்தவள் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து துணியும் எடுத்துக் கொடுக்கலாம் பணமும் கொடுத்துடலாம் என்று முடித்து விட ‘
அடங்கம்மா நீ என்ன செலவை கூட்டுற ஆத்துல போட்டாலும் அளந்து போடணும், எல்லாம் நம்ம ஆளுங்க தான் நம்ம அப்பா அம்மா நம்ம தங்கச்சிங்க தான் ஆனா ஒரு முறை செஞ்சா மறுமுறை அதையே எதிர்பார்ப்பாங்க என்று பேசிக் கொண்டே அவள் சமைக்க செல்வதை பார்த்தவன்
நீ சமைக்க போறியா வேண்டாம் வேண்டாம் கடையில் வாங்கிக்கலாம் என்றான் அவசரமாக
நீங்க ரொம்ப பண்றீங்க என்றாள் முறைப்பாய் சுந்தரி
நல்ல சாப்பாடு சாப்ட்டு பழகிட்டேன் இது இறங்க மாட்டேங்குது என்று சொல்ல
சுந்தரிக்கு வந்த கோபத்திற்கு அவனை அடிக்க என்ன கிடைக்கிறது என்று பார்க்க
அவனானால் உண்மையை சொன்னா கோபப்படக் கூடாது என்று மீண்டும் வம்பு செய்ய
உங்களை என்று அவனை அடிக்க வர
முடிஞ்சா என்னை பிடிடி பார்க்கலாம் என்று அவன் தெனாவெட்டு காண்பிக்க
இவள் நடையை சிறிய ஓட்டமாக்க, அவன் பெரிய ஓட்டமாக்க, அந்த மாலை மங்கி விட்ட நிலையில் இருட்டு இன்னும் நன்கு கவிலாத நிலையில் பிடிடி பார்க்கலாம் என்று சவால் விட்டு ஓட
அந்தோ பரிதாபம் சில நிமிடங்களில் எட்டி பிடித்திருந்தாள், எட்டி பிடித்தவளை அப்படியே கட்டி தூக்கி கொண்டு அருகில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நின்றான்
இருவருக்குமே மூச்சு வாங்கியது
அவன் மேலேயே சாய்ந்து மூச்சு வாங்கினாள்
என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்ட படி
உனக்கு என்ன ஆச்சு என்றான் பதிலுக்கு ‘
எனக்கா எனக்கு என்ன என்றாள் புரியாதவளாய்
ஊர்ல இருந்தப்போ அவ்வளவு வேலை குடுத்த இப்போ இங்க வந்த பிறகு எனக்கு பெருசா ரொம்ப வேலை இல்லை ஏன்னா பாதி வேலை நீ செய்யற அப்போ செய்யலை இப்போ செய்யற ஏன் என்றான்

Advertisement