Advertisement

ஜெயந்தி சென்றதுமே விஷாலை அழைத்தவன்… “உனக்கு மேனேஜர் பதவி குடுத்ததுக்கு பதிலா டேமேஜர்ன்னு குடுத்திருக்கணும்டா” என்றான் கோபமாக…

“ஏன் அண்ணா கோபப்படறீங்க?”  

“ஏன்டா அந்த பொண்ணு வாசல் தாண்டும் முன்னமே கூப்பிடச் சொன்னேன். நீ பராக்கு பார்த்துட்டு விட்டுட்ட… நீ இவ்வளவு அசால்டா இருக்கியேன்னு உன்னை திட்டுனா… அந்த பொண்ணு கிட்ட நீங்க வரலைன்னா பிரச்சனை ஆகும்னு சொல்லியிருக்க. அந்த பொண்ணு என்னை கேட்குது? உன்னை என்ன செய்யலாம்?”  

அவனுக்கு எதுவுமே காதில் ஏறவில்லை, ஏறியது எல்லாம் “என்ன அண்ணனை கேள்வி கேட்க ஒருவரா?” என்பது போல தான் அதிலேயே பரவச நிலையில் இருந்தான்.

இவன் என்னடா நித்யானந்தா சிஷ்யன் மாதிரி நிக்கறான் என்று மருது பார்க்க அது கூட அவனுக்கு தெரியவில்லை… 

===============================================================================================================

அவனுக்கு பொறுமை என்பதே கிடையாது, எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும், எதையும் தள்ளி போட மாட்டான். அவனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.   

ஆனால் இதில் ஒன்றும் செய்ய முடியாதே!

“நாம ஏன் படிக்காமப் போனோம். காலையில ஸ்கூலுக்கு போயிட்டு சாயங்காலம் வேலைக்கு போயிருக்கலாமோ?” என்று நினைத்தான்.

ஹ, ஹ, இப்படியாக என்னென்னவோ எண்ணங்கள்…

அடுத்த நாள் விடுமுறை தினம்..

அன்றும் ஜெயந்தியை எதிர்பார்த்து காத்திருக்க அவள் வரவில்லை.. பின்பு தான் தெரிந்தது ஏதோ விடுமுறை தினம் என்று. “இன்று பார்க்க முடியாதா?” என்று தோன்றிய போதும் குளித்து முடித்து கோவிலுக்கு சென்றான்.

பக்கம் தானே வீடு அங்கே தென்படுகிறாளா என்று. ம்கூம்! அவளின் வீடு எந்த அரவமுமின்றி அமைதியாய் இருந்தது..

வேம்புலியம்மனிடம் அவளை எனக்கு மனைவியாய் கொடு என்று வேண்டுதல் வைத்து வந்தான்…

================================================================================================================

அப்பா ஸ்திரமாய் சொல்லி விட்டார் “பணம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ எங்கேயும் போக வேண்டாம்” என்பது போல…

இதற்கு ஆள் தேவை என்ற போர்ட் இருக்கிறது என்று தான் சொன்னாள். அவள் சென்று பார்த்தால் என்று சொல்லவில்லை.. 

கமலனிற்கு சொன்ன போதும் “அவன் கிட்ட வேண்டாம், வேற இடம் இருந்தா வேணா பார்க்கலாம். வம்புக்கு போறவங்க சகவாசம் வேண்டாம்!” என்றார்.

ஜெயந்தியும் பின்பு அதனை பற்றி பேசவில்லை… இதற்குள் பணம் ஏற்பாடாகிவிட இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் சென்று விட்டாள்… அவனின் கடைக்கு ஜெயந்தி வந்த பிறகு அவனின் கண்ணிலேயே படவில்லை….

யாரிடம் தெரிந்து கொள்வது என்றும் தெரியவில்லை!

என்னவென்று தெரிந்து கொள்ள கூட முடியாத நிலையை அறவே வெறுத்தான்… யாரிடம் விசாரிப்பான்… ஏதாவது ஒரு அக்காவிடம் சொன்னால் அவளின் அம்மாவிடம் பேச்சு கொடுத்து விஷயத்தை வாங்கி விடுவர் தான். ஆனால் இவன் ஒரு பெண்ணை பற்றி கேட்பது புதிது என்பதால் ஆயிரம் கதைகள் முளைக்கக் கூடும்.

அதனால் ஜெயந்தி மீண்டும் கண்ணில் தென்படும் நாளுக்காக காத்திருந்தான்… எதிர்பார்த்திருந்தான்… 

=========================================================================================================

எல்லோரும் பிடித்ததை வாங்க பிடிக்க இருக்க… இவள் வேடிக்கை பார்ப்பதுடன் சரி.. நாமும் நிறைய சம்பாதித்து நினைத்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஓடும்… கையில் சிறிது பணம் அப்பா கொடுத்து அனுப்பியிருந்தாலும் அவள் வாங்கவில்லை.

ஆனாலும் இந்த வாழ்க்கையை பார்த்து மனதில் சற்று பொறாமை எழுந்தது.. தங்களிடம் ஏன் பணமில்லை என்பது போல…

“நினைத்த நேரம் பிடித்ததை வாங்கும் அளவிற்கு நான் சம்பாதிப்பேன்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அந்த இடங்களை கடப்பாள்.

ஒரு மாதம் பத்து நாட்கள் ஓடி விட அன்று தான் மீண்டும் கல்லூரி செல்லும் நாள்.. எப்போதும் போல சீரான மித வேக நடையுடன் அவள் வர…

அவளை பார்த்ததும் எழுந்தே நின்று விட்டான் மருது…

“எங்க போன இவ்வளவு நாளா?” என்று கத்திக் கேட்கும் ஆவேசம் பிரவாகமாய் பொங்கியது.

Advertisement