Advertisement

ஐந்து இரவுகள் அவனில்லாத உறக்கம், என்னவோ மாதம் போல வருடம் போல் எண்ணம் ஷர்மிளாவிற்கு.
அவனின் அணைப்பில் இருந்தாலும் அப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லை. மீண்டும் சண்டை வருமோ போ என்று சொல்வானோ இல்லை எனக்காய் ரோஷம் வந்து போடா என்று நான் சொல்லி செல்வேனோ இப்படி பல அலைகழிப்பு.
அதனால் சில மணி நேரத்தில் விழித்துக் கொண்டாள். அவள் விழித்த போது ரவி விலகி நேராய் படுத்திருந்தான்.
அவனை தானாய் அணைக்கவா வேண்டாமா என்று ஒரு பெரிய விஷயம் மனதிற்குள் ஓட
அவன் தான் உறங்குகிறானே தானாய் அணைத்தால் தெரியவா போகிறது என்று தோன்ற
அவனின் அருகில் சென்று அவளின் ஏழு மாத வயிற்றை வாகாய் ஒருக்களித்து படுத்து அவனின் மீது பொருத்தி, ஒரு கையையும் காலையும் அவன் மீது வசதியாய் போட்டு ஒரு வாறு சிரமம் இல்லாமல் வசதியாய் படுத்தாள்.
அய்யகோ அவள் எழுப்பாவிட்டாள் என்ன அவளின் பேபி அப்பாவின் மேல் பட்ட உற்சாகம் போல வயிற்றில் உருள, கையையும் காலையும் போட்ட போதே பாதி விழிப்பு வந்திருக்க இப்போது பேபி அவனின் உடலில் பட அது லேசாய் என்றாலும் நன்றாய் விழிப்பு வந்து விட்ட போதும் அசையாமல் படுத்திருந்தான்
ஆனால் கண் திறந்து கொண்டான், மனைவியை பார்க்க அவளோ வாகாய் படுத்தவள் கண்மூடி இருந்தாள்.
இவளை என்ன தான் பண்றது இப்படி படுத்திருக்கா எங்கேயாவது பிடிசிக்குமோ தெரியலையே என்று அவனுக்கு தான் கவலையாகிப் போனது
மெதுவாக ஷர்மி வசதியா இருக்கா இல்லைன்னா மாறி படு என்றவனின் கை தானாய் குழந்தையின் அசைவை உணர முற்பட
எனக்கு இது தான் வசதி உங்களுக்கு இல்லையா என்று விலக முற்பட
ஏய் படுடி உன்னை சொன்னா நீ என்னை சொல்வியா என்று அதட்டல் இட
அப்பாவின் குரலை கேட்டதும் பேபி இன்னும் அசைய
என் பேபி கூட என் பேச்சை கேட்கறான் ஆனா உன் அண்ணனோட பேபி அவளை என்ன பன்னன்னு தெரியலை என்று சலிப்பாய் ரவி சொல்ல
முதலில் யாரை சொல்லுகிறான் என்றே புரியவில்லை, பின்னர் மெதுவாய் அவளின் முகம் புன்னகையில் விரிந்தது.
என் அண்ணனோட பேபியை தான் நீங்க போடி சொல்லிடீங்களே என
சொன்னா நீயாருடா என்னை போடி சொல்ல, போக முடியாது போடா சொல்லணும் அதை விட்டுட்டு ஏங்கி ஏங்கி அழுவியா
போடி கூட பரவாயில்லை எனக்கு கியூல நிப்பாங்க அவங்களோட போ ன்னு சொன்னா என்று சொல்லும் போதே குரல் அழுகைக்கு தயாராக
தப்பு தான் சொல்லியிருக்க கூடாது ஆனா நீ என்னை எல்லோர் முன்னமும் ஐ ஹேட் யு சொல்லலாமா, அதையும் விட வேற எங்கேயாவது கல்யாணம் பண்ணியிருந்தா நிம்மதியா இருந்திருப்பேன் சொல்லலாமா சொல்லு என்று அவன் கேட்க
ஷர்மி பதில் சொல்லவில்லை, அந்த நிமிடத்தில் அந்த பேச்சு பிடிக்கவில்லை ரசிக்கவில்லை..
ரவியின் இடத்தில வேறு யாரையும் கற்பனையாய் கூட வைத்து பார்க்க முடியவில்லை
ரவி கேள்வி கேட்டாலும் பதிலை எதிர்பார்க்கவில்லை. அதுவும் எங்கம்மா அம்மா முன்னாடி சொல்ற, ஏதோ நான் கெட்டவன் மாதிரி வில்லன் மாதிரி இல்லை இன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் மாதிரி தான் பேசறாங்க
அவங்க முன்ன நீ சொல்ற அதுவும் சந்தோஷ் இருக்கான் கௌசி இருக்கா
உனக்கு வாய் அதிகம் ன்னு எனக்கு தெரியும் ஆனா அவங்களுக்கு தெரியாது இல்லையா உன்னோட வாய் மட்டும் தான் இப்போ நம்மோட இந்த நிலைக்கு காரணம் என்றான் பொதுவாய்  
அவன் திருமணத்தை சொன்னானா இல்லை அவர்களுக்குள் வரும் சண்டையை சொன்னானா பிரித்து அறிய முடியவில்லை
அந்த நேரம் அவனுடம் மீண்டும் ஒரு சண்டையை விரும்பாதவள் எனக்கு தூக்கம் வருது என
அவளை அணைவாய் பிடித்தவன் தூங்கு என்று தட்டி கொடுத்தவன் மெதுவாய் அவளின் முகத்தினை வாசம் பிடிக்க
பிரஷ் பண்ணிட்டேன் வாமிட் ஸ்மெல் வராது என்று மெல்லிய குரலில் முனக
முத்தம் வேணும்னா கேளுடி அதுக்கு எதுக்கு முனகற என்று விரிந்த சிரிப்பாய் ரவி சொல்ல
முத்தம் வேணும்னா நான் எடுத்துக்குவேன் இல்லை குடுதுக்குவேன் அதுக்கு எதுக்கு கேட்கணும் என்று ஷர்மி வீம்பு பேச
        
      

Advertisement