Advertisement

கண்கள் எரிந்தன சிறிது நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது இடத்தை விட்டு எழுந்தவன் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் அலுவலை பார்க்க அமர்ந்து விட்டான்.
ஒரு நாள் கடந்து விட்டது. இன்னும் வீடு செல்லவில்லை. இங்கேயே பாக்டரியிலேயே இருந்து கொண்டான்
எல்லாம் தப்பாய் செய்து விட்டதாய் ஒரு எண்ணம் , இந்த திருமணம் செய்திருக்க வேண்டாமோ என்ற எண்ணம். அவ்வளவு தானா இருவரும் வாழ்ந்த வாழ்க்கை எப்படி சொல்ல முடியும் அந்த வார்த்தையை யாரையாவது திருமணம் செய்திருக்கலாம் என்று அதுவும் எல்லோர் முன்பும்.
என்ன நான் குறைந்து விட்டேன் , எதற்கு இந்த இரவு பகல் பாராத உழைப்பு எதற்கு இந்த முன்னேற்றம் என்னுடைய வெற்றிகளில் சந்தோஷப் பட கூட ஆளில்லாமல் என்று தான் தோன்றியது
எவளோ என்னவோ சொல்லி விட்டு போகிறாள் என்று விடாமல் நான் எதற்கு அவளை இப்படி வருடக் கணக்கில் போராடி அதையும் இதையும் செய்து திருமணம் செய்ய வேண்டும்
ஊருக்கு சென்ற பிறகு அப்பா அழைத்து ஊருக்கு வந்து விட்டோம் என்று சொன்னார். அவரிடமே சொல்லிவிட்டான் ஏதாவது முக்கியமான விஷயம் னா கூப்பிடுங்க வேற எதுக்கும் கூப்பிடாதீங்கப்பா என்று
டேய் அம்மாவை உனக்கு தெரியாதா என்று அவர் சமாதானம் செய்ய
பதிலே பேசாமல் வைத்து விட்டான்
ஷர்மிளாவிற்கோ என்னவெல்லாம் பேசி விட்டான் என்னை என்ற ஆதங்கம் அவமானம், அதையும் விட அவனை தேடும் மனம், அவன் அருகில் இல்லாமல் வராத உறக்கம் பாடாய் படுத்தியது. உண்மையில் உறக்கமும் வரவில்லை, உணவும் இறங்கவில்லை. குழந்தைக்காக முயன்று சாப்பிட்டாலும் சில நிமிடங்களில் வாய் வழியாகவே வெளியே வந்து விடுகிறது.    
அவரகளின் வீடே அவ்வளவு அமைதியாய் இருந்தது அங்கே ஆட்கள் இருக்கிறார்களா என்று கூட யாருக்கும் தெரியாது.
ஷர்மிக்கும் மாமாக்கும் பிரச்சனை கோச்சிகிட்டு வந்துட்டா மாமா கூப்பிட்டார் ஆனா இவ போகலை என்றான்
அவனுக்கு என்ன தெரியும் அவன் போடி என்று விட்டான் என்பதை
கேசவன் என்னடா ஷர்மி அப்பா கொண்டு போய் விடட்டுமா என்றார்  
ஏன் நான் இங்க இருக்கக் கூடாதா என்று விட அவரால் என்ன சொல்ல முடியும்
மனதின் ஒரு புறம் ரவியை தேடினாலும் இன்னொரு புறம் கோபம் கோபம் கோபம் மட்டுமே
ஏழாம் மாதம் வளைக்காப்பு செய்ய பேசியிருக்க , இதோ இவள் வந்து இங்கே உட்கார்ந்து கொள்ள யாரிடம் பேசுவர்
விசாலி சீதாவை அழைத்து பேச அவர் நானே பேசிக்கறேன்னு ரவி சொல்லிட்டான் என்று விட்டார்
ஆம் வாசன் அவரிடம் பேசுவதில்லை, இரண்டு நாட்களாக பேசாததே அவரின் வாயை ஏகத்திற்கும் கட்டி போட்டிருந்தது
ஆம் வந்த அன்றாவது சிறிது நேரம் உறங்கினாள். நேற்று இரவு முழுவதும் என்ன செய்தும் உறக்கம் வரவில்லை. உடல் என்னவோ செய்தது. பயமாகி விட்டது. வயிற்றில் குழந்தை இருக்கிறதே.      
சந்தோஷ் சென்று ரவியின் வீடு பார்க்க பூட்டிய வீடு தான் தெரிந்தது.
வாட்ச் மேனிடம் கேட்க ரெண்டு நாளா சார் பாக்டரில தான் இருக்கார் என
என்ன டா இது இந்த ஷர்மியை என்ன பண்ண என்று தான் மனம் நினைத்தது. அவனுக்கு தான் ரவீந்திரனை பற்றி தெரியவில்லையே.
ரவீந்திரனுக்கு அழைப்பு விடுத்தான், அவன் எடுக்க வில்லை. வேறு வழியில்லாமல் பாக்டரி சென்றான்.
அங்கே சென்று பார்த்தால் ரவி அவனின் அறையில் இருக்கையில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான். மிகுந்த ஓய்ந்த தோற்றம். இரு நாட்கள் வளர்ந்து தாடி, இப்படி ஒரு தோற்றத்தில் ரவியை சந்தோஷ் பார்த்ததேயில்லை.
இவன் கதவை நாசுக்காய் இருமுறை தட்டி உள்ளே வந்தது கூட தெரியவில்லை.
ஷர்மி செக் அப் போகணும்னு ஏதோ பைல் கேட்டா என்றான்
செக் அப் பா அதுக்கு இன்னும் நாள் இருக்கே, இப்போ போக வேண்டியது இல்லையே, இப்போ எதுக்கு போகணும் சொல்றா என்றான்
சந்தோஷின் முகமும் குழப்பம் காண்பிக்க, செக் அப் போகணும் மட்டும் சொன்னா வேற எதுவும் சொல்லையே மாமா என்றான்
போன் பண்ணி கேளு என்ன பண்ணுதுன்னு என்றான் பரபரப்பாக
அவனின் பரபரப்பு சந்தோஷையும் தொற்ற, ஷர்மியை அழைத்தவன், பேபி என்ன பண்ணுது என்றான்
என்ன பண்ணுதுன்னா என்று அவள் பதிலுக்கு கேட்க
இப்போ உனக்கு செக் அப் போக வேண்டியது இல்லையாமே என்ன பண்ணுது எதுக்கு இப்போ போகணும்னு மாமா கேட்டார் என்று சொல்ல
ஏன் அதை அவர் கேட்க மாட்டாராமா கேட்க மாட்டார் அது தான் என்னை வேண்டாம் சொல்லிட்டாரே என்று சொல்ல

Advertisement