Advertisement

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்று கண்ணனின் கைபேசி ஒலித்தது.
எதுக்கு இதை போய் ரிங் டோனா வெச்சிட்டு இருக்கீங்க என்று சுந்தரி குறை பட
ஏன் ஏன் வெச்சா என்ன ?
நீ தான் இதுக்கு பதில் பாட்டு பாடவே மாட்டேங்கிறியே,
ம்ம் என்ன பாட
என்ன பாடவா
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக ன்னு பாடனும் என
அதெல்லாம் பாட முடியாது
ஏண்டி ஏன்
================================================
ஒரு முக்காலியில் அமர்ந்து கண்ணன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சுந்தரி செடிகளை பதியன் இட்டுக் கொண்டிருந்தாள் நர்சரிக்காக
அந்த தண்ணி எடுங்க, இந்த குருத்து எடுங்க இந்த கலப்யை எடுங்க என்று அவள் வேலை ஏவிக் கொண்டிருக்க அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று வம்பு செய்து கொண்டிருந்தான்.
முழு நேர உதவியாளன் ஆகிவிட்டான் சுந்தரிக்கு, பின்னே அவ்வளவு வேலைகள் அவளுக்கே, இவன் என்ன தனியாய் செய்வான். பூந்தோட்டம் நர்சரி தென்னதோப்பு மாந்தோப்பு..
இவனின் அப்பாவிற்க்கோ சிதப்பாவிர்க்கோ இவன் உதவி செய்வது ஒன்றுமில்லை.. அவர்களே திடமாய் இருக்க.. அவர்களின் வேலை அவர்களுக்கு பார்த்துக் கொள்ள முடிந்தது, இடையினில் சந்திரனுக்கு இவன் வேலை வைத்தான் பா இதை செய்ங்க , இது ஏன் இப்படி என்பது போல   
வேலைகள் சரியாய் இருந்தது..
========================================
என்ன இது இத்தனை காலம் சேர்ந்து வாழலைன்னாலும் நல்ல ஜோடி தான் .. புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி…
என்னவோ செய்யட்டும் விடராங்கலா அஆளுக்கு முன் வந்து நின்னுக்கறாங்க சரி பார்த்துட்டு போகட்டும் விட முடியுதா நமக்கு முன்ன வேலைல இறங்கிடறாங்க சரி செஞ்சிட்டு போகட்டும்னு விட முடியுதா நமக்கு முன்ன விரசா முடிச்சிட்டு நாம இன்னும் முடிக்கலையான்னு பார்த்துட்டு நிக்கறாங்க இவங்க வேகம் எல்லாம் நமக்கு வராது என்று முனக ஆரம்பித்து இருந்தனர்
ஆம் இருவரும் இறங்கி தான் செய்தனர்.. ஆட்கள் மட்டும் வேலை செய்யட்டும் என்று விடுவதில்லை      
இருந்தாலும் படித்த படிப்பிற்கு ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று ஆன்லைனில் வேலை வேறு தேடிக் கொண்டிருந்தான்.
============================================
அய்யே என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்க , நேத்து தான் சொன்னீங்க இன்னைக்கு சம்பளம் பேசியாச்சு அம்மாக்கு யோசிக்க வேண்டாமா
பெரிதாய் உதடை சிரிப்பது போல இழுத்து பிடித்தவன் எனக்கு எல்லாம் உடனே உடனே செய்யணும் தள்ளி போடறது பிடிக்காது என
எனக்கு இவ்வளவு ஸ்பீட் எல்லாம் ஆகாது யோசிச்சு தான் செய்யணும் என்றவள் பதியன் எல்லாம் போட்டு முடித்திருக்க,
என்னோட ஸ்பீட் உனக்கு அபி உன் வயிற்ருக்குள்ள வந்ததுல இருந்தே தெரியலையா என
அவளோ அதுக்கும் மேலே சென்று அபி வயதுக்குள்ள வந்ததுல தெரியலை என்னை விட்டுட்டு போனதுல தெரிஞ்சது என
மனது எரிச்சல் ஆனாலும் தனிமையும் கொடுமையும் அவளுக்கு என்று புரிந்தவனாக அமைதியாக் இருந்தான்  
அவள் எழுந்து வந்து அங்கிருந்த பைப்பில் கைகளை கழுவி பின்னே மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பிக்க
போடி பசிக்குது டீ கொண்டு வா என்று அந்த வேலையை தனதாக்கினான் கண்ணன்.

Advertisement