Advertisement
கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
மருதுவும் சரி ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. “என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்” என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன செய்து விட்டேன் நான்? ஏன் இந்த கோபம்?” என்ற எண்ணம் தான் அவளிடம்..
அவனை தெரியவில்லை என்று தான் தோன்றியது அவனின் கடந்த காலம் அவனின் சிறு வயது அவன் செய்த வேலைகள் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்று தோன்றவில்லை..