Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 27

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ருத்ரன் இவ்வளவு பெரிய ஆளா தொழில்ல இருக்கான்னா இந்த நிதானம் தான் காரணம்.... எதை எப்படி செய்யணுமின்னு நல்லா தெரிஞ்சிருக்கு... மஞ்சு மனசு இன்னும் பக்குவபடலைன்னு அவனுக்கு நல்லாவே தெரிஞ்சும் கணவனா நெருங்குவானா.... அதான் தோழனா மாறிட்டான்.... ஆனா அப்பவும் கதிர் இடத்த பிடிக்க முடியலைங்கறது தான் கஷ்டம்.... அவ ஆசை பட்ட மாதிரி தனுயா தூக்கணாங்கூடு அமைச்சி கூட்டிட்டு போயிட்ட... அதை அவ உணர்ந்தா கதிர் இல்ல வேற யாரையும் தேட மாட்டா... விடு ருத்ரா பார்த்துக்கலாம்
 

Devi29

Well-Known Member
Manju kaadhalodu parpathu than romance sis nice epi sis than manasil ulla kulapathai eppidi therthuka pora manju, aval kaadhal kanavan ruthran arinthu kolvana waiting eagerly sis
 

Suvitha

Well-Known Member
epi யின் கடைசி para க்களை வாய்விட்டு சிரித்து படித்தேன் விஜிமா..
இதே மாதிரி தான்" நீரும் நெருப்பும்"கதையில் குருமூர்த்தி- இந்திரா வுக்குகிடையேயும் எனக்கு இதுக்கு மேல romantic எழுதவரலைனு சொல்லியிருந்தீங்க..
 

Suvitha

Well-Known Member
ஆஹா..ஒருவழியா கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது..
ருத்ரனுடன் சேர்ந்து நாமும் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்..

பேசிக்கிட்டு இருக்கலாம்னா ஓகே..
இல்லைனா தூக்கம் வந்திடுமே என்று மஞ்சுவை பார்த்து மனதுக்குள் புலம்பும் ருத்ரன் ரசிக்கவைக்கிறான்...

மாமன் பொண்ணு கிட்ட பேசி வெட்கப்பட வைப்பதற்கு பதிலாக ருத்ரன் மாமனை வெட்கப்பட வைப்பது கலகலப்பு ...

இரண்டுபேருக்குமிடையே சின்ன தயக்கம் நூலிழையாக ஓடுகிறது...
தன் மனதின் குழப்பங்களை பகிர்ந்து கொள்ள தனது நண்பன் கதிரை தேடுகிறாள் பெண்ணவள்..
நல்ல காலம் அவன் தான் ஓவியன் என்று அவளுக்கு தெரிய விடவில்லை..
இல்லையென்றால் அது வேறு அவள் மனதை அரித்து விடும்..

மஞ்சுவின் தகப்பனாரின் பூர்வீக நிலத்திற்கு கூட்டி வந்திருக்கும் ருத்ரனின் செயல் மெச்சுதற்குரியது..

மஞ்சு தனது குழப்பத்தையும்..
ருத்ரன் தனது தயக்கத்தையும் கைவிட்டார்களா என அறிய ஆவலாக இருக்கிறோம் விஜிமா..
 

elakkiya ganesh

Well-Known Member
தந்தையின் நிலத்தில்
கணவர் தோப்பு வீடு கட்டி
அதிலே கணவனும்
மனைவியும் தனித்திருப்பது
இதுவே அழகான ஒரு
ரொமான்ஸ் சீன்தான்,
விஜி டியர்

மஞ்சுளா காதலோடுதானே ருத்ரமூர்த்தியைப் பார்க்கிறாள்
அப்புறமென்ன?

என்னதான் புதுசா கல்யாணமான
ஹஸ்பெண்ட் and ஒய்ப்-னாலும்
எப்போப் பாரு கட்டிப் பிடித்து
காதல் செய்யும் கண்றாவியை
எப்பவும் ரசிச்சுக்கிட்டே
இருக்க முடியாதே,
விஜி டியர்?

இங்கே மஞ்சுளாதேவி என்னும்
வளர்ந்த ரெண்டுங்கெட்டான்
குழந்தையை, ருத்ர மூர்த்தி
என்ற கணவர் இல்லற
வாழ்க்கைக்கு மஞ்சுவை
மெதுவா, மெது மெதுவா
கொஞ்சம் நிதானமாகத்தான்
கொண்டு வர வேண்டும்
ருத்ரனும் நிதானமாகத்தான்
மஞ்சுவை கையாளுகிறான்
அவன் எதற்குமே
அவசரப்படவேயில்லை,
விஜயலக்ஷ்மி டியர்

இதுதான் ரசிக்கும்படியான
ரொமான்ஸ்சாக இருக்குப்பா
இதுவே ஒரு அழகான
கவிதை போலே இருக்கு
இதற்கு மேல இன்னும்
என்ன ரொமான்ஸ் வேணும்,
விஜி டியர்?

ருத்ரன் மஞ்சுளா தேவியிடம்
பொறுமையாகத்தான்
நடந்து கொள்கிறான்ப்பா
நல்ல பையன், விஜி டியர்
Inga comments alagu than banuma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top