அருமையான பதிவு விஜி
.கீதா கேசை பற்றி பேப்பர்,டிவியில் வந்திருக்கு அதை பார்த்தும்
போன வருசம் ஒருவன்,இந்த வருசம் ஒருவன்னு பேசுதே
.கீதாவும்,பத்துவும் சாட்டையடியா பதில் கொடுத்தாங்க
."நல்லாவே பத்திக்கிச்சா"
.
குரு,கிரிதரன் பக்கபலமா இருக்க,கீதாவிடம் நல்ல மாற்றம்
.பெண்கள் காப்பகம் ஆரம்பிக்க பட்டு பூஜா,கீதா இருவரும் அதை கவனித்து கொள்கின்றனர்
.ஒரே நாளில் மூன்று திருமணமும் நல்லபடியாக நடந்தது
.
பார்க்க நாயகன் போல இருப்பவர்கள் அனைவரும் நாயகர்களாகி விட முடியாது....மனைவியின் கண்ணுக்கு நாயகனாக தெரிய வேண்டும் என கூறியது அருமை
.
வழக்கமான காதல்கதை இல்லாமல் மாறுபட்ட கதைக்களம்.நாயகனின் அறிமுகமே வண்டியில் நான் ரொம்ப கேடு கெட்டவன் என எழுதியிருக்க,வாயை தொறந்தா வார்த்தைகள் வண்ணமாய் வருது
.
பத்மினியின் அக்கா கீதாவின் விவாகரத்துகாக குருவிடம் வர,அது தோண்ட தோண்ட வில்லங்கம் புடிச்சதா இருக்கு
.இப்படியெல்லாம் நடக்குமா என நினைக்கவே பயங்கரமா இருக்கு
.
ஜெய் குடும்பத்தாரின் முகத்திரையை கிழித்து,இவர்கள் நடவடிக்கையை கண்டு தற்கொலை செய்த ஜெய் அம்மாவின் சாவுக்கு நியாயம் கிடைக்க செய்வதுடன்,கீதா கேட்டுக் கொண்டபடி அவர்கள் புகைபடங்களை பத்திரிகை,டிவியில் வர செய்வதுடன்,சொத்துக்களை காப்பகத்துக்கு எழுத வைப்பது என தன் வாதத்தால் குரு கலக்கிட்டான்
.
குரு,பத்மினியின் காதல்,கிரிதரன்,கீதா மேல் கொண்ட ஒருதலை காதல் இன்று திருமணத்தில்
. குரு பிறந்து வளர்ந்த சூழல்,பூஜாவின் பிளாஸ் பேக் மனதை கனக்க வைத்த பதிவுகள்
.
வித்தியாசமான கதைக்களம்.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் விஜி