Unnil Naan Thozhiyea....!!-7-1

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 7-1வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...லேட்டா வந்தற்க்காக பனிஸ்மென்ட்டா....நிறைய லைக்ஸ்,கமென்ட்ஸ் போடவும்......;);)
girlfriends-338449__340.jpg

அத்தியாயம்-7

ஹாய்,’வாடா ஜீவா’ என்று ராம் ஜீவாவை அழைத்தான்.ஜீவா,’ஹாய் டா மாப்பிளை’ என் சலிப்புடன் கூற”’என்ன ஆச்சி மச்சி தீடிரென்று மும்பை வந்துருக்க எதாவது பிரச்சனையாட “ என ராம் கூற,”ஆமாட பிரச்சனை தான்,ஆனால் அதை எப்படி சரிப்பண்ணுறதுனு தெரியலாட அதுக்கு தான் உன்னோட உதவி வேண்டும்டா” என்றும், நீ உதவி பண்ணித்தான் ஆகனும் என்று பார்த்தான் ஜீவா.

ராம் ஜீவாவின் பள்ளி தோழன்.ராம் இப்ப பெரிய வக்கீலாக மும்பையில் வசித்துவருகிறான்.ராம்,ஜீவா,கார்த்திக் முன்று பேரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.மண்ணிக்கவும் சுத்தியவர்கள்.

ராம்.” என்னடா சொல்லு நான் இப்ப என்ன பண்ணணும்” என கேக்க. ஜீவா,”நான் யு.எஸ்.ஏ ல இருக்கும் போது எனக்கு ஒரு போன் கால் வந்துச்சு”என கூறி பழைய நினைவுக்களுக்குள் சென்றான்.

போன் ரிங் அடித்துக்கொண்டே இருக்க,” யாரு இது எவ்வளவு டைம் கால் பன்னுறாங்க அது இந்தியால இருந்து போன் வருது” என்ற யோசனையோடு போனை எடுத்து பேச அரம்பிக்க,”ஹலோ ஜீவா ஸ்ப்பிக்கிங் “,தம்பி நான் யாரு பேசுறேன் முக்கியம் இல்லை. இப்ப நான் சொல்லுவதை மட்டும் நல்ல கேளுங்க..உங்க அப்பா ஆக்ஸிடண்டுக்கு காரணம் உங்க மாமா இல்ல அது மட்டும் இல்ல தப்பி உங்க அம்மா மரணம் இயற்கையானது இல்ல...இப்பதைக்கு என்னால இத மட்டும் தான் சொல்ல முடியும்ஆனால் நான் சொல்லுறது உண்மை தம்பி. உங்க அப்பா,அம்மா சாவுக்கு காரணம்னு கண்டுபிடிங்க தம்பி .சரி தம்பி யாரோ வராங்க நான் வைக்கிறேன் தம்பி. என்று கூற போன் கட் ஆனது.

அந்த நொடி,”யாரோ தன்னை கத்தியால் குத்தியதை போல் உணர்தவான்”, “எவ்வளவுயோசிச்சும்யோசிச்சும் யார் போன் பண்ணது என்று தெரியலயே...அவன் சொன்னாது உண்மையா இருக்குமோ இல்லை பொய் யாதான் இருக்கும்.அவன் ஏன் எப்படி சொல்லனும்,இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஏன் சொன்னான்..ஐய்யோ மண்டை வெடிச்சுரும் போல அம்மா. உண்மைய சொல்லுங்க அம்மா.உங்கள யாராவது கொண்ணுட்டாங்களா அம்மா”.என கதறியவன். சிறிது நேரம் கழித்து,”இங்கயே இருந்தா ஓண்ணும் பண்ண முடியாதுஉடனே நம்ம மும்பை போகனும்” என்ற முடிவை எடுத்து கிளம்பினான் ஜீவா.

ராம்,”என்ன மச்சி சொல்லுறா உங்க அப்பா சாவுக்கு காரணம் உங்க மாமா இல்லையா ??.அப்ப உங்க அப்பா அம்மா ரெண்டு பேருயும்கொண்ணுருக்கவங்க ஒரே ஆள்ளாதான் இருப்பாங்கனு நான் நீனைக்கிறேன்.ஜீவா,”ஆமாட எனக்கு அப்படிதான் தோனுது ஆனால் எங்க அப்பா,அம்மா க்கு எதிரினு யாரும் இல்லைடா ,அவங்க யாரையும்அப்படி பார்த்ததும் இல்ல”என்றுகூறினான்.

ராம்,”மச்சி நம்ம ஏன் கார்த்திக் கிட்ட உதவி கேக்க கூடாது” என்றவனை பார்த்து ஜீவா முறைக்க,”இல்லடா கார்த்திக்க நீ நம்ம பிரெண்டா நினைச்சு பேச வேண்டாம்,ஒரு போலிஸ்ஸா நினைச்சு பேசு.உனக்கே அவன பத்தி தெரியும்.நான் சொல்லவேண்டியது இல்ல அதுனாலதான் சொல்லுறேன்டா.யோசிச்சு சொல்லு” என்று கூறி விட்டு சென்றான்.

நித்தி,”நான் ரூம்க்கு போறேன் ஹனி எனக்கு டையாட இருக்கு” என கூறி விட்டு மாடி ஏறி சென்றாள். ரூம்க்கு சென்று கட்டிலில் படுத்துகண்ணை மூட கண்ணில் அவன் முகம் வந்து தோன்ற,”என்னடா இது இவன் முகம் ஏன் நமக்கு நியாபகம் வருது அவன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே”.” ஏய் நித்தி உனக்கே ஒவரா தெரியல அவன நீ தூரத்துலதான பார்த்த அதுக்குள்ள லவ்வா கொண்ணுடுவேன் பார்த்துகோ” என அவள் மனசாட்சி கேக்க,” ஏய் விட்ட நீ கல்யாணமே பண்ணி வச்சுருவ போல நான் எங்கயோ பார்த்த மாதிரி தான் இருக்குனு சொன்னேன் அதுக்குள்ள லவ்வுகிவ்வுனு பேசுற போ போய் உன் வேளைய பாரு” என கூறிவிட்டு கண் மூடி தூங்க ஆரம்பித்தாள்.

வசந்தா,” என்னடிமா ஷாப்பிங் நல்ல பண்ணிங்களா,உங்களுக்கு பிடிச்சத எல்லாம் எடுத்தாச்சா”என கூற..ஹனி.,”அட ஏன் பாட்டிமா உன் பேரன் எடுக்கவே விடல எல்லாத்தையும் உன் அருமை பேரனே எடுத்துட்டாரு” வசந்தா,”என்னது கார்த்திக் எடுத்தானா நம்பவே முடியலடிம்மா...”இந்தா பாட்டிமா உன் பேரன் எடுத்தத பாருங்க என ஹனி கூற,வசந்தா,” இங்க பாரு மதுலாம்மா இந்த போலிஸ்காரன் கூட எவ்வளவு நல்ல எடுத்துருக்கான்.”என்ன பாட்டிம்மா உன் பேரனுக்குசப்போட்டா” என்று கிண்டலாக ஹனி கேக்க, அந்த சமயம் கார்த்திக் உள்ள வந்த கார்த்திக்,” என் பாட்டி எனக்கு சப்போட் உன்ன மாதிரி அடாங்கபிடாரிக்க சப்போட் பண்ணுவாங்க”

ஹனி,”யாரு நான்னா உனக்கு தான் திமிர் போலிஸ்னு திமிர்

அதான் இப்படில பண்ணுறடா நீ”,”ஏய் யார பார்த்து டானு சொல்லுற பல்ல ஓடச்சுறுவேண் பார்த்துக்கோ”என கார்த்திக் சீண்ட,”ஆமா அப்படித்தான் பேசுவேன். இந்த அடிக்கிற வேளைய எல்லாம் உங்க ஸ்டேசன் ல வச்சுக்கோங்க.நீ அடிச்சா நானும் திருப்பி அடிப்பேன்.”, எங்க அடிச்சுருவியா அடி பார்க்கலாம் “ என கூறி ஹனியின் பக்கத்தில் வர ,பளார் என்று கார்த்திக் கண்ணத்தில் ஒன்று வைக்க ,இதை பார்த்த வசந்தா,” ஹனி என்ன இது”,பாட்டி விடுங்க நான் தான அடிக்க சொன்னேன்” என கார்த்திக் கூறி விட்டு “என்ன மேலே வச்சுட்டேல உனக்கு இருக்கு” என கூற,”ஆண் என்ற ஆணவத்தில இருக்கதா” என அவனுக்கு மட்டும் கேக்கும் மாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..

கார்த்திக்,” திமிர் திமிர் அடங்காபிடாரி”” என மனதில் அவளை வறுத்தெடுத்தான். வசந்தா.,”என்னமா எப்படி எலியும் பூனையுமா சண்டை போடுறாங்க”,பாட்டிம்மா விடுங்க அதலாம் சரியா போய்டும் “ என மதுலாகூறி விட்டு சென்றுவிட்டாள்..

அனைவரும் சாப்பிட அமர, கார்த்திக் அப்பொழுது தான் கீழே இறங்கி வர ஹனியின் பக்கத்தில் தான் ஒரு இடம் காலியாக இருக்க அமராமல் நிற்க,சூரியா,”என்ன கார்த்திக் நிக்கிற வா வந்து உக்காரு “இல்ல அண்ணா நீங்க சாப்புடுங்க நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன் “ ஏன்டா எதாவது பிரச்சனையா “, இல்ல அண்ணா”,என கார்த்திக் கூற,” அப்புறம் என்ன வந்து உக்காரு” என சூரியா கூறினான்.

சூரியா,”இவ பக்கத்தில் உக்கர்ந்து சாப்பிடனும் எல்லாம் என் நேரம்” என நினைத்துக்கொண்டு அமர,” டேய் அந்த புள்ள என்னாடா பண்ணுச்சி நீ அடிக்க சொன்ன அந்த புள்ள அடிச்சுசு அந்த புள்ள மேல தப்பு இல்ல” என கூறிய மனசாட்சியை பார்த்து கார்த்திக் முறைக்க,”நான் எஸ்கேப் “ என்று சொல்லி விட்டு அவன் மனசாட்சி சென்று விட்டது.

ஹனி,”என் பக்கத்தில உக்கார உனக்கு அவ்வளவு சீன்னா இருடா இரு உனக்கு இருக்கு இப்ப” ஏய் ஹனி நீ அவன அடிச்சதுக்கு தான் அவன் இங்க உக்கார எவ்வளவு பயபடுறான் போல” என ஹனி காதில் நித்தி கூற,”இவன் பயப்புடுறானாக்கும்.கிழிச்சான். அவனுக்கு இதலாம் பத்தாது நம்மள அன்னைக்கு எவ்வளவு பேசுனான்.நானா அவன அடிக்கல அவன் தான் அடிக்க சொன்னான்.”,இல்ல செல்லம் அவன் போலிஸ் அதான் யோசிக்கிறேன்.” என்றாள் நித்தி.

கார்த்திக்கு புறைஏற ,மதுலா,”ஐய்யோ கார்த்திக் மெதுவா சாப்பிடு என்ன அவசரம் தண்ணியை குடி” தண்ணியை ஊற்றி கொடுத்தாள்..நித்தி,” கார்த்திக் சார் உங்க தட்டுல இருந்து யாரும் சாப்பாட எடுத்து சாப்பிடமாட்டோம் அதுனால மெதுவா சாப்பிடுங்க”, “உன் பிரெண்டு எடுத்துசாப்பிட்டா நான் என்னா பண்ணுவேன் அதான் சீக்கிரம் சாப்புடுறேன் .” கௌதம், “ஐய்யோ சித்தா ஹனியா பார்த்தா உன் கிட்ட பிடிங்கி சாப்புடுற மாதிரி தெரியல, நீ தான் ஹனிகிட்ட இருந்து பிடிங்கி சாப்புடுற மாதிரி இருக்கு” என கூற கார்த்திக்,”ஏய் “என அரட்ட நான் எதுவும் சொல்லல என்பது போல் சாப்பிட ஆரம்பித்தான்.

கார்த்திக்,”இதுங்க கூட சேர்ந்து இவணும் வாய் பேச ஆரம்பிச்சுட்டான் இதுங்களளே அடக்க முடியால” என மனதில் பேசுவதாக நினைத்து வெளியில் பேச அதைக்கேட்ட,” நாங்க என்ன உனக்கு ஆடா இல்ல மாட அதுங்கனு சொல்லுற”என கூறிஹனி சீண்ட,”ஏய் போடி உன்னால என்ன பண்ண முடியுமே அத பண்ணு என்பது போல் பார்த்து விட்டு சாப்பிட்டுமுடித்தான்.

சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் ரூம்க்கு செல்ல,மதுலா”சூரியா ஏன் நீங்க கார்த்திக் கிட்ட இன்னும் உண்மைய சொல்லம இருக்கிங்க, அவன் இன்னும் சின்ன பையன் இல்லைங்க” எனக்கு புரியுதுமா அவன் கிட்ட சொன்னா அவன் சந்தோஷம் படுவான் தான் ஆனால் அவனுக்கு அவங்கள பார்த்த உடனே எதுவும் நியாபகம் இல்ல ,அதுமட்டுமில்லாம அவன் இந்த வயசில நம்ம ஊருல உள்ள பிரச்ச்னை எல்லாதையும் பார்துக்கிறான் இதுல நம்மளும் அவனுக்கு எந்த தொந்தரவும் குடுக்க வேண்டாம்.சொல்ல வேண்டிய நேரம் வரும் போது சொல்லலாம்”.அதுக்குள்ள அது யாரு என்னானு கண்டுபிடிக்கிறேன்” என கூறிவிட்டு தூங்க சென்றான்.முதலிலே சொல்லி இருந்துருக்கலாம் என தாம் நினைக்க போவது தெரியாமல்.

நித்தி,”ஏய் ஹனி இந்த கார்த்திக் நல்லவனா இல்ல கெட்டவனா”.ஏன் உனக்கு இந்த சந்தேகம் நல்லவன் தான்”என கூறிய ஹனியை பார்த்து .”ஆமா ஆனால் நம்மல பார்த்தா ஏன் டென்சன் ஆகுறான் அவன நம்ம என்ன பண்ணோம்” என நித்தி கூறினாள்.ஹனி,”நம்ம படிச்சது கேட்டது வச்சி பார்த்த அவன் நல்லவன் தான்,ஆனாலும் அவனுக்கு திமிர் “ என்ற சொன்னாள்.

ஹனி,”ஆமா உனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்துச்சி”,இல்லடா பேபி அவன பார்த்த ஒரு அண்ணன் பீல் வருது ஆனா அவன் நம்மல எதோ எதிரிய பார்க்குற மாதிரி பார்க்கிறான்” என நித்தி கூற,”அப்படியா மேடம், அவன நான் அடிச்சதுக்கு அவன் உன்னையும் என்னையும் வீட்ட விட்டு வெளியில தள்ளிருக்கனும் அப்படி அவன் பண்ணல அப்ப அவனுக்கு நம்ம மேல கோவம் இல்லனு தான் அர்த்தம் புரியுதா ,நீ பீல் பண்ணாத இனிமே நான் அவன் கூட சண்டைபோட மாட்டேன் போதுமா “என ஹனி கூற,நித்தி சிரித்தாள்.

ஹனி,”ஏன் சிரிக்கிற” என கேக்க.,” இல்ல நீ சும்மாஇருந்தாலும் அவன் சும்மா இருக்கமாட்டான்” என கூற,”ஆமா அதுவும்உண்மைதான்..நித்தி என கூறினாள் ஹனி.

ஜீவா, “நாளை கார்த்திக் சந்தித்து என்ன பேசுவது அவன் கூட பேசி பல வருடம் ஆச்சி என்ன பண்ணுறது என்ற யோசனையோடு ராஜலிங்கத்தை பார்க்க சென்றவனை கிரண்,”ஜீவா எங்க போற” என கேக்க,”இல்ல சித்தப்பா,தாத்தா பார்க்க போறேன்”,”ஜீவா தாத்தா எப்ப தூங்குற டைம் அவர தொந்தரவு பண்ணாதப்பா வா வந்து இங்க உக்காரு உன் கூட கொஞ்சம் பேசனும்"," சொல்லுங்க சித்தப்பா" என ஜீவா கூற, "இன்னைக்கு ஆபிஸ்ல "என ஆரம்பித்த கிரணை பார்த்து, "ஆபிஸ் பத்தினா எதுவும் நீங்க சொல்லதிங்க நான் எல்லாதையும் பார்த்துகிறேன் சித்தப்பா,அப்பா உருவக்குன ஆபிஸ்ஸ நான் நல்லபடியா கொண்டுவருவேன்" என சொல்லி விட்டு சென்று விட்டான்..கிரண்," போடா போ நீ எப்படி கீழிக்க போறேன்னு பார்க்கத்தான போறேன்".

காலையில் அழகாக சூரியன் உதிக்க....அனைவரும் தங்கள் வாழ்க்கை அடியோடு மாற போவது தெரியாமல் அவரவர் வேளையை பார்த்து கிளம்பினார்கள்..

பழனி,”சார் உங்கள பார்க்க ராம் சாரும் ஜீவாசாரும் வந்துருக்காங்க உள்ள வர சொல்லவா சார்.”,”உள்ள வர சொல்லுங்க பழனி”,என கார்த்திக் கூற ,”ஒகே சார்”,என பழனி கூறிவிட்டு சென்றான்.

ராம்,”மே கம் இன் சார்”.,”எஸ் கம் இன்”,என கார்த்திக் கூற இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.ஜீவா,என்ன பேசுவதுனுதெரியாமல் அமர்ந்திருக்க,”நாங்கஉங்க கிட்ட ஒரு முக்கியமான் விசியம் பேசனும் சார் என ராம் கூறினான்”.,”சொல்லுங்க ஜீவா”நீங்கதான் எதோ பேசனும் சொன்னிங்க ஆனா ராம் தான் பேசுறாரு சொல்லுங்க என்ன விஷியம்னு” என கார்த்திக் கூறினான்.

ஜீவா,கார்த்திக்யிடம் தனக்கு வந்த போன் கால்ஸ் பற்றியும்தனது ஆபிஸ்ல இருந்து தனக்கு வந்த பொய்யான கணக்குக்ளையும் கூறினான்.கார்த்திக்,”உங்க அப்பா அம்மா விஷியத்தில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்க”.,”இல்ல சார்”,கார்த்திக்.” உங்க அப்பா இறந்து 10 வருசம் ஆயிருக்கும், உங்க அம்மா இறந்து 3 வருசம் ஆகுது,ஆனால் நீங்க உங்க அப்பா இறந்தப்ப ,கிருஷ்ணன் சார் மேல கேஸ் போடுறிக்கிங்க ஐ ஆம் கரக்ட்” என கேக்க,”ஆமா சார்” என்று ஜீவா கூறினான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top