Ullamutham Kannamma - 3

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே,

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே. UK-வின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள். நேற்று லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


உங்கள் குந்தவி
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
UK - 3
1526411947662.jpg





காலையில் தன் அருகில் உறங்கி கொண்டு இருந்தவனை பார்த்த பொழுது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.... தூங்கும் பொழுதும் அவன் முகத்தில் தெரிந்த கம்பீரத்தை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

அவனிடம் அசைவு தெரியவும் தன்னை மீட்டுக்கொண்டு , துணிகளை எடுத்து கொண்டு குளியறைக்குள் நுழைந்தாள். அவள் சென்ற சிறுது நேரத்தில் பாரதியும் எழுந்து விட்டான். குளியறையில் சத்தம் கேட்டு, அவள் அங்கு இருப்பதை அறிந்தவன் தன் காலை உடற்பயிற்சிகாக சென்றான். அங்கு, அவன் வீட்டிற்கு வெளியே தோட்டம் அருகே ஒரு சிறு அறை உள்ளது, அங்குதான் அவன் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் எல்லாம் உள்ளன.

எப்பொழுது போன்று வீட்டை சுற்றி முடித்ததும் அந்த அறைக்குள் நுழைந்து பயிற்சி செய்ய தொடங்கினான்.

இங்கு, குளித்து முடித்து வந்த சுமி மாடிவிட்டு இறங்கி வரவும் பூஜை
அறையில் இருந்து வந்த சத்தத்தில் பூஜை அறையை நோக்கி சென்றாள், அங்கு அவள் அத்தை ஸ்லோகம் சொல்லி பூஜை செய்துகொண்டு இருப்பதை கண்டு அவர் பக்கத்தில் அமர்ந்து அவளும் கண் மூடி அமர்ந்து கொண்டாள்.


பின் பூஜை முடித்து இருவறும் வெளிவர பாரதியும் வீட்டிற்குள் வந்தவன்..... தன் தாயிடம் சிறுது நேரம் பேசிவிட்டு மேலே சென்று விட்டான். சுமிதான், 'ஏன் அவன் என்னை பார்க்கவில்லை' என்று குழம்பி நின்றாள். பின், தன் அத்தை அழைத்ததும் தன்னிலை வந்தவள்,

"என்ன அத்தை, ஏதாவது வேண்டுமா...."

"இல்லை சுமிமா, பாரதிக்கு காபியும், பேப்பரும் கொண்டு செல்ல தான் கூப்பிட்டேன்...... ஆனால், எங்கே நீ தான் இங்கு சுயநினைவிலே இல்லையே, என் பிள்ளை சென்ற திசையில் உன் மனமும் சென்றுவிட்டதா என்ன...." என்றார் கண்களில் குறும்புடன்.

அவர் சொன்னதும் லேசாக முகம் சிவந்து " ஐயோ அத்தை நான் அப்படி ஒன்றும் இல்லை, நான் இதோ கொண்டு செல்கிறேன்.." என்று வாய்க்குள் தந்தி அடித்தவள் அங்கு இருந்து உடனே ஓடி விட்டாள்.

அவள் மேலே சென்றதும் இங்கு இவர்க்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, தன் மகன் பற்றி சொன்னதும் அவள் முகத்தில் தோன்றிய சிவப்பு... குமரியம்மாவிற்கு ஏதோ கொஞ்சம் நம்பிக்கை அளித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
இங்கு அறையில், அவள் செல்லவும் அவன் குளித்து முடித்து
சாதாரண டீஷிர்ட் அணிந்து வெளி வந்தான்.
அவளை கண்டதும் ஒரு புன்னகையுடன்,

"குட் மோர்னிங் சுமி, உனக்கும் பூஜை ஸ்லோகம் எல்லா தெரியுமா..." என்றான் அவளை பார்த்தவாறு.

அவனுக்கு கப்பில் காபி போட்டு கொண்டு " ம்.. அம்மா தினமும் காலை பூஜையில் சொல்லுவாங்க.... அது எனக்கும் பழக்கம் ஆகிவிட்டது, அம்மா சென்ற பின் இந்த பழக்கம் விட்டுவிட்டது. இன்று ஏனோ தெரியவில்லை அத்தை சொல்லும் போது அம்மா நினைவு வந்துவிட்டது.." என்றாள் குரல் கம்ம.

அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர " இனி நான் கீழேதான் படுக்க வேண்டும் சுமி" என்றான் கண்களில் குறும்புடன்

அவள் அவன் குறும்பை கவனியாது "ஐயோ என்ன, நான்..., ஏதாவது.. " அவளுக்கு எப்படி கேட்க என்று தெரியவில்லை பதட்டத்துடன் அவன் முகம் பார்த்தாள், அவன் கண்களில் தெரிந்த குறும்பில் அவன் ஏதோ விளையாடுகிறான் என்று தெரிந்து கொண்டாள் சுமி.

பின், இவளும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு "வேண்டாம் பாரதி நானே கீழ படுத்து கொள்கிறேன், தூக்கத்தில் தெரியாம என் கை உங்கள் மீது பட்டுவிட்டால் என் கைக்கு மாவு கட்டுதான் போட வேண்டும்..." என்றாள் முகத்தை பரிதாபமாக வைத்து,

முதலில் அவள் சொன்னதில் குழம்பியவன் பின் புரிந்து கொண்டு, "என் உடல் என்ன அவ்வளவு பாறை மாதிரியா இருக்கிறது" என்று அவளை முறைத்தான். அதில் அவளுக்கு சிரிப்பு வந்தது.

"நான் உன்னை பரிகாசம் செய்ய நினைத்தால் நீ என்னை பாறை என்று சொல்லிவிட்டாயே, ம்... நன்றாக பிழைத்து கொள்வாய்" என்றான் சிரிப்புடன்..

பின், அவளிடம் “சுமி, அம்மாவுக்கு நம் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்து விட்டது என்று நினைக்கிறேன், அம்மா ஆபரேஷன் செய்த பின் அறையை விட்டு வெளியே வருவது ரொம்ப அறிதாகி போய்விட்டது, உன்னை பார்த்த பின் தான் இன்று அறையை விட்டு வந்திருக்கிறார். அது மட்டும் அல்லாது ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் பூஜை செய்கிறார்.." என்றான் யோசனையோடு.

"நல்ல விஷயம் தானே அப்புறம் என்ன யோசனை"

"இல்ல ... அம்மா ஏதோ பெரிதாக நமக்கு செக் வைக்க நினைக்கிறார், ஆனால், என்ன என்று தான் தெரியவில்லை.." என்றான்.

அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது , அத்தையை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை நன்றாகத்தான் பேசுகிறார். இவன் கண்களுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் தெரிகிறது, அதை அவனிடமும் கேட்டு விட்டாள்.

அவன் புன்னைகையுடன் "அப்படி இல்லை சுமி.... அம்மா மனதில் நம் மீது இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை, அது வர வரைக்கும் நமக்கு கொஞ்சம் கஷ்டம் தான், அது தீரும் வரையில் அம்மாவும் சும்மா இருக்க மாட்டார்..." என்றார்.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
அவளுக்கு எதுவும் புரியவில்லை இருந்தும் தலையை ஆட்டி வைத்தாள். பின், அவள் கீழ சென்று சமையல் அறையில் பொம்மிக்கி
உதவி செய்து கொண்டு இருந்தவள்..... அவன் ஆபீஸ் செல்ல தயாராகி வரவும், அவன் அம்மா அறையில் இருந்து வெளி வரவும் சரியாக இருந்தது.


"வா பாரதி உட்கார், இன்று என் மருமகள் பரிமாற போகிறாள்.... என்னுடைய எத்தனை நாள் கனவு இது தெரியுமா" என்றார்.

"அம்மா கண்டிப்பாக..... வாங்க இன்று நானும் ஒரு பிடி பிடிக்க போகிறேன் சாப்பாட்டை.." என்றான்.
இருவருக்கும் பரிமாறிய பின், அவளை உட்கார சொன்னார் குமரியம்மா.... அவள் அமர்ந்ததும் குமரியம்மா பாரதியிடம் "பாரதி உங்க திருமணம் வரவேற்பு எப்போ வைக்கலாம்..." என்றார் .

அதை கேட்டு சுமிக்கு புறை ஏறிவிட்டது, " ஐயோ என்ன சுமிமா பார்த்து சாப்பிட கூடாது" என்று அவளை கடிந்து விட்டு தண்ணீர் கொடுத்தார். ஆனால், பாரதிக்கு இது அதிர்ச்சியாக தெரியவில்லை அவன் ஓரளவுக்கு இது எதிர்பார்த்தது தான்.

"இப்போ என்ன அவசரம் அம்மா, தொழில் விஷயமா கனடா போக வேண்டியது இருக்கு... போயிட்டு வந்து பார்த்து கொள்ளலாம்" என்றான்.

“இல்லை தம்பி இந்த ஒரு வாரத்துக்குள் பூஜை ஒன்று செய்து , கண்டிப்பா உங்களுக்கு வரவேற்பு வைக்க வேண்டும்" என்றார் கட்டளையாக .

அவனும் எதுவும் சொல்லாது "சரி அம்மா நான் யோசித்து சொல்கிறேன்" என்றான்.

சுமிக்கு மாடியில் பாரதி அவன் அம்மாவை பற்றி சொன்னது இப்போ
புரிய ஆரம்பித்தது.
 

Kundavi

Writers Team
Tamil Novel Writer
ஆனால், அடுத்த சில நொடிகளில் முழுதாக புரிந்து கொள்ள போகிறாள் என்று பாவம் அவள் அறியவில்லை.

சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை சமையல் அறையில் வைத்து விட்டு வந்தாள். அவள் வந்ததும்

"சுமி இங்கே வாமா" என்றார் அவள் அத்தை.

அவர் பூஜை அறையில் இருக்கவே அங்கு சென்றவள் அவர் காட்டிய ஆரத்தியை கண்களில் ஒத்தி கொண்டாள். பாரதிக்கும் ஆரத்தி காட்டி..... தட்டில் இருந்த குங்குமத்தை சுமியின் வகிடு மற்றும் தாலியில் வைக்க சொன்னார். சுமி அதிர்ச்சியுடன் பாரதியை பார்த்தாள்..... அவனும், இதை எதிர்பார்கவில்லை போல அது அவன் முகத்திலே தெரிந்தது.

"அம்மா எதுக்கு இது எல்லாம் அவள் தான் வைத்து இருக்கிறாளே".

"அய்யோ கண்ணா என் ஆசைக்காக வைபா" என்றார்.

அதிர்ச்சியில் சமைந்து நின்ற சுமியின் அருகே சென்று அவள் வகிட்டில் மற்றும் அவள் கழுத்து தொட்டு தாலியை எடுத்து அதிலும் வைத்து விட்டு , அவள் முகம் காணாது அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் சென்று விட்டான். அவன் சென்றதும் சுமியும் தன் அறைக்கு சென்று விட்டாள்.

காரை ஓட்டி சென்றவன் சுமியை நினைத்து கொண்டு தான் இருந்தான். அவன் தொட்டதும் சிலிர்த்து அடங்கிய அவள் தேகம்,
அவள் கழுத்தை தொட்ட தன் விரலின் குறுகுறுப்பு இன்னும் அடங்க வில்லை அவனுக்கு. பின், ஆபீஸ் சென்றதும் அவன் வேலை மிகுதியால் தற்காலியமாக சுமியை மறந்தான். இங்கு, இவள் நிலை ரொம்ப மோசமாக இருந்தது அவன் தொட்ட இடம் அவளுக்கு இன்னும் சிலிர்த்தது.


பாரதி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவன். அதனால், அடிக்கடி வெளிநாடு பயணம் செய்யும் சூழ்நிலை வரும். இந்த கனடா பயணமும் அப்படித்தான் அதற்கு உண்டான ஏற்பாட்டை அவன் கரியதர்சியிடம் பார்க்க சொல்லி இருந்தான்.

அவன் ஆபீஸ் வந்ததும், எல்லோரும் வணக்கம் வைக்கவும் ஒரு தலை அசைப்புடன் ஏற்றுகொண்டு தன் அறை நோக்கி சென்றான்.

அவன் பின்னோடு சென்ற பிரியா, "குட் மோர்னிங் சார், உங்கள் கனடா ட்ரிப்புக்கு எல்லா போர்மலிட்டி முடிந்துவிட்டது நாளை மறுநாள் பிலைட்..." என்றாள்.

"ம்... சரி நான் அங்கு கொண்டு செல்ல வேண்டிய பைல்ஸ் மற்றும் அதோட நகல் ரெடி செய்து எனக்கு மெயில் அனுப்பிருங்க..." என்றான் கணினியை பார்த்து கொண்டு.

அவளும் சரி என்று விட்டு சென்றாள். அவளுக்கு பாரதி மீது ஒரு ஈர்ப்பு, அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தது உண்டு, அவனுக்கும் அது தெரியும் ஆனால் கண்டுக்க மாட்டான். இப்போ அவனுடைய அவசர திருமணம் தெரிந்த பின் ரொம்ப அதிர்ச்சுதான் கொண்டாள். இருந்தும் இவனை விட அவளுக்கு மனம் இல்லை. இந்த கனடா பயணத்தை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்...

ஆனால்,அவன்நான்மட்டும் போய் வருகிறேன் என்று விட்டான். ஒரு பெரு மூச்சோடு தன் வேலையில் கவனம் செலுத்தினாள். இரவு 8 மணி என்று கடிகாரம் சத்தம் போட்ட பின் தான் அவனுக்கு வீட்டு நினைவு வந்தது கூடவே சுமியின் நினைவும். அவளை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு ஆனால் அது ஏன் என்று தெரியவில்லை. அதை பற்றி யோசியாது வீட்டிற்கு சென்றான்.

அவன் செல்லவும் , அவள் குமரியம்மாவுக்கு பரிமாறி கொண்டு இருந்தாள் அவன் வந்ததும் , அவனை காணாது தன் வேலையை கவனமாக இருந்தவள் மீது அவனுக்கு கோபம் வந்தது..... 'என்னை பார்த்தால் என்ன வந்துவிட போகுது' என்று நினைத்தவன் கோபத்தில் அறைக்கு சென்று விட்டு, உடை மாற்றி வந்தான்.

அவனுக்கும் உணவு பரிமாறினாலே தவிர.... தப்பியும் அவன் முகம் பார்க்க வில்லை. அவன் அம்மா சாப்பிட்டு சென்ற பின், கோபத்தோடு

"என்னடி, என் முகம் அவ்வளவு அசிங்கமாக இருக்கிறதா என்ன..." என்றான்.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.... ‘இது என்ன உரிமை பேச்சு போல் பேசுகிறான், நாம் அவனுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோமோ’ என்று நினைத்தாள்.

அவள் நினைப்பை பற்றி அறியாது, தன் மனதை அலசி கொண்டு இருந்தான் பாரதி அவள் முகம் பார்த்து.




உள்ளம் தொடரும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top