11
அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்த ஷிகாவிற்கு தான் எப்படி விபத்தின்றி வீடு வந்து சேர்ந்தோம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது.
கையில் குழந்தையுடன் அவனை பார்த்த கணம் உலகமே ஒருநொடி தன் இயக்கத்தை நிறுத்தியது போல் அல்லவா அவள் உணர்ந்தாள். அந்நினைவு இப்போதும் அவள் நெஞ்சத்தை சுருக்கென பதம் பார்த்து முள்ளாய் தைத்தது. உள்ளத்தின் வலி கன்னத்தில் கண்ணீரின் சாயலாய் வெளிப்பட்டது. ஆனால் அழபிடிக்கவில்லை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டாள்.
“நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாய் என நான் இங்கு
காத்திருக்கிறேன் மனதாலே உனக்கு மாலை
மாற்றிக்கொண்டே கனவாலே உனக்கு
மனைவியாகிக் கொண்டே நான் இங்கு
காத்திருக்கிறேன் காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே நான் இங்கு
காத்திருக்கிறேன் இங்கு காத்திருக்கிறேன்”
திறந்திருந்த ஜன்னல் வழி கசிந்த பாடல் அவள் நிலையை அப்பட்டமாய் எடுத்துக்காட்டியது. தனக்காகவே பாடியிருப்பார்கள் போலும் கழிவிரக்கத்துடன் நினைத்துக்கொண்டாள். உள்ளம் வெதும்பியது. துக்கத்தில் தொண்டை அடைக்க இதயத்தினுள் கூர் கத்தியை விட்டு குடைந்தது போல் வலியெடுக்க கரம் கொண்டு நெஞ்சை அழுத்தினாள்.
கண்ணீர் கரையுடன் முகம் முழுவதும் சோகத்தை அப்பிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த மகளை கண்டு பதறிப்போன சிவகாமி அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதும் என்னவோ என்று உள்ளம் மறுக மகளின் அறைக்கதவை தட்டினார்.
“ஷிகா... ஷிகா கதவ தொறம்மா....”
அன்னையின் குரலில் நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கியவள் குளியறைக்குள் சென்று முகத்தை அழும்பி தாமதிக்காமல் கதவை திறந்தாள்.
“என்னம்மா....” குரல் பிசிறடித்தது. அழுகையில் கரைந்த நெஞ்சத்தின் கரகரப்பு குரலில் பிரதிபலித்தது.
“என்னாச்சு ஷிகா... ஏன்மா ஒருமாதிரி இருக்க உடம்புகிடம்பு சரியில்லையா... காபி போட்டு தரட்டுமா...”
‘உடம்பு நல்லாத்தான்மா இருக்கு... மனசு தான் உடஞ்சுபோச்சு...’ அன்னையின் கேள்விக்கு மனதினுள் பதில் கூறிக்கொண்டாள்.
“லேசா தலைவலி மாதிரி இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும்...”
“சரிம்மா தலைவலி மாத்திரை ஒன்னு போட்டு தூங்கு...” என்றவர் மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தவண்ணம் அகன்றுவிட்டார்.
பெற்று வளர்த்த தாய்க்கு தெரியாத மகளை பற்றி. மகளின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டார். அது தலைவலி பிரச்சினை அல்ல தலைபோகும் பிரச்சினை என்று. அதை தான் தாய் அறியாத சூல் உண்டோ என்பார்களோ. இருந்தும் அதை அவளிடத்தில் கேட்டு சங்கடப்படுத்தாமல் வந்துவிட்டார். சொல்ல வேண்டும் என்றால் அவளே தன்னிடத்தில் சொல்லுவாள் என்ற நம்பிக்கையில்.
அவளே மறக்க நினைக்கும் ஒன்றை எப்படி தன் தாயிடத்தில் கூறுவாள்.
ஹர்ஷித்தை தமக்கை வீட்டில் விட்ட ஆர்யன் நொடியும் தாமதிக்காமல் வீட்டிக்கு வந்து அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டவன் பிரித்தறிய முடியா மனநிலையில் இருந்தான்.
அவளை பார்த்ததில் மகிழ்வதா இல்லை கண்ணீருடன் தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றதை நினைத்து வருந்துவதா என குழம்பிப் போனான்.
இருந்தும் முழுதாய் ஏழு வருடங்கள் கழித்து அவளை பார்த்ததில் அவன் நெஞ்சம் களிப்பில் விம்மியது. தன் காதல் தான் கைகூடாமல் போய்விட்டது அட்லீஸ்ட் அவளின் காதலாவது கைகூட வேண்டும் என எண்ணிக்கொண்டான். முக்கியமாய் தான் அவள் கைபிடிக்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டான்.
தன்னை காதலித்தவளின் காதல் நிறைவேற வேண்டும் என உளமார எண்ணினான் ஷிகாவின் காதலன்.
அவன் மனதின் எண்ணம் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க பளீர் புன்னகையுடன் படுக்கையில் சாய்ந்தவன் அவள் நினைவுகளை சுகமாய் அசைபோட்டான்.
‘ஷிகாயா... என் பெயர்... பெயரை சொல்லியே கூப்பிடுங்க...’ பதின்வயதில் இருந்தவளின் ஆர்ப்பாட்டமான குரல் அவன் செவியினில் ஒலிக்க கண் மூடி ரசித்தவன் ‘இனிமே பேரை சொல்லி கூப்பிட வேண்டியது தான்..’ மனதோடு பேசி அவளின் நினைவுகளூடே உறக்கத்தை தழுவினான்.
தூங்க வேண்டும் எனக்கூறி விளக்கை அணைத்தும் கண்களில் தூக்கம் எட்டாமல் அவன் நினைவு கொடுத்த வலியை தாங்க முடியாமல் படுக்கையில் புரண்டவளுக்கு எத்தனை முயன்றும் கண்கள் கரிப்பதை தடுக்கமுடியவில்லை.
அதற்கு மேல் முடியாமல் எழுந்தமர்ந்தவள் தலையை கைகளால் தாங்கிக்கொண்டாள். இப்போது உண்மையிலே தலைவலி மண்டையை பிளந்தது. மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டவள் தலையை கையால் தாங்கிக்கொண்டே அலுமாரியை திறந்து அதனுள் இருந்த கவரை வெளியில் எடுத்தாள்.
ஆர்யனின் நினைவில் அவள் எழுதிய கவிதைகளும் அவனை தினமும் பார்ப்பதற்காய் அவனை மனக்கண்ணில் கொண்டு வரைந்த ஓவியங்களும் அவளை பார்த்து கேலியாய் சிரித்தது.
அதை பிரித்து அதில் இருந்த ஓவியங்களை வெளியில் எடுத்தவள் வழக்கம்போல் ஒவ்வொன்றாய் பார்வையிட்டாள்.
அவன் இருப்பது போன்ற ஓவியம், அவனும் அவளும் இருப்பது போன்றது, அவர்களுக்கு திருமணம் ஆவது போன்று, தாய்மை பூரிப்புடன் அவள் கர்ப்பம் தரிப்பது போன்று, பிறந்த குழந்தையை அவன் கைகளில் ஏந்திய போல், அவர்களின் மகவு வளரும் பருவங்கள், இறுதியில் அவர்களின் முதுமை தோற்றம் என தாங்கள் இப்படியெல்லாம் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் அவள் வரைந்த ஓவியங்கள் அவை.
இதற்கு மேலும் இதை வைத்திருப்பது நியாயமன்று என வாதிட்ட மூளை அதை கிழித்தெறிய கட்டளை இட்டது. காதல் வாதையில் வாடிய நெஞ்சம் நிஜத்தில் உறவாட முடியாதவனை நிழலிலாவது பார்த்து வாழ ஆசை கொண்டு அதை பொக்கிஷமாய் பாதுகாக்க முயன்றது.
காதல் நெஞ்சமோ மூளையின் சொற்படி நடவாது மனதின் சொல் கேட்டு மீண்டும் அதை பத்திரப்படுத்தியது. ஆனால் மறு நிமிடமே அதை கசக்கி தூர வீசினாள். ‘அவன்’ நினைவில் அதை காக்க முயன்றவள் ‘சின்னவனின்’ நினைவில் தான் செய்ய துணிந்த காரியத்தை எண்ணி நொந்துபோய் தரையில் மடிந்து அமர்ந்து கதறியழுதாள்.
சிலவற்றை மறந்து விட்டேன் என்று வாயால் கூறலாமே தவிர மனதால் கூறுவது கடினம் தான். ஏனென்றால் சிலவற்றை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.
இப்போது அவள் நிலையும் அது தான். அவனை மறந்து விட்டதாக மனதை கல்லாகிக் கொண்டவள் இப்போது அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் உள்ளம் கதற தவித்து துடித்துப் போனாள்.
மறுநாள் காலையில் வீங்கி சிவந்த முகத்துடன் மருத்துவமனை செல்ல தயாராகி வந்த ஷிகா ஒன்றும் பேசாது சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.
காலையுணவை பரிமாறிக்கொண்டிருந்த சிவகாமி அவளின் வீங்கிய முகத்தையும் சிவந்திருந்த கண்களையும் ஓர் நொடி கூர்ந்தவர் அதை வெளிக்காட்டாமல் “தலைவலி இன்னும் கொறயலையா ஷிகா...” வாய் கேள்வி எழுப்பினாலும் கைகள் கணவனுக்கும் மகனுக்கும் பரிமாறிக்கொண்டிருந்தது.
அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்த ஷிகாவிற்கு தான் எப்படி விபத்தின்றி வீடு வந்து சேர்ந்தோம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது.
கையில் குழந்தையுடன் அவனை பார்த்த கணம் உலகமே ஒருநொடி தன் இயக்கத்தை நிறுத்தியது போல் அல்லவா அவள் உணர்ந்தாள். அந்நினைவு இப்போதும் அவள் நெஞ்சத்தை சுருக்கென பதம் பார்த்து முள்ளாய் தைத்தது. உள்ளத்தின் வலி கன்னத்தில் கண்ணீரின் சாயலாய் வெளிப்பட்டது. ஆனால் அழபிடிக்கவில்லை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டாள்.
“நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்
எனை மணப்பாய் என நான் இங்கு
காத்திருக்கிறேன் மனதாலே உனக்கு மாலை
மாற்றிக்கொண்டே கனவாலே உனக்கு
மனைவியாகிக் கொண்டே நான் இங்கு
காத்திருக்கிறேன் காலங்களை மறந்து அசையாத
சிலையாக அமர்ந்தே நான் இங்கு
காத்திருக்கிறேன் இங்கு காத்திருக்கிறேன்”
திறந்திருந்த ஜன்னல் வழி கசிந்த பாடல் அவள் நிலையை அப்பட்டமாய் எடுத்துக்காட்டியது. தனக்காகவே பாடியிருப்பார்கள் போலும் கழிவிரக்கத்துடன் நினைத்துக்கொண்டாள். உள்ளம் வெதும்பியது. துக்கத்தில் தொண்டை அடைக்க இதயத்தினுள் கூர் கத்தியை விட்டு குடைந்தது போல் வலியெடுக்க கரம் கொண்டு நெஞ்சை அழுத்தினாள்.
கண்ணீர் கரையுடன் முகம் முழுவதும் சோகத்தை அப்பிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த மகளை கண்டு பதறிப்போன சிவகாமி அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதும் என்னவோ என்று உள்ளம் மறுக மகளின் அறைக்கதவை தட்டினார்.
“ஷிகா... ஷிகா கதவ தொறம்மா....”
அன்னையின் குரலில் நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கியவள் குளியறைக்குள் சென்று முகத்தை அழும்பி தாமதிக்காமல் கதவை திறந்தாள்.
“என்னம்மா....” குரல் பிசிறடித்தது. அழுகையில் கரைந்த நெஞ்சத்தின் கரகரப்பு குரலில் பிரதிபலித்தது.
“என்னாச்சு ஷிகா... ஏன்மா ஒருமாதிரி இருக்க உடம்புகிடம்பு சரியில்லையா... காபி போட்டு தரட்டுமா...”
‘உடம்பு நல்லாத்தான்மா இருக்கு... மனசு தான் உடஞ்சுபோச்சு...’ அன்னையின் கேள்விக்கு மனதினுள் பதில் கூறிக்கொண்டாள்.
“லேசா தலைவலி மாதிரி இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும்...”
“சரிம்மா தலைவலி மாத்திரை ஒன்னு போட்டு தூங்கு...” என்றவர் மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தவண்ணம் அகன்றுவிட்டார்.
பெற்று வளர்த்த தாய்க்கு தெரியாத மகளை பற்றி. மகளின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டார். அது தலைவலி பிரச்சினை அல்ல தலைபோகும் பிரச்சினை என்று. அதை தான் தாய் அறியாத சூல் உண்டோ என்பார்களோ. இருந்தும் அதை அவளிடத்தில் கேட்டு சங்கடப்படுத்தாமல் வந்துவிட்டார். சொல்ல வேண்டும் என்றால் அவளே தன்னிடத்தில் சொல்லுவாள் என்ற நம்பிக்கையில்.
அவளே மறக்க நினைக்கும் ஒன்றை எப்படி தன் தாயிடத்தில் கூறுவாள்.
ஹர்ஷித்தை தமக்கை வீட்டில் விட்ட ஆர்யன் நொடியும் தாமதிக்காமல் வீட்டிக்கு வந்து அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டவன் பிரித்தறிய முடியா மனநிலையில் இருந்தான்.
அவளை பார்த்ததில் மகிழ்வதா இல்லை கண்ணீருடன் தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றதை நினைத்து வருந்துவதா என குழம்பிப் போனான்.
இருந்தும் முழுதாய் ஏழு வருடங்கள் கழித்து அவளை பார்த்ததில் அவன் நெஞ்சம் களிப்பில் விம்மியது. தன் காதல் தான் கைகூடாமல் போய்விட்டது அட்லீஸ்ட் அவளின் காதலாவது கைகூட வேண்டும் என எண்ணிக்கொண்டான். முக்கியமாய் தான் அவள் கைபிடிக்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டான்.
தன்னை காதலித்தவளின் காதல் நிறைவேற வேண்டும் என உளமார எண்ணினான் ஷிகாவின் காதலன்.
அவன் மனதின் எண்ணம் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க பளீர் புன்னகையுடன் படுக்கையில் சாய்ந்தவன் அவள் நினைவுகளை சுகமாய் அசைபோட்டான்.
‘ஷிகாயா... என் பெயர்... பெயரை சொல்லியே கூப்பிடுங்க...’ பதின்வயதில் இருந்தவளின் ஆர்ப்பாட்டமான குரல் அவன் செவியினில் ஒலிக்க கண் மூடி ரசித்தவன் ‘இனிமே பேரை சொல்லி கூப்பிட வேண்டியது தான்..’ மனதோடு பேசி அவளின் நினைவுகளூடே உறக்கத்தை தழுவினான்.
தூங்க வேண்டும் எனக்கூறி விளக்கை அணைத்தும் கண்களில் தூக்கம் எட்டாமல் அவன் நினைவு கொடுத்த வலியை தாங்க முடியாமல் படுக்கையில் புரண்டவளுக்கு எத்தனை முயன்றும் கண்கள் கரிப்பதை தடுக்கமுடியவில்லை.
அதற்கு மேல் முடியாமல் எழுந்தமர்ந்தவள் தலையை கைகளால் தாங்கிக்கொண்டாள். இப்போது உண்மையிலே தலைவலி மண்டையை பிளந்தது. மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டவள் தலையை கையால் தாங்கிக்கொண்டே அலுமாரியை திறந்து அதனுள் இருந்த கவரை வெளியில் எடுத்தாள்.
ஆர்யனின் நினைவில் அவள் எழுதிய கவிதைகளும் அவனை தினமும் பார்ப்பதற்காய் அவனை மனக்கண்ணில் கொண்டு வரைந்த ஓவியங்களும் அவளை பார்த்து கேலியாய் சிரித்தது.
அதை பிரித்து அதில் இருந்த ஓவியங்களை வெளியில் எடுத்தவள் வழக்கம்போல் ஒவ்வொன்றாய் பார்வையிட்டாள்.
அவன் இருப்பது போன்ற ஓவியம், அவனும் அவளும் இருப்பது போன்றது, அவர்களுக்கு திருமணம் ஆவது போன்று, தாய்மை பூரிப்புடன் அவள் கர்ப்பம் தரிப்பது போன்று, பிறந்த குழந்தையை அவன் கைகளில் ஏந்திய போல், அவர்களின் மகவு வளரும் பருவங்கள், இறுதியில் அவர்களின் முதுமை தோற்றம் என தாங்கள் இப்படியெல்லாம் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் அவள் வரைந்த ஓவியங்கள் அவை.
இதற்கு மேலும் இதை வைத்திருப்பது நியாயமன்று என வாதிட்ட மூளை அதை கிழித்தெறிய கட்டளை இட்டது. காதல் வாதையில் வாடிய நெஞ்சம் நிஜத்தில் உறவாட முடியாதவனை நிழலிலாவது பார்த்து வாழ ஆசை கொண்டு அதை பொக்கிஷமாய் பாதுகாக்க முயன்றது.
காதல் நெஞ்சமோ மூளையின் சொற்படி நடவாது மனதின் சொல் கேட்டு மீண்டும் அதை பத்திரப்படுத்தியது. ஆனால் மறு நிமிடமே அதை கசக்கி தூர வீசினாள். ‘அவன்’ நினைவில் அதை காக்க முயன்றவள் ‘சின்னவனின்’ நினைவில் தான் செய்ய துணிந்த காரியத்தை எண்ணி நொந்துபோய் தரையில் மடிந்து அமர்ந்து கதறியழுதாள்.
சிலவற்றை மறந்து விட்டேன் என்று வாயால் கூறலாமே தவிர மனதால் கூறுவது கடினம் தான். ஏனென்றால் சிலவற்றை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.
இப்போது அவள் நிலையும் அது தான். அவனை மறந்து விட்டதாக மனதை கல்லாகிக் கொண்டவள் இப்போது அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் உள்ளம் கதற தவித்து துடித்துப் போனாள்.
மறுநாள் காலையில் வீங்கி சிவந்த முகத்துடன் மருத்துவமனை செல்ல தயாராகி வந்த ஷிகா ஒன்றும் பேசாது சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.
காலையுணவை பரிமாறிக்கொண்டிருந்த சிவகாமி அவளின் வீங்கிய முகத்தையும் சிவந்திருந்த கண்களையும் ஓர் நொடி கூர்ந்தவர் அதை வெளிக்காட்டாமல் “தலைவலி இன்னும் கொறயலையா ஷிகா...” வாய் கேள்வி எழுப்பினாலும் கைகள் கணவனுக்கும் மகனுக்கும் பரிமாறிக்கொண்டிருந்தது.