10
உள்ளத்தினில் பொங்கி பிரவாகமெடுத்த உணர்வுகளை முகத்தினில் காட்டாது வெறுமை சூழ்ந்த முகமாய் தன் முன் நின்றவனையே பார்த்திருந்தாள் ஷிகா.
இதயத்தினுள் கத்தியை விட்டு சுழற்றியது போல் வலித்தது. தாங்கிக்கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்ட எத்தனித்தது. அணையிட்டு தடுத்து விட்டாள்.
அவன் ஏமாற்றியிருந்தால் ஒருவேளை கண்ணீர் வந்திருக்குமோ என்னவோ... இங்கு தான் அவன் அவளை ஏமாற்றவேயில்லையே... இங்கு காத்திருந்து ஏமாந்தது என்னவோ பெண்ணவள் தான் எனும் போது கண்ணீர் விட்டு என்ன பயன்.
தான் காத்திருந்த ஏமாந்து போன கதையை எண்ணி அவள் இதழ்கள் விரக்தியில் வளைந்தது. ‘எனக்கும் இப்போ காதலிக்கனும் போல இருக்கு...’ விக்ரமின் வார்த்தைகள் காதில் ஒலித்து அவளை பார்த்து ஏளனமாய் சிரித்தது.
இன்று அவனிடத்தில் பெருமையுடன் கூறிய தன் காதல் கதைக்கு அர்த்தமேயில்லாது போனதை எண்ணி கசந்த புன்னகையை படரவிட்டவள் மௌனமாய் அவனை பார்த்தாள். அவனிடத்தில் பேச வேண்டும் போல் உள்ளம் பரபரத்தாலும் என்ன பேசுவது தான் ஏமாந்த போன வேதனைக்கு அவனை பலிகடாய் ஆக்குவதா என்ற எண்ணம் மனதை வியாபிக்க நெஞ்சத்தினை பதம் பார்த்த வலியினை தாங்க முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
ஆர்யன் என்னவென்று பிரித்தறிய முடியாத ஒரு மனநிலையில் அவளையே பார்த்திருந்தான். அன்று சிறு பெண் போன்று இருந்தவள் தற்போது சராசரி உயரத்தில் அவளின் சிவந்த மேனிக்கு எடுப்பாய் பொருந்திய இளம் சிகப்பு நிற புடவையில் தேவதை போன்று நிற்பதை பார்த்து தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்பதை வரையறுக்க இயலாதவனாய் ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டான்.
ஏழு வருடங்களுக்கு முன்பு அவள் காதலை உரைக்கும் போது ஏதோ விளையாட்டிற்காய் கூறுகிறாள் என்று தான் அன்று அவன் அவளை திட்டிவிட்டு வந்தது. அதுவும் அப்போது தன் காதல் தோற்றுப்போன சோகத்தில் உழன்று கொண்டிருந்தவன் அவளின் பேச்சினை கேட்டு கோபமும் கொண்டதன் விளைவு தான் அவளை அறைவதற்கும் கையோங்கியது.
அதன் பின் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவன் அவளை பார்க்கவில்லை. அவள் படிப்பதற்காய் வெளியூர் செல்ல அவன் மேற்படிப்பிற்காய் வெளிநாடு சென்று விட்டான். இப்போது தான் சொந்தமாய் நிறுவனம் நடத்தி வருகிறான். அதில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பினும் பாலாவின் வேண்டுகோளிற்கு இணங்க தினமும் தன் மருமகனை காண வந்துவிடுவான்.
அவனுக்கு இருக்கும் வேலைகளில் தினமும் ஹர்ஷுவை காண அவனால் வர முடியாது தான்.. இருந்தும் தானும் இல்லாமல் அவனும் வராவிட்டால் குழந்தை மனதுடைந்து போய்விடுவான் என்பதால் பாலா ஊட்டிக்கு செல்லும் முன் அவனுக்கு அழைத்து தினமும் ஒருமுறையாவது ஹர்ஷுவை வீட்டில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாள்.
அவள் கேட்டதற்காகவே தன் வேலைகளை கிடப்பில் போட்டு மருமகனின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றான். தன்னால் காயப்பட்டு போனவளுக்கு அவளின் வார்த்தைகளை கேட்டு நடப்பதன் மூலமாவது பிராயசித்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொடுத்த உந்துதல் அது.
அப்படி வரப்போய் தான் தன் மனதின் ஆழத்தில் இருந்தவளை பல வருடத்தின் பின் நேரில் காண்கிறான். இதற்காகவே பாலாவிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல் தோன்றியது.
அன்றைய மழைநாளில் தான் அவன் பாலாவை கடைசியா பார்த்தது. அதன்பின் அவளை பார்க்கும் திராணியற்று வெளிநாடு சென்றவன் திரும்பி வரும்போது அவள் முற்றிலும் மாறிபோய் வேறு ஒருத்தியாக இருந்தாள்.
அவனுமே அப்படியொரு நிலையில் தான் இருந்தான். நிறைவேறாது என்று தெரிந்தும் வீணே காதல் கொண்டு காத்திருப்பதற்கு அவனது பக்குவப்பட்ட மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனாலும் அவனால் அவ்வளவு சுலபத்தில் அவளை மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.
முதல் முதலாய் அவனுள் காதலை தோற்றுவித்தவள்... அவள் நினைவு என்றும் அவனுள் வாடாது இருக்கும். இப்போதும் அவனுள் அவளுடனான காதல் நினைவுகள் உயிர்ப்புடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு நினைவுகள் தான் வாழ்கின்றனவே தவிர காதலின் ஆதிக்கம் காலத்தின் நீண்ட நெடிய ஆறு வருடங்களின் தாக்கத்தில் குறைந்து மறைந்து போயிருந்தது.
தன் மனதை முதலில் தீண்டிய பெண்ணவளின் காதலை காலத்தின் கட்டாயத்தில் மறந்தவன் தனக்காய் காத்திருந்த பெண்ணவளை மனதினுள் நிறுத்திக்கொண்டான். இடையிடையே அவள் நினைவுகள் எழும் போதெல்லாம் அன்றைய அவளின் தோற்றத்தை கண்முன் நிறுத்திக்கொள்வான்.
இடைப்பட்ட இத்தனை வருடங்களில் அவளின் அன்றைய தோற்றத்தை மட்டும் தன் மனதில் நிறுத்திக்கொண்டு அவள் நினைவில் இருந்தவன் இன்று அவளை நேரில் பார்த்தும் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்தவியலாது அவளையே விழியகற்றாது பார்த்தான்.
பெண்ணவளோ முகம் கசங்கி வேதனையில் வாடிப்போய் தலைகுனிந்து நிற்க அவள் தோற்றம் அவன் மனதை அறுப்பதாய்...
அவளருகில் சென்று ஆறுதல் கூற விழைந்த உள்ளத்தை பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டவன் தனக்கு உரிமையான பொருளை பார்வையிடும் உரிமையாளனைப்போல் அவளை பார்வையால் மொய்த்தான்.
தன்னை துளைப்பது போல் இருந்த ஏதோவொன்றில் விழியை உயர்த்திய ஷிகா ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன் மனதில் காதலனாய் இருந்தவன் தன்னை உரிமையாய் பார்ப்பதை கண்டு கண்கள் மின்ன அவனை ஆர்வமாய் பார்த்தாள்.
இதற்காகத்தானே அவள் இத்தனை நாளாய் தவமிருந்தது. அந்த தவத்தின் பலன் ஏழு வருடங்கள் கழித்து அவளுக்கு கிடைத்து விட்டது. அவளுக்கு இதுவே போதும். அவனின் பார்வை ஒன்றே ஆயுளுக்கும் போதுமாய் இருந்தது. அவனின் ஒற்றை பார்வையில் பெண்ணவள் உயிர்த்தெழுந்தாள்.
அவள் காதல் நெஞ்சம் காதலில் மலர்ந்து மணம் வீசியது. அவன் பார்வையின் வீரியத்தினை தாங்கவியலாதவளாய் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். அவன் பார்வை துளைத்த கன்னங்கள் வெட்கத்தில் கூசிச் சிவந்தது செந்தாமரையாய்...
ஆனால் மறுநொடியே நிதர்சனம் முகத்தில் அறைய கூனிக்குறுகிப் போய் அவனை பார்த்தவளின் பார்வை அவளையும் மீறி அவன் தோளில் வாகாய் சாய்ந்திருந்த சின்னவனின் மேல் படிந்தது.
‘தான் என்ன காரியம் செய்துவிட்டோம்...’ தன் காதலுக்காய் ஒரு சிறு மொட்டின் வாழ்க்கையும் அவனை பெற்ற தாயின் வாழ்க்கையும் பாழாவதா... என்ன கேவலமான எண்ணம்.. தன் காதல் அத்தனை கீழ்த்தரமானதா... காதல் தன் இணையை வாழ வைத்துத்தான் பார்க்கும்... இணையின் சந்தோஷத்தை பிடுங்கிக்கொள்ளும் காதல் காதலே அல்லவே... தன் ஒருத்தியின் சுயநலத்தால் ஒரு அழகிய குடும்பம் சிதைவதா வேண்டாம்.... வேண்டாம்... அப்படியொரு காதலே எனக்கு வேண்டாம்... மனதை கல்லாக்கிக் கொண்டாள்.
மனது மட்டுமல்ல அதனுள் இருந்த காதலும் கல்லாகவே மாறிவிட்டது. உண்மை அறியாமல் தன்னவனின் நலனிற்காய் அவனின் காதல் வாழ்க்கைக்காய் வேண்டி தன் காதலை துறந்தாள் அந்த காதலி.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் கல்லாய் இறுகிப்போன பெண்ணவளின் காதல் நெஞ்சத்தை கரைத்து அதனுள் இருக்கும் காதலை கசிந்திட செய்வானா அவளவன்...
*****
உள்ளத்தினில் பொங்கி பிரவாகமெடுத்த உணர்வுகளை முகத்தினில் காட்டாது வெறுமை சூழ்ந்த முகமாய் தன் முன் நின்றவனையே பார்த்திருந்தாள் ஷிகா.
இதயத்தினுள் கத்தியை விட்டு சுழற்றியது போல் வலித்தது. தாங்கிக்கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்ட எத்தனித்தது. அணையிட்டு தடுத்து விட்டாள்.
அவன் ஏமாற்றியிருந்தால் ஒருவேளை கண்ணீர் வந்திருக்குமோ என்னவோ... இங்கு தான் அவன் அவளை ஏமாற்றவேயில்லையே... இங்கு காத்திருந்து ஏமாந்தது என்னவோ பெண்ணவள் தான் எனும் போது கண்ணீர் விட்டு என்ன பயன்.
தான் காத்திருந்த ஏமாந்து போன கதையை எண்ணி அவள் இதழ்கள் விரக்தியில் வளைந்தது. ‘எனக்கும் இப்போ காதலிக்கனும் போல இருக்கு...’ விக்ரமின் வார்த்தைகள் காதில் ஒலித்து அவளை பார்த்து ஏளனமாய் சிரித்தது.
இன்று அவனிடத்தில் பெருமையுடன் கூறிய தன் காதல் கதைக்கு அர்த்தமேயில்லாது போனதை எண்ணி கசந்த புன்னகையை படரவிட்டவள் மௌனமாய் அவனை பார்த்தாள். அவனிடத்தில் பேச வேண்டும் போல் உள்ளம் பரபரத்தாலும் என்ன பேசுவது தான் ஏமாந்த போன வேதனைக்கு அவனை பலிகடாய் ஆக்குவதா என்ற எண்ணம் மனதை வியாபிக்க நெஞ்சத்தினை பதம் பார்த்த வலியினை தாங்க முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
ஆர்யன் என்னவென்று பிரித்தறிய முடியாத ஒரு மனநிலையில் அவளையே பார்த்திருந்தான். அன்று சிறு பெண் போன்று இருந்தவள் தற்போது சராசரி உயரத்தில் அவளின் சிவந்த மேனிக்கு எடுப்பாய் பொருந்திய இளம் சிகப்பு நிற புடவையில் தேவதை போன்று நிற்பதை பார்த்து தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்பதை வரையறுக்க இயலாதவனாய் ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டான்.
ஏழு வருடங்களுக்கு முன்பு அவள் காதலை உரைக்கும் போது ஏதோ விளையாட்டிற்காய் கூறுகிறாள் என்று தான் அன்று அவன் அவளை திட்டிவிட்டு வந்தது. அதுவும் அப்போது தன் காதல் தோற்றுப்போன சோகத்தில் உழன்று கொண்டிருந்தவன் அவளின் பேச்சினை கேட்டு கோபமும் கொண்டதன் விளைவு தான் அவளை அறைவதற்கும் கையோங்கியது.
அதன் பின் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவன் அவளை பார்க்கவில்லை. அவள் படிப்பதற்காய் வெளியூர் செல்ல அவன் மேற்படிப்பிற்காய் வெளிநாடு சென்று விட்டான். இப்போது தான் சொந்தமாய் நிறுவனம் நடத்தி வருகிறான். அதில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பினும் பாலாவின் வேண்டுகோளிற்கு இணங்க தினமும் தன் மருமகனை காண வந்துவிடுவான்.
அவனுக்கு இருக்கும் வேலைகளில் தினமும் ஹர்ஷுவை காண அவனால் வர முடியாது தான்.. இருந்தும் தானும் இல்லாமல் அவனும் வராவிட்டால் குழந்தை மனதுடைந்து போய்விடுவான் என்பதால் பாலா ஊட்டிக்கு செல்லும் முன் அவனுக்கு அழைத்து தினமும் ஒருமுறையாவது ஹர்ஷுவை வீட்டில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாள்.
அவள் கேட்டதற்காகவே தன் வேலைகளை கிடப்பில் போட்டு மருமகனின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றான். தன்னால் காயப்பட்டு போனவளுக்கு அவளின் வார்த்தைகளை கேட்டு நடப்பதன் மூலமாவது பிராயசித்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொடுத்த உந்துதல் அது.
அப்படி வரப்போய் தான் தன் மனதின் ஆழத்தில் இருந்தவளை பல வருடத்தின் பின் நேரில் காண்கிறான். இதற்காகவே பாலாவிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல் தோன்றியது.
அன்றைய மழைநாளில் தான் அவன் பாலாவை கடைசியா பார்த்தது. அதன்பின் அவளை பார்க்கும் திராணியற்று வெளிநாடு சென்றவன் திரும்பி வரும்போது அவள் முற்றிலும் மாறிபோய் வேறு ஒருத்தியாக இருந்தாள்.
அவனுமே அப்படியொரு நிலையில் தான் இருந்தான். நிறைவேறாது என்று தெரிந்தும் வீணே காதல் கொண்டு காத்திருப்பதற்கு அவனது பக்குவப்பட்ட மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனாலும் அவனால் அவ்வளவு சுலபத்தில் அவளை மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.
முதல் முதலாய் அவனுள் காதலை தோற்றுவித்தவள்... அவள் நினைவு என்றும் அவனுள் வாடாது இருக்கும். இப்போதும் அவனுள் அவளுடனான காதல் நினைவுகள் உயிர்ப்புடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு நினைவுகள் தான் வாழ்கின்றனவே தவிர காதலின் ஆதிக்கம் காலத்தின் நீண்ட நெடிய ஆறு வருடங்களின் தாக்கத்தில் குறைந்து மறைந்து போயிருந்தது.
தன் மனதை முதலில் தீண்டிய பெண்ணவளின் காதலை காலத்தின் கட்டாயத்தில் மறந்தவன் தனக்காய் காத்திருந்த பெண்ணவளை மனதினுள் நிறுத்திக்கொண்டான். இடையிடையே அவள் நினைவுகள் எழும் போதெல்லாம் அன்றைய அவளின் தோற்றத்தை கண்முன் நிறுத்திக்கொள்வான்.
இடைப்பட்ட இத்தனை வருடங்களில் அவளின் அன்றைய தோற்றத்தை மட்டும் தன் மனதில் நிறுத்திக்கொண்டு அவள் நினைவில் இருந்தவன் இன்று அவளை நேரில் பார்த்தும் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்தவியலாது அவளையே விழியகற்றாது பார்த்தான்.
பெண்ணவளோ முகம் கசங்கி வேதனையில் வாடிப்போய் தலைகுனிந்து நிற்க அவள் தோற்றம் அவன் மனதை அறுப்பதாய்...
அவளருகில் சென்று ஆறுதல் கூற விழைந்த உள்ளத்தை பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டவன் தனக்கு உரிமையான பொருளை பார்வையிடும் உரிமையாளனைப்போல் அவளை பார்வையால் மொய்த்தான்.
தன்னை துளைப்பது போல் இருந்த ஏதோவொன்றில் விழியை உயர்த்திய ஷிகா ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன் மனதில் காதலனாய் இருந்தவன் தன்னை உரிமையாய் பார்ப்பதை கண்டு கண்கள் மின்ன அவனை ஆர்வமாய் பார்த்தாள்.
இதற்காகத்தானே அவள் இத்தனை நாளாய் தவமிருந்தது. அந்த தவத்தின் பலன் ஏழு வருடங்கள் கழித்து அவளுக்கு கிடைத்து விட்டது. அவளுக்கு இதுவே போதும். அவனின் பார்வை ஒன்றே ஆயுளுக்கும் போதுமாய் இருந்தது. அவனின் ஒற்றை பார்வையில் பெண்ணவள் உயிர்த்தெழுந்தாள்.
அவள் காதல் நெஞ்சம் காதலில் மலர்ந்து மணம் வீசியது. அவன் பார்வையின் வீரியத்தினை தாங்கவியலாதவளாய் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். அவன் பார்வை துளைத்த கன்னங்கள் வெட்கத்தில் கூசிச் சிவந்தது செந்தாமரையாய்...
ஆனால் மறுநொடியே நிதர்சனம் முகத்தில் அறைய கூனிக்குறுகிப் போய் அவனை பார்த்தவளின் பார்வை அவளையும் மீறி அவன் தோளில் வாகாய் சாய்ந்திருந்த சின்னவனின் மேல் படிந்தது.
‘தான் என்ன காரியம் செய்துவிட்டோம்...’ தன் காதலுக்காய் ஒரு சிறு மொட்டின் வாழ்க்கையும் அவனை பெற்ற தாயின் வாழ்க்கையும் பாழாவதா... என்ன கேவலமான எண்ணம்.. தன் காதல் அத்தனை கீழ்த்தரமானதா... காதல் தன் இணையை வாழ வைத்துத்தான் பார்க்கும்... இணையின் சந்தோஷத்தை பிடுங்கிக்கொள்ளும் காதல் காதலே அல்லவே... தன் ஒருத்தியின் சுயநலத்தால் ஒரு அழகிய குடும்பம் சிதைவதா வேண்டாம்.... வேண்டாம்... அப்படியொரு காதலே எனக்கு வேண்டாம்... மனதை கல்லாக்கிக் கொண்டாள்.
மனது மட்டுமல்ல அதனுள் இருந்த காதலும் கல்லாகவே மாறிவிட்டது. உண்மை அறியாமல் தன்னவனின் நலனிற்காய் அவனின் காதல் வாழ்க்கைக்காய் வேண்டி தன் காதலை துறந்தாள் அந்த காதலி.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் கல்லாய் இறுகிப்போன பெண்ணவளின் காதல் நெஞ்சத்தை கரைத்து அதனுள் இருக்கும் காதலை கசிந்திட செய்வானா அவளவன்...
*****