08
அன்று நேரத்துடனே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாள் ஷிகா. அவள் கடமை நேரம் முடிவடைந்திருக்க வெளியேறியவள் அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த விக்ரமை பார்த்து சிநேகமாய் சிரித்து வெளியேற எத்தனிக்க அவளை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... எனக்காக பைவ் மினிட்ஸ் ஒதுக்க முடியுமா...” வேண்டுதலாய் கேட்டான்.
அதை கேட்டு என்ன சொல்வதென தெரியாமல் சில கணங்கள் விழித்தவள் அவன் கண்களில் தெரிந்த கெஞ்சுதல் பார்வையில் அரைமனதாய் சம்மதித்தாள்.
இருவரும் மருத்துவமனை கான்டீனிற்கு வந்திருந்தனர். விக்ரம் இருவருக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்திருக்க அதை மறுக்க முடியாமல் மௌனமாய் பருக ஆரம்பித்தாள்.
அவள் காபி அருந்துவதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தானும் அருந்தியவன் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தொண்டையை செருமிக் கொண்டான்.
அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பேசணும்னு சொன்னீங்க...” என இழுக்க, அதில் சற்று ஆசுவாசபட்டவன் அவளை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.
“அதுவந்து... பவி உன்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்... நீ இன்னும் எதுவும் சொல்லலையே அதான்...” அதற்கு மேல் என்னை கல்யாணம் செய்ய சம்மதமா என வெளிப்படையாய் கேட்க முடியாமல் தயங்கி நிறுத்தினான்.
அவனது பேச்சில் என்ன சொல்வதென தெரியாமல் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கும் பாவனையில் தன் மனதை நிதானப்படுத்தியவள் “ஐயம் சாரி விக்ரம்.” அவன் முகத்தை நேராய் பார்த்தாள்.
இன்னும் எத்தனை நாளைக்கு தவிர்ப்பது. முதலில் ஒரு நல்ல தோழன் தன் வார்த்தையில் வருந்துவதா என அதை சொல்லாமல் தள்ளிப்போட்டவள் இப்போது அது தொடர்கதையாகி விடுமோ என பயந்து வாய் திறந்து விட்டாள்.
இன்னொருவனை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு வேறு ஒரு ஆடவனின் பார்வை தன் மேல் ஆர்வமாய் படிவதை கூட சாதாரணமாய் எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அது தன்னவனுக்கு இழைக்கும் துரோகமாகவே அவளுக்கு தோன்றியது. அவன் மனதில் என்ன இருந்தாலும் தன் மனதில் அவன் இருக்கும் பட்சத்தில் தான் காதலில் கற்புடன் இருக்க வேண்டும் என்றே அவள் நினைத்தாள்.
அதனால் இன்றே இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி அவனை மௌனமாய் ஏறிட்டாள். இவளின் மன்னிப்பென்ற வார்த்தையில் தன் கேள்விக்கான விடை தெரிந்து விட்டதில் விழுந்து போன முகத்துடன் அவளை பார்த்திருந்தான் விக்ரம்.
“ஏழு வருசமா ஒருத்தரை காதலிச்சிட்டு இருக்கேன்... அவருக்கு என்னை பிடிக்குமான்னு கூட தெரியலை.. ஆனா என்னால அவரை மறக்க முடியல... என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா என்னை தேடி வருவார் என்ற நம்பிக்கைல தான் நான் வாழ்ந்திட்டே இருக்கேன்... ப்ளீஸ் விக்ரம் இனிமே இந்த நோக்கத்தில் என்கிட்ட பேசுறதா இருந்தா ப்ளீஸ்... என்கிட்ட பேசாதீங்க...”
அதை கேட்டு ஏழு வருடமாகவா என ஆச்சரியப்பட்டு போன விக்ரம் அவளை பார்த்து ஆறுதலாய் சிரித்தான். முதலில் அவன் தோழனாகத்தான் இருந்தான். பெரிதாய் பேசிக்கொள்வதில்லை என்றாலுமே அவன் நல்ல நண்பன் தான். இடையில் தான் அவளின் மென்மையான நடவடிக்கை தன் குடும்பத்துடன் ஒத்துப்போகும் அதுவும் இருவரும் ஒரே பீல்ட் அதனால் இலகுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவளை திருமணம் செய்ய விரும்பினான்.
அதில் நட்புடனான புரிதல் இருந்ததே தவிர காதல் இல்லை. இப்போது அவனுக்கு புரிந்தது. அவளின் காதலும் புரிந்தது, அவளின் காத்திருப்பும் புரிந்தது.
தன் மனதை சடுதியில் மாற்றி நட்புடன் புன்னகைத்தவன் “நான் தான் மன்னிப்பு கேட்கணும் ஷிகா.. உன்னோட காதலை பத்தி தெரியாம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டேன்.. சாரி.. அண்ட் விஷ் யு ஆல் தி பெஸ்ட்... உன்னோட காதல் நிறைவேற என்னோட வாழ்த்துக்கள்...” என வாழ்த்தியவன் “எனக்கான ஐஞ்சு நிமிஷம் முடிஞ்சிடிச்சு...” சன்ன புன்னகை பூக்க,
அதை கேட்டு சிரித்தவள் “என்மேல கோபம் இல்லையே...” இழுக்க,
“சத்தியமா இல்லை... ஏழு வருஷம் காத்திருக்க உன் காதல் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடிச்சு... இப்போ எனக்கும் கூட ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணனும் போல தோணுது... அந்த பொண்ணு எங்க இருக்கோ...” என பெருமூச்சு விட்டான்.
சற்று நேரத்தின் முன் தோழியானவளிடத்தில் திருமணம் பற்றி பேச தயங்கி இழுத்தடித்தவன் இப்போது அவளின் காதலை பற்றி அறிந்து சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தான். அதில் நிறைந்து போனது பெண்ணவளின் மனது. தோழன் தன் காதலை புரிந்து கொண்டான் என்ற நிம்மதியில்.
அதேநேரம் உள்ளுக்குள் வலிக்கவும் செய்தது. இதுபோல் இன்னும் எத்தனை பேரை தான் சந்திக்க வேண்டுமோ என்ற எண்ணம் சிறு வலியையும் உண்டாக்கியது. அத்தனை பேரிடத்தில் விளக்க முடியாதே. அதே போல் எல்லோரும் ஒன்று போல் இருக்கமாட்டார்களே. நண்பனாய் இருக்க போய் தன் மனதை புரிந்து ஒதுங்கிக் கொண்டான். இதுவே இவனிடத்தில் வேறு யாராவது இருந்தால் இத்துடன் விடுவார்களா என்ற எண்ணம் தந்த தாக்கம் அவளின் காதல் நெஞ்சை பலமாய் தாக்கியது.
கழிவிரக்கத்தில் கண்களில் கண்ணீர் துளி பூக்க இருக்கும் இடம் கருதி அதை யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள். ஆனால் மனமோ விடாமல் அரற்றிக்கொண்டிருந்தது. ஒரு முறையாவது என்னை வந்து பாரேன் என தன்னவளிடத்தில் மானசீகமாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
பெண்ணவளின் மனதின் கதறல் அவள் மனதில் சுமந்திருப்பவனின் நெஞ்சத்தை தாக்கியதோ என்னவோ இல்லை விதியின் செயலோ அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு வெகு விரைவில் வர காத்திருந்தது.
*****
அந்த தனியார் பள்ளி வெகு பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று அசோசியேஷன் ப்ரோக்ராம் நடைபெறவிருந்தது. அதற்கான தயார் நிலையில் பள்ளி வெகு அழகாய் காட்சியளிக்க மாணவர்கள் அத்தனை பேரும் கலகலப்பாய் சுற்றி திரிந்தனர்.
ஆடிடோரியத்தில் விழாவிற்கான ஏற்பாடு அத்தனையும் முடிந்த நிலையில் இருக்க இறுதியாய் ஒருமுறை அதை ப்ரின்சியின் கட்டளைக்கிணங்க மேற்பார்வை இட்ட ஷாஷி அனைத்தும் சரியாய் இருக்கவே மாணவர்களை உள்ளே வந்து அமரச்செய்யும் படி ப்ரிபெக்ட் மாணவர்களிடம் உரைத்தவள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வாஷ்ரூம் நோக்கி சென்று முகத்தை சீர்படுத்திக் கொண்டாள்.
காலை வந்ததில் இருந்து ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்ததில் முகத்தில் அப்பிய வியர்வை துளிகளை தண்ணீர் கொண்டு ஒற்றியெடுத்தவள் வலியெடுத்த கால்களை நகர்த்த முடியாமல் ஓய்வாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கண்மூடிக் கொண்டாள்.
கால்வலி தாங்கொண்ணாமல் இருக்க பல்லை கடித்துக் கொண்டவளுக்கு நினைவு பின்னோக்கி ஓடியது.
அன்றும் அப்படித்தான் அவளது கல்லூரியில் விழா ஒன்று ஏற்பாடு செய்திருக்க சோர்ந்திருக்க மனமற்று தோழிகளுடன் சேர்ந்து தானும் களத்தில் குதித்து வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்தவள் இடையில் எதற்கோ படிகளில் இறங்கும் போது எதிர்பாரா விதத்தில் கால் சுழுக்கிக் கொண்டது.
வலி உயிர்போக காலை பிடித்துக்கொண்டு நின்றவளை பார்த்த அவள் வகுப்பு மாணவர்கள் அவளை ஒருவேலையும் செய்ய விடாமல் இருக்கை ஒன்றில் அமர்த்திவிட்டு தாங்களே வேலைகளை செய்து முடித்து விட்டனர். சற்று நேரம் ஓய்வாய் அமர்ந்திருந்ததில் கால் வலி சற்று மட்டுபட்டது போல் இருக்க கல்லூரி முடிந்து பேருந்தில் செல்ல முயன்றவள் மழை வருவது போல இருக்கவும் நடந்தே வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து மெல்ல நடையை எட்டிப்போட்டாள்.
பாதிதூரம் செல்லும் வரையிலும் கூட ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. அதற்கு மேல் தான் கால்வலி உயிர்போகுமளவிற்கு வலியெடுக்க வெறிச்சோடிப் போன சாலையில் தன்னந்தனியாய் நின்றுகொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் சிலீரென்றது.
மனக்கண்ணில் பள்ளியின் இறுதி நாள் நினைவில் யாருமில்லா தெருவில் சில ரௌடிகளுக்கு மத்தியில் தான் மாட்டிக்கொண்டு முழித்தது நினைவில் எழுந்தது தொண்டையை உளறச்செய்ய சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டே வலியெடுத்த காலை கடினப்பட்டு இழுத்து வைத்துக்கொண்டு ஒரு அடி வைக்கும் போதே அவளை உரசினார்போன்று வந்து நின்றது ஒரு கார்.
அதில் நெஞ்சம் பதற முகம் வெளுக்க மீண்டும் தான் இக்கட்டில் மாற்றிக்கொண்டோமோ என பயந்து பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தவளின் முன் தோன்றினான் அவளின் ரோஹன்.
அன்று நேரத்துடனே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாள் ஷிகா. அவள் கடமை நேரம் முடிவடைந்திருக்க வெளியேறியவள் அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த விக்ரமை பார்த்து சிநேகமாய் சிரித்து வெளியேற எத்தனிக்க அவளை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... எனக்காக பைவ் மினிட்ஸ் ஒதுக்க முடியுமா...” வேண்டுதலாய் கேட்டான்.
அதை கேட்டு என்ன சொல்வதென தெரியாமல் சில கணங்கள் விழித்தவள் அவன் கண்களில் தெரிந்த கெஞ்சுதல் பார்வையில் அரைமனதாய் சம்மதித்தாள்.
இருவரும் மருத்துவமனை கான்டீனிற்கு வந்திருந்தனர். விக்ரம் இருவருக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்திருக்க அதை மறுக்க முடியாமல் மௌனமாய் பருக ஆரம்பித்தாள்.
அவள் காபி அருந்துவதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தானும் அருந்தியவன் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தொண்டையை செருமிக் கொண்டான்.
அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பேசணும்னு சொன்னீங்க...” என இழுக்க, அதில் சற்று ஆசுவாசபட்டவன் அவளை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.
“அதுவந்து... பவி உன்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்... நீ இன்னும் எதுவும் சொல்லலையே அதான்...” அதற்கு மேல் என்னை கல்யாணம் செய்ய சம்மதமா என வெளிப்படையாய் கேட்க முடியாமல் தயங்கி நிறுத்தினான்.
அவனது பேச்சில் என்ன சொல்வதென தெரியாமல் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கும் பாவனையில் தன் மனதை நிதானப்படுத்தியவள் “ஐயம் சாரி விக்ரம்.” அவன் முகத்தை நேராய் பார்த்தாள்.
இன்னும் எத்தனை நாளைக்கு தவிர்ப்பது. முதலில் ஒரு நல்ல தோழன் தன் வார்த்தையில் வருந்துவதா என அதை சொல்லாமல் தள்ளிப்போட்டவள் இப்போது அது தொடர்கதையாகி விடுமோ என பயந்து வாய் திறந்து விட்டாள்.
இன்னொருவனை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு வேறு ஒரு ஆடவனின் பார்வை தன் மேல் ஆர்வமாய் படிவதை கூட சாதாரணமாய் எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அது தன்னவனுக்கு இழைக்கும் துரோகமாகவே அவளுக்கு தோன்றியது. அவன் மனதில் என்ன இருந்தாலும் தன் மனதில் அவன் இருக்கும் பட்சத்தில் தான் காதலில் கற்புடன் இருக்க வேண்டும் என்றே அவள் நினைத்தாள்.
அதனால் இன்றே இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி அவனை மௌனமாய் ஏறிட்டாள். இவளின் மன்னிப்பென்ற வார்த்தையில் தன் கேள்விக்கான விடை தெரிந்து விட்டதில் விழுந்து போன முகத்துடன் அவளை பார்த்திருந்தான் விக்ரம்.
“ஏழு வருசமா ஒருத்தரை காதலிச்சிட்டு இருக்கேன்... அவருக்கு என்னை பிடிக்குமான்னு கூட தெரியலை.. ஆனா என்னால அவரை மறக்க முடியல... என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா என்னை தேடி வருவார் என்ற நம்பிக்கைல தான் நான் வாழ்ந்திட்டே இருக்கேன்... ப்ளீஸ் விக்ரம் இனிமே இந்த நோக்கத்தில் என்கிட்ட பேசுறதா இருந்தா ப்ளீஸ்... என்கிட்ட பேசாதீங்க...”
அதை கேட்டு ஏழு வருடமாகவா என ஆச்சரியப்பட்டு போன விக்ரம் அவளை பார்த்து ஆறுதலாய் சிரித்தான். முதலில் அவன் தோழனாகத்தான் இருந்தான். பெரிதாய் பேசிக்கொள்வதில்லை என்றாலுமே அவன் நல்ல நண்பன் தான். இடையில் தான் அவளின் மென்மையான நடவடிக்கை தன் குடும்பத்துடன் ஒத்துப்போகும் அதுவும் இருவரும் ஒரே பீல்ட் அதனால் இலகுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவளை திருமணம் செய்ய விரும்பினான்.
அதில் நட்புடனான புரிதல் இருந்ததே தவிர காதல் இல்லை. இப்போது அவனுக்கு புரிந்தது. அவளின் காதலும் புரிந்தது, அவளின் காத்திருப்பும் புரிந்தது.
தன் மனதை சடுதியில் மாற்றி நட்புடன் புன்னகைத்தவன் “நான் தான் மன்னிப்பு கேட்கணும் ஷிகா.. உன்னோட காதலை பத்தி தெரியாம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டேன்.. சாரி.. அண்ட் விஷ் யு ஆல் தி பெஸ்ட்... உன்னோட காதல் நிறைவேற என்னோட வாழ்த்துக்கள்...” என வாழ்த்தியவன் “எனக்கான ஐஞ்சு நிமிஷம் முடிஞ்சிடிச்சு...” சன்ன புன்னகை பூக்க,
அதை கேட்டு சிரித்தவள் “என்மேல கோபம் இல்லையே...” இழுக்க,
“சத்தியமா இல்லை... ஏழு வருஷம் காத்திருக்க உன் காதல் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடிச்சு... இப்போ எனக்கும் கூட ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணனும் போல தோணுது... அந்த பொண்ணு எங்க இருக்கோ...” என பெருமூச்சு விட்டான்.
சற்று நேரத்தின் முன் தோழியானவளிடத்தில் திருமணம் பற்றி பேச தயங்கி இழுத்தடித்தவன் இப்போது அவளின் காதலை பற்றி அறிந்து சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தான். அதில் நிறைந்து போனது பெண்ணவளின் மனது. தோழன் தன் காதலை புரிந்து கொண்டான் என்ற நிம்மதியில்.
அதேநேரம் உள்ளுக்குள் வலிக்கவும் செய்தது. இதுபோல் இன்னும் எத்தனை பேரை தான் சந்திக்க வேண்டுமோ என்ற எண்ணம் சிறு வலியையும் உண்டாக்கியது. அத்தனை பேரிடத்தில் விளக்க முடியாதே. அதே போல் எல்லோரும் ஒன்று போல் இருக்கமாட்டார்களே. நண்பனாய் இருக்க போய் தன் மனதை புரிந்து ஒதுங்கிக் கொண்டான். இதுவே இவனிடத்தில் வேறு யாராவது இருந்தால் இத்துடன் விடுவார்களா என்ற எண்ணம் தந்த தாக்கம் அவளின் காதல் நெஞ்சை பலமாய் தாக்கியது.
கழிவிரக்கத்தில் கண்களில் கண்ணீர் துளி பூக்க இருக்கும் இடம் கருதி அதை யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள். ஆனால் மனமோ விடாமல் அரற்றிக்கொண்டிருந்தது. ஒரு முறையாவது என்னை வந்து பாரேன் என தன்னவளிடத்தில் மானசீகமாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
பெண்ணவளின் மனதின் கதறல் அவள் மனதில் சுமந்திருப்பவனின் நெஞ்சத்தை தாக்கியதோ என்னவோ இல்லை விதியின் செயலோ அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு வெகு விரைவில் வர காத்திருந்தது.
*****
அந்த தனியார் பள்ளி வெகு பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று அசோசியேஷன் ப்ரோக்ராம் நடைபெறவிருந்தது. அதற்கான தயார் நிலையில் பள்ளி வெகு அழகாய் காட்சியளிக்க மாணவர்கள் அத்தனை பேரும் கலகலப்பாய் சுற்றி திரிந்தனர்.
ஆடிடோரியத்தில் விழாவிற்கான ஏற்பாடு அத்தனையும் முடிந்த நிலையில் இருக்க இறுதியாய் ஒருமுறை அதை ப்ரின்சியின் கட்டளைக்கிணங்க மேற்பார்வை இட்ட ஷாஷி அனைத்தும் சரியாய் இருக்கவே மாணவர்களை உள்ளே வந்து அமரச்செய்யும் படி ப்ரிபெக்ட் மாணவர்களிடம் உரைத்தவள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வாஷ்ரூம் நோக்கி சென்று முகத்தை சீர்படுத்திக் கொண்டாள்.
காலை வந்ததில் இருந்து ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்ததில் முகத்தில் அப்பிய வியர்வை துளிகளை தண்ணீர் கொண்டு ஒற்றியெடுத்தவள் வலியெடுத்த கால்களை நகர்த்த முடியாமல் ஓய்வாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கண்மூடிக் கொண்டாள்.
கால்வலி தாங்கொண்ணாமல் இருக்க பல்லை கடித்துக் கொண்டவளுக்கு நினைவு பின்னோக்கி ஓடியது.
அன்றும் அப்படித்தான் அவளது கல்லூரியில் விழா ஒன்று ஏற்பாடு செய்திருக்க சோர்ந்திருக்க மனமற்று தோழிகளுடன் சேர்ந்து தானும் களத்தில் குதித்து வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்தவள் இடையில் எதற்கோ படிகளில் இறங்கும் போது எதிர்பாரா விதத்தில் கால் சுழுக்கிக் கொண்டது.
வலி உயிர்போக காலை பிடித்துக்கொண்டு நின்றவளை பார்த்த அவள் வகுப்பு மாணவர்கள் அவளை ஒருவேலையும் செய்ய விடாமல் இருக்கை ஒன்றில் அமர்த்திவிட்டு தாங்களே வேலைகளை செய்து முடித்து விட்டனர். சற்று நேரம் ஓய்வாய் அமர்ந்திருந்ததில் கால் வலி சற்று மட்டுபட்டது போல் இருக்க கல்லூரி முடிந்து பேருந்தில் செல்ல முயன்றவள் மழை வருவது போல இருக்கவும் நடந்தே வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து மெல்ல நடையை எட்டிப்போட்டாள்.
பாதிதூரம் செல்லும் வரையிலும் கூட ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. அதற்கு மேல் தான் கால்வலி உயிர்போகுமளவிற்கு வலியெடுக்க வெறிச்சோடிப் போன சாலையில் தன்னந்தனியாய் நின்றுகொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் சிலீரென்றது.
மனக்கண்ணில் பள்ளியின் இறுதி நாள் நினைவில் யாருமில்லா தெருவில் சில ரௌடிகளுக்கு மத்தியில் தான் மாட்டிக்கொண்டு முழித்தது நினைவில் எழுந்தது தொண்டையை உளறச்செய்ய சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டே வலியெடுத்த காலை கடினப்பட்டு இழுத்து வைத்துக்கொண்டு ஒரு அடி வைக்கும் போதே அவளை உரசினார்போன்று வந்து நின்றது ஒரு கார்.
அதில் நெஞ்சம் பதற முகம் வெளுக்க மீண்டும் தான் இக்கட்டில் மாற்றிக்கொண்டோமோ என பயந்து பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தவளின் முன் தோன்றினான் அவளின் ரோஹன்.