07
இரவின் குளுமையில் மெல்லிசையுடன் ஏகாந்த சூழலை ஏற்படுத்தி இருந்தது அந்த ரெஸ்டாரண்ட். ஓலைகளால் வெய்யப்பட்ட குடிசை போன்ற அமைப்பில் தேக்கு மரங்களாலான வட்ட வடிவ மேசையும் இருக்கைகளும் என அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உணவகம்.
“குச்ச் ஆர் சாஹி” (want anything else?) கையில் இருந்த பழச்சாற்றை டேபிளில் வைத்த பணிப்பெண் அங்கிருந்தவரை பார்த்து பணிவுடன் கேட்க, அவளின் கேள்வியில் உள்ளே தள்ளிக்கொண்டு இருந்த ப்ரைட் ரைஸை விடுத்து நிமிர்ந்து அவளை நோக்கி மேலும் கீழுமாய் அளவெடுத்தான் அவன்.
“ம்ம்... ஆமா நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் ஒருத்தி கூட தமிழ்ல பேசமாட்டீங்கிறீங்க”
அவனின் கேள்வியில் புன்னகை சிந்திய பணிப்பெண் “தமிழ் நஹி மாலும்”
“ஓஹோ... எங்க காசு வேணும்... எங்க ஓட்டு வேணும்... ஆனா தமிழ் மட்டும் வேணாமா...”
“ஹிந்தி நேஷனல் லேங்விஜ்... கத்துக்கோ பியூச்சர் நல்லாஆ இருக்கும்...” அவனின் கேள்விக்கு பதிலளிக்காது இலவச அறிவுரை வழங்கியவள் அங்கிருந்து நகர,
அவளை போக விடாமல் கைதட்டி “பாப்பா... இங்கிட்டு வா...” என அழைக்க, அவனை புரியாமல் பார்த்துக்கொண்டடே அவனருகில் வந்து என்னவென்பது போல் பார்த்து நின்றாள்.
“எங்க தமிழ் மொழி இல்லன்னா இன்னிக்கு இந்தியால ரெண்டு ஆஸ்கார் அவார்ட் கிடைச்சிருக்காது... பார்க்கிறதுக்கு தான் பம்மின மாதிரி இருப்போம் பதுங்கி பாயுறதுல புலி... புரிஞ்சதா... இப்போ நீ என்ன பண்றேன்னா... நல்ல தமிழ் டீச்சரா பார்த்து அனா, ஆவன்னா, இனா, ஈயென்னா கத்துக்கோ என் பக்கி...” அவளை முறித்துக்கொண்டு கூற, அதை கேட்டு அவனை உறுத்து விழித்த ஹிந்திக்காரி முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அதேநேரம் “வாவ் சூப்பர்... அண்ணே கலக்கிட்டீங்க போங்க.. சான்சேயில்ல... பின்னிட்டீங்க...” கை தட்டி ஆர்பரித்த வண்ணம் அவன் இருந்த மேசையில் வந்து ஒன்றாய் அமர்ந்து கொண்டனர் அந்த மூவரும். அது வேறு யாருமில்லை.... சாட்சாத் ஷக்தி.. கணேஷ்.. கேப்டன்.. மூவருமே தான்.
அவர்கள் மூவரையும் புரியாது பார்த்தவன் “யாரு” என்பது போல் அவர்களை உற்று பார்க்க அதை கண்டு கொள்ளாமல் டேபிளில் இருந்த உணவுப்பதார்த்தங்களை தங்கள் புறம் நகர்த்திக் கொண்டவர்கள் “யாருக்கும் இந்த தைரியம் இருக்காதுண்ணே...” என்றபடி உணவை ஒரு வெட்டு வெட்ட ஆரம்பித்தனர்.
“உங்களை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு தமிழ் மேல பற்று அதிகம்னு...”
“ஆமாண்ணே... நீங்க சினிமால வசனம் எழுதப்போகலாம்... சும்மா சூப்பரா பேசுறீங்க...”
“வசனம் என்ன அண்ணா இனிமே தமிழ் பட ஹீரோ தான்...” ஆளாளுக்கு சிலாகித்து கூற,
“ஹீ ஹீ..” அதை கேட்டு பெருமையாய் சிரித்தபடியே, அவர்களை கேள்வியாய் பார்த்தவன் சிக்கனை எடுக்க கைகளை நீட்டி அதுவோ தட்டுபடாமல் போகவே டேபிளை பார்க்க அது அவர்கள் மூவரின் வாய்க்குள்ளும் அரைபட்டுக் கொண்டிருந்தது.
அதை பார்த்து முழி பிதுங்கியபடி ‘பார்த்தா பலநாள் பசியில கிடந்திருப்பாய்ங்கலோ இந்த பாச்சல் பாய்றானுங்க...’ என அவர்கள் உண்ட வேகத்தினை பார்த்து எண்ணிக் கொண்டவன் அங்கிருந்த பணிப்பெண்ணை அழைத்தான்.
“பாப்பா இங்க வாம்மா....” முன்பு கழுத்தை நொடித்துக் கொண்டு போனவள் அவன் மீண்டும் அழைக்கவும் அவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டு வர, அதை பார்த்து முறைத்தவன் ‘தம்பிங்க பசியில கிடக்கிறானுங்க... இது ஆடி அசஞ்சு பல்லை காட்டிக்கிட்டு வாரத பாரு..’ நொடித்துக் கொண்டான்.
அப்பெண் வந்து அவர்கள் மூவருக்கும் உணவுகளை பரிமாறிக்கொள்ள அவனோ அப்பெண்ணின் சட்டையில் இருந்த அந்த ரெஸ்டாரண்டின் நம்பரை பார்த்து ‘ஹோமுக்கு ஆர்டர் பண்ணி சொல்லிட வேண்டியது தான்...’ என எண்ணிக் கொண்டே அவள் சட்டையில் இருந்த எண்களை தன் செல்போனில் அழுத்திக் கொள்ள அதை எதேர்ச்சியாய் பார்த்தவள் அவன் பார்வை போகும் தன் நெஞ்சுப்பகுதியை பார்த்து முகம் கோபத்தில் ஜொலிக்க அவனை பயங்கரமாய் முறைத்தவள் மறுகணம் அவனருகில் சென்று கும்மி எடுத்து விட்டாள்.
அவள் வலியில் கதற, அதில் உண்டு கொண்டிருந்த மூவரும் என்னவோ எதொவோவேன்று அவனை காப்பாற்ற அந்த பெண்ணோ கோபத்தில் காச்சுமூச்சென்று கத்த ஆரம்பிக்க விஷயம் என்னவென்று புரிந்து ஷக்தி “என்னம்மா நீ நம்பரை எங்க எழுதி வைக்கனும்னு தெரியாது..” என மென்மையாய் கடிந்து கொள்ள அதன் பின்பே அவளுக்கும் தன் தவறு புரிந்தது.
அதன் பின் அப்பெண் தன் தவறுணர்ந்து மன்னிப்பு கேட்க, அதை பெரும் முறைப்புடன் ஏற்றுக் கொண்டவன் தன்னை காப்பாற்றிய மூவருடனும் தன் வீட்டுக்கு கிளம்பினான்.
ஊட்டியின் இரவு நேர குளுமையும் உடலை வருடிச் சென்ற சில்லென்ற குளிர் காற்றும் இரவு நேர நடையை இன்னும் அழகாக்க குளிரை தாங்க முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நடந்த நால்வரும் வெகு விரைவிலே வீட்டை அடைந்திருக்க மூடியிருந்த வீட்டின் கதவை திறந்து விட்டவன் அவர்கள் மூவருடன் வீட்டினுள்ளே நுழைந்தான்.
“பொம்பளைங்கலாடா அவளுங்க இந்த அடி அடிக்கிறாளுங்க... அவளுங்ககிட்ட இருந்து என்னைய காப்பத்தினதால தான் நான் என்வீடு வரைக்கும் உங்கள கூட்டியாறேன்... காலைல குளிச்சுகிளிச்சு ரெடியா இருங்க வொர்க்ஷாப் கூட்டிபோறேன்...” என்றவன் அங்கு தனக்கென்று இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.
வரும் வழியிலே இவர்கள் மூவரும் தங்குவதற்கு வீடும் செய்வதற்கு வேலையும் கேட்டிருக்க அவர்கள் மேல் பாவம் பார்த்தவன் தான் மேனேஜராக வேலை செய்யும் வொர்க்ஷாப்பிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தான். அனைவராலும் மேனேஜர் என அழைக்கபடும் கருப்பன்.
நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில் போட்டது போட்டபடி அங்கிருந்த அறையினுள் சென்று கட்டிலில் விழுந்தவர்கள் அடுத்த சில நொடிகளிலே உறங்கிப்போயினர்.
தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கேப்டனையும் கணேஷையும் பார்த்த ஷக்தியின் இதழ்கள் லேசாய் வளைந்தது.
ஒருவனின் வாழ்க்கை மாறுவதற்கு சில நொடிகள் போதும் போல. அவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டதே.. சில நாட்களுக்கு முன்னான அவர்களின் வாழ்க்கையை நினைத்து பார்த்தவன் அந்த நினைவுகளுடனே கண்ணயர்ந்தான்.
********
பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்த தனியார் கல்வி நிறுவனம். விசாலமான நிலப்பரப்பில் எழுப்பப்பட்டிருந்த அந்த பள்ளியின் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்க மாணவர்கள் அனைவரும் காலைநேர ஒன்றுகூடல் முடிவடைந்து வகுப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டு இருந்தாள் ஷாஷி.
முன்பிருந்ததை காட்டிலும் மிகையான அழகுடன் மிளிர்ந்தாள்.
ஐந்தரை அடி உயரத்தில் இருந்தவளின் கொடி போன்ற தேகமும் பளிங்கு நிற மேனியும் படிப்பினால் கிடைப்பெற்ற நிமிர்வும் என அழகாய் ஜொலித்தவளின் அழகில் ஒன்று மட்டுமே குறையாய் இருந்தது.
அவளின் சிரிக்கும் இதழ்கள் இப்போதெல்லாம் சிரிப்பினை மறந்து செயற்கையாய் புன்னகையை பூசிக்கொண்டு இருந்தது. வாயோயாமல் வளவளப்பவளின் பேச்சு முற்றிலும் குறைந்து அங்கு அமைதி ஆட்கொண்டிருந்தது.
“Ok students, tomorrow is a very important test, so all must come..” மாணவர்களுக்கு எடுத்துரைத்தவள் அடுத்த படத்திற்கான அழைப்பு மணி இசைக்கவும் ஒருவித சோம்பலுடன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.
ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டும் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் சற்று தள்ளி இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
கைகளோ அதன் பாட்டிற்கு அங்கிருந்த புத்தகமொன்றை புரட்டிக் கொண்டிருக்க மனமோ புரட்டும் பக்கங்களை போல் நில்லாமல் எதையோ நினைத்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நினைவுகளின் தாக்கம் என்றும் போல் இன்றும் தொண்டையை அடைக்க செய்ய அதை தாங்கவியலாமல் தண்ணீர் பாட்டலில் இருந்த தண்ணீரை தொண்டையில் சரித்துக் கொண்டவள் தன் துக்கத்தையும் அதனுடன் சேர்ந்து விழுங்க முயற்சி செய்தாள்.
முயற்சி மட்டுமே அவளால் செய்ய முடிந்ததே தவிர அந்த நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. அந்த நினைவு கொடுத்த வலி அவள் இதயத்தை சுருக்கென பதம் பார்த்தது. தாங்கொண்ணா வலி... அதை நினைக்கவும் முடியவில்லை மறக்கவும் அவளால் முடியவில்லை.
அதனூடே தலையை பிடித்துக் கொண்டிருந்தவளை அழைத்த பியூன் பிரின்சிபால் அழைப்பதாக கூறவும் முகத்தை கைகுட்டையால் அழுந்த துடைத்துக் கொண்டவள் பிரின்சிபாலின் அறை நோக்கி சென்றாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ..” நாசுக்காய் அறைக்கதவை தட்ட அதில் தலை உயர்த்தி பார்த்த பூங்கோதை நாச்சியார் அவளை உள்ளே வரும்படி சைகை செய்தவர் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
“வர சொன்னதா சொன்னாங்க...” மரியாதையுடன் கேட்க, அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவர் அங்கிருந்த இருக்கையை காட்டி அமரும்படி மீண்டும் சைகை செய்தார்.
ஐம்பதுகளில் இருப்பார்... நரைத்தமுடி... மூக்கு கண்ணாடி என ஒரு பெண் அதிபருக்கு உரிய அனைத்து தோரணைகளும் இருந்தது. மிக முக்கியமாய் கம்பீரம். அந்த வயதிலும் அத்தனை கம்பீரமாய் இருந்தார். கண்களில் ஒருவித கூர்மை. எதிராளியை துளைக்கும் பார்வை.
சில கணம் அமைதிகாத்தவர் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“இன்னும் ஒன்வீக்ல அசோசியேஷன் ப்ரோக்ராம் ஒர்கனைஸ் பண்ணியிருக்கோம்... Am I right?” அவளை கூர்மையாய் அளவிட்டுக் கொண்டே கேட்க, அவரின் கேள்வியில் அவள் தலை தானாய் அசைந்து ஆம் என பதில் கொடுத்தது.
அதை கேட்டு மர்மமாய் புன்னகை புரிந்தவர் அவள் கண்டு கொள்ளும் முன்னே முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு “அதுக்கு சீப் கெஸ்டா ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி எம்.டி யை இன்வைட் பண்ணலாம்னு டிஸைட் பண்ணியிருக்கோம்... நாளைக்கு நீ போய் அவரை மீட் பண்ணி பாங்க்சனுக்கு இன்வைட் பண்ணிட்டு வா...” என்றவர் அவ்வளவு தான் உரையாடல் முடிந்தது என்பது போல் தன் மடிகணனியுள் முகம் புதைத்துக் கொள்ள அவரின் அறையை விட்டு வெளியேறியவளுக்கு அவரின் கட்டளையை ஏற்று அங்கு செல்ல விருப்பமும் இல்லை அதை தட்டி கழிக்கவும் முடியவில்லை.
இரவின் குளுமையில் மெல்லிசையுடன் ஏகாந்த சூழலை ஏற்படுத்தி இருந்தது அந்த ரெஸ்டாரண்ட். ஓலைகளால் வெய்யப்பட்ட குடிசை போன்ற அமைப்பில் தேக்கு மரங்களாலான வட்ட வடிவ மேசையும் இருக்கைகளும் என அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உணவகம்.
“குச்ச் ஆர் சாஹி” (want anything else?) கையில் இருந்த பழச்சாற்றை டேபிளில் வைத்த பணிப்பெண் அங்கிருந்தவரை பார்த்து பணிவுடன் கேட்க, அவளின் கேள்வியில் உள்ளே தள்ளிக்கொண்டு இருந்த ப்ரைட் ரைஸை விடுத்து நிமிர்ந்து அவளை நோக்கி மேலும் கீழுமாய் அளவெடுத்தான் அவன்.
“ம்ம்... ஆமா நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் ஒருத்தி கூட தமிழ்ல பேசமாட்டீங்கிறீங்க”
அவனின் கேள்வியில் புன்னகை சிந்திய பணிப்பெண் “தமிழ் நஹி மாலும்”
“ஓஹோ... எங்க காசு வேணும்... எங்க ஓட்டு வேணும்... ஆனா தமிழ் மட்டும் வேணாமா...”
“ஹிந்தி நேஷனல் லேங்விஜ்... கத்துக்கோ பியூச்சர் நல்லாஆ இருக்கும்...” அவனின் கேள்விக்கு பதிலளிக்காது இலவச அறிவுரை வழங்கியவள் அங்கிருந்து நகர,
அவளை போக விடாமல் கைதட்டி “பாப்பா... இங்கிட்டு வா...” என அழைக்க, அவனை புரியாமல் பார்த்துக்கொண்டடே அவனருகில் வந்து என்னவென்பது போல் பார்த்து நின்றாள்.
“எங்க தமிழ் மொழி இல்லன்னா இன்னிக்கு இந்தியால ரெண்டு ஆஸ்கார் அவார்ட் கிடைச்சிருக்காது... பார்க்கிறதுக்கு தான் பம்மின மாதிரி இருப்போம் பதுங்கி பாயுறதுல புலி... புரிஞ்சதா... இப்போ நீ என்ன பண்றேன்னா... நல்ல தமிழ் டீச்சரா பார்த்து அனா, ஆவன்னா, இனா, ஈயென்னா கத்துக்கோ என் பக்கி...” அவளை முறித்துக்கொண்டு கூற, அதை கேட்டு அவனை உறுத்து விழித்த ஹிந்திக்காரி முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அதேநேரம் “வாவ் சூப்பர்... அண்ணே கலக்கிட்டீங்க போங்க.. சான்சேயில்ல... பின்னிட்டீங்க...” கை தட்டி ஆர்பரித்த வண்ணம் அவன் இருந்த மேசையில் வந்து ஒன்றாய் அமர்ந்து கொண்டனர் அந்த மூவரும். அது வேறு யாருமில்லை.... சாட்சாத் ஷக்தி.. கணேஷ்.. கேப்டன்.. மூவருமே தான்.
அவர்கள் மூவரையும் புரியாது பார்த்தவன் “யாரு” என்பது போல் அவர்களை உற்று பார்க்க அதை கண்டு கொள்ளாமல் டேபிளில் இருந்த உணவுப்பதார்த்தங்களை தங்கள் புறம் நகர்த்திக் கொண்டவர்கள் “யாருக்கும் இந்த தைரியம் இருக்காதுண்ணே...” என்றபடி உணவை ஒரு வெட்டு வெட்ட ஆரம்பித்தனர்.
“உங்களை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு தமிழ் மேல பற்று அதிகம்னு...”
“ஆமாண்ணே... நீங்க சினிமால வசனம் எழுதப்போகலாம்... சும்மா சூப்பரா பேசுறீங்க...”
“வசனம் என்ன அண்ணா இனிமே தமிழ் பட ஹீரோ தான்...” ஆளாளுக்கு சிலாகித்து கூற,
“ஹீ ஹீ..” அதை கேட்டு பெருமையாய் சிரித்தபடியே, அவர்களை கேள்வியாய் பார்த்தவன் சிக்கனை எடுக்க கைகளை நீட்டி அதுவோ தட்டுபடாமல் போகவே டேபிளை பார்க்க அது அவர்கள் மூவரின் வாய்க்குள்ளும் அரைபட்டுக் கொண்டிருந்தது.
அதை பார்த்து முழி பிதுங்கியபடி ‘பார்த்தா பலநாள் பசியில கிடந்திருப்பாய்ங்கலோ இந்த பாச்சல் பாய்றானுங்க...’ என அவர்கள் உண்ட வேகத்தினை பார்த்து எண்ணிக் கொண்டவன் அங்கிருந்த பணிப்பெண்ணை அழைத்தான்.
“பாப்பா இங்க வாம்மா....” முன்பு கழுத்தை நொடித்துக் கொண்டு போனவள் அவன் மீண்டும் அழைக்கவும் அவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டு வர, அதை பார்த்து முறைத்தவன் ‘தம்பிங்க பசியில கிடக்கிறானுங்க... இது ஆடி அசஞ்சு பல்லை காட்டிக்கிட்டு வாரத பாரு..’ நொடித்துக் கொண்டான்.
அப்பெண் வந்து அவர்கள் மூவருக்கும் உணவுகளை பரிமாறிக்கொள்ள அவனோ அப்பெண்ணின் சட்டையில் இருந்த அந்த ரெஸ்டாரண்டின் நம்பரை பார்த்து ‘ஹோமுக்கு ஆர்டர் பண்ணி சொல்லிட வேண்டியது தான்...’ என எண்ணிக் கொண்டே அவள் சட்டையில் இருந்த எண்களை தன் செல்போனில் அழுத்திக் கொள்ள அதை எதேர்ச்சியாய் பார்த்தவள் அவன் பார்வை போகும் தன் நெஞ்சுப்பகுதியை பார்த்து முகம் கோபத்தில் ஜொலிக்க அவனை பயங்கரமாய் முறைத்தவள் மறுகணம் அவனருகில் சென்று கும்மி எடுத்து விட்டாள்.
அவள் வலியில் கதற, அதில் உண்டு கொண்டிருந்த மூவரும் என்னவோ எதொவோவேன்று அவனை காப்பாற்ற அந்த பெண்ணோ கோபத்தில் காச்சுமூச்சென்று கத்த ஆரம்பிக்க விஷயம் என்னவென்று புரிந்து ஷக்தி “என்னம்மா நீ நம்பரை எங்க எழுதி வைக்கனும்னு தெரியாது..” என மென்மையாய் கடிந்து கொள்ள அதன் பின்பே அவளுக்கும் தன் தவறு புரிந்தது.
அதன் பின் அப்பெண் தன் தவறுணர்ந்து மன்னிப்பு கேட்க, அதை பெரும் முறைப்புடன் ஏற்றுக் கொண்டவன் தன்னை காப்பாற்றிய மூவருடனும் தன் வீட்டுக்கு கிளம்பினான்.
ஊட்டியின் இரவு நேர குளுமையும் உடலை வருடிச் சென்ற சில்லென்ற குளிர் காற்றும் இரவு நேர நடையை இன்னும் அழகாக்க குளிரை தாங்க முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நடந்த நால்வரும் வெகு விரைவிலே வீட்டை அடைந்திருக்க மூடியிருந்த வீட்டின் கதவை திறந்து விட்டவன் அவர்கள் மூவருடன் வீட்டினுள்ளே நுழைந்தான்.
“பொம்பளைங்கலாடா அவளுங்க இந்த அடி அடிக்கிறாளுங்க... அவளுங்ககிட்ட இருந்து என்னைய காப்பத்தினதால தான் நான் என்வீடு வரைக்கும் உங்கள கூட்டியாறேன்... காலைல குளிச்சுகிளிச்சு ரெடியா இருங்க வொர்க்ஷாப் கூட்டிபோறேன்...” என்றவன் அங்கு தனக்கென்று இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.
வரும் வழியிலே இவர்கள் மூவரும் தங்குவதற்கு வீடும் செய்வதற்கு வேலையும் கேட்டிருக்க அவர்கள் மேல் பாவம் பார்த்தவன் தான் மேனேஜராக வேலை செய்யும் வொர்க்ஷாப்பிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தான். அனைவராலும் மேனேஜர் என அழைக்கபடும் கருப்பன்.
நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில் போட்டது போட்டபடி அங்கிருந்த அறையினுள் சென்று கட்டிலில் விழுந்தவர்கள் அடுத்த சில நொடிகளிலே உறங்கிப்போயினர்.
தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கேப்டனையும் கணேஷையும் பார்த்த ஷக்தியின் இதழ்கள் லேசாய் வளைந்தது.
ஒருவனின் வாழ்க்கை மாறுவதற்கு சில நொடிகள் போதும் போல. அவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டதே.. சில நாட்களுக்கு முன்னான அவர்களின் வாழ்க்கையை நினைத்து பார்த்தவன் அந்த நினைவுகளுடனே கண்ணயர்ந்தான்.
********
பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்த தனியார் கல்வி நிறுவனம். விசாலமான நிலப்பரப்பில் எழுப்பப்பட்டிருந்த அந்த பள்ளியின் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்க மாணவர்கள் அனைவரும் காலைநேர ஒன்றுகூடல் முடிவடைந்து வகுப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டு இருந்தாள் ஷாஷி.
முன்பிருந்ததை காட்டிலும் மிகையான அழகுடன் மிளிர்ந்தாள்.
ஐந்தரை அடி உயரத்தில் இருந்தவளின் கொடி போன்ற தேகமும் பளிங்கு நிற மேனியும் படிப்பினால் கிடைப்பெற்ற நிமிர்வும் என அழகாய் ஜொலித்தவளின் அழகில் ஒன்று மட்டுமே குறையாய் இருந்தது.
அவளின் சிரிக்கும் இதழ்கள் இப்போதெல்லாம் சிரிப்பினை மறந்து செயற்கையாய் புன்னகையை பூசிக்கொண்டு இருந்தது. வாயோயாமல் வளவளப்பவளின் பேச்சு முற்றிலும் குறைந்து அங்கு அமைதி ஆட்கொண்டிருந்தது.
“Ok students, tomorrow is a very important test, so all must come..” மாணவர்களுக்கு எடுத்துரைத்தவள் அடுத்த படத்திற்கான அழைப்பு மணி இசைக்கவும் ஒருவித சோம்பலுடன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.
ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டும் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் சற்று தள்ளி இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
கைகளோ அதன் பாட்டிற்கு அங்கிருந்த புத்தகமொன்றை புரட்டிக் கொண்டிருக்க மனமோ புரட்டும் பக்கங்களை போல் நில்லாமல் எதையோ நினைத்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நினைவுகளின் தாக்கம் என்றும் போல் இன்றும் தொண்டையை அடைக்க செய்ய அதை தாங்கவியலாமல் தண்ணீர் பாட்டலில் இருந்த தண்ணீரை தொண்டையில் சரித்துக் கொண்டவள் தன் துக்கத்தையும் அதனுடன் சேர்ந்து விழுங்க முயற்சி செய்தாள்.
முயற்சி மட்டுமே அவளால் செய்ய முடிந்ததே தவிர அந்த நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. அந்த நினைவு கொடுத்த வலி அவள் இதயத்தை சுருக்கென பதம் பார்த்தது. தாங்கொண்ணா வலி... அதை நினைக்கவும் முடியவில்லை மறக்கவும் அவளால் முடியவில்லை.
அதனூடே தலையை பிடித்துக் கொண்டிருந்தவளை அழைத்த பியூன் பிரின்சிபால் அழைப்பதாக கூறவும் முகத்தை கைகுட்டையால் அழுந்த துடைத்துக் கொண்டவள் பிரின்சிபாலின் அறை நோக்கி சென்றாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ..” நாசுக்காய் அறைக்கதவை தட்ட அதில் தலை உயர்த்தி பார்த்த பூங்கோதை நாச்சியார் அவளை உள்ளே வரும்படி சைகை செய்தவர் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
“வர சொன்னதா சொன்னாங்க...” மரியாதையுடன் கேட்க, அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவர் அங்கிருந்த இருக்கையை காட்டி அமரும்படி மீண்டும் சைகை செய்தார்.
ஐம்பதுகளில் இருப்பார்... நரைத்தமுடி... மூக்கு கண்ணாடி என ஒரு பெண் அதிபருக்கு உரிய அனைத்து தோரணைகளும் இருந்தது. மிக முக்கியமாய் கம்பீரம். அந்த வயதிலும் அத்தனை கம்பீரமாய் இருந்தார். கண்களில் ஒருவித கூர்மை. எதிராளியை துளைக்கும் பார்வை.
சில கணம் அமைதிகாத்தவர் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“இன்னும் ஒன்வீக்ல அசோசியேஷன் ப்ரோக்ராம் ஒர்கனைஸ் பண்ணியிருக்கோம்... Am I right?” அவளை கூர்மையாய் அளவிட்டுக் கொண்டே கேட்க, அவரின் கேள்வியில் அவள் தலை தானாய் அசைந்து ஆம் என பதில் கொடுத்தது.
அதை கேட்டு மர்மமாய் புன்னகை புரிந்தவர் அவள் கண்டு கொள்ளும் முன்னே முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு “அதுக்கு சீப் கெஸ்டா ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி எம்.டி யை இன்வைட் பண்ணலாம்னு டிஸைட் பண்ணியிருக்கோம்... நாளைக்கு நீ போய் அவரை மீட் பண்ணி பாங்க்சனுக்கு இன்வைட் பண்ணிட்டு வா...” என்றவர் அவ்வளவு தான் உரையாடல் முடிந்தது என்பது போல் தன் மடிகணனியுள் முகம் புதைத்துக் கொள்ள அவரின் அறையை விட்டு வெளியேறியவளுக்கு அவரின் கட்டளையை ஏற்று அங்கு செல்ல விருப்பமும் இல்லை அதை தட்டி கழிக்கவும் முடியவில்லை.