அத்தியாயம் 02
“காலைல செம்ம தூக்கம்டி ஸ்கூலும் இல்லையா எதுக்கு வெட்டியா காலங்கார்த்தால எழுந்துக்கனும்னு தூங்கினேன்... என் அம்மாக்கு மூக்கு வேர்த்திடிச்சு... பூரிக்கட்டை பறந்து வந்து நடுமண்டைல நச்சுன்னு விழுந்திச்சு... அப்போ எழுந்தவ தான் ஐஞ்சு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம ரொம்ப வேலைவாங்கிட்டாங்கடி என்னை பெத்த அம்மா...” ஷிக்கு புலம்ப,
“அட நீ வேற உனக்காச்சும் பூரிக்கட்ட எனக்கு அம்மிக்கல்லு வந்து விழுந்திருக்கும் ஜஸ்ட்டு மிஸ்ஸு இல்ல இந்நேரத்துக்கு டெட்பாடி தான்”
“ஹா ஹா... எவ்ளோ வயசானாலும் மோர்னிங் மம்மி கிட்ட திட்டு வாங்காம வேக்கப் ஆனா அந்த நாள் நல்லாவே இருக்கிறதில்ல சோ இதுக்காக நாம பெருமைபட்டே ஆகணும் மை டியர் ஷாஷி...”
“அது என்னவோ உண்மைதான்...” ஆமோதிப்பாய் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டாள் ஷாஷி, “சரி அத விடு நைட் சீரியல் பார்த்தியா நான் பார்க்கல.. மம்மி படி படின்னு படிச்சப்றம் தான் எழ விட்டிச்சு...... என்னாச்சு ரெண்டு பேரும் இப்போவாச்சும் சேர்ந்தாங்களா... வில்லி யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா...”
“அதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்தில சேராதுடி... இதுக்குத்தான் இந்த சீரியல் பார்க்ககூடாதின்னு சொல்றது... ஒரு தடவை பார்த்தா அடுத்தடுத்து பார்க்கணும் போலவே இருக்கும்... பார்க்கலேன்னா என்ன நடந்திச்சோன்னு டென்ஷனா இருக்கும்... தொடர்ந்து பார்த்தா இவங்க எப்போ சேருவாங்க இவங்க இப்போ பிரிவாங்கன்னு கடுப்பா இருக்கும்...” மிகப்பெரிய உண்மையை வெகு சாதாரணமாய் புட்டு புட்டு வைத்தாள் ஷிக்கு. அதை கேட்டு மீண்டும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஷாஷி. தோழிகளின் உரையாடலை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாள் பாலா.
இத்தனையும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் அமர்ந்து தான் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு மர பெஞ்சில் இரண்டாவது வரிசையில் மூன்று தோழிகளும் அமர்ந்திருந்தனர். இந்த வருடம் கடுமையாய் படித்தே ஆகவேண்டும்.. இது தான் அவர்களின் முக்கியமான வருடமும் கூட.
பாலாவின் செவிகள் தோழிகளின் பேச்சில் கவனமாய் இருந்தாலும் மனமோ நில்லாமல் எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருந்தது. பழைய குப்பை கிளறப்பட்டது போல் அதை நினைக்கும் போதே நெஞ்சினுள் தடக்தடக் என ரயில் ஓடும் ஓசை. இதயம் வழமைக்கு மாறாய் வேகமாய் துடித்தது. கைகளில் சிறு நடுக்கம்.. கண்களில் சிறு கலக்கம்.
கைக்குட்டையால் முகத்தில் துளிர்த்த வியர்வை துளியை யாரும் அறியாமல் ஒற்றி எடுத்துக் கொண்டாள்.
யாரும் பார்க்கவில்லை என அவள் நினைத்திருக்க அவளையே பார்த்திருந்த அவன் கண்களுக்கு அது தப்பவில்லை. அவளை உற்று நோக்கினான். வழமைக்கு மாறாய் அவள் கண்களின் எட்டிப்பார்த்த ஒருவித பாவனை காரணமின்றி சிவந்திருந்த கன்னங்கள் அவனை யோசனைக்குள்ளாக்கியது.
அவள் வயதையொத்த மாலைநேர வகுப்பிற்கும் வரும் அவள் தோழன் தான். ஆனால் வேறு பள்ளியில் பயில்கிறான். அதனால் தானோ என்னவோ பெரிதாய் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை.
தேவைக்கு மட்டும் சில வார்த்தைகள். ஷிக்கும் ஷாஷியும் அவனிடம் நன்றாகவே பழகுவர். பாலாவிற்கு அது பழக்கமில்லை. ஒரு வித சங்கடத்துடன் கூடிய தயக்கம். அவளின் தயக்கம் உணர்ந்து அவளை சீண்டுவதிலே அவன் பொழுது போய்விடும்...
இப்போது அவள் முகத்தை பார்த்தவன் யோசனையுடன் ஷாஷியையும் ஷிக்குவையும் நோக்கினான். இருவரும் பேச்சில் மும்முரமாய் இருக்க ‘இதுகள...’ பல்லை கடித்தவன் புத்தகத்தின் ஓரத்தில் சிறு துண்டை கிழித்து அதை உருண்டையாக்கியவன் ஷாஷியை நோக்கி குறிபார்த்து எறிய அதுவோ அவளுக்கு அருகில் இருந்த பாலாவின் மேல் போய் விழுந்தது.
திடீரென தன்னில் எதுவோ விழவும் திடுக்கிட்டவள் அது புத்தகத்தின் தாள் என்பதை உணர்ந்து எங்கிருந்து வந்திருக்கும் என்பதை கணக்கிட்டவளாய் பார்வையை திருப்ப அங்கு அசடு வழிந்து தலையை தட்டிக் கொண்டிருந்த ஹர்ஷா விழுந்தான். அவள் அவனை புரியாமல் நோக்க அவனுமே அவள் மீது விழும் என்பதை அறிந்திறாததால் சிறு சங்கடத்துடன் அவளை பார்த்திருந்தான்.
அவன் முகத்தை பார்த்தவள் ‘என்ன’ எனும் விதமாய் புருவத்தை உயர்த்தினாள்.
அதை பார்த்து ஆசுவாசப்பட்டவன் அவளின் கேள்விக்கு பதிலளிக்காது அவள் புறம் ஆட்காட்டி விரலை நீட்டி பின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி ‘உனக்கு என்னாச்சு’ என இதழசைத்தான்.
அதை கேட்டு திடுக்கிட்டவள் சடுதியில் தன் முகத்தில் தோன்றிய உணர்வுகளை மறைத்துக் கொண்டாள். அவன் கண்டுகொள்ளும் முன்னமே.
ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி நீட்டி பின்பு கை விரல்களை அசைத்தவள் ‘எனக்கு ஒன்னுயில்ல’ என அவனைப் போலவே இதழசைத்தாள்.
அதற்குள் பாலாவின் புறம் திரும்பிய ஷாஷியும் ஷிக்குவும் இவர்களின் நயன பாஷையை பார்த்து வாயை பிளந்து ‘என்னடா நடக்கிது இங்க..’ என இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தனர்.
“டேய் தம்பி... என்னடா பண்ற... அவ உனக்கு அக்கா முறையாகனும்... இனிமே இப்பிடி சிக்னல் காட்றத பார்த்தேன் தொலைச்சிடுவேன்... தொலைச்சு...” அவனை விட சில மாதங்கள் முன்னால் பாலா பிறந்ததால் வேண்டுமென்றே அவனை ஓட்டினாள் ஷாஷி. கூடவே ஒப்புக்கு சப்பாய் ஷிக்குவும்.
“அடச்சி சும்மாயிரு... அவன் என் தம்பிடி.. அவனை போய்....” பாலாவும் தோழிகளுடன் தன்னை இணைந்து கொண்டாள்.
“ஹம்மோ மூணு பேரும் கூட்டு சேர்ந்திட்டீங்களா இனி நான் வாயை தொறப்பேன்...” பாவனையுடன் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டு முன்னால் திரும்பிக் கொண்டான். தோழிகள் மூவருக்கும் வெடித்து கிளம்பியது சிரிப்பு.
அதற்குள் ஆசிரியர் வந்து விடவே அத்தனை நேரம் மீன் சந்தை போல் சலசலத்துக் கொண்டிருந்த இடம் நொடியில் மயான அமைதியாக வகுப்பை கவனிக்க ஆரம்பித்தனர். கணித வகுப்பு என்பதாலோ என்னவோ மாணவர்கள் சந்தேகம் கேட்பதும் ஆசிரியர் நிவர்த்தி செய்வதுமாய் நேரம் ஓட மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வகுப்பு நிறைவடைந்திட மீண்டும் மீன் சந்தை உருமாற சலசலத்தபடி வெளியேறினர்.
“இன்னிக்கு என்னடி படிச்சோம்... ஒன்னும் மண்டைக்குள் ஏறமாட்டேங்கிது” வெளியில் வந்த ஷாஷி புலம்ப அவளை சந்தேக கண் கொண்டு பார்த்தனர் ஷிக்குவும் பாலாவும்.
“சார் சொல்லித்தரும் போது எதடி பராக்கு பார்த்திருந்த...”
“அப்பிடியில்லடி உனக்கு தான் தெரியுமே.. எனக்கு சுட்டுப்போட்டாலும் மேத்ஸ் மட்டும் மண்டையில ஏறாதின்னு... அதுக்கு சொன்னேன்...”
“கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கிற மாதிரி நல்லத்தான்டி சமாளிக்கிற ஆனா பாரு எங்களுக்கு அப்போவே காது குத்திட்டாங்க நீ ஒன்னும் புதுசா குத்த வேணாம்...” தன்னுடன் பாலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்ட ஷிக்கு “அப்பிடித்தானேடி” பாலாவை பார்க்க, தோழியின் பார்வையில் “அப்பிடியே தான்..” என்றாள்.
‘அது’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு ஷாஷியை மிதப்பாய் பார்த்தாள் ஷிக்கு.
ஷாஷி ‘என்னை காப்பாத்தேன்’ என்பது போல் பாலாவை பாவமாய் நோக்க அவளின் பாவனையில் ‘அச்சோ’ பரிதாபம் கொண்டவள் “சரி சரி போனா போகுது விடு ஷிக்கு பாவம் அவ... அவளே காதலிக்கிறவன் கிட்ட காதலை சொல்ல முடியாம தவிக்கிறா.. நீயும் சும்மா சீண்டாத பாவம் பொண்ணு...”
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி... நானும் அவர்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.. ஆனா முடியல... அவரும் இப்போ சொல்லுவேன் அப்றோம் சொல்லுவேன்னு எதிர்பார்க்கிறாரு... தொண்டவரைக்கும் வார்த்தை வருது.. ஆனா சொல்ல முடியல.. இப்போ இந்த காதல் தேவையான்னு கூட தோணுது... ஆனா அவர என்னால மறக்கமுடில... வீட்டில தெரிஞ்சா என்னாகும்ன பயம் வேற... காத்திருந்து ஏமாந்து போறாரு...” கண்களில் திரண்ட நீருடன் பாலாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
தோழிகள் இருவரும் ஷாஷியின் வலியுணர்ந்து அவளை ஆறுதலாய் தேற்றினர். பாலாவிற்கு ஷாஷியின் பேச்சு அதுவும் ‘காத்திருந்து ஏமாந்து போறாரு’ என்ற வரி நெஞ்சுக்குள் புயலை உண்டாக்க மனதினுள் புதையுண்ட நினைவுகள் மேலெழ அதை தாங்கும் திராணியின்றி மூச்சடைத்தது.
‘காத்திருந்து ஏமாந்து போற வலியை எனக்கு கொடுத்திடாத...’ அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் செவியில் ஒலித்து அவளை திண்டாட செய்தது. மறக்க முடியாமல் இதயத்தின் ஆழத்தில் பொதித்து வைத்த வார்த்தைகள் தோழியின் பேச்சில் சுருட்டிக்கொண்டு கிளம்பும் சூறாவளியாய் உள்ளிருந்த அத்தனையையும் வெளித்தள்ளிக் கொண்டு மேலெழும்பியது.
“காலைல செம்ம தூக்கம்டி ஸ்கூலும் இல்லையா எதுக்கு வெட்டியா காலங்கார்த்தால எழுந்துக்கனும்னு தூங்கினேன்... என் அம்மாக்கு மூக்கு வேர்த்திடிச்சு... பூரிக்கட்டை பறந்து வந்து நடுமண்டைல நச்சுன்னு விழுந்திச்சு... அப்போ எழுந்தவ தான் ஐஞ்சு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம ரொம்ப வேலைவாங்கிட்டாங்கடி என்னை பெத்த அம்மா...” ஷிக்கு புலம்ப,
“அட நீ வேற உனக்காச்சும் பூரிக்கட்ட எனக்கு அம்மிக்கல்லு வந்து விழுந்திருக்கும் ஜஸ்ட்டு மிஸ்ஸு இல்ல இந்நேரத்துக்கு டெட்பாடி தான்”
“ஹா ஹா... எவ்ளோ வயசானாலும் மோர்னிங் மம்மி கிட்ட திட்டு வாங்காம வேக்கப் ஆனா அந்த நாள் நல்லாவே இருக்கிறதில்ல சோ இதுக்காக நாம பெருமைபட்டே ஆகணும் மை டியர் ஷாஷி...”
“அது என்னவோ உண்மைதான்...” ஆமோதிப்பாய் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டாள் ஷாஷி, “சரி அத விடு நைட் சீரியல் பார்த்தியா நான் பார்க்கல.. மம்மி படி படின்னு படிச்சப்றம் தான் எழ விட்டிச்சு...... என்னாச்சு ரெண்டு பேரும் இப்போவாச்சும் சேர்ந்தாங்களா... வில்லி யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா...”
“அதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்தில சேராதுடி... இதுக்குத்தான் இந்த சீரியல் பார்க்ககூடாதின்னு சொல்றது... ஒரு தடவை பார்த்தா அடுத்தடுத்து பார்க்கணும் போலவே இருக்கும்... பார்க்கலேன்னா என்ன நடந்திச்சோன்னு டென்ஷனா இருக்கும்... தொடர்ந்து பார்த்தா இவங்க எப்போ சேருவாங்க இவங்க இப்போ பிரிவாங்கன்னு கடுப்பா இருக்கும்...” மிகப்பெரிய உண்மையை வெகு சாதாரணமாய் புட்டு புட்டு வைத்தாள் ஷிக்கு. அதை கேட்டு மீண்டும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஷாஷி. தோழிகளின் உரையாடலை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாள் பாலா.
இத்தனையும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் அமர்ந்து தான் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு மர பெஞ்சில் இரண்டாவது வரிசையில் மூன்று தோழிகளும் அமர்ந்திருந்தனர். இந்த வருடம் கடுமையாய் படித்தே ஆகவேண்டும்.. இது தான் அவர்களின் முக்கியமான வருடமும் கூட.
பாலாவின் செவிகள் தோழிகளின் பேச்சில் கவனமாய் இருந்தாலும் மனமோ நில்லாமல் எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருந்தது. பழைய குப்பை கிளறப்பட்டது போல் அதை நினைக்கும் போதே நெஞ்சினுள் தடக்தடக் என ரயில் ஓடும் ஓசை. இதயம் வழமைக்கு மாறாய் வேகமாய் துடித்தது. கைகளில் சிறு நடுக்கம்.. கண்களில் சிறு கலக்கம்.
கைக்குட்டையால் முகத்தில் துளிர்த்த வியர்வை துளியை யாரும் அறியாமல் ஒற்றி எடுத்துக் கொண்டாள்.
யாரும் பார்க்கவில்லை என அவள் நினைத்திருக்க அவளையே பார்த்திருந்த அவன் கண்களுக்கு அது தப்பவில்லை. அவளை உற்று நோக்கினான். வழமைக்கு மாறாய் அவள் கண்களின் எட்டிப்பார்த்த ஒருவித பாவனை காரணமின்றி சிவந்திருந்த கன்னங்கள் அவனை யோசனைக்குள்ளாக்கியது.
அவள் வயதையொத்த மாலைநேர வகுப்பிற்கும் வரும் அவள் தோழன் தான். ஆனால் வேறு பள்ளியில் பயில்கிறான். அதனால் தானோ என்னவோ பெரிதாய் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை.
தேவைக்கு மட்டும் சில வார்த்தைகள். ஷிக்கும் ஷாஷியும் அவனிடம் நன்றாகவே பழகுவர். பாலாவிற்கு அது பழக்கமில்லை. ஒரு வித சங்கடத்துடன் கூடிய தயக்கம். அவளின் தயக்கம் உணர்ந்து அவளை சீண்டுவதிலே அவன் பொழுது போய்விடும்...
இப்போது அவள் முகத்தை பார்த்தவன் யோசனையுடன் ஷாஷியையும் ஷிக்குவையும் நோக்கினான். இருவரும் பேச்சில் மும்முரமாய் இருக்க ‘இதுகள...’ பல்லை கடித்தவன் புத்தகத்தின் ஓரத்தில் சிறு துண்டை கிழித்து அதை உருண்டையாக்கியவன் ஷாஷியை நோக்கி குறிபார்த்து எறிய அதுவோ அவளுக்கு அருகில் இருந்த பாலாவின் மேல் போய் விழுந்தது.
திடீரென தன்னில் எதுவோ விழவும் திடுக்கிட்டவள் அது புத்தகத்தின் தாள் என்பதை உணர்ந்து எங்கிருந்து வந்திருக்கும் என்பதை கணக்கிட்டவளாய் பார்வையை திருப்ப அங்கு அசடு வழிந்து தலையை தட்டிக் கொண்டிருந்த ஹர்ஷா விழுந்தான். அவள் அவனை புரியாமல் நோக்க அவனுமே அவள் மீது விழும் என்பதை அறிந்திறாததால் சிறு சங்கடத்துடன் அவளை பார்த்திருந்தான்.
அவன் முகத்தை பார்த்தவள் ‘என்ன’ எனும் விதமாய் புருவத்தை உயர்த்தினாள்.
அதை பார்த்து ஆசுவாசப்பட்டவன் அவளின் கேள்விக்கு பதிலளிக்காது அவள் புறம் ஆட்காட்டி விரலை நீட்டி பின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி ‘உனக்கு என்னாச்சு’ என இதழசைத்தான்.
அதை கேட்டு திடுக்கிட்டவள் சடுதியில் தன் முகத்தில் தோன்றிய உணர்வுகளை மறைத்துக் கொண்டாள். அவன் கண்டுகொள்ளும் முன்னமே.
ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி நீட்டி பின்பு கை விரல்களை அசைத்தவள் ‘எனக்கு ஒன்னுயில்ல’ என அவனைப் போலவே இதழசைத்தாள்.
அதற்குள் பாலாவின் புறம் திரும்பிய ஷாஷியும் ஷிக்குவும் இவர்களின் நயன பாஷையை பார்த்து வாயை பிளந்து ‘என்னடா நடக்கிது இங்க..’ என இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தனர்.
“டேய் தம்பி... என்னடா பண்ற... அவ உனக்கு அக்கா முறையாகனும்... இனிமே இப்பிடி சிக்னல் காட்றத பார்த்தேன் தொலைச்சிடுவேன்... தொலைச்சு...” அவனை விட சில மாதங்கள் முன்னால் பாலா பிறந்ததால் வேண்டுமென்றே அவனை ஓட்டினாள் ஷாஷி. கூடவே ஒப்புக்கு சப்பாய் ஷிக்குவும்.
“அடச்சி சும்மாயிரு... அவன் என் தம்பிடி.. அவனை போய்....” பாலாவும் தோழிகளுடன் தன்னை இணைந்து கொண்டாள்.
“ஹம்மோ மூணு பேரும் கூட்டு சேர்ந்திட்டீங்களா இனி நான் வாயை தொறப்பேன்...” பாவனையுடன் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டு முன்னால் திரும்பிக் கொண்டான். தோழிகள் மூவருக்கும் வெடித்து கிளம்பியது சிரிப்பு.
அதற்குள் ஆசிரியர் வந்து விடவே அத்தனை நேரம் மீன் சந்தை போல் சலசலத்துக் கொண்டிருந்த இடம் நொடியில் மயான அமைதியாக வகுப்பை கவனிக்க ஆரம்பித்தனர். கணித வகுப்பு என்பதாலோ என்னவோ மாணவர்கள் சந்தேகம் கேட்பதும் ஆசிரியர் நிவர்த்தி செய்வதுமாய் நேரம் ஓட மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வகுப்பு நிறைவடைந்திட மீண்டும் மீன் சந்தை உருமாற சலசலத்தபடி வெளியேறினர்.
“இன்னிக்கு என்னடி படிச்சோம்... ஒன்னும் மண்டைக்குள் ஏறமாட்டேங்கிது” வெளியில் வந்த ஷாஷி புலம்ப அவளை சந்தேக கண் கொண்டு பார்த்தனர் ஷிக்குவும் பாலாவும்.
“சார் சொல்லித்தரும் போது எதடி பராக்கு பார்த்திருந்த...”
“அப்பிடியில்லடி உனக்கு தான் தெரியுமே.. எனக்கு சுட்டுப்போட்டாலும் மேத்ஸ் மட்டும் மண்டையில ஏறாதின்னு... அதுக்கு சொன்னேன்...”
“கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கிற மாதிரி நல்லத்தான்டி சமாளிக்கிற ஆனா பாரு எங்களுக்கு அப்போவே காது குத்திட்டாங்க நீ ஒன்னும் புதுசா குத்த வேணாம்...” தன்னுடன் பாலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்ட ஷிக்கு “அப்பிடித்தானேடி” பாலாவை பார்க்க, தோழியின் பார்வையில் “அப்பிடியே தான்..” என்றாள்.
‘அது’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு ஷாஷியை மிதப்பாய் பார்த்தாள் ஷிக்கு.
ஷாஷி ‘என்னை காப்பாத்தேன்’ என்பது போல் பாலாவை பாவமாய் நோக்க அவளின் பாவனையில் ‘அச்சோ’ பரிதாபம் கொண்டவள் “சரி சரி போனா போகுது விடு ஷிக்கு பாவம் அவ... அவளே காதலிக்கிறவன் கிட்ட காதலை சொல்ல முடியாம தவிக்கிறா.. நீயும் சும்மா சீண்டாத பாவம் பொண்ணு...”
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி... நானும் அவர்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.. ஆனா முடியல... அவரும் இப்போ சொல்லுவேன் அப்றோம் சொல்லுவேன்னு எதிர்பார்க்கிறாரு... தொண்டவரைக்கும் வார்த்தை வருது.. ஆனா சொல்ல முடியல.. இப்போ இந்த காதல் தேவையான்னு கூட தோணுது... ஆனா அவர என்னால மறக்கமுடில... வீட்டில தெரிஞ்சா என்னாகும்ன பயம் வேற... காத்திருந்து ஏமாந்து போறாரு...” கண்களில் திரண்ட நீருடன் பாலாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
தோழிகள் இருவரும் ஷாஷியின் வலியுணர்ந்து அவளை ஆறுதலாய் தேற்றினர். பாலாவிற்கு ஷாஷியின் பேச்சு அதுவும் ‘காத்திருந்து ஏமாந்து போறாரு’ என்ற வரி நெஞ்சுக்குள் புயலை உண்டாக்க மனதினுள் புதையுண்ட நினைவுகள் மேலெழ அதை தாங்கும் திராணியின்றி மூச்சடைத்தது.
‘காத்திருந்து ஏமாந்து போற வலியை எனக்கு கொடுத்திடாத...’ அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் செவியில் ஒலித்து அவளை திண்டாட செய்தது. மறக்க முடியாமல் இதயத்தின் ஆழத்தில் பொதித்து வைத்த வார்த்தைகள் தோழியின் பேச்சில் சுருட்டிக்கொண்டு கிளம்பும் சூறாவளியாய் உள்ளிருந்த அத்தனையையும் வெளித்தள்ளிக் கொண்டு மேலெழும்பியது.