Saveetha Murugesan's Viswakarma 23

Advertisement

MaryMadras

Well-Known Member
விஸ்வா வீட்டை விட்டு சென்று ஒரு வருடம் முடிந்து விட்டது,அவன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதா:oops::oops::oops::oops:.
ஒரு உறவும் உண்மையாக இல்லை என்ற வருத்தத்தில், விஸ்வா சொத்தும் வேண்டாம் என கையெழுத்து போட்டு விட்டு சென்று விட்டான்:cry::cry::cry:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
விஸ்வகர்மாதான் மித்ரனா?
நகை டிசைனை விட்டுவிட்டு இப்போ பில்டிங்ஸ் பார்க்கிறானா?

காஞ்சனாவை வேண்டாம்ன்னு சொல்லி விவாகரத்துக்கும் எழுதி கொடுத்துட்டு இப்போ அங்கே சங்கவியை மணக்க விஸ்வாவுக்கு என்ன தயக்கம்?

இப்போ வருத்தப்பட்டு அழுது என்ன பிரயோஜனம், காஞ்ச்சு?
அவன் நம்புறானோ இல்லையோ எல்லா உண்மைகளையும் விஸ்வகர்மாவிடம் முதலிலேயே நீ சொல்லியிருக்க வேண்டும்

அட்லீஸ்ட் அவனுடைய டிசைனை திருடி அவனை ஏமாற்றாமலாவது இருந்திருக்கலாம்

உங்கப்பா சொன்னார்ன்னு விஸ்வாவை கல்யாணம் செய்து அவன் வாழ்க்கையை நாசம் செய்ததுதான் மிச்சம்

அம்மா பொண்டாட்டி தாத்தா ன்னு எல்லோரும் ஏமாற்றினால் ஒரு மனிதன் எப்படித்தான் தாங்குவான்?
எந்த தப்பும் செய்யாத விஸ்வா ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சொத்து வேண்டாம்ன்னு எழுதி கொடுத்துட்டு போயிட்டான்

அடுத்தவன் சொத்துக்கு ஆலாய் பறந்த கனகு கிழவனும் அவன் பிள்ளைகள் பேரன்களும் என்னவானார்கள்?
இருக்காங்களா?
இல்லை செத்து போயிட்டாங்களா?

ஆத்தா அங்கயற்கண்ணியின் விஷம் நல்லா வேலை செஞ்சிருக்கு போலவே
ராதிகா ஆத்தா பெரியம்மா மூணு பேருக்கும் நெஞ்சில் கொஞ்ஜூண்டு கூட ஈரமே இல்லையோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ மொத்தமா கிளம்பிட்டானா :cry::cry::cry:
எல்லோரும் சேர்ந்து அவனை கிறுக்கனாக்கிட்டாங்க.........
துரோகிங்க......
இந்த பணவெறி பிடிச்ச மிருகங்கள் கிட்ட இருந்து விலகி மனசை தேத்திக்கட்டும்......
எந்த தவறும் செய்யாமல் அவனை ரொம்ப படுத்திட்டாங்க......
இந்த காஞ்சு கூட......

விஸ்வா-மித்ரன் ரெண்டு பேரும் ஒன்னு தானே......
நகை டிசைன் விட்டுட்டு construction க்கு போய்ட்டானோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top