Saveetha Murugesan's Viswakarma 18

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:giggle::giggle::giggle:.விஷ்வா, வேலுவோட மகனா,காஞ்சன மாலாவுக்கு அத்தை பையன்.விஷ்வா குடும்பத்துல உள்ளவங்க என்ன ஆனாங்க:unsure::unsure::unsure:.
விஷ்வா எப்படி இவங்கட்ட வந்தான்:rolleyes::rolleyes:.

விஷ்வாக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லைனு அவன் சொன்னதா சொல்லியிருக்குறதும், பணத்தாசையும் இப்போ தான் தெரியுது:(:(:(.விஷ்வா இதையே தாங்கமுடியாமல் தவிக்கிறான் உண்மை முழுவதும் தெரிந்தால் என்ன ஆவானோ:eek::eek:.

ரேகா சரியா சொன்னா உங்க கடைக்கு எங்க கடை பேர் வைங்க நான் பணத்தை குடுத்துடுறேன்னு, இவங்க பொண்ணுக்கு கடையிலே பங்குகூட கொடுக்க மாட்டாங்களாம்,இவங்க அடுத்தவன் கடைய நோகாம அப்படியே எடுத்துக்குவாங்களாம் எவ்வளவு பேராசை:mad::mad::mad::mad:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான் நினைத்த மாதிரியே விஸ்வகர்மாவின் அப்பா வேலுதான்
செந்தில்வேல் இல்லை
அப்போ தேவி @ சகுந்தலாதேவி எப்படி இங்கே வந்தாங்க?
செந்தில்வேலை தேவி கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
வேலு என்னவானார்?
இறந்து விட்டாரா?
சித்தப்பா பையன் தம்பியின் பொண்டாட்டியை செந்தில் தன் பொண்டாட்டியாக்கிட்டானா?

விஸ்வா ரொம்பவே பாவம்ப்பா
இவன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னதாக எல்லோரிடமும் வீட்டில் இருக்கும் நாசமாப் போன நாதாரிகள் சொல்லியிருக்குதுங்க

அப்போ விஸ்வாவுக்கு கல்யாணம் செய்வதில் அவங்களுக்கு இஷ்டமில்லை
குடும்பம் குழந்தை குட்டிகள்ன்னு அவன் சந்தோஷமாக இருந்துடக் கூடாதுன்னு விச்சு வீட்டினருக்கு நல்ல எண்ணம்

இவங்களுக்கு எம்புட்டு நல்ல மனசு?
விஸ்வாவின் உழைப்பு வேணும்
அவனுடைய ராசியால் அவனுடைய அதிர்ஷ்டத்தால் தாங்கள் செழித்து பணம் கொழித்து சந்தோஷமாக இருக்கணும்
அவன் மட்டும் எந்த சுகமும் இல்லாமல் இவங்களுக்கு ஏணியா இருக்கணுமா?

ஆட்டக்காரி ஆத்தா அங்கயற்கண்ணிக்கும் இது தெரிஞ்சுதான் விவரமாக ரத்தினவேல் பிள்ளைகளுக்கு தன் மகள்களை கல்யாணம் கட்டி வைத்தாளோ?

செந்தில்வேல் தன் தந்தை இல்லைன்னு தெரிஞ்சாச்சு
இனி விஸ்வா என்ன செய்யப் போறான்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பெற்ற தாயிலிருந்து உறவுன்னு நினைத்த எல்லோருமே ஏமாத்துக்காரங்களா இருந்தால் ஒரு மனிதன் எவ்வளவுதான் தாங்குவான்?
விஸ்வா ரொம்பவே பாவம்ப்பா

விஸ்வகர்மாவுக்கு கல்யாணம் செய்யணும்ன்னு நினைத்த அந்த ஒரு சிலரில் நிச்சயமாக திருட்டுக் கிழவன் கனகவேல் இருந்திருக்க மாட்டான்

விஸ்வாவின் நிம்மதி, சந்தோஷம் குறித்து கிழவனுக்கு என்ன திடீர்னு அக்கறை சர்க்கரை பொங்குது?
அதுசரி
விச்சு அமைதியா சந்தோஷமா இருந்தால்தானே பிச்சைக்கார திருடனுங்க இவனுங்களுக்கு எல்லாம் கிடைக்கும்

ஏண்டா கனகு திருட்டுக் கிழமே
விஸ்வா உன் பேரனாடா?
உன் தம்பியின் பேரன்தானே

வேலுவின் பெற்றோர் கனகுவின் தம்பி கதிர் and அவன் மனைவி என்னவானாங்க?
இறந்து விட்டார்களா?
இல்லாத அட்டூழியங்கள் பண்ணிக்கிட்டு இந்த கனகவேல் கிழவன் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கிறானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top