Saveetha Murugesan's Nayanthol Kannae 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹா ஹா ஹா
ஒரு லவ் மேரேஜ்ஜை அரேஞ்சுடு மேரேஜ்ஜா மாற்றி செய்ய செங்கதிர் என்னெல்லாம் வேலை பார்த்திருக்கிறான்?
லவ் பண்ணின பொண்ணே மனைவியா வரணும்
ஆனால் அம்மாவின் மனமும் கோணக் கூடாது
நயனாவை எவ்வளவு லவ் பண்ணியிருக்கிறான்னு அவளை விலோசனாவுக்கு முன்னாடி அம்மாவாக்கி கதிர் நிரூபிச்சுட்டன்
அடேய் கதிர்
நீ ஜெகஜ்ஜால கில்லாடிடா
ஹா ஹா ஹா
பேத்தியம்மா அறுபதாம் கல்யாணத்தை சொல்ல வந்தால் தாத்தாவுக்கு ஆசையைப் பாரு
சந்து பொந்து விடாமல் சந்தியாவிடம் அடி வாங்கினாலும் போலீஸ்கார் அருள்செல்வன் திருந்தின மாதிரி தெரியலையே
அப்புறம் ஸ்டோரி முடிஞ்ச மாதிரி எனக்கு தோணலை
ஆதி, கதிர் இரண்டு பேருக்கும் இளவரசன் வந்து அப்புறமா மொள்ள கதையை முடிங்க, சவீதா டியர்
ஒண்ணும் அவசரமில்லை
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.கதிர் அவனோட அம்மா மனசு கஷ்டப்பட கூடாது என பூங்கோதை,ஆதியோடு சேர்ந்து யாரும் சங்கடப்படாம எப்படி எல்லாம் திட்டம் போட்டு கல்யாணம் செஞ்சு இருக்கான்(y)(y).

திட்டம் போட்டு கல்யாணம் பண்ணதை கேட்டு சந்தோஷப்படாத நயனா,காதலிக்கறது அவ்வளவு பெரிய குத்தமா எதுக்கு மறைச்சு செய்யனும்னு திருமணத்து முன்னே அம்மாட்ட சொல்லிட்டதா சொல்லவும் நயனாவுக்கு கதிர் மேல இருந்த வருத்தம் போய் சந்தோஷமா இருக்கா:giggle::giggle::giggle:.

கதிர் தன் அம்மாவின் சந்தோஷத்துக்காக பார்த்து பார்த்து திருமணம் செய்தது போல,நயனாவின் திருமணத்துக்கு பின் அவள் தந்தை தனியே இருப்பது கஷ்டம் என தெரிந்து அவர் வீட்டிலேயே வாடகைக்கு குடிவந்தது அருமை(y)(y).

இத்தனை நாளா பார்க்காம சண்டை போட்டுட்டு இருந்தவங்க,இப்பதான் சமாதானமாகி சந்தோஷமா இருக்காங்க:):).நயனா ஹனிமூன் வந்த இடத்துல அவ புருசன் கைய புடிச்சுட்டு சுத்துனா;);), என்னங்க இப்படி பண்றாங்கன்னு லூசு மாதிரி கேட்கறியே விலோ:rolleyes::rolleyes:.

அடாவடியா இருக்கறவனை நம்பலாம் அப்பாவிய போல இருக்கறவனை நம்ப கூடாதுன்னு சரியா தான் சொன்னாங்க:D:D.நயனா மாமாவா பேசற,என் நண்பனா பேச மாட்டேங்கற என சொன்ன கதிர்,ஒரு பேச்சுக்கு கூட சேர்ந்திருக்கலாம்னு சொல்லாம ஆதிய கழட்டி விட்டு போய்ட்டான்:LOL::LOL:.

எனக்கெதுக்கு இன்னொரு கல்யாணம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.இந்த வயசுல ஹனிமூன் எல்லாம் எங்களுக்கு எதுக்கு:p:p:ROFLMAO::ROFLMAO:.அருள் பேத்திங்களை விட்டுட்டு வர முடியாதுன்னு சொல்லி சந்துட்ட வாங்கி கட்டிக்கறார்:LOL::LOL::LOL:.சண்டை,சமாதானம் என மாறாத அன்புடன் அருள்,சந்து தம்பதிகள்:):)..
அருமையான கதை சவீதா:love::love::love:.வாழ்த்துக்கள்(y)(y).எபிலாக் இருக்கா ஜீ:):):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top