Hi mam
திரு துளசி கொஞ்சம் மனம் விட்டு பேசிக்கொண்டு சந்தோசம்தான்,நேர் கொண்டு பார்த்து பழகியவர்கள் துளசியின் உடல்மாற்றத்தை அவதானிக்கவில்லை திரு அதனை உணர்ந்து கண்டு பிடித்தது சந்தோசம்தான்,ஏதோ ஒரு வகையில் தாலி கட்டியவளை உணர்ந்திருக்கின்றார் என்று, இப்போது இது குழந்தைதான் என்று அவ்வளவு நிட்சயமாக சொல்லி ,தனக்கு அதன் முக்கியத்துவம் தான் இப்போது அனுபவிக்கும் சந்தோசம் அதனை இப்போது தன் மனைவியிடம் (மனைவி துணைவி பெண்டாட்டி என்று எல்லாம் சொல்லலாம்,ஏனென்றால் அவர்தான் தாலிகட்டியவள் முகம் பார்த்து பேசுகின்றாரே) சொல்லி உணர்ந்து சந்தோசப்படும் இந்த திருநீர்வண்ணன் மீனாட்சியை துளசி (தாலிகட்டியவள்) வயிற்றில் வைத்திருக்கும்போது எங்கே போனார்,
தன்காதலை அழித்துவிட்டு துளசியை திருமணம் செய்து வைத்தீர்கள் அல்லவா அதனால் நான் பிடிக்காமல் வாழுகிறேன் என்று காட்டுவதற்காக,ஒரே வீட்டிலிருந்தும் ஒரு வார்த்தை பேசாமாட்டேன், மனுசியாக கூட மதிக்கமாட்டேன் என்று தன் தந்தைக்கு காட்டுவதற்காக ஏதோ உயிரற்ற பொருளை நடத்துவதுபோல கடந்த 13 வருடமாய் நடத்தி காட்டினார்,அப்போதெல்லாம் துளசியின் தவிப்பு வருத்தம் எதுவும் தெரியவில்லையோ,துளசியை நேர்கொண்டு பார்த்தால் அவருக்கு அப்படியே காதல்ரசம் சொட்டோ சொட்டென்று கொட்டுதாம்,அதனால் முகம் பார்க்கவில்லையாம்,இந்த விளக்கங்கள் எல்லாம் துளசிக்கு நியாயம் செய்யாது,துளசியே பெரிது படுத்தாத போது நாம் ஏன் பெரிது படுத்தணும், என்னவோ பண்ணுங்கள்,எனக்கு இந்தபதிவை பார்த்தபோது ஒரு பக்கம் சந்தோசமாகவும் மறுபக்கம் அளவுகடந்த ஆத்திரமாகவும் இருந்தது, துளசி நீண்ட நெடிய வருடங்களின் பின் ஒரு சாதரண பெண் எப்படி இருப்பாரோ அப்படி தன் உணர்வுகளை வெளிக்காட்டியது சந்தோசம்,குற்ற உணர்வே இல்லையா திருவுக்கு, திருவின் இந்தபேச்சைக்கேட்டு எனக்கு அவ்வளவு கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது,இப்போதாவது ஞானம் பிறந்து மனைவியை கொண்டாடணும் என்று தோன்றுகின்றதே அதுவரையில் சந்தோசம்.
நன்றி