Ramya Rajan's SN 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தன்னோட நகை போனதுன்னதும் இவ்ளோ பதறுதே........ ஏன் அங்கேயும் உங்கம்மா மாதிரி மல்லுக்கு நிக்கவேண்டியது தானே.......
இப்போ மட்டும் ஏன் பிரபாகர் வேணும் உங்க சொத்தை கட்டிகாப்பாத்த......

நல்லா நடுவீட்டில் எல்லோர் முன்னாடியும் சொல்லியாச்சா சூப்பர் சூப்பர்......
இப்படி ஒரு பொண்ணை வச்சுக்கிட்டு தான் இந்தம்மாக்கு இந்த ஆட்டம்......

பிள்ளைங்க செஞ்ச தப்பை பெற்றோர் ஒத்துக்கனும்..... அப்போ அடுத்த முறை தப்பை செய்ய யோசிப்பாங்க......
எதிர்த்து சண்டைக்கு போனால் இப்படித்தான் வீணாப்போகும் பிள்ளைங்க......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

ஹா ஹா ஹா
தேவியின் நொண்ணன் வீட்டினருக்கு பவித்ரா செம ஆப்பு வைச்சுட்டாள்
யாரு வீட்டிலே யாரு வந்து நாட்டாமை பண்ணுறது?

யாழினி வந்து விட்டாளா?
பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சா?
சொல்லும்மா மூதேவி பெத்த யாழினி பீடை சொல்லும்மா
யாருமே சொல்ல தயங்கும் பொய்யை கூசாமல் சொல்லி உன் மாமன் மகனோடு நீ ஓடிட்டு பவித்ரா மேல் வீண் பழி போட்டேன்னு சொல்லும்மா மூதேவி யாழினி

பீத்தல் மூத்த பொண்ணும் புருஷனும் நிதர்சனத்தை சொன்ன பிறகு மூதேவி தேவியின் நொள்ளைக் கண் திறந்து கொண்டு விட்டதா?

ஹா ஹா ஹா
பொண்ணுக்கு நல்லதொரு சம்பந்தம் கொண்டு வந்ததும் பச்சோந்தி அத்தை வசுந்தரா பிரபாகரனின் பக்கம் வந்து விட்டாள்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடிப்பாவி...யாழினி இப்படி அசிங்கமா பொய்யை சொல்லி இருக்கா:mad::mad:,என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்காம பவித்ரா அவள ஓட வச்சதா தேவி வீணா பழி போட்டு குடும்பத்தையே பிரிக்க பார்த்திருக்கா ராட்சஷி:devilish::devilish:.

பொண்ணு ஓடிப் போய்டான்னு சொல்றது பரவாயில்லையா,கல்யாணத்துக்கு முன்னே கர்ப்பமா இருக்கான்னு சொல்றது பரவாயில்லையான்னு பவித்ரா தன் குடும்பத்தை பார்த்து கேட்டது சரிதான் பிரபாவுக்கு இப்போதாவது கேட்கனும்னு தோனுச்சே:sneaky::sneaky:.

பவித்ரா ஹால்ல தொட்டில் கட்டி வந்தவங்களை மாடிக்கு போக வைக்கிறதும்,பிரபாகரை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு அவங்கள வெளியே போக வைக்கிறதும் அருமை.(y)(y)(y).

யாழினியோட நகையெல்லாம் அவங்க பொண்ணுக்கு போடவும் தான் ஆத்தாளுக்கும்,மகளுக்கும் சொத்தை பிரிச்சு வாங்குனா அதுவும் போயிடும்னு தெரியுதா:mad::mad::mad:.

சிதம்பரம் தன்னால அலைஞ்சு வியாபாரம் பார்க்க முடியாதுன்னு சொல்லவும் தான் தேவி அவங்க நிலைய புரிஞ்சு இறங்கி வந்ததோடு,வெட்கமில்லாம யாழினி,பவித்ரா குழந்தைய பார்க்க வந்திருக்கான்னு சொல்லி நல்லா வாங்கி கட்டிக்கிட்டா:D:D.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top