ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை (2)
இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை
இது ஆனந்தம் விளையாடும் வீடு
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம் (2)
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
ஆனந்தம் விளையாடும் வீடு -இது (2)
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம் (2)
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆனந்தம் விளையாடும் வீடு..............
இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே (2)
நீ தானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
இரு-ஆனந்தம் விளையாடும் வீடு -
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு