மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
ஹா ஹா ஹா
சந்திரவதனா கார் வாங்கினதுக்கு தனவிதிக்கு எரியுதா?
நல்லா நல்லா எரியட்டும்
பரம்பரை நிலத்தில் விவசாயம் பண்ண சந்திரா இறங்கி விட்டாள்
ஆனால் தனவிதி ஏன் தடுக்கிறாள்?
புருஷனுக்கு ஆனது போல வதுவுக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு உண்மையிலேயே பயப்படுறாளா?
இல்லை சேர்மமூர்த்திக்கு கொடுத்த வாக்குக்காக வதனியை அங்கே போக விடாமல் தடுக்கப் பார்க்கிறாளா?
இப்போ சேர்ம மூர்த்தி என்னமோ புதுக் கதை சொல்லி வதனியைக் குழப்பி விட்டுட்டானே
இவளும் நம்பிட்டாளா? இல்லையா?
அப்போ இனி சந்திரா நிலத்தின் பக்கம் போக மாட்டாளா?
எதே........அரவிந்தனுக்கு தன்மானமா?
தன்மானம்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்குற வெம்போட்டுப் பயலுக்கு கல்யாணத்தன்னிக்கு தலைகால் தெரியாத போதையிலே எங்கேயோ ஓடிப் போனவனுக்கு இப்போ இவன் வக்காலத்து வாங்குறாண்டா
கல்யாணத்துக்கு முன்னாடியே கூட்டாளி ராஜேஷ்ஷுக்கு வதனியை பங்கு போட அக்ரிமெண்ட் போட்டவனெல்லாம் தன்மானச் சிங்கமாண்டா
அடேய் சேர்மமூர்த்தி
புளுகினாலும் ஒரு அளவுக்கு புளுகுடா